என் மலர்
நீங்கள் தேடியது "Amali"
- விரும்பத்தகாத சில நிகழ்வை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன.
- கேள்வி நேரம் முடிந்த பிறகே பிரச்சினைகளை பற்றி பேச முடியும்.
சென்னை:
சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அவை முன்னவரான துரை முருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபையில் இன்று விரும்பத்தகாத சில நிகழ்வை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன. இது வருத்தமடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் பேசுவதற்கும், வாதாடுவதற்கும் உரிமை உண்டு. ஆனால் அது விதிமுறைகளுக்குட்பட்டுதான் இருக்க வேண்டும். சபை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது எதிர்க்கட்சி தலைவருக்கும் தெரியும். அவர் முதல்-அமைச்சராக இருந்தவர்.
கேள்வி நேரம் முடிந்த பிறகே பிரச்சினைகளை பற்றி பேச முடியும். ஆனாலும் எதிர்க்கட்சி தலைவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்கலாம் என இருந்தேன். ஆனால் அவர்கள் யாரும் உட்கார வில்லை. விஷச்சாராயம் பற்றி பேசுவதற்கோ, ஆட்சியை பற்றி பேசுவதற்கோ எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு.
ஆனால் கேள்வி நேரத்தில் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்க கூடாது. சட்டசபையை விட்டு வெளியே போகிற முனைப்புடனேயே அவர்கள் நடந்து கொண்டனர். அதற்காக ஆச்சரியப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-
எதிர்க்கட்சியினர் ஜீரோ நேரத்தில் பேசலாம். இங்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விதி 55-ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் அக்ரி கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் அளித்துள்ளனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசுவதற்கு வாய்ப்புகள் இருந்த போதிலும் அவையில் பதாகைகளை கொண்டு வந்து காட்டுவது சட்டத்துக்கு புறம்பானது.
அவர்கள் அனுமதியின்றி இங்கு நடந்து கொண்டது இந்த அவையின் மாண்பை மீறுவதாக இருந்ததால் இன்று ஒரு நாள் மட்டும் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
- 10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம்.
- மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அந்த உரையில், "10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாக்களித்து வெற்றி பெறுவது என்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். மதச்சார்பின்மைக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்து வருகிறோம். தேசத்திற்கு அவசியமான சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப் படுத்தியுள்ளோம். அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்பது எங்களது முதன்மையான தாரக மந்திரம்" என்று மோடி பேசி வருகிறார்.
மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்தும் சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இதற்கிடையே எதிர்க்கட்சியினர் அமைதியாக இருக்குமாறு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கோபத்துடன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மோடி, அதானிக்கு உள்ள தொடர்பை கூறி கோஷங்களை எழுப்பினார்கள்.
- பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடெல்லி:
சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு (ஜே. பி.சி.) விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த பிரச்சனையை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிளப்பி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அதானி ஊழல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ், தி.மு.க. இடதுசாரி எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் பதாகைகள் வைத்து இருந்தனர். கோஷங்களையும் எழுப்பினார்கள்.
மோடி, அதானிக்கு உள்ள தொடர்பை கூறி கோஷங்களை எழுப்பினார்கள். ஜே.பி.சி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோஷ மிட்டனர்.
பாராளுமன்ற மேல் சபையில் இன்றும் பல்வேறு பிரச்சனைகளுக்காக அமளி நிலவியது.
மேல்சபை கூடியதும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ஜார்ஜ் சோரஸ்-காங்கிரஸ் தலைமைக்கு இடையே உள்ள பிரச்சனையை கிளப்பினார்கள். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் மேல்சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கரை விமர்சித்தனர்.
இது தொடர்பாக கடும் அமளி நிலவியது. அமளிக்கு நிலையில் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.