என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aanmeega kalanjiyam"

    • வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூரில் ஆதிகாலத்தில் தொடங்கப்பட்ட பழக்கமல்ல.
    • இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    தலைமுடி காணிக்கை

    மேல்மலையனூர் அங்காளம்மனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் மலையனூர் மாகாளி முன்பு செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இத்தலத்தில் வைத்தே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையை மேல்மலையனூருக்கு அழைத்து வந்து முதல் மொட்டை போட்டு தலை முடியை காணிக்கையாக கொடுக்கவும் பக்தர்கள் தவறுவது இல்லை.

    அதிலும் குறிப்பாக இந்த ஆடி மாதம் முழுவதும் இத்தலத்துக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்வோர்கள் ஏராளம். அங்காளம்மனை தீவிரமாக நேசிப்பவர்கள் குடும்பத்தோடு மொட்டை போட்டுக் கொள்வதுண்டு.

    அது போல சிறுமியருக்கு காது குத்துவதையும் பெரும்பாலான பக்தர்கள் இந்த தலத்திலேயே வைத்து நடத்துகிறார்கள்.

    பொங்கல் வழிபாடு

    ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் அம்மன் கேட்ட வரங்கள் மட்டுமின்றி கேட்காத வரங்களையும் அள்ளி தருவாள் என்று பெண்கள் நம்புகிறார்கள். இதனால்தான் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகளவில் அம்மன் ஆலயங்களில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடுகள் செய்வதுண்டு.

    மேல்மலையனூர் தலத்திலும் அம்மனுக்கு பொங்கல் வழிபாடு வைப்பது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. சமீப ஆண்டுகளாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் மலையனூர் மாகாளிக்கு பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

    இதையடுத்து மேல்மலையனூர் தலத்தில் பொங்கல் வைப்பதற்காகவே தனிப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூர் செல்பவர்கள் அங்கு பொங்கல் வைத்து அங்காளம்மனை மனதார வழிபட்டு வரலாம். அதிகாலை முதல் மாலை வரை பொங்கல் வைத்து வழிபடலாம்

    என்றாலும், ராகு காலத்தில் மட்டும் பொங்கல் வைத்து வழிபட வேண்டாம் என்று சொல்கிறார்கள். பொங்கல் பிரசாதம் படைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதை வீடுகளுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்.

    ஆனால் பொங்கல் நைவேத்தியத்தை அங்காளம்மனுக்கு படைத்து வழிபட்ட பிறகு அதை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பகிர்ந்து அளிப்பது நல்லது. பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை வினியோகிப்பது மூலம் பொங்கல் வழிபாடு செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    ஆடு&கோழி பலி

    மேல்மலையனூர் தலத்தில் ஆடி மாதம் ஆடு, கோழி பலியிடுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் கோவிலுக்குள் எத்தகைய பலி வழிபாடுகளும் நடப்பதில்லை. கோவிலுக்கு வெளியே தூரத்தில்தான் அவற்றை செய்கிறார்கள்.

    மேல்மலையனூர் தலத்தில் காவல் தெய்வமாக இருக்கும் பாவாடைராயனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் சமர்ப்பிப்பார்கள். அங்காளம்மன் ஒருதடவை, "எனக்கு படைக்கப்படும் உணவுகள் உன்னைச் சாரும்" என்று, பாவாடைராயனிடம் கூறி இருந்தாளாம். எனவே இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    ஆடி மாதம் அங்காளம்மனை வழிபடுபவர்கள் மறக்காமல் பாவாடைராயனையும் வழிபட்டு வர வேண்டும். அவர் நம் வழிப்பயணத்துக்கு துணை இருப்பார் என்பது ஐதீகம்.

    ஆடு& கோழி சுற்றி விடுதல்

    சமீப காலமாக பக்தர்கள் ஆடு, கோழி பலியிடுவதை குறைத்து வருகிறார்கள். அதற்குபதிலாக கோவில் அருகில் சென்று ஆடு, கோழிகளை சுற்றி விட்டுவிட்டு வந்து விடுகிறார்கள்.

    இதன் மூலம் தங்கள் பிரார்த்தனை நிறைவுபெறுவதாக நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த சுற்றிவிடும் வழிபாடு மிக எளிய பரிகாரமாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றுகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக மேல்மலையனூர் தலத்தில் ஆடு, கோழி மட்டுமின்றி மாடுகளையும் கூட சுற்றி விட்டு நேர்த்தி கடன் செய்கிறார்கள்.

    வேப்பஞ்சேலை வழிபாடு

    அங்காளம்மனை வழிபடும் பெண்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றகோரி ஆலயத்தில் வேப்பஞ்சேலை அணிந்து வழிபாடு செய்வதுண்டு. பொதுவாக வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூர் கோவிலில் ஆதிகாலத்தில் இருந்து தொடங்கப்பட்ட பழக்கமல்ல. சென்னை அருகே உள்ள பெரியபாளையம் கோவிலில்தான் இந்த வழிபாடு அதிகஅளவில் நடக்கிறது.

    சமீப காலமாக மேல்மலையனூர் கோவிலுக்கு வரும் பெண்களும் இந்த வழிபாட்டை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இந்த வழிபாடு செய்தால் அம்மன் மனம் இறங்கி வேண்டும் வரம் தருவாள் என்பது நம்பிக்கை.

    தீச்சட்டி ஏந்துதல்

    மலையனூரில் பிரார்த்தனைக்கு வருபவர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதுண்டு. ஆடி மாதம் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நேர்த்திகடன் செய்பவர்கள் முதலில் அக்னி குளத்தில் நீராடி அங்கிருந்து தீச்சட்டி ஏந்தி வருவார்கள். சிலர் அழகு குத்தியும் தீச்சட்டி ஏந்தி வருவதுண்டு.

    பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் அம்மன்

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆடி அமாவாசை தினமாகும். இந்த நாள் மறைந்த முன்னோர்களான பித்ருகளை நினைத்து வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள்.

    நாளை காலை புண்ணிய தீர்த்தங்கள், நதிகள், கடலோர பகுதிகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அதன் பிறகு வீடுகளிலும் முன்னோர்களுக்கு சிலர் படையல் செய்து வழிபடுவது உண்டு.

    ஆனால் பித்ரு தர்ப்பணம் செய்த பிறகு வீட்டிற்கு வராமல் நேரடியாக மேல்மலையனூர் அங்காளம்மன் தலத்துக்கு சென்று அம்மனை வழிபட்டால் பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் பலன் கிடைக்கும்.

    அதாவது நாம் பித்ருக்களுக்கு செய்த தர்ப்பணங்கள் முழுமையாக அவர்களை சென்று சேர அங்காளம்மன் உதவுவாள் என்பது ஐதீகம். ஆதிகாலத்தில் அங்காளம்மன் இத்தலத்தில் அவதாரம் எடுத்து பல்வேறு ஆத்மாக்களுக்கு ஞானம் வழங்கி உயர்வு கொடுத்தாள்.

    எனவேதான் பித்ரு தர்ப்பணத்திற்கு பிறகு அங்காளம்மனை வழிபடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

    மஞ்சள் ஆடை

    ஆடி மாதம் மலையனூர் தலத்துக்கு செல்பவர்கள் அம்மனுக்கு புடவை சாத்தி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு மிகவும் உகந்தது மஞ்சள் நிற உடையாகும். அது கிடைக்காத பட்சத்தில் சிவப்பு கலரில் புடவைகள் வாங்கி சாத்தலாம்.

    புற்றை சுற்றினால் பித்து நீங்கும்

    மேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் இந்த அபிஷேகத்தை செய்தால் மிகவும் நல்லது. அங்காளம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய இயலாது. மற்ற சாதாரண நாட்களில்தான் இந்த வழிபாட்டை நடத்த முடியும்.

    அம்மனுக்கு அபிஷேகம் சாதாரண நாட்களில் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நேரத்திலே அமைத்து கொள்ள முடியும். இந்த வழிபாடு செய்வதால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    அதுபோல அங்காளம்மன் தலத்தில் உள்ள புற்றுக்கும் அபிஷேக வழிபாடுகள் செய்யலாம். புதிய புற்று மண் தூவி அதன் மேல் மஞ்சள் தண்ணீர் தெளித்து குங்குமம் பூசுவார்கள். இதுவும் அம்மனை குளிர வைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புற்றுக்கு அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகமாகும்.

    மலையனூரில் உள்ள புற்றை சுற்றி வந்து வணங்கினால் பித்து நீங்கும் என்பது பலமொழியாக சொல்லப்பட்டு வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து சென்று ஓர் இரவு தங்க வைத்தாலே போதும் குணம் அடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பலன் அடைந்தவர்கள் ஏராளமானவர்கள் ஆவர்.

    • அம்மன் உத்தரவுபடி புண்ணிய பூமியில் கோவில் கட்டும் பணி தொடங்கியது.
    • 21 பந்தி தெய்வங்களும் வலதுபுறம் கருப்பசாமி கோவில் உள்ளது.

    நலமைமிகுந் திடுமிருக்கங் குடியினிலெந் நாளும் வளர் ஞான தீப

    நிலமிசையுன் னடிமலரை யனுதினமும் நினைக்குபவர் நெஞ்சினிற்சஞ்

    சலமதற நலமதிடு தயாபரியே யிதுசமயம் தனைய நானுன்

    தலமகிமை கூறவருள் தந்துதவு தாய்மாரி யான நீயே!

    சதுரகிரி மலையில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சிவயோக ஞானசித்தர் என்று ஒரு சித்தர் வாழ்ந்து வந்தார். அம்பிகையை நேரில் பார்த்து தரிசித்து நிஷ்டைபெற அவர் ஆசைப்பட்டார்.

    இதற்காக அவர் கடும் தவம் இயற்றினார். அப்போது அம்பிகை, என்னை காண வேண்டுமானால் அர்ஜுனா நதி, வைப்பாறு சந்திக்கும் இடத்துக்கு வா என்று அசரீரியாக உத்தரவிட்டாள்.

    இதை ஏற்று சித்தர் அங்கு சென்றார். அங்கு அவருக்கு அம்பிகை காட்சி கொடுத்தாள். அந்த காட்சியை வைத்து சித்தர் அம்பிகையின் திருமேனியை உருவாக்கினார்.

    பிறகு அவர் அங்கேயே நிஷ்டையாகி விட்டார். கால சுழற்சியில் இரு ஆறுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சித்தர் படைத்த அம்மன் சிலை பூமிக்குள் புதையுண்டு போனது.

    சில நூற்றாண்டுகள் அந்த அம்மன் சிலை பூமிக்குள்ளேயே இருந்தது. நாளடைவில் அந்த பகுதி காடுகள் கொண்ட வனமாகிப்போனது.

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள்தங்களது ஆடு, மாடுகளை அந்த காட்டுக்குள் ஓட்டிச் சென்று மேய விடுவது வழக்கம். ஏராளமான மாடுகள் மேய செல்வதால், அவை போடும் சாணத்தை எடுக்க இருக்கன்குடி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் அந்த காட்டுக்குள் சென்று வருவார்கள்.

    ஒருநாள் இருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த ராமசாமி பிள்ளையின் மனைவி பரிபூரணத்தம்மாள் என்பவரும் அந்த காட்டுக்குள் சாணம் எடுக்க சென்றார். கூடை நிறைய சாணத்தை நிரப்பிய அவர் கூடையை தூக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.

    கூடையில் நிறைய சாணம் இருப்பதால்தான் எடை அதிகமாகி விட்டதோ என்று சந்தேகப்பட்ட அவர், கூடையில் இருந்து பாதி சாணத்தை கழித்தார்.

    அதன் பிறகும் அவரால் அந்த கூடையை தூக்க இயலவில்லை. பயங்கரமாக கனத்தது.

    பரிபூரணத்தம்மாளுக்கு இது புரியாத புதிராக இருந்தது. அவருடன் வந்த பெண்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.

    இதற்கிடையே இதுபற்றிய தகவல் இருக்கன்குடி முழுவதும் பரவியது. ஊர் பெரியவர்களும், பொது மக்களும் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் சாண கூடையை எடுக்க முயன்றனர். அவர்களாலும் கூடையை தூக்க முடியவில்லை.

    இந்த நிலையில் பரிபூரணத்தம்மாள் திடீரென அருள் வந்து சாமி ஆடினார்.

    அவர், நான் மாரியம்மன் வந்து இருக்கிறேன். என் திருமேனி இந்த கூடைக்கு கீழ் புதைந்து இருக்கிறது. இங்கிருந்து அதை தோண்டி எடுத்து வழிபடுங்கள். உங்கள் குறைகளை எல்லாம் நான் தீர்த்து வைப்பேன் என்றார்.

    உடனே ஊர்மக்கள் அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தனர். அம்மன் சொன்னது போலவே அங்கு மாரியம்மனின் திருமேனி இருந்தது.

    இதை கண்டதும் ஊர் மக்களுக்கு ஆச்சரியம் மேலும் அதிகரித்தது.

    பரிபூரணத்தம்மாளிடம் ஊர்க்காரர்கள் மெல்ல தயங்கியபடி, அன்னையே, தாங்கள் யாரோ? நாங்கள் ஏதும் செய்ய வேண்டுமா... அதை திருஉளம் பற்றி சொல்ல வேண்டும் என்றனர்.

    உடனே பரிபூரணத்தம்மாள், அன்பர்களே... நான் ஜெனித்தது காஞ்சீபுரம். என் பெயர் கண்ணனூர் மாரி. சமயபுரம் மாரி என்றும் சொல்வார்கள்... இன்னும் சில வேறு பெயர்களும் எனக்கு உள்ளது.

    இதே இடத்தில் இருந்து ஒரு பர்லாங்குக்கு தென் மேற்கில் என்னைக் கிராம தேவதையாக வைத்து வெகுகாலம் பூஜித்து வந்தனர். ஆற்று வெள்ளத்தில் கோவில் சேதம் அடைந்தது. சில ஜனங்கள் ஊரை விட்டு வெளியேறி சென்று விட்டனர்.

    மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நான் இந்த இடத்தில் மணலால் மூடப்பட்டு இருந்தேன். இனி என் பெயர் துலங்கவும் என்னை நம்பும் பக்தர்களுக்கு சேமம் கொடுக்கவும், உலக மக்களை காக்கும் பொருட்டு தோன்றியுள்ளேன் என்றார்.

    அடுத்து பரிபூரணத்தம்மாளிடம், சரி நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டனர்.

    அதற்கு பரிபூரணத்தம்மாள், எனக்கு சன்னதி அமையுங்கள். என் சிலையை வைத்து பூஜிப்பவர்களின் வம்சத்தை எவ்வித இடையூறும் இன்றி புத்திர சம்பத்துடனும் பரம்பரை செல்வங்களோடும் என்றைக்கும் பாதுகாப்பேன். இது முக்காலும் சத்தியம், சத்தியம் என்றார்.

    பிறகு பரிபூரணத்தம்மாள், என்னை பூஜிக்க முன் வருவது யார்? சொல்லுங்கள் வலக்கை தருகிறேன் என்றார். ஊர்மக்கள் அனைவரும் அமைதியாக நின்றனர். அப்போது பரிபூரணத்தம்மாள், தன் கணவர் ராமசாமி பிள்ளையிடம் கேட்க, அவர் கொஞ்சமும் தயங்காமல் எல்லாம் ஈஸ்வரி செயல் என்று கை கொடுத்தார்.

    பின்னர் அவர் தன் வலது தொடையை கீறி அங்கிருந்த அம்மன் சிலைக்கு ரத்த அபிஷேகம் செய்தார்.

    இதையடுத்து அம்மன் சிலை பூமியில் இருந்து முழுமையாக வெளியில் எடுக்கப்பட்டது.

    அடுத்து இந்த சிலையை எந்த இடத்தில் வைப்பது என்ற கேள்வி எழுந்தது. பரிபூரணத்தம்மாள் மீண்டும் சாமியாடி அருள்வாக்கு கூறினார். பக்த கோடிகளே, ஒரு பக்தன் வெகுகாலமாக என்னை நோக்கி தவம் இயற்றினான். அந்த ஞானசித்தன் இருக்கும் இடத்தில் எனக்கு கோவில் அமையுங்கள் என்றார்.

    ஆனால் இது ஊர் மக்களுக்கு புரியவில்லை. எனவே அந்த சிலையை ஊருக்குள் எடுத்து சென்று வைத்து வழிபட்டு வந்தனர். அடுத்த மூன்றாவது நாள் பரிபூரணத்தம்மாளுக்கு மீண்டும் அருள் வந்தது.

    பக்தர்களே... உலக்கை சத்தமும், முறம் சத்தமும் என் செவி புகாதிருக்க வேண்டும். எனவே என்னை கண்டெடுத்த பகுதியில் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், எனக்கு அமைக்கப்படும் ஆலயத்தில் கொடி மரம், ரிஷபம், பலிபீடம், சுற்றிலும் 21 பந்தி தெய்வங்களும் வலதுபுறம் கருப்பசாமி கோவில் அமைக்க வேண்டும் என்றார்.

    அம்மன் உத்தரவிட்டப்படி அந்த புண்ணிய பூமியில் கோவில் கட்டும் பணி தொடங்கியது.

    ஒரு கருவறை, சிறிய முன் மண்டபம் என்று மிக, மிக சிறிய அளவில் அந்த கோவில் கட்டப் பட்டது. 1545-ம் ஆண்டு 119 சுபகிருது வருஷம், சித்திரை மாதம் பூர்வ பட்சம், சுக்கிரவாரம், உத்திர நட்சத்திரத்தில் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் சிவேபாக ஞானசித்தர் நிஷ்டையாகி இருந்த இடத்தில் மாரியம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அப்போது கிராம அதிகாரிகளும், ஊர் பெரியவர்களும் ராமசாமி பிள்ளையிடம், மாரியம்மன் திருவாக்கு அருள்படி நீயே அடிமை பூண்டவன். எனவே இன்று முதல் உனக்கு மாரியம்மன் கோவில் பூசாரி என்ற பட்டத்தை தருகிறோம் என்றனர்.

    ராமசாமி பிள்ளையும் பூசாரி பட்டத்தை ஏற்றுக் கொண்டார். அன்று முதல் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பரம்பரை அறங்காவலர்களாக கைங்கர்யம் செய்து வருகிறார்கள். அம்மன் திருமேனி 3 நாட்கள் ஊருக்குள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உற்சவர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆடி மாதம் நடக்கும் பிரமோற்சவ விழாவின் போது மட்டும் உற்சவர் கடைசி வெள்ளிக்கிழமை ரிஷப வாகனத்தில் வந்து, இந்த கோவிலில் ஒருநாள் தங்கி விட்டு செல்வார்.

    • சித்தரின் மேனி முழுவதும் புற்றுக்களாலும், புதர்களாலும் மூடப்பட்டன.
    • சித்தர் ஐக்கியமான இடத்தில் தான் இருக்கன்குடி மாரியம்மனின் கருவறை உள்ளது.

    லட்சக்கணக்கான பக்தர்களை தன் பக்கம் ஈர்த்து இழுக்கும் ஒவ்வொரு தலத்திலும் ஈடு, இணையற்ற ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார். அந்த சித்தர்களின் அருளாற்றல் மங்கா விளக்காக என்றென்றும் கலங்கரை விளக்கமாக ஒளிவீசி, மக்களை வழி நடத்துகின்றன என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    அந்த வகையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலிலும் ஒரு சித்தர் நிஷ்டையாகி உள்ளார். அந்த சித்தரின் பெயர், சிவயோக ஞானசித்தர்.

    இந்த சித்தர் இருக்கன்குடிக்கு வந்து ஐக்கியம் ஆனதன் பின்னணியில் ஒரு நிகழ்வு உள்ளது.

    சிவயோக ஞான சித்தர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தென் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள சதுரகிரிமலையில் வசித்து வந்தார். அவருக்கு அன்னை பராசக்தியை நேரில் கண் குளிர கண்டு தரிசனம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.

    உடனே அவர் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு சதுரகிரிமலையில் தவம் இருந்தார். பல ஆண்டுகளுக்கு அவரது தவம் தொடர்ந்தது. அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் எனும் 5 கோசங்களை வென்று, ஜெகதாம்பிகை குறித்து அனுதினமும் தியானித்து, மானச பூஜையை அவர் ஒரே இடத்தில் இருந்து நடத்தி வந்தார்.

    சிவயோக ஞான சித்தரின் மன உறுதி குலையாத தவ வலிமையை கண்ட அன்னை பராசக்தி அவர் முன் தோன்றினாள்.

    ஏ... ... அன்பனே, என்னைக் குறித்து தவம் இயற்றும் காரணம் என்ன? என்று கேட்டார்.

    மறுவினாடி சித்தர் கண் விழித்தார். பராசக்தியை கண்குளிர, மனம் மகிழும் வகையில் தரிசித்தார். பிறகு சாஷ்டாங்கமாக விழுந்து அன்னை பராசக்தியை வணங்கினார்.

    சாஷ்டாங்க நிலையிலேயே அவர், சர்வ ஜீவாதார ஜெகத்ரட்சகி, சகல பாவ நிவாரணி, பராசக்தி, பரம கிருபாகரி, பக்த பராதீனகி, பக்தரட்சகி, இந்த பரம ஏழையை காப்பாற்றுவாய் என்றார்.

    அவரை வாழ்த்திய பராசக்தி, நீ எதற்காக தவம் இருந்தாய்? உனக்கு என்ன வரம் வேண்டும். கேள் தருகிறேன் என்றாள். அதற்கு சிவயோக ஞானசித்தர், ஜெகதாம்பிகை, நான் பல நாட்களாக உன் பெயரை மட்டுமே மந்திரமாக தியானித்து வந்துள்ளேன்.

    நான் உன் அடிமை. இந்த அடிமை எந்த இடத்தில் நிஷ்டை ஆகிறேனோ, அந்த இடத்தில் உன் சன்னதி சிவசொரூபியாக பீடமிட்டு அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும். அன்னையே இதுதான் என் விருப்பம் என்றார்.

    இதை கேட்டு அன்னை பராசக்தி மனம் பூரித்தாள். பிறகு அவள், பக்தனே, வெகு நாட்களாக என்னை குறித்து தவம் செய்தமையால், நீ சித்தர்களில் ஒருவனாக சேர கடவாய் என்று ஆசி வழங்கினாள்.

    அதன்பிறகு சிவயோக ஞானசித்தர் எந்த இடத்தில் நிஷ்டை ஆக வேண்டும் என்பதையும் அன்னை பராசக்தியே வரையறுத்து கூறினாள்.

    அர்ச்சுனா நதியும் வைப்பாறும் கூடி சங்கமமாகும் இடத்தில் உன் மனம் போல அமர்வோம் என்று அன்னை பராசக்தி வாக்குறுதி அளித்தாள்.

    அதன் பேரில் சிவயோக ஞானசித்தர் அர்ச்சுனா, வைப்பாறு நதிகள் சங்கமிக்கும் புண்ணிய பூமிக்கு வந்தார். அந்த இடத்திலேயே நீண்ட நாட்கள் இருந்த அவர், அன்னை மாரியம்மனின் திருமேனியை வடிவமைத்தார்.

    பிறகு அந்த புண்ணிய பூமியில், பல, பல இடங்களில் தங்கி, நேம நிஷ்டை அனுஷ்டானம் செய்து வந்தார். இனி பிறவாமை வேண்டாம் என்று கூறி அம்பிகையின் திவ்ய நாமங்களையே மந்திரமாக சொல்லி வந்தார்.

    ஒருநாள் அவர் தான் எப்படி நிஷ்டையில் ஐக்கியமாக போகிறேன் என்பதை ஊர் மக்களுக்கு தெளிவாக கூறினார்.

    சுத்தசாத்வீக சூக்ம நாதத்தில் மனதை செலுத்தி சூரிய கலை, சந்திரகலையில் பிராண வாயு செல்லுங்கால் பிருதிவி, அப்பு, தேயு, வாயு எனும் நான்கு தத்துவத்தில் வந்து விலகும். அப்போது பிராண வாயு ஆகாய தத்துவத்தில் அடையும்.

    அச்சமயம் சுவாசம் குறைந்து வரும். அக்காலம் எது என அறிந்து வாசிஸ்தம்பனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு கூறிவிட்டு சிவயோக ஞானசித்தர் அஷ்டாங்க யோகத்தில் அமர்ந்து தவம் இயற்றினார். ஆடாமல், அசையாமல் அவர் ஒரே இடத்தில் அமர்ந்து ஆழ் தியானத்துக்கு சென்றார்.

    நாளடைவில் சித்தரின் மேனி முழுவதும் புற்றுக்களாலும், புதர்களாலும் மூடப்பட்டன. இந்த நிலையிலேயே அவர் அந்த புண்ணிய பூமியில் நிஷ்டையாகி ஐக்கியம் ஆனார்.

    அவர் ஐக்கியமான இடத்தில் தான் இருக்கன்குடி மாரியம்மனின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இப்போதும் சிவயோக ஞான சித்தர் அருவுருவமாக வந்து தினம், தினம் அன்னை பராசக்தியை வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • பாதுகாக்கும் குல தெய்வமாக மாரியம்மன் திகழ்கிறாள்.
    • அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளன.

    அம்மன் கோவில்களில் வழக்கமாக மாரியம்மன், இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருப்பாள். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் கருவறை மாரியம்மனோ, சிறப்பம்சமாக வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டிருக்கிறார்.

    கருவறை அழகிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் நுழைவு வாசலின் உயரம் குறைவாக இருப்பதால் குனிந்து உள்ளே போக வேண்டும். அம்மன் ஆபரணங்கள் அணிந்து மின்னுகிறாள். அம்மனின் கண்கள் காண்பதற்கே மெய் சிலிர்க்கும்.

    அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளன. நந்தீஸ்வரர் மற்றும் கொடிமரம் மகாமண்டபத்தின் முன்புறம் அமைந்துள்ளன.

    கருவறையின் தென்புறம் அரச மரத்தடியில் சித்திவிநாயகர் சன்னதியும் மற்றும் வடக்குவாய் செல்லியம்மன், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் சன்னதிகளும் அமைந்துள்ளன.

    கருவறையின் வடக்குப் பகுதியில் பைரவர், வீரபத்திரர், பேச்சியம்மன், காத்தவராயர் சன்னதிகள் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்தின் தென் கிழக்கு பகுதியில் கருப்பசாமி சன்னதி அமைந்துள்ளது.

    மூன்று நாட்கள் ஊருக்குள் இருந்து விட்டு கோவில் உள்ள இடத்திற்கு மீண்டும் அம்மன் கொண்டுவரப்பட்டதால் அம்மனின் உற்சவர் சிலை, ஒவ்வொரு ஆடிமாதமும் கடைசி வெள்ளியன்று ஊரில் உள்ள கோவிலில் எழுந்தருளி, மூலவர் உள்ள இடத்திற்கு வந்து தங்கவைக்கப்படுகிறது. மறுநாள் இங்கிருந்து புறப்பட்டு ஊருக்குள் உள்ள உற்சவர் கோவிலை அடைகிறது.

    கோவில் தனிச்சிறப்புகள்

    இருக்கன்குடிக்கு மட்டுமின்றி அதை சுற்றியுள்ள நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்து மக்களுக்கும் இப்பகுதியில் இருந்து பிழைப்பு தேடி வெளியூர் சென்று குடியேறிய மக்களுக்கும் அருள்கடாட்சம் தந்து பாதுகாக்கும் குல தெய்வமாக மாரியம்மன் திகழ்கிறாள்.

    இருக்கன்குடி மாரியம்மனின் புகழ் 1600-ம் ஆண்டு முதல் மற்ற பகுதிகளுக்கு பரவத் தொடங்கியது. 1605-ம் ஆண்டு முதல் மதுரை பகுதியை ஆண்ட பாளையக்காரர்கள் இருக்கன்குடி மாரியம்மனுக்கு மானியம் கொடுத்தனர்.

    • ஏராளமான பக்தர்களுக்கு கனவிலேயே தீர்வு சொல்லி உள்ளாள்.
    • அம்மனுக்கு எலுமிச்சம் பழமாலை மிகவும் பிடிக்கும்.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங் காவலர்கள் குழு உறுப்பினராக இருக்கும் சி.ரா.மு.ராமமூர்த்தி பூசாரி தற்போது கோவில் மேம்பாட்டு பணிகளை அரசின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செய்து வருகிறார். தன் மூதாதையர்களின் பரம்பரை சிறப்பு உணர்ந்து அவர் அம்மனுக்கு கைங்கர்யம் செய்து வருகிறார். அவர் அளித்த பேட்டி:-

    அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பு எப்படி உணர்கிறீர்கள்?

    சுமார் 500 ஆண்டுகளாக எங்களது பரம்பரை இத்தல பணியை செய்து வருகிறது. கோவில் நிர்வாகிகளாகவும், பூசாரிகளாகவும் எங்கள் பரம்பரை உள்ளது.

    இதை நாங்கள் மிகவும் உன்னதமாக கருதுகிறோம். அம்மனை இன்னும் 10 நிமிடம் பார்க்க மாட்டோமா? என்று மக்கள் தவம் இருக்கும் இந்த காலத்தில், அம்மனுக்கு சேவையாற்றுவதை நாங்கள் எங்களுக்கு கிடைத்த கவுரவ மாகவும், பெருமையாகவும் கருதுகிறோம்.

    இருக்கன்குடி தலத்தின் முக்கிய சிறப்பு என்ன?

    எல்லா முக்கிய கோவில்களிலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார். இத்தலத்தில் சிவபோக ஞானசித்தர் அடங்கி உள்ளார். 1500 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அம்பாள் காட்சி கொடுத்தாள். அவர் நிஷ்டையாகி உள்ள இடத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    அம்மன் இங்கு சிவசொரூபியாக இருக்கிறாள். இதனால் அவளுக்கு எதிரில் நந்தி வைக்கப்பட்டுள்ளது. அவளது வாகனமாக ரிஷபம் உள்ளது. மற்ற அம்மன் தலங்களில் குங்குமம் கொடுப்பார்கள். ஆனால் இத்தலத்தில் விபூதிதான் பிரதானமாக அளிக்கப்படுகிறது.

    கோடிக்கணக்கான பக்தர்களை இந்த அம்மன் ஈர்த்தது எப்படி?

    இருக்கன்குடி மாரியம்மன் கண்கண்ட பேசும் தெய்வம் ஆவாள். அவளிடம் மனக்குறையை கொட்டினால் ஆறுதல் தருவாள் என்பது பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவமாகும். இதன்மூலம் வேண்டிய வரம் கொடுத்தாள்.

    ஏராளமான பக்தர்களுக்கு அவள் கனவிலேயே தீர்வு சொல்லி உள்ளாள். இதன்மூலம் பக்தர்கள் ஈர்க்கப்பட்டனர்.

    மாரியம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்?

    அம்மை நோய் உடனே தீரும். கண்நோய்கள் குணமாகும். வயிற்றுவலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். குறிப்பாக குழந்தை வரம் கேட்டு தொட்டில் கட்டினால் உடனே பலன் கிடைக்கிறது.

    இருக்கன்குடி மாரியம்மன் சமீபத்தில் நிகழ்த்திய அற்புதம் உள்ளதா?

    நம்பி தொழுதவர்கள் யாரையும் இந்த அம்மன் கைவிட்டதே இல்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பக்தர், அம்மன் தன்வாழ்வில் நிகழ்த்திய அதிசயத்தை சொல்லியபடிதான் உள்ளனர்.

    கடந்த 13 ஆண்டுகளாக வாய் பேசாமல் இருந்த என் தம்பி, தற்போது மெல்ல பேச தொடங்கி இருக்கிறார்.

    சுமார் 10 ஆண்டு களுக்கு முன்பு நான் பூஜை வைத்தபோது, ஒரு பெண்ணை மரண படுக்கையில் தூக்கி வந்தனர். டாக்டர்கள் கைவிட்டு விட்ட நிலையில் அந்த பெண் 21 நாள் கோவிலில் விரதம் இருந்து தினமும் அம்மன் தீர்த்தத்தை குடித்து வந்தார்.

    அம்மன் அருளால் உயிர் பிழைத்த அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆளே அடையாளம் தெரியாதபடி செல்வ செழிப்புடன் வந்தார். இதுவும் அம்மனின் திருவிளையாடல்தான்.

    ராஜேந்திரன் பூசாரி ஒரு தடவை மின்சாரத்தால் தாக்கப்பட்டார். மின்சாரம் பாய்ந்ததும் மாரி தாயே என்று அவர் அலற, மறு நிமிடம் அங்கு மாரியம்மன் தோன்றி அவரை காப்பாற்றி இருக்கிறாள். இப்படி அம்மனின் திருவிளையாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    இருக்கன்குடி மாரியம்மனுக்கு எவையெல்லாம் இஷ்டமானவை?

    அம்மனுக்கு எலுமிச்சம் பழமாலை மிகவும் பிடிக்கும். அவளை நினைத்து மாவிளக்கு போட்டால் வயிற்று வலி தீரும்.

    அவளுக்கு தேங்காய், பழம் முக்கியம், அவளுடைய எல்லா வழிபாடுகளிலும் தவறாமல் தேங்காய் இடம் பெறும்.

    திருமணத்தடை அகல எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்?

    • 2 ஆறுகளுக்கு இடையில் உள்ள மண் திட்டில் தான் கோவில் உள்ளது.
    • கயிறு கட்டி மாரியம்மன் சன்னதி பகுதியில் ஆதி மாரியம்மன் தோன்றிய தலம் உள்ளது.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிக, மிக பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பிரமாண்ட கட்டிட அமபை்புகளோ, வான் உயர் கோபுரமோ இல்லை. ஒரு சிறு கருவறை மட்டுமே இதன் பழமை சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

    மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது என்று சொல்வது போல இத்தலம் மிக சிறிய கோவிலாக இருந்தாலும், இத்தலத்தின் சிறப்பும், அம்மனின் அருளும் கோடிக்கணக்கான மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

    வைப்பாறு, அர்ச்சுனா நதி ஆகிய 2 ஆறுகளுக்கு இடையில் உள்ள மண் திட்டில் தான் கோவில் உள்ளது. கோவில் நுழைவாயில் வழியாக உள்ளே நாம் சென்றதும் கருவறை நம் கண்களுக்கு தென்படுகிறது.

    அழகிய சிறு விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகத்தில் மாரியம்மன் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறாள். அந்த விமானத்துக்கு தங்கம் போல தக, தக என மின்னும் வகையில் வர்ணம் பூசியுள்ளனர்.

    கருவறைக்குள் அம்மன் கருணை பொங்க இருக்கிறாள். தன்னை நாடி வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள்பாலிக்கும் வகையில் அம்மன் புன்னகை பூக்க காட்சித் தருகிறாள்.

    பொதுவாக அம்மன் ஆலயங்களில் இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்டபடி அம்மன் இருப்பதையே பார்த்து இருப்போம். ஆனால் இத்தலத்தில் மட்டுமே மாரியம்மன் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்டபடி காட்சி தருகிறாள்.

    இந்த அண்ட சராசரத்தில் ஆக்கலும் நானே, அழித்தலும் நானே, நான் இல்லாமல் இவ்வூலகில் எந்த ஒரு அணுவும் அசையாது என்ற தத்துவத்தை அம்மனின் காட்சி உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

    கர்ப்பக்கிரகத்தை அடுத்து சிறிய அர்த்தமண்டபம் உள்ளது. அதையடுத்து மகா மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இத்தலம் அம்மன் தலம் என்றாலும் சிவரூப சாந்தமாக உள்ளது. இதன் காரணமாக மகா மண்டபத்தில் சிவாலயங்களில் இருப்பது போன்று நந்தீசுவரர் வைக்கப்பட்டுள்ளார். இது ஒரு வித்தியாசமான அமபை்பாக கருதப்படுகிறது.

    அதன் அருகில் கொடி மரமும், பலி பீடமும் உள்ளது.

    மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலமான இந்த கோவில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்ற இரண்டே இரண்டு பிரகாரங்களைத் தான் கொண்டுள்ளது.

    இந்த வெளிப்பிரகாரத்தில் பளிங்கு நடை கற்கள் பதிக்கப்பட்டு, உத்தரத்தில் வர்ணம் பூசி புதிய மெருகு ஏற்றப்பட்டால், கோவிலின் அழகே ஒரு படி உயர்ந்து விடும் என்று கருதப்படுகிறது.

    கோவில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் இரண்டிலும் பல சன்னதிகள் உள்ளன. உள்பிரகாரத்தில் அரச மரத்தடியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த சன்னதி அருகே வாழவந்தம்மன் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதிக்கு மேற்கே ராக்காச்சி அம்மன் சன்னதி உள்ளது.

    வடமேற்கு பகுதியில் பேச்சியம்மனும், முப்பிடாரி அம்மனும் தனித்தனி சன்னதியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். அதற்கு கிழக்கே காத்த வராயனும், வைர மூர்த்தியும் உள்ளார்கள்.

    தென் கிழக்கு மூலை பகுதியில் காவல் தெய்வமான கருப்பசாமி வீற்றிருக்கிறார். இந்த சன்னதிகளில் வழிபட்ட பிறகு சற்று தள்ளியுள்ள கயிறு கட்டி மாரியம்மனையும் வழிபட வேண்டும்.

    கயிறு கட்டி மாரியம்மன் சன்னதி பகுதியில் ஆதி மாரியம்மன் தோன்றிய தலம் உள்ளது. அங்கு தான் தல விருட்சம் உள்ளது. ஆதி அம்மன் தோன்றிய இடத்தில் பெரிய சூலாயுதம் வைத்துள்ளனர். அதற்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    கோவில் வெளிப்பிரகாரத்தில் விளக்கு ஏற்றி வழிபட வசதி செய்து கொடுத்துள்ளனர்.கோவிலை சுற்றி பக்தர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மொட்டை போடுவதற்கு, மாவிளக்கு நேர்ச்சை கடனை நிறைவேற்ற, விடலை போடுவதற்கு என்று தனித்தனி இடங்கள் உள்ளன. பக்தர்கள் பொங்கல் வைக்க கோவில் முன்பு தனி இடம் உண்டு.

    • ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரமோற்சவ திருவிழா முதன்மையானது.
    • தை, பங்குனி, ஆடி ஆகிய 3 மாதங்களில் மட்டும் இருக்கன்குடி ஊரே மக்கள் வெள்ளத்தில் மூழ்கும்.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருவிழா கோலாகலத்தை காணலாம். அம்மனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற உந்தலில் தினம், தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடிக்கு படையெடுத்தபடி உள்ளனர்.

    தீ சட்டி எடுக்கவும், மாவிளக்கு போடவும், மொட்டை அடித்துக்கொள்ளவும் தினந்தோறும் பக்தர்கள் வந்தபடி இருக்கிறார்கள். இதனால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    தை, பங்குனி, ஆடி ஆகிய 3 மாதங்களில் மட்டும் இருக்கன்குடி ஊரே மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் வகையில் பக்தர்கள் அலை, அலையாக வருவதை காணலாம். இந்த 3 மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமை நாட்களில் மாரியம்மன் அருள் பெற திரளும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும்.

    இந்த 3 மாதம் தான் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. இதில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரமோற்சவ திருவிழா முதன்மையானது. பொதுவாக ஆடி மாதத்தை அம்மனுக்கு உரிய மாதம் என்பார்கள்.

    தேவலோகத்தில் தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் பகல் பொழுதுவாகவும், ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் இரவு பொழுதுவாகவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் ஆடி மாதம் பகல் முடிந்து இரவு நேரம் தொடங்கும் காலமாக கருதப்படுகிறது.

    இதை தட்சிணாயன புண்ணிய காலம் என்பார்கள். இத்தகைய புண்ணிய காலத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவில் மட்டுமே ஊர் மத்தியில் உள்ள உற்சவ அம்மன் வெளியில் வீதி உலா வருகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நித்தம், நித்தம் தன்னைத் தேடி வரும் பக்தர்களை தானே தேடிச் சென்று தரிசனம் தருவது தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாகும்.

    ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3-வது வெள்ளிக்கிழமையன்று கொடியேற்ற வைபவம் நடைபெறும். அன்று காலை 5 மணியளவில் இருக்கன்குடி கிராம பொதுமக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப்பிலைக்கொடி கட்டுவார்கள்.

    இதில் நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். கடைசி வெள்ளிக்கிழமையன்று பகலில் ரிஷப வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் கோவிலில் இருந்து எழுந்தருள்வாள். பிறகு வீதி வலம் வருவாள்.

    நதியில் அம்மன் உலா வரும் போது மக்கள் திரளாக நின்று வணங்குவார்கள். பிறகு மூலவர் கோவிலை சென்றடையும் அம்மன் இரவு முழுவதும் அங்கு சர்வ அலங்காரத்துடன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவாள்.

    மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மேல் மூலவர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர் மத்தியில் இருக்கும் உற்சவர் கோவிலை மீண்டும் அம்மன் சென்று அடைவாள். அப்போது பக்தர்கள் மேள, தாளம், நகரா ஒலி எழுப்ப உற்சவத்தை சிறப்பு செய்வார்கள்.

    ஆடி பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

    • இருக்கன்குடிதெய்வமே! தினமும் உன்னை கையார கும்பிடுவோர்களது இடரை நீக்கி கருணை செய்வாய்.
    • என்னுடைய வினைகளும் என்னை விட்டு அகல்வதற்கு தாயே! நீ அருள் செய்ய வேண்டும்.

    இருக்கன்குடி மாரியம்மனை வழிபடும் போதோ, வழிபட்ட பிறகோ, கீழ்க்கண்ட பிரார்த்தனையை படித்தால் உங்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    தாமரை போன்ற அழகான முகத்தையும் மீன் போன்ற அழகான கண்களையும், பஞ்சு போன்ற மென்மையான அழகிய பாதங்களையும், வெண்மையான அழகிய பல் வரிசைகளையும் கண்ணார கண்டு மனப்பூர்வமாக உன்னை பணிய வேண்டுமானால் மேகம் போன்றகரிய அழகிய கூந்தலையுடைய மாரியம்மையே! நீ தான் அருள வேண்டும்.

    விண்ணுலகை காக்கும் தலைவனான இந்திரனும் மற்ற தேவர்களும் உன் அருகில் வந்து உன்னுடைய தாமரை போன்ற அழகிய பாதங்களை விரும்பி துதிப்பார்கள். அதனால் அவர்கள் கண்ணியமாகிற மேம்பாட்டினைப் பெறுவார்கள்.

    தேவர்களுக்கு நீ இவ்வாறு அருள் செய்வதால் கருணைக்கு நீ ஒருத்தியே! உனக்கு நிகர் வேறு யாருமில்லை. மாரிமுத்தே! இத்தகைய உன்னை நான் கண்டு தொழுவதற்காகவே நீ இவ்விருக்கன்குடி மண்ணில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி தருகிறாய்.

    இருக்கன்குடி மாரிமுத்தே! நீ கூர்மை நிறைந்த வேல் போன்ற கண் அழகுடைய பெண்களிடத்தில் வைக்கும் ஆசையை மாற்றுவாய்! பொய்யும்களவும் இவற்றால் உண்டாகும் கோபங்களும் ஆகிய குற்றங்களைப் போக்குவாய். மை பொருந்திய கண்களுடைய இருக்கன்குடித் தெய்வமே! தினமும் உன்னை கையார கும்பிடுவோர்களது இடரை நீக்கிக் கருணை செய்வாய்.

    ஒளி பொருந்திய பசுங்கொடி போன்ற இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! கடல் அலைபோல ஓயாமல் வளர்ந்து பெருகும் எனது கொடூரமான பாபங்களை தீர்ப்பாயாக! அதற்காக காலை, மதியம், மாலை இம்முப்போதுகளிலும் என் முன் வந்து அருள் செய்ய வேணுமாய் வேண்டுகிறேன்.

    மங்கையர் தலைவியே! இருக்கன்குடி மாரிமுத்தே! என் அருமைத் தாயே! குங்குமம் பூசப்பெற்ற தனங்களையுடைய கொடி போன்ற மெல்லிய உடல் அழகு வாய்ந்த பெண்களிடம் வைக்கும் ஆசை வழியாகப் புகுவான் எமதேவன்.

    அதனால் இடையூறுகளை அடையும் பிறவியாகிற உடல் ஏற்படும். அதில் பிணி பிசி, மூப்பு என்ற துயர்கள் உண்டாகும். அத்துயரை சூரியனுக்கு எதிரில் பனி போவதுபோல அம்மே! நீ போக்கி அருள வேண்டுகிறேன். பிறப்பு எடுத்தது பிறப்பு முடிப்பதற்காகவே என்று எண்ணாமல், மேலும்மேலும் பற்பல பிறப்புகளை எடுப்பதற்கு காரணமான வினைகளைச் செய்வதால் மாயாத மாயப் பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. இப்பிறவி நோயை தீர்த்துக் கொள்ள நிதி படைத்தவர்தான் தர்மங்கள் செய்து நல்ல வழி தேடிக் கொள்ளலாம்.

    ஆனால் உலோபம் என்ற கருமித்தனத்தால் அவ்வாறு செய்வதில்லை. மனதால் கூட ஒரு சிறு பொருளையும் பிறருக்கு கொடுக்க மாட்டாத உலோபியராய் வாழ்வர். அத்தகைய உலோபியரது செல்வம் அவருக்கு பயன்படாமல் அவரை விட்டுவிட்டு மாயமாய் மறைந்து போவது நீதிநூல் வழக்கு.

    அதுபோல என்னுடைய வினைகளும் என்னை விட்டு அகல்வதற்கு தாயே! நீ அருள் செய்ய வேண்டும். மனம் சலியாமலும் உன்னுடைய அழகிய முகம் கோணாமலும் உனது வாயார ஒரு நன்மொழி கூறுவாயாக! அதாவது உன்பாவங்கள் கழிய கடவுவதாக என்று ஒரு அருள்மொழி கூறுவாயாக.

    இருக்கன்குடியில் அமர்ந்தருளும் மாரிமுத்தே! வர்ணங்கள் நிறைந்த அழகிய பட்டாடை அணிந்திருப்பவளே! உன்னைத் தினமும் நூறு தடவை பணிந்து வழிபடுவேன். இவ்வாறு வேறு ஒரு தெய்வத்தையும் நான் பணிய மாட்டேன். இத்தகைய என்னைத் தந்தையும் தாயும் குழந்தைக்கு அருள் செய்வதுபோல் நீ எனக்கு இரக்கம் காட்டித் தினமும் என்முகம் பார்த்து அருள் தருவாயாக.

    மத்த மலரையும், பிறையையும், சடையில் உடையவளே இருக்கன்குடியில் அமர்ந்திருக்கும் மாரிமுத்து! எத்தனையோ பல தலங்களில், மாரியம்மன் என்னும் உன் திருநாமத்தின் புகழ் பரவியிருக்கிறது. அத்தலங்களில் போய் வழிபட்டாலும் அவ்வழி பட்டவர்களுக்கு இடர்கள் நீங்குவது இத்தலம் வந்து வழிபட்ட பிறகுதான்.

    அருள் நிறைந்த இத்தலத்தில் வந்து பணிந்தவர்களுக்கே இடர் நீங்கும் என்றதால் இதன் பெருமைக்கு ஈடுவேறில்லை.

    அழகிய உருவமுடையவளே! சிவபெருமானின் ஆசைக்கு உரியவளே! தினமும் உனது அழகிய பாதத் தாமரைகளை நினைந்து உருகிப் பக்தியுடன் வழிபடுவோர்களது துன்பங்களை நீக்கி இன்பத்தைக் கொடுப்பாய். அவ்வாறே எனக்கும் மனம் வைத்து அருள் செய்து என்னைக் காத்தருள வேண்டுகிறேன்.

    • இருக்கன் குடியே விழாக்கோலம் பூண்டு திரும்பிய திசை எல்லாம் பக்தர்களாக காணப்படுவார்கள்.
    • தன்னை அண்டிய அத்தனை பேருக்கும் வாக்கு சொல்லி வரம் அளிப்பாள்.

    இருக்கன்குடி கோவிலில் விநாயகர் அரசமரத்தடியில் வீற்றிருக்கிறார். அருகே வாழவந்தானும், அதற்கு மேற்கே ராக்காச்சி அம்மனும் உள்ளனர். வடமேற்கு பகுதியில் பேச்சியம்மனும், முப்புடாதி அம்மனும் தனிதனி சன்னதியில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

    கிழக்கு பகுதியில் காத்தவராயன் கோவில் அமைந்துள்ளது. பைரவமூர்த்தி சன்னதியும் உள்ளது. கருப்பசாமி கோவில் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த தெய்வங்களை வணங்கிவிட்டு அருகில் உள்ள கயிறு கட்டி மாரியம்மனையும் வழிபட்டு செல்வார்கள்.

    பக்தர்கள் குவியும் திருவிழாக்கள்

    கேட்டவர்களுக்கு கேட்ட வரங்கள் அளித்துவரும் மாரியம்மன் பக்தர்களின் நோய்களையும் தீர்த்து வருகிறாள். இதனால் கோவிலுக்கு நாளுக்குள் நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இத்திருத்தலத்தில் செய்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. இடுக்கண்களையும் இருக்கன் குடியாளுக்கு ஆடி வெள்ளி அன்று நடைபெறும் பெருந்திருவிழா சிறப்புடையதாகும். அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொடி ஏற்றம் நடை பெறும்.

    ஆடிகடைசி வெள்ளி அன்று உற்சவர் கோவிலில் இருந்து அன்னையின் திருமேனி இடப வாகனத்தில் எழுந்தருளி அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோவிலில் எழுந்தருள்வாள். இந்த திருவிழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் இருக்கன்குடியில் கூடுவார்கள்.

    இருக்கன் குடியே விழாக்கோலம் பூண்டு திரும்பிய திசை எல்லாம் பக்தர்களாக காணப்படுவார்கள். அன்று விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் வேன், கார்களில் பக்தர்கள் அலை அலையாக வந்து கலந்து கொள்வார்கள். தை கடைசி வெள்ளி கிழமையிலும் விழா நடை நடைபெறும்.

    அன்றும் பெருந்திரளான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள். அன்று பக்தர்கள் அம்மனுக்கு அக்கினி சட்டி எடுத்தும், ஆயிரங்கண்பானை எடுத்தும்,மொட்டை போட்டும். மாவிளக்கு எடுத்தும் தங்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.

    தன்னை ஏற்று சாமியாடும் பக்தர்களைக் கூட தெய்வமாக்கிவிடும் கருணை உள்ளம் கொண்டவள் மாரி. அந்த மாரியர்களில் மகாசக்தி வாய்ந்தவள் இந்த இருக்கன்குடி மாரியம்மன். ஆடியில் இந்த அம்மனை தரிசித்து அருள் பெற்று வாருங்கள்.

    இருக்கன்குடி அமர்ந்தவளே; எக்குடிக்கும் தாயாரே!

    வார்ப்புச் சிலையாளே; வச்சிரமணித் தேராளே!

    வருத்த வகையறியேன்; வர்ணிக்கப் பேரறியேன்!

    பேரு மரியேனம்மா, பெற்றவளே யென்தாயே!

    இருக்கன்குடியை விட்டு என் தாயே வாருமம்மா!

    ஆடி மாதம் பிறந்துவிட்டதால் இருக்கன்குடி மாரியாயி கோவில் முழுக்க கொண்டாட்டம்தான். தெற்கே இருக்கிற கிராமியப் பாடகர்கள் எல்லாரும் கூடி இருக்கன்குடி மாரியைப் பாடல்களால் வர்ணித்து அழைப்பது வழக்கம். ஆத்தா இருக்கன்குடி மாரியும் அவர்களின் பாடலுக்கு மனமிரங்கி வந்து அருள் மழை பொழிவாள்.

    தன்னை அண்டிய அத்தனை பேருக்கும் வாக்கு சொல்லி வரம் அளிப்பாள். இவளை வணங்கியவர்கள் வெறுங்கையோடு போனதே இல்லை என்கிறார்கள் இந்த ஊர்க்கார்கள். உண்மைதான், மாரியின் பாடல்களாலும் வேப்பிலை, எலுமிச்சை வாசத்தாலும் கிரங்கித்தான் கிடக்கிறது இருக்கன்குடி.

    பூஜை கால நேரங்கள்

    தினந்தோறும் இத்திருக்கோவிலில் ஆறுகால பூஜைகள் கீழ்கண்ட விபரப்படி நிகழ்கின்றன.

    காலை நடை திறப்பு-5 மணி

    1. உதய பூஜை-7 மணி (காலை)

    2. கால சந்தி பூஜை-9 மணி (காலை)

    3. திருக்கால சந்தி பூஜை-11 மணி (காலை)

    4. உச்சிக்கால பூஜை-1 மணி (பிற்பகல்)

    5. சாயரட்சை பூஜை-6 மணி (மாலை)

    6. அர்த்த பூஜை-8 மணி (இரவு)

    பிரதி செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக காலை முதல் இரவு பூஜை முடியும் வரை சன்னதி திறந்து வைக்கப்பட்டு இருக்கும். மற்ற தினங்களில் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை சன்னதி பூட்டப்பட்டிருக்கும். தினமும் 2 நேரம் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    • மூர்த்திகளை தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
    • காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்கு செல்லக் கூடாது.

    சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கலவரம் காரணமாக இருக்கன்குடி மாரியம்மனை வழிபட வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. இது பற்றி பரம்பரை பூசாரி வருத்தப்பட்டு அம்பாளிடம் கேட்டார். அப்போது அம்மன் குரல் அசரீரியாக ஒலித்தது.

    குழந்தாய்! நீ வருந்தாதே. நாளை என்னிடம் இருந்து 2 நல்ல பாம்புகள் வரும். அவற்றிடம் நீ அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இதை கேட்டதும் பூசாரி உற்சாகமானார். மறுநாள் அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பூஜைகள் நடத்தினார்.

    பூஜை நடத்தி முடித்ததும் அம்மன் சொன்ன மாதிரியே 2 நல்ல பாம்புகள் அம்மன் சிலை பின்னால் இருந்து வந்தன. அவற்றை பார்த்ததும் பூசாரி, வாருங்கள், வாருங்கள், இதோ உணவு சாப்பிடுங்கள் என்று கூறி தான் தயாராக வைத்திருந்த முட்டையை எடுத்து வைத்தார்.

    முட்டையை குடித்த 2 பாம்புகளும் பிறகு மீண்டும் அம்மன் சிலை பின்னே சென்று மறைந்தன. பிறகு அந்த இரண்டு பாம்புகளும் அடிக்கடி பூசாரியிடம் வந்து சென்றன.

    பூசாரியும் அந்த பாம்புகளை வரவேற்று உணவு கொடுப்பது வழக்கமானது. நாளடைவில் அந்த பாம்புகள் பூசாரியிடம் செல்லப்பிராணிகள் போல மாறி பழகின.

    சில நாட்கள் கழித்து பூசாரி தன் மனைவி முத்து லட்சுமியிடம், இனி நான் இரவில் கோவிலில் தான் தூங்கப்போகிறேன் என்றார். அதன்படி இரவில் கோவில் சன்னதியில் தங்கி வந்தார்.

    அப்போது இரண்டு பாம்புகளும், பூசாரியுடன் படுத்துக்கொண்டன. இதை நிறைய பேர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

    அந்த காலத்தில் இந்த சம்பவம் இருக்கன்குடி மாரியம்மன் நிகழ்த்திய அற்புதமாக தென் மாவட்ட மக்களிடம் பேசப்பட்டது.

    * அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வதோ, ஆலயம் செல்வதோ கூடாது.

    * காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக் கூடாது.

    * கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது. நிறைமாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணை குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படியே நடக்க வேண்டும்.

    * மூர்த்திகளைத் தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.

    * கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது.

    * இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக் கூடாது.

    * விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக் கூடாது.

    * சாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போதல், சிவ நிர்மால்யங்களைத் தூண்டுதல், மிதித்தல் கூடாது.

    * ஸ்தூபி, கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

    * பிறர் வீட்டில் அன்னம் புசித்த அன்று கோவிலுக்குச் செல்வது தவறு.

    * கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக் கூடாது.

    * வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.

    * மரணத்தீட்டு உள்ளவர்களையோ தீட்டு உள்ளவர்களோ அல்லது அத்தீட்டு உடையவரைத் தொட்டபின் குளிக்காமலோ கோவிலுக்குச் செல்லக் கூடாது.

    * கருப்பு வண்ண உடை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது.

    • மூர்த்திகளைத் தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
    • காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக் கூடாது.

    சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கலவரம் காரணமாக இருக்கன்குடி மாரியம்மனை வழிபட வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. இது பற்றி பரம்பரை பூசாரி வருத்தப்பட்டு அம்பாளிடம் கேட்டார். அப்போது அம்மன் குரல் அசரீரியாக ஒலித்தது.

    குழந்தாய்! நீ வருந்தாதே. நாளை என்னிடம் இருந்து 2 நல்ல பாம்புகள் வரும். அவற்றிடம் நீ அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இதை கேட்டதும் பூசாரி உற்சாகமானார். மறுநாள் அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பூஜைகள் நடத்தினார்.

    பூஜை நடத்தி முடித்ததும் அம்மன் சொன்ன மாதிரியே 2 நல்ல பாம்புகள் அம்மன் சிலை பின்னால் இருந்து வந்தன. அவற்றை பார்த்ததும் பூசாரி, வாருங்கள், வாருங்கள், இதோ உணவு சாப்பிடுங்கள் என்று கூறி தான் தயாராக வைத்திருந்த முட்டையை எடுத்து வைத்தார்.

    முட்டையை குடித்த 2 பாம்புகளும் பிறகு மீண்டும் அம்மன் சிலை பின்னே சென்று மறைந்தன. பிறகு அந்த இரண்டு பாம்புகளும் அடிக்கடி பூசாரியிடம் வந்து சென்றன.

    பூசாரியும் அந்த பாம்புகளை வரவேற்று உணவு கொடுப்பது வழக்கமானது. நாளடைவில் அந்த பாம்புகள் பூசாரியிடம் செல்லப்பிராணிகள் போல மாறி பழகின.

    சில நாட்கள் கழித்து பூசாரி தன் மனைவி முத்து லட்சுமியிடம், இனி நான் இரவில் கோவிலில் தான் தூங்கப்போகிறேன் என்றார். அதன்படி இரவில் கோவில் சன்னதியில் தங்கி வந்தார்.

    அப்போது இரண்டு பாம்புகளும், பூசாரியுடன் படுத்துக்கொண்டன. இதை நிறைய பேர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

    அந்த காலத்தில் இந்த சம்பவம் இருக்கன்குடி மாரியம்மன் நிகழ்த்திய அற்புதமாக தென் மாவட்ட மக்களிடம் பேசப்பட்டது.

    * அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வதோ, ஆலயம் செல்வதோ கூடாது.

    * காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக் கூடாது.

    * கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது. நிறைமாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணை குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படியே நடக்க வேண்டும்.

    * மூர்த்திகளைத் தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.

    * கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது.

    * இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக் கூடாது.

    * விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக் கூடாது.

    * சாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போதல், சிவ நிர்மால்யங்களைத் தூண்டுதல், மிதித்தல் கூடாது.

    * ஸ்தூபி, கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

    * பிறர் வீட்டில் அன்னம் புசித்த அன்று கோவிலுக்குச் செல்வது தவறு.

    * கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக் கூடாது.

    * வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.

    * மரணத்தீட்டு உள்ளவர்களையோ தீட்டு உள்ளவர்களோ அல்லது அத்தீட்டு உடையவரைத் தொட்டபின் குளிக்காமலோ கோவிலுக்குச் செல்லக் கூடாது.

    * கருப்பு வண்ண உடை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது.

    • குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர்.
    • வயன மண்டபத்தில் 20 நாட்கள் தங்கி 6 பூஜைகளுக்கும் போய் தீர்த்தம் எடுத்து தடவினால் கண்பார்வை கிடைக்கும்.

    1.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது.

    2. சாத்தூரில் இருந்து இருக்கன்குடிக்கு உள்ள சாலைவசதி சிறப்பாக இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் இத்தலத்தை மிக எளிதாக சென்று அடையலாம்.

    3. சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு வைப்பாறு, அர்ச்சுனா நதியில் புனித நீராடிய பிறகே அம்மனை தரிசித்தனர். தற்போது அணை கட்டப்பட்டு விட்டதால் ஆண்டில் 90 சதவீதம் நாட்கள் இரு நதிகளிலும் தண்ணீர் ஓடுவது இல்லை. எனவே பக்தர்கள் குறை தீர்க்க நதிகளில் சிறுசிறு குடிசைகள் அமைத்து பம்ப் செட் வைத்துள்ளனர். கட்டணம் செலுத்தி குளித்துவிட்டு அம்மனை தரிசிக்கலாம்.

    4. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை சுற்றி சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. எனவே பூஜைப் பொருட்கள் வெளியில் இருந்து வாங்கி வர வேண்டியதில்லை.

    5. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கருவறை இப்போதும் அப்படியே உள்ளது.

    6. கருவறையில் உள்ள பராசக்தி மாரியம்மன் சிலையை சதுரகிரி சித்தர் சிவயோக ஞான சித்தர் வடிவமைத்ததாக சொல்கிறார்கள்.

    7. இருக்கன்குடி மாரியம்மன் சிலை கம்பீரமானது. அருள் பார்வை நிறைந்தது. அவள் முகத்தை எத்தனை மணி நேரம் பார்த்துக்கொண்டே இருந்தாலும் பக்தர்கள் மனதில் சலிப்பே வராது.

    8. பூசாரி தீபாராதனை காட்டும் போது மாரியம்மன் முகத்தை உன்னிப்பாக கவனித்தால் அவள் கருணை பொங்க நம்மை பார்ப்பது போல இருக்கும்.

    9. கோவிலை சுற்றி காது குத்த, மொட்டை போட, விடலை தேங்காய் எறிய, ஆடு, கோழி சுத்தி விடுவதற்கு என்று தனித்தனியே வசதியான இடங்கள் உள்ளன.

    10. பக்தர்கள் வசதிக்காக கோவிலை சுற்றி 26 இடங்களில், சிறு, சிறு மண்டபங்கள் உள்ளன. என்றாலும் வசதியாக தங்கி ஓய்வு எடுக்க விரும்பும் பக்தர்கள் சாத்தூர் அல்லது விருதுநகரில் லாட்ஜூகளில் தங்குவதே நல்லது.

    11. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் அம்மனிடம் வேண்டிக்கொண்டு மொட்டை போடுகிறார்கள். தினமும் சுமார் 2 ஆயிரம் பேர் வரை மொட்டை போடுகிறார்கள். விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்.

    12. நிறைய பக்தர்கள் மேள, தாளம், முழங்க தீ சட்டி எடுத்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இதனால் கோவிலில் எப்போதும் மேள சத்தம் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது.

    13. இந்த ஆலயத்தில் புனித நீர் தீர்த்தங்கள் என்று எதுவும் இல்லை. அர்ச்சுனா நதியும் வைப்பாறும் தீர்த்தங்களாக உள்ளன.

    14. கோவில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்டதாக அமைந்துள்ளது.

    15. ஆடி வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபாடு செய்வார்கள். அப்போது பச்சைபட்டு உடுத்தி அம்மன் வீதி உலா வரும் காட்சி அற்புதமாக இருக்கும்.

    16. எந்த அம்மன் தலத்திலும் ஆடு, கோழி பலியிட மாட்டார்கள். ஆனால் இருக்கன்குடியில் ஆடி மாத விழாக்களின்போது பல்லாயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்படும்.

    17. உலக நன்மைக்காக கடந்த ஆண்டு இத்தலத்தில் 10008 சங்கா பிஷேகம் நடத்தப் பட்டது.

    18. கோவிலை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு திருப்பதி பத்மாவதி நிறுவனத்தினர் மேற்கொண்டுள்ளனர். எனவே கோவில் எப்போதும் சுத்தமாக உள்ளது.

    19. இருக்கன்குடிக்கு மட்டுமின்றி அதை சுற்றியுள்ள நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி கிராமத்து மக்களுக்கும் அருள்கடாட்சம் தந்து பாதுகாக்கும் குல தெய்வமாக மாரியம்மன் திகழ்கிறாள்.

    20.இந்தக்கோவிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப்பகுதி மக்களிடம் இருக்கிறது.

    21. இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவரான இந்த பூசாரி பெண்ணின் குடும்பத்தினர் வழியில் வந்தவர்கள் இந்தக்கோவிலின் பரம்பரை பூசாரிகளாகவும், கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாகவும் இருந்து நிர்வகித்து வந்தனர்.

    22. தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை இக்கோவில் நிர்வாகத்தை எடுத்துக்கொண்ட பின்பு கோவிலில் பூஜை செய்யும் உரிமை மட்டும் அந்த குடும்பத்தினருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதுடன் அறங்காவலர் பொறுப்புகளும் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    23.கோவிலின் தெற்குப்பக்கம் வைப்பாறு, வடக்குப்பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கைகுடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது.

    24.இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வருபவர்கள் விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், பூஜை செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

    25.அக்கினிச் சட்டி எடுத்தல், ஆயிரங்கன் பானை எடுத்து வலம் வருதல் போன்றவைகள் மூலம் அம்மனை வழிபடுகின்றனர்.

    26.இங்கு குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர்.

    27.உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர்.

    28.இதுதவிர கயிறு குத்துதல், ஆடு, கோழி பலியிட்டு அசைவ உணவு சமைத்து அன்னதானம் செய்தல் போன்றவையும் செய்யப்படுகிறது. (பொதுவாக எந்த மாரியம்மன் கோவில்களிலும் ஆடு, கோழி போன்றவைகளை உயிர்ப்பலியிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தக்கோவில்களில் இருக்கும் கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்களுக்குதான் உயிர்ப்பலியிடும் வழக்கம் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் இது மாரியம்மனுக்குச் செய்யும் வேண்டுதலாகிக் கொண்டிருக்கிறது).

    29.தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் அதிகமான மக்கள் இந்தக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    30.இத்தலத்தில் உள்ள வயன மண்டபத்தில் 20 நாட்கள் தங்கி 6 பூஜைகளுக்கும் போய் தீர்த்தம் எடுத்து தடவினால் கண்பார்வை கிடைக்கும்.

    32.அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தல விருட்சத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    33.சென்னை மாகாண கமிஷனர் 1882-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு இனாம் மானியமாக 49 ஏக்கர் 19 செண்டும், ரொக்க மானியமாக ரூ.5-ம் கொடுத்ததாக குறிப்புகள் உள்ளன.

    34. இருக்கன்குடி மாரியம்மனின் புகழ் 1600-ம் ஆண்டு முதல் மற்ற பகுதிகளுக்கு பரவத் தொடங்கியது.

    35.1605-ம் ஆண்டு மதுரை பகுதியை ஆண்ட பாளையக்காரர்கள் இருக்கன்குடி மாரியம்மனுக்கு மானியம் கொடுத்து வந்தனர்.

    36. இருக்கன்குடி மாரியம்மன் தனக்கு ஆடி மாதம் பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர் ஒருவர் கனவில் வந்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 1908-ம் ஆண்டு முதல் அங்கு ஆடி பிரமோற்சவம் நடந்து வருகிறது.

    37. சித்தார்த்தி ஆண்டில் (1093) சி.காளியப்ப நாடார் என்பவரால் ஓடு போட்ட மடம் ஒன்று அம்மனுக்கு உபயமாக கட்டி கொடுக்கப்பட்டது.

    38. பாலை யம்பட்டி பொயி லாந்தாஸ் என்ப வர் அம்மன் மீது கீர்த்தனம் பாடி உள்ளார்.

    39. முள்ளிக் குளம் வித்வான் சங்கரபாண்டி பிள்ளை மாலை பதிகம் செய்துள்ளார்.

    40. 1925-ம் ஆண்டு துலுக்கங்குளம் அருளானந்த கருப்ைபயா ராஜா என்பவர் செந்தமிழ் பதிகம் பாடி உள்ளார்.

    41. சாத்தூர் தொழில் அதிபர் ஒருவர் ரூ.4 லட்சம் செலவில் இத்தலத்து அம்மனுக்கு தங்க

    கவசம் செய்து கொடுத்துள்ளார்.

    42. பழனி கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரை செல்வது போல தை மாதம் விரதம் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடிக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    43. மதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்ட மக்கள் மத்தியில் இத்தலம் மிகச் சிறந்த சக்தி பீடமாகத் திகழ்கிறது.

    44. இருக்கன்குடி மாரியம்மன் தென்மாவட்ட பக்தர்களின் கனவில் தோன்றி உத்தரவிட்டதற்கு பல நூறு ஆதாரங்கள் உள்ளன.

    45. நாளுக்கு நாள் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகியபடி உள்ளது.

    46. ஆதி காலத் துக்கு பெருமை வாய்ந்த இத்திருக் கோவிலில் ராஜகோபுரமும், தேரும் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. அம்பாள் அருளால் இந்த குறைகள் வெகு விரைவில் தீர உள்ளன.

    47. அம்மனுக்கு தங்க கவசம் சாத்துபடி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி தாங்கள் விரும்பும் தேதியை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட நாளில் கட்டளைத்தாரர் சார்பாக அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி அன்றைய கட்டளை தாரர்களுக்கு கோவில் சார்பாக பிரசாதம் அனுப்பப்படுகிறது.

    48. தை, பங்குனி, ஆடி மாதங்களில் இத்தலத்தில் சிறப்பான விழாக்கள் நடத்தப்படுகின்றன.

    49. இத்தலம் பற்றிய கூடுதல் தகவல்களை www.irukkangudi-mariamman.org என்ற இணையத்தளத்தில் காணலாம்.

    50. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் முகவரி வருமாறு:- அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் இருக்கன்குடி, சாத்தூர் தாலுகா, விருதுநகர் மாவட்டம். போன்: 04562-259614, 04562-259864, 04562-259699.

    ×