என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambai"

    • அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.
    • இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை ம்றறும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாபநாசத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இருப்பினும் அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.

    இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    பஸ்சின் உள்ளே மாணவர்கள் நின்று செல்லும் நிலையில், முன், பின் படிக்கட்டுகளிலும் சுமார் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொங்கிய படி பயணம் செய்கின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாணவர்களின் புத்தக பைகளை டிரைவரே வாங்கி வைத்து கொள்கிறார். அதனால் கண்டிரக்டர், டிரைவர் உதவியுடனே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

    எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அம்பை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

    • அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகை பதியில் தைப்பெருந் திருவிழா நடைபெற்றது.
    • 8-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்தல், அன்னதர்ம நிகழ்ச்சிகள் நடந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகை பதியில் தைப்பெருந் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கருடன், தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம்,பூ பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷபம் ஆகிய வாகனங்களில் சப்பர பவனியும், தொடர்ந்து 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மம், அன்னதர்மம் ஆகியன நடைபெற்றது.

    8-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்தல், அன்னதர்ம நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 10-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து கிணற்று பால் குடம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தனக்குடம் எடுத்தல், கும்பிட்டு நமஸ்கார நிகழ்ச்சி நடைபெற்றது.

    அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திரன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றது. திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக 11-ம் திருநாள், 25வது ஆண்டு தேர் திருநாள், 50-வது தேர் பவனி மாலை 4 மணிக்கு செண்டை மேளம், நையாண்டி மேளங்கள் முழங்க திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஏராளமான அன்பு கொடிமக்களும், வாகைபதி அன்பர்களும் அய்யா வழி அன்புக்கொடி மக்களும் கலந்து கொண்டனர். இரவு காளை வாகனத்தில் அய்யா பவனி வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.

    • அம்பை காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்திய புகார்கள் தொடர்பாக அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வருகிறார்.
    • அவர் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் அடுத்த கட்ட விசாரணையை நடத்துகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வர பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள தமிழக அரசால் நியமிக்கப்பட்டு உள்ள உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ. கடந்த 10-ந் தேதி அம்பை தாசில்தார் அலுவல கத்தில் தமது விசா ரணையை மேற்கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக அவர் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் தமது அடுத்த கட்ட விசா ரணையை மேற் கொள்ள உள்ளார்.

    அம்பை காவல் உட்கோட்டத்தில் காவல் துறை யால் விசாரணை கைதிகளை துன்புறுத்திய தாக வர பெற்ற புகார்கள் தொடர்பாக விசா ரணை அலுவலரிடம் நேரில் புகார் அளிக்க விரும்பு பவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்கு மூலங்களை அளிக்க விரும்பு வோர் 17, 18-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பை தாசில்தார் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகலாம்.

    ஏற்கனவே சேரன்மகா தேவி சார் ஆட்சியர், உட்கோட்ட நடுவரிடம் புகார், வாக்குமூலம் அளித்தவர்கள் மீண்டும் ஒரு முறை வர வேண்டியது கட்டாயம் இல்லை.

    ஆனால் உயர்மட்ட விசா ரணை அலுவலர் முன்னிலை யில் மீண்டும் ஒருமுறை வாக்கு மூலம் அளிக்க விரும்பி னாலோ, புகார், கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினாலோ அவர்களும் நேரில் வரலாம். பாதிக் கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் விசா ரணை அலுவலரிடம் நேரடி யாக புகார் அளிக்க இயலாத வர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக (18-ந்தேதி மாலை 4 மணி வரை அனைத்து நாட்களிலும்) புகார் அளிக்கலாம் அல்லது 17-ந்தேதி மற்றும் 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 918248887233 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • அம்பை, கடையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை மறுநாள் காலை 9 மணி-மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:-

    ஓ. துலூக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் அன்று மின்தடை ஏற்படும்.

    அதன்படி ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஒ. துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழை யூத்து, பனையங்குறிச்சி, நாலா ங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி, அம்பை, ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது.

    இதேபோல் கடையம், பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், வடமலைசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம் மயிலப்பபுரம், வெங்காலிப்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடராஜன் குடும்பத்தை பிரிந்து சாலையோரம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • முடப்பாலம் கல்வெட்டாங்குழிக்கு நடராஜன் சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    நெல்லை:

    அம்பை சம்பந்தர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது75). இவர் குடும்பத்தை பிரிந்து சாலையோரம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடை வியாபாரிகள், பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று அம்பை அருகே உள்ள முடப்பாலம் கல்வெட்டாங்குழிக்கு சென்றார்.

    இந்நிலையில் திடீரென தண்ணீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பை போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சில இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • புகாரின் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர் சிங், அந்த சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை க்காக அழைத்து வருபவ ர்களின் பற்களை பிடுங்கி யதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படை யில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட தோடு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்போதைய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சில இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஒரு சில இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

    இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா என்ற வாலிபர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.

    மேலும் சூர்யாவுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்திய நிலையில் தற்போது சூர்யா மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

    அதன்படி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நாளை(புதன்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சூர்யாவுக்கு சம்மன் வழங்கி உள்ளனர். அவர் நேரில் ஆஜராக வரும் பட்சத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    இவரது புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி.
    • மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    நெல்லை:

    அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி. இவர் நெஞ்சு வலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் வைத்து மதுவில் விஷத்தை கலந்து குடித்து மாரியப்பன் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே தெற்கு பாப்பான்குளம், மணி முத்தாறு, அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, வைராவிகுளம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில் இருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதிகளுக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.

    இதுதவிர வேலை நிமித்தமாகவும், தொழில் சம்பந்தமாகவும் ஏராள மானவர்கள் அம்பைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்பவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால், அரசு பஸ்சில் போதிய இடவசதி இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், தெற்கு பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி தினமும் ஆபத்தான பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு, கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று காலை தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் அரசு பஸ் வழக்கம்போல் வந்தபோது அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

    அம்பையில் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜயவீரன்(வயது 46). இவர் அம்பையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இதனால் குடும்பத்துடன் அம்பையில் குடியேறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலை பார்த்து வந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்போவதாக கூறி அதனை அடைத்து விட்டனர்.

    இதனால் விஜயவீரன் குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்த அவர் கடந்த 28-ந்தேதி  திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுதொடர்பாக அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஆண்டுதோறும் அக்டோபர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது.
    • அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் பிரிக்கப்படும் முறை குறித்து செயல்விளக்கம் மூலம் விளக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    ஆண்டுதோறும் அக்டோபர் 9-ந்தேதி முதல்13-ந்தேதி வரை அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல்துறை சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இதில் அம்பாசமுத்திரம் அஞ்சல் உபகோட்ட உதவி கண்காணிப்பாளர் பாலாஜி மாணவர்களுக்கு அஞ்சல்துறை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    மேலும் அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் பிரிக்கப்படும் முறை குறித்து செயல்விளக்கம் மூலம் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அஞ்சல் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




    • நகர் மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து மாணவர்களின் தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கத்தின் படி நகர் மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து மாணவர்களின் தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார், நிகழ்வில் உடன் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், வார்டு கவுன்சிலர் அழகம்மை, மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோகிலா மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • நகர மகளிரணி தலைவி சுமதி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    கல்லிடைக்குறிச்சி:

    இந்துக்கள் பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.க. நகரத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராம்ராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் லெட்சுமண ராஜா, வீகேபுரம் நகர தலைவர் தங்கேஸ்வரன், நகர பிரபாகரி பால்பாண்டி, அம்பை ஒன்றிய தலைவர் சண்முக பிரகாஷ், சேரை மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத், சேரை கிழக்கு ஒன்றிய தலைவர் சின்ன முருகன், அம்பை நகர பொதுச்செயலாளர்கள் சுகுமாரன், சுதன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராமகிருஷ்ணன், மகளிரணி பொதுச்செயலாளர் செல்வி சுப்பிரமணியன்,நகர துணைத்தலைவர்கள் செல்வராஜ், வன்னியப்பன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், நகர மகளிரணி தலைவி சுமதி, நகர இளைஞரணி தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    ×