என் மலர்
நீங்கள் தேடியது "Abhishek Sharma"
- இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன் (ஒருநாள்) ஆகியோர் இடம் பெறவில்லை.
- சாம்சன் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.
இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் டி20-யும் அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
இதற்கான டி20 அணியையும் ஒருநாள் அணியையும் பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவும் ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் தேர்வுக்கு லோக் சபா எம்.பி.யும் கிரிக்கெட் ரசிகருமான சசி தரூர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் சுவாரசியமான அணி தேர்வு. சாம்சன், தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தவர். ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.
அதேபோல அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே தொடரில் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தவர். அவரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த வீரர்களின் வெற்றி, தேர்வாளர்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிகிறது. எப்படியும் அணிக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.
இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணி:
சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.
இந்திய ஒருநாள் அணி:
ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
- 2007-ம் ஆண்டு யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசியது என்னை வெகுவாக கவர்ந்தது.
- இந்த மைதானத்திற்கு வந்ததும், எந்த முனையில் இருந்து அவர் 6 சிக்சரை விரட்டினார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தேன்.
டர்பன்:
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நாளை இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் இந்திய தொடக்க ஆட்டக்காரான பஞ்சாப்பை சேர்ந்த அபிஷேக் ஷர்மா, இதே டர்பன் மைதானத்தில் 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் போது இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். 24 வயதான அபிஷேக் ஷர்மாவுக்கு, யுவராஜ்சிங் ஆலோசகராக உள்ளார்.
அபிஷேக் ஷர்மா கூறுகையில், 'டர்பன் மைதானத்தை இதற்கு முன்பு டி.வி.யில் தான் பார்த்துள்ளேன். அதே மைதானத்தில் இப்போது நான் இருப்பது கனவு நனவானது போல் உள்ளது. 2007-ம் ஆண்டு யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசியது என்னை வெகுவாக கவர்ந்தது. முதல் நாள் இந்த மைதானத்திற்கு வந்ததும், எந்த முனையில் இருந்து அவர் 6 சிக்சரை விரட்டினார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தேன். அவர் மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களை தெறிக்க விட்டது மறக்க முடியாத ஒன்று.
அந்த ஆட்டத்தை நான் எனது குடும்பத்தினருடன் டி.வி.யில் பார்த்ததும், வெற்றி பெற்றதும் வீட்டுக்கு வெளியில் வந்து கொண்டாடியதும் இன்னும் நினைவில் உள்ளது. இப்போது அதே இடத்தில் நான் விளையாட இருப்பதை நிச்சயம் யுவராஜ்சிங் பார்ப்பார். அவருக்கு சொல்ல விரும்பும் தகவல், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரை பெருமையடையச் செய்வேன்' என்றார்.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 132 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து வென்றது.
கொல்கத்தா:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி ரன் குவிக்க தவறியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் சிறப்பாக ஆடி 44 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்தியா சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 26 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து இறங்கிய திலக் வர்மா அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்து சென்றது.
3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 79 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் 34 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 79 ரன் குவித்தார்.
இறுதியில் இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
- சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று (ஜனவரி 23) கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சஞ்சு சாம்சன் 26 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.
ஒருபக்கம் அபிஷேக் ஷர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இந்திய அணி 12.5 ஓவர்களில் 133 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்களை விளாசினார்.
இதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் கே.எல். ராகுல் இடம்பெற்றுள்ளார். இவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்தில் இருந்து அதிரடியை ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 16 பந்தில் அவுட்டானார்.
அடுத்து அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நாலா புறமும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 10 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த திலக் வர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 44 பந்தில் 113 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இந்தியா 247 ரன்களைக் குவித்துள்ளது.
- அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்தில் இருந்து அதிரடியை ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 16 பந்தில் அவுட்டானார்.
அடுத்து அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நாலா புறமும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 10 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த திலக் வர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 44 பந்தில் 113 ரன்கள் சேர்த்தது.
சூர்யகுமார் யாதவ் 2 ரன்னும், ஷிவம் துபே 30 ரன்னும், பாண்ட்யா, ரிங்கு சிங் தலா 9 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அபிஷேக் சர்மா தனி ஆளாக இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 54 பந்தில் 13 சிக்சர், 7பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- இங்கிலாந்து 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
- அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில் இந்த போட்டியில் அபிஷேக் சர்மா செய்த சாதனைகள்:-

அவர் 54 பந்தில் 13 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரரானார். முன்னதாக ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா. இதற்கு முன்பு சுப்மன் கில் 126 ரன்கள் (நாட் அவுட்) எடுத்ததே சாதனையாக இருந்தது.
அதேபோல் சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 13 சிக்சர்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் தலா 10 சிக்சர்களுடன் உள்ளனர்.
- நன்றாக விளையாடினாய் அபிஷேக் சர்மா.
- உன்னை நான் இப்படியொரு இடத்தில்தான் பார்க்க நினைத்தேன்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அவர் 54 பந்தில் 13 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதம் விளாசிய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் உன்னை நான் இப்படியொரு இடத்தில்தான் பார்க்க நினைத்தேன் என அபிஷேக் சர்மாவின் இந்திய முன்னாள் வீரரும், அவரின் ஆலோசகருமான யுவராஜ் சிங் புகழாராம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நன்றாக விளையாடினாய் அபிஷேக் சர்மா. உன்னை நான் இப்படியொரு இடத்தில்தான் பார்க்க நினைத்தேன். பெருமையாக உள்ளது.
இவ்வாறு யுவராஜ் கூறினார்.
- செருப்பு இல்லாமல் இப்போது தான் யுவராஜ் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார் என்று நினைக்கிறேன்.
- ஒரு வழியாக அவர் என்னால் பெருமையாக உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு அவரது ஆலோசகரான யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
அதில், "நன்றாக விளையாடினீர்கள் அபிஷேக் ஷர்மா. உங்களிடம் இந்த ஆட்டத்தை தான் நான் பார்க்க விரும்பினேன். உங்களுடைய சதத்திற்காக பெருமையடைகிறேன்" என்று பாராட்டினார். யுவராஜ் வாழ்த்து குறித்து செய்தியாளர்கள் அபிஷேக் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அபிஷேக் சர்மா பதிலளித்தது பின்வருமாறு:-
செருப்பு இல்லாமல் இப்போது தான் யுவராஜ் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார் என்று நினைக்கிறேன். ஒரு வழியாக அவர் என்னால் பெருமையாக உள்ளார். அதற்காக நானும் மகிழ்ச்சியடைகிறேன். 3 வருடத்திற்கு முன்பாக அவருடன் பயிற்சிகளை துவங்கிய போது ஒரு வீரராக உங்கள் மீது எப்போதும் சந்தேகம் இருப்பது இயற்கை என்று கூறினார்.
இருப்பினும் உங்களால் இந்தியாவுக்காக விளையாடி நன்றாக செயல்பட்டு போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என்று என்னிடம் சொன்னார். லாக் டவுன் சமயங்களில் குறுகிய காலத்தை பார்க்காதீர்கள் நீண்ட கால திட்டத்திற்காக உங்களை நான் தயார்படுத்துகிறேன் என்று யுவ்ராஜ் என்னிடம் சொன்னார். அன்று அவர் கொடுத்த பயிற்சிகள் இன்று ஒன்றாக சேர்ந்து எனக்கு வருவதில் மகிழ்ச்சி.
என்று அபிஷேக் கூறினார்.
- டி20 பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- பந்து வீச்சாளர்கள் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மிகச்சிறப்பாக பந்துவீசி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். தரவரிசையில் 6-வது இடத்தில் ரவி பிஷ்னாய், 9-வது இடத்தில் அர்ஷ்தீப் உள்ளனர்.
அதன்படி டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். டாப் 10-ல் மற்ற இந்திய வீரர்களாக 3-வது இடத்தில் திலக் வர்மாவும் 5-வது இடத்தில் சூர்யகுமார் யாதவும் உள்ளர். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.
அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை சாஹல் வீசினார். முதல் ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் 12 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

ரன் விட்டுக் கொடுத்ததால் சோகத்தில் விராட் கோலி
அதன்பின் வந்த விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் 34 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ஆட்டமிழக்கும்போது டெல்லி டேர்டெவில்ஸ் 13 ஓவரில் 109 ரன்கள் தான் எடுத்திருந்தது. இதனால் டெல்லி அணி 150 ரன்களுக்குள்தான் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

19 பந்தில் 46 ரன்கள் குவித்த அபிஷேக் ஷர்மா
ஆனால் 6-வது வீரராக களம் இறங்கிய அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மா வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 19 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்னும், விஜய் சங்கர் 21 ரன்னும் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.