என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abhishek Singhvi"

    • தெலுங்கானா மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கேஷவ் ராவ் பதவியை ராஜினாமா செய்தார்.
    • செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர் கேஷவ ராவ். இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அபிஷேக் சிங்வியை வேட்பாளராக நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் தோல்வியை தழுவினார்.

    கேஷவ ராவ் ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அபிஷேக் சிங்வி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுப்பதற்கு போதுமான எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.

    • வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.
    • ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.

    கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் அல்லது, அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை, ஒருமித்த கருத்துடன் நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் தெலுங்கானாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக் மனு சிங்வி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "இந்த அரசாங்கத்தின் மிகப் பெரிய தோல்வி என்னவென்றால், அது ஒவ்வொரு நிறுவனத்தையும் இழிவுபடுத்தி, மதிப்பை குறைத்துள்ளது.

    கவர்னர்கள் இரண்டாவது தலைமை நிர்வாகியாக அல்லது ஒரே உறையில் இரண்டு கத்தியாக செயல்படும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன. கவர்னர் பதவியை அகற்ற வேண்டும் அல்லது ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். அல்லது ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்.

    கவர்னராக இருப்பவர் முதலமைச்சருக்கு சவாலாகவோ, அச்சுறுத்தலாகவோ இருந்தால் கீழே இறங்க வேண்டியது கவர்னர்தான் . ஏனென்றால், முதலமைச்சர் யார்? என்பதற்குத்தான் தேர்தல் நடக்கிறது. கவர்னர் யார்? என்பதற்கு அல்ல

    இறுதியில் நீதிமன்றத்திற்குச் சென்று மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறும்போது, அதை ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என கவர்னர் கூறுகிறார். ஆட்சி பாதிக்கப்படுகிறது. முடிவுகளை எடுக்க முடியவில்லை. அதே கோவத்தில் ஒரே உறையில் இரண்டு கத்தியாக மற்றொரு தலைமை நிர்வாகி போல் கவர்னர் செயல்படுகிறார்" என்று தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராவார்.
    • விசயத்தில் அரசியல் செய்வது விசித்திரமாக உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அபிஷேக் சிங்வி. இவர் பிரபல வழக்கறிஞர் ஆவார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராவார்.

    இவர் நேற்று மாநிலங்களவைக்கு சென்றிருந்தார். மாநிலங்களவையில் இவருக்கு 222-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று அவரது இருக்கைக்கு அடியில் மாநிலங்களவை பாதுகாவலர்கள் ஒரு கட்டு பணம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

    இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் தன்கர் "பாதுகாப்பு அதிகாரகிள் 222-ம் சீட்டிற்கு அடியில் இருந்த ஒரு கட்டு பணத்தை கண்டறிந்துள்ளனர். இந்த இருக்கை தற்போது அபிஷேக் சிங்விக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

    இதனால் பாராளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லியார்ஜூன கார்கே கூறுகையில் "இது தொடர்பாக விசாரணை நடத்த நான் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஆனால், விசாரணையில் இருக்கும்போது தலைவர் எம்.பி.யின் பெயரை குறிப்பிட்டிருக்கக் கூடாது" என்றார்.

    இது தொடர்பாக அபிஷேக் சிங்வி கூறுகையில் "இதுபோன்ற விசயத்தை தற்போது முதன்முறையாக நான் கேட்கிறேன். இதற்கு முன்னதாக இப்படி கேட்டது இல்லை. நான் மாநிலங்களவை சென்றபோது ஒரேயொரு 500 ரூபாய் நோட்டுதான் எடுத்துச் சென்றேன். நான் மாநிலங்களவைக்கு 12.57 மணிக்கு சென்றேன்.

    ஒரு மணி வரை அங்கே இருந்த நிலையில், ஒன்றரை மணி வரை கேன்டீனில் இருந்தேன். பின்னர் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறினேன். 3 நிமிடங்கள் மட்டுமே அவைக்குள் இருந்தேன். 30 நிமிடங்கள் கேன்டீனில் இருந்தேன். இந்த விசயத்தில் அரசியல் செய்வது விசித்திரமாக உள்ளது.

    உண்மையிலேயே இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். யாராவது அங்கு வந்து எந்த இருக்கையில் எதையும் வைக்க முடியும். அதாவது, நாம் ஒவ்வொருவரும் இருக்கையை பூட்டி, சாவியை எம்.பி.யால் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய இருக்கை இருக்க வேண்டும், ஏனென்றால் எல்லோரும் இருக்கையின் மீது எதாவது விஷயங்களைச் செய்து அதைப் பற்றி குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம்" என்றார்.

    பா.ஜ.க. எம்.பி. சுதான்ஷு இது தொடர்பாக கூறுகையில் பணம் தொடர்பாக யாராவது வந்து கேட்பார்கள் என தலைவர் எதிர்பார்த்தார். யாரும் கேட்கவில்லை என்பதால், இந்த விவகாரம் அவைக்கு வந்துள்ளது என்றார்.

    மேலும், கூறுவதையோ தெளிவுபடுத்துவதையோ விட, எதிர்க்கத் தொடங்கிவிட்டனர். அவர்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறது. அங்கே இங்கே எவ்வளவு பணத்தை விட்டுச் செல்கிறோம் என்பது குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. காங்கிரஸ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் இருக்கலாம் என்றார்.

    • காங்கிரஸ் எம்.பி இருக்கையின் கீழ் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இதனால் பாராளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியது. குளிர்கால கூட்டத்தொடரின் 10-வது நாளான இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.

    அப்போது மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி இருக்கையின் கீழ் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக அவையில் தெரிவிக்கப்பட்டது

    இதுகுறித்து அவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் கூறியதாவது:-

    நேற்று சபை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் சபையில் நடக்கும் வழக்கமான சோதனையின் போது நடந்ததை நான் உறுப்பினர்களுக்கு இங்கு தெரிவிக்கிறேன். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக் சிங்விக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் இருந்து ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு உள்ளது.

    இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார்கள். அவை தலைவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷமிட்டனர். இதனால் மேல்சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

    அப்போது மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கூறும் போது,விசாரணை முடிந்து, சம்பவத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வரை, ஒரு உறுப்பினரின் பெயரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, வழக்கமான நெறிமுறையின்படி சபையில் சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு இருக்கையில் ரூபாய் நோட்டுகள் இருந்தது. உறுப்பினரின் பெயரை தலைவர் கூறக்கூடாது என்று ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்று புரியவில்லை. அவைத் தலைவர் இருக்கை எண் மற்றும் அந்த குறிப்பிட்ட இருக்கை எண்ணை வகிக்கும் உறுப்பினரை சரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதில் என்ன தவறு இருக்கிறது? ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அவைத் தலைவரின் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அதே போன்று உறுப்பினர்கள் எழுப்பிய கவலைகளும் மிகவும் உண்மையானவை என்றார்.

    காங்கிரஸ் எம்.பி இருக்கையின் கீழ் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை அபிஷேக் சிங்வி திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இதுகுறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறும்போது, இதுபோன்ற குற்றச்சாட்டை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

    நான் நேற்று மேல்-சபைக்கு செல்லும்போது ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டுமே எடுத்துச் சென்றேன். மதியம் 12:57 மணிக்கு பாராளுமன்றத்தை அடைந்தேன்.1 மணிக்கு அவைக்கு சென்றேன். பின்னர் 1:30 மணி வரை கேண்டீனில் அமர்ந்திருந்தேன். நேற்று நான் பாராளுமன்றத்தில் இருந்த நேரம் 3 நிமிடங்கள்தான். கேண்டீனில் அமர்ந்திருந்தது 30 நிமிடங்கள்.

    இது போன்ற விஷயங்களில் கூட அரசியல் எழுப்பப்படுவது எனக்கு வினோதமாக இருக்கிறது. எந்த இருக்கையிலும் எதையும் வேறு யாராவது வைக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை இருக்க வேண்டும். இருக்கையைப் பூட்டி, சாவியை எம்.பி.யால் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய இருக்கை இருக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு நிறுவனங்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதுவும் முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

    • பாஜக அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல்காந்தி துன்புறுத்தப்படுகிறார்.
    • மத்திய அமலாக்கத்துறையில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை?.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இன்று 5வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகும், இரவில் அரை மணி இடைவேளைக்கு பிறகும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களில் ராகுல் காந்தியிடம் மொத்தம் 40 மணிநேரம் விசாரணை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல் காந்தி துன்புறுத்தப் படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அமலாக்க இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

    பாஜக மற்றும் மோடி அரசுக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து, உறுதியான முறையில், குரல் கொடுத்து வருவதாகவும், எனவே ராகுல்காந்தியை துன்புறுத்தும் இந்த நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவது, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் போராட்டம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து நாட்டை திசை திருப்பும் முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

    மத்திய அமலாக்கத்துறையில் மற்ற வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

    விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு ஏன், எப்படி தப்ப அனுமதிக்கப்பட்டார் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். #Congress #AbhishekSinghvi #VijayMallya
    புதுடெல்லி:

    நிதி மந்திரியை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியது பற்றி காங்கிரஸ் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளது.



    இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், “விஜய் மல்லையா உள்ளிட்டோர் தப்பிச் செல்வதற்கு மத்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது. விஜய் மல்லையா ஏன், எப்படி தப்ப அனுமதிக்கப்பட்டார்? அவருக்கும், நிதி மந்திரிக்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்டது என்ன? என்று அறிந்துகொள்ள நாடு விரும்புகிறது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார். #Congress #AbhishekSinghvi #VijayMallya
    ×