என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambattur"

    • பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
    • மீண்டும் ஒரு சம்பவம் நடக்காதவாறு தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    அம்பத்தூர்:

    அண்ணாநகர் மேற்கு, ஜீவன் பீமா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தங்கபாண்டி. இவரது மனைவி பிரதீபா. இவர்களது இரண்டரை வயது மகள் யாஸ்மிகா. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலையில் மின்தடை ஏற்பட்ட போது வீட்டின் முன்பு சிறுமி யாஸ்மிகா விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது அங்கு சுற்றிய தெரு நாய் ஒன்று திடீரென யாஸ்மிகா மீது பாய்ந்து கடித்து குதறியது. அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி யடித்து சிறுமியை மீட்டனர். நாய் கடித்து குதறியதில் யாஸ்மிகாவின் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட யாஸ்மிகாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சிறுமி யாஸ்மிகா வசித்த பகுதியில் சுற்றிய நாய்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தி.மு.க. வார்டு கவுன்சிலர் எம்.இ.சேகர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பதுங்கி சுற்றிய 30-க்கும் மேற்பட்ட நாய்களை வலைவீசி பிடித்தனர். மேலும் பல தெருநாய்கள் தப்பி ஓட்டம் பிடித்தன. அந்த நாய்களையும் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இது குறித்து சிறுமி யாஸ்மிகாவின் தந்தை தங்க பாண்டியன் கூறும்போது, எனது மகளை நாய் கடித்த போது நீண்ட நேரம் போராடி தான் குழந்தையை மீட்டோம்.

    நாய்கடித்தது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்த போது அவர்கள் சிறுமியை கடித்த நாயின் புகைப்படம் இருந்தால் தான் நாயை பிடிக்க முடியும் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்தனர். பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுபோன்று மீண்டும் ஒரு சம்பவம் நடக்காதவாறு தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

    • சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர்.
    • ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் அயப்பாக்கம் ஏரிக்கரையோரமாக இன்று காலையில் டன் கணக்கில் ஆப்பிள் பழங்கள் கொட்டப்பட்டிருந்தது.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வியப்புடன் பார்த்துசென்றனர். இவ்வளவு பழத்தை வீணாக கொட்டிவிட்டு சென்றுள்ளார்களே என்று கூறி பலரும் வேதனைப்பட்டனர்.

    இந்த ஆப்பிள் பழங்கள் கெட்டுப்போன ஆப்பிள்களாக இருந்தன. அதில் சில ஆப்பிள் பழங்கள் நன்றாக இருந்தன. அவைகளை பொதுமக்களில் சிலர் எடுத்துசென்றதையும் காண முடிந்தது.

    அப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.

    இதைதொடர்ந்து ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    டன் கணக்கிலான இந்த ஆப்பிள் பழங்களின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. கடைகளில் கிலோ ரூ. 200 முதல் 300 வரை விற்பனையாகும் ஆப்பிள் பழங்கள் சாலையோரமாக கொட்டப்பட்டு இருந்ததை பார்த்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கார் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.
    • சரக்குவேனின் பின்பகுதி தனியாக உடைந்து கொரட்டூர் ஏரிக்குள் விழுந்தது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் பகுதியில் இருந்து கோயம்பேடு நோக்கி இன்று அதிகாலை சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. டிரைவர் பாலகிருஷ்ணன் வண்டியை ஓட்டினார். பட்டரைவாக்கம் மேம்பாலத்தில் வந்த போது எதிரே வந்த கார் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.

    கார் மோதிய வேகத்தில் சரக்குவேனின் பின்பகுதி தனியாக உடைந்து சுமார் 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள கொரட்டூர் ஏரிக்குள் விழுந்தது.

    இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த நபருக்கும், சரக்கு வேன் டிரைவர் பாலகிருஷ்ணனுக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு போலீசுக்கு தெரிவிக்காமல் அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது.

    இதற்கடையே கொரட்டூர் ஏரிக்குள் சரக்கு வாகனத்தில் பின்பகுதி மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கொரட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரிக்குள் விழுந்து கிடந்த வாகனத்தின் பாகத்தை மீட்டனர்.

    கார் மோதிய விபத்தில் சரக்குவேனின் பின்பகுதி மட்டும் கழன்று ஏரிக்குள் விழுந்ததால் முன்பகுதியில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். காரின் பதிவு எண்ணை வைத்து அதனை ஓட்டிவந்தவர் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
    • 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி சி.டி.எச்.சாலை (சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை) மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. மேலும் விபத்துக்களும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையான இந்த சாலையில் பாடியில் இருந்து திருநின்றவூர் வரை சாலை மிக குறுகலாக இருப்பதால் இதனை 200 அடி சாலையாக விரிவு படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சி.டி.எச்.சாலை 200 அடி அகலத்தில் விரிவுபடுத்த அறிவிப்பு வெளியான நிலையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் நில எடுப்பு பணிகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகளுக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இது குறித்து அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் கூறியதாவது:-

    தேசிய நெடுஞ்சாலையாக இருந்த இந்த சி.டி.எச். சாலை கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையில் பொதுமக்கள் கோரிக்கையின்படி சாலை விரிவுபடுத்தும் திட்டம் 160 அடி சாலையாக குறைக்கப்பட்டு 6 வழிச்சாலையாக அறிவிப்புகள் வெளியாகின. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நில எடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இறுதியாக இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது. நில எடுப்புக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்ய நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கொரட்டூர் சந்திப்பில் இருந்து மண்ணூர்பேட்டை வரை ஒரு உயர் மட்ட மேம்பாலமும் , அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலைய சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும், அம்பத்தூர் டன்லப் தொழிற்சாலை சந்திப்பில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உயர் மட்ட மேம்பாலமும் வர உள்ளது.

    விரைவில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 100 அடி அகலத்தில் 6 வழிச்சாலையாக 3 உயர் மட்ட மேம்பாலங்களுடன் மாற இருக்கிறது. இதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்த பணிகள் முடிவடையும் போது தொழிற்பேட்டை நிறைந்த இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இன்றியும், விபத்துக்கள் ஏற்படாத வகையிலும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் நலனை மட்டுமே சிந்திக்கும் கட்சி திமுக தான். எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் நிறை வேற்றி உள்ளோம். அம்பத் தூர் பகுதியில் புதிய ரெயில் முனையம் அமைக்கபடும். அதனால்தொழில் வளம் பெரு கும்.மத்தியில் நிலையான ஆரோக் கியமான ஆட்சி அமைய உதயசூரியனுக்கு வாக்களியுங் கள் என பேசினார். வேட்பாளர் டி.ஆர்.பாலுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சிறு வர்கள் கலைஞர், பெரியார் உள்ளிட்ட. தலைவர்கள் வேடம் அணிந்து வரவேற்ற னர். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர் பாபு எம்.எல்.ஏ., தி.மு.க. வடக்கு பகுதி செயலா ளர் ஜோசப் சாமு வேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    அம்பத்தூரில் ரூ.2½ கோடி நில மோசடி செய்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    முகப்பேரை சேர்ந்தவர் குணசுந்தரி. இவருக்கு சொந்தமாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ரூ.2½ கோடி மதிப்பிலான நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை விற்று கொடுப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கு குணசுந்தரி பவர் கொடுத்துள்ளார். ஆனால் அந்த இடத்தை அவர் விற்று கொடுக்காததால் அதற்கான அதிகார பத்திரத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக குணசுந்தரி கூறி உள்ளார்.

    ஆனால் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் குமார் தனது மனைவி கோமதியின் பெயருக்கு மோசடியாக இடத்தை விற்பனை செய்து உள்ளார்.

    இதுபற்றி குணசுந்தரி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவன்- மனைவியான குமார், கோமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் கிழக்கு பாலாஜி நகரை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டார். இவருடைய மனைவி அருகில் உள்ள அவருடைய தாயார் வீட்டில் தூங்கினார்.

    இன்று காலை ரமேஷ் வீடு திரும்பினார். அப்போது முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ×