என் மலர்
நீங்கள் தேடியது "Anand Mahindra"
- ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- உதவித்தொகை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் நாட்டின் முக்கிய தலைவர்கள் 15 பேரின் உருவங்களை ஓவியங்களாக வரைந்து அசத்திய நூர்ஜஹான் என்ற சிறுமியை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெகுவாக பாராட்டியுள்ளார். இது எப்படி சாத்தியமாகும் என்றும் அவர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இது எப்படி சாத்தியமாகும். இதன் மூலம் இவர் ஒரு திறமையான கலைஞர் என்பது தெளிவாகிறது. ஆனால் ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை வரைவது கலையை விட மேலானது- இது அசாத்தியமான ஒன்று! சிறுமி வசிக்கும் இடம் அருகில் உள்ள யாராவது இந்த சாதனையை உறுதிப்படுத்த முடியுமா? இது உண்மை என்றால், அவள் கண்டிப்பாக ஊக்குவிக்கப்பட வேண்டும். அவருக்கு உதவித்தொகை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஒரு வீட்டில் மகிந்திரா நிறுவனத்தின் ஜீப் வடிவத்தில் டி.வி. ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
- புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் புகைப்படம் குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு வீட்டில் மகிந்திரா நிறுவனத்தின் ஜீப் வடிவத்தில் டி.வி. ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டாண்டின் மீது எல்.இ.டி. டி.வி. வைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான டிசைனை பார்த்து வியந்து பதிவிட்டுள்ள ஆனந்த் மகிந்திரா, 'நன்றி... நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நான் பார்த்ததில் மிகப்பெரிய டேஸ்போர்டு ஸ்கிரீன் இதுதான்' என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் புகைப்படம் குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- தினாநாத்சாகு என்பவர் தனது குடும்பத்தினருடன் கார் டெலிவரி பெற சென்றுள்ளார்.
- 23-வது திருமண நாளன்று கார் டெலிவரி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த சாகு தனது மனைவி, மகன், மகளுடன் சேர்ந்து அந்த கார் முன்பு நடனமாடி மகிழ்கிறார்கள்.
புதிய கார் வாங்க வேண்டும் என்பது சிலருக்கு கனவாக இருக்கும். அந்த கனவு நிறைவேறிய மகிழ்ச்சியை ஆனந்தமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ள டுவிட்டில், ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில், ஒரு குடும்பத்தினர் புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியை ஷோரூமிலேயே நடனமாடி கொண்டாடிய காட்சிகள் இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி தினாநாத்சாகு என்பவர் தனது குடும்பத்தினருடன் கார் டெலிவரி பெற சென்றுள்ளார். அவரது 23-வது திருமண நாளன்று கார் டெலிவரி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த சாகு தனது மனைவி, மகன், மகளுடன் சேர்ந்து அந்த கார் முன்பு நடனமாடி மகிழ்கிறார்கள்.
இந்த வீடியோவை ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்க தலைவர் டுவிட் செய்ய அதனை ஆனந்த் மஹிந்திரா ரீ-டுவிட் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் அதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
- குமாவத் தனது வலைதள பதிவில், ‘புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை’. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் ஒவ்வொரு பதிவும் ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
இவற்றை செதுக்கிய சிற்பி மூர்த்திகர் நரேஷ் குமாவத்தை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்தி உள்ளார். குமாவத் தனது வலைதள பதிவில், 'புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை'. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவை ஆனந்த் மகிந்திரா மறு பதிவு செய்து, 'அற்புதமான பணி, அற்புதமான மரியாதை, வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார். 'கம்பீரமான கலை படைப்பு' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளையும், கருத்துக்களையும் பெற்று வருகிறது.
- எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
- 2-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் போன்ற பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலராக உள்ளது.
2-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 202 பில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எலான் மஸ்க் அங்கு சென்றிருந்தார். அங்கு அவரை பெர்னார்ட் அர்னால்ட் சந்தித்தார். இருவரும் மதிய உணவு விருந்தில் ஒன்றாக பங்கேற்றனர். இந்த சந்திப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பி இருந்த நிலையில், மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திராவின் மனைவிக்கு ஒரு வித்தியாசமான சந்தேகம் கிளம்பி உள்ளதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மகிந்திராவின் பதிவில், பெர்னார்ட் அர்னால்டும், எலான் மஸ்கும் சந்தித்து மதிய உணவு அருந்தி இருந்தாலும், இந்த விருந்துக்கான செலவை யார் ஏற்பது என தனது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்த வலைதள பயனர்கள் தங்களது கற்பனை பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார்.
- ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் ஆர்.பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் - இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.
இருவருக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டு சுற்று போட்டிகளிலும் டிரா ஆன நிலையில், டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இளம் கிராண்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார்.
பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்படுகிறது.
இந்நிலையில், பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு வீடியோ கேம்களை கொடுக்காமல், மூளைக்கு வேலை கொடுக்கும் செஸ் போன்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் பெற்றோர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். உங்களைப் போன்ற பலர் பிரக்ஞானந்தாவுக்கு ஒரு தார் (Thar) பரிசளிக்குமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எனக்கு வேறு யோசனை இருக்கிறது.
பிரக்ஞானந்தாவின் பெற்றோர், நாகலட்சுமி மற்றும் ரமேஷ்பாபு ஆகியோருக்கு ஒரு எக்ஸ்யூவி 4 ஓஇவியை பரிசளிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வீடியோ சுவாரஸ்யமானது, ஆனால் என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. ஏன் இவ்வாறு இயக்க வேண்டும்? என ஆனந்த் மகிந்திரா கேள்வி எழுப்பி உள்ளார்.
- பயனரின் பதிவில், ஒரு ஜே.சி.பி. ஆபரேட்டர் டிராக்டர் டிரைவராக மாறும் போது இவ்வாறு நடக்கும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா சமூக வலைதளங்களில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர். இவர், வலைதளங்களில் டிரெண்டாகும் வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் இளைஞர்களின் வித்தியாசமான செயல்கள் பற்றிய பதிவுகளை தனது வலைதள பக்கத்தில் பகிர்வது வழக்கம்.
அந்த வகையில், தற்போது அவர் ஒரு வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பார்வையாளர்களுக்கு வேடிக்கையாக உள்ளது. அந்த வீடியோவில், ஒரு விவசாயி டிராக்டர் ஓட்டுகிறார். ஆனால் டிராக்டரின் இருக்கையில் அந்த நபர் ஒரு கருவியை மாட்டி சுமார் 7 அடி உயரத்தில் உயர்த்தப்பட்ட இருக்கையுடன் அமர்ந்து டிராக்டரை இயக்குவது போன்று காட்சி உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மகிந்திரா, இந்த வீடியோ சுவாரஸ்யமானது, ஆனால் என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. ஏன் இவ்வாறு இயக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது இந்த பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், ஒருவேளை அவர் ஒரு வயலில் பயிர் உயரமாக உள்ள இடத்தில் இந்த டிராக்டரை பயன்படுத்தி இருக்கலாம். அந்த உயரமான மட்டத்தில் அமர்ந்திருப்பதால் அவர் வயலை தெளிவாக பார்க்க முடியும் என கூறி உள்ளார். மற்றொரு பயனரின் பதிவில், ஒரு ஜே.சி.பி. ஆபரேட்டர் டிராக்டர் டிரைவராக மாறும் போது இவ்வாறு நடக்கும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
- மூதாட்டி பாராமோட்டரிங் மூலம் வானில் பறந்த காட்சிகள் பயனர்களை ஆச்சரியப்பட செய்துள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மூதாட்டியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வதற்கு வயது தடை அல்ல என்பதை நிருபித்துள்ளார் 97 வயது மூதாட்டி ஒருவர். சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில் இன்றைய 'ஹீரோ' என்ற தலைப்பில் மூதாட்டி ஒருவர் பாரா மோட்டரிங் எனப்படும் வான்சாகசத்தில் பங்கேற்பதற்காக அதனை கற்றுக்கொண்டு பறந்த வீடியோ காட்சிகள் உள்ளது.
மேலும் ஆனந்த் மகிந்திராவின் பதிவில், பறக்க இது ஒரு போதும் தாமதமாகாது. அவர்தான் எனது இன்றைய 'ஹீரோ' என அந்த மூதாட்டியை பாராட்டியுள்ளார். 55 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை முதலில் இன்ஸ்டாகிராமில் மகாராஷ்டிரத்தை தளமாக கொண்ட பிளையிங் ரைனோ பாராமோட்டரிங் பகிர்ந்துள்ளது. அதில் 97 வயது மூதாட்டி ஒருவர் பாராமோட்டரிங் சாகசத்தில் பங்கேற்பதற்காக பயிற்சியாளர் மூலம் அதனை கற்றுக்கொள்ளும் காட்சிகள் உள்ளது.
பின்னர் அந்த மூதாட்டி பாராமோட்டரிங் மூலம் வானில் பறந்த காட்சிகள் பயனர்களை ஆச்சரியப்பட செய்துள்ளது. இந்த வீடியோ 6.4 லட்சம் பார்வைகளையும், 17 ஆயிரம் விருப்பங்களையும் குவித்துள்ளது. இதனை பார்த்த பயனர்கள் பலரும் மூதாட்டியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வயது என்பது வெறும் எண், ஒரு வயதான பெண்மணி எந்த பயமும் இன்றி 'பாரா கிளேடிங்' செய்யும் இந்த வீடியோ அது நிரூபிக்கிறது. சாகசத்திற்கு எல்லையே இல்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார். மூதாட்டியின் தைரியத்திலும், ஆர்வத்திலும் நாம் அனைவரும் உத்வேகம் பெறுவோம் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
It's NEVER too late to fly.
— anand mahindra (@anandmahindra) November 23, 2023
She's my hero of the day… pic.twitter.com/qjskoIaUt3
- பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
- ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது நம் நாட்டில் அடிக்கடி நடக்கிறது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான ஆனந்த் மஹிரந்திரா சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர். தனது 10.8 மில்லியன் பின்தொடர்பவர்களுக்காக டிரெண்டிங் தலைப்புகள் மற்றும் ஈர்க்கும் கதைகள் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பிப்லியா ரசோடா கிராமத்தில் உள்ள ராஜ்கர் என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட 5 வயது சிறுமியின் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், " உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த சம்பவம் அதிக கவனம் பெறவில்லை என்றாலும் கூட, சிறுமியின் பெற்றோருக்கு, அவர்களின் உலகமே இருண்டதாகி இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:- இந்த சம்பவம் சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு போன்ற கவனத்தை ஈர்த்திருக்காது. ஆனால் இந்த குழந்தையின் பெற்றோருக்கு, அவர்களின் உலகமே மறைந்திருக்கும்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சில பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை, நமது நாட்டின் பேரிடர் மீட்புப் படைகளுக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
நம் ராணுவ வீரர்களைப் போலவே, அவர்களும் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க பகலும், இரவுமாக போராடுகிறார்கள்" என்றார்.
இருப்பினும், இன்று அதிகாலை மீட்கப்பட்ட சிறுமி சில மணிநேரங்களுக்குப் பிறகு, போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை வயலில் திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் மஹி என்கிற 5 வயது சிறுமி விழுந்தார். அவர் 22 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார். பின்னர், தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிர முயற்சிக்கு பிறகு இன்று அதிகாலை 2.45 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டு, பச்சோரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

பின்னர் 70 கிமீ தொலைவில் உள்ள போபாலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார் என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் கிரண் வாடியா தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
- சிறுவனின் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- சிறுவனின் வீடியோவை பார்த்து ஆனந்த் மஹிந்திரா பதிலளித்துள்ளார்.
மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் காரை 700 ரூபாய்க்கு வாங்க முடியுமா? என்று சிறுவன் ஒருவன் தந்தையிடம் கேட்கும் க்யூட்டான பேச்சு கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், சிறுவனின் வீடியோவை பார்த்து ஆனந்த் மஹிந்திரா பதிலளித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் சிறுவனின் வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், 700 ரூபாய்க்கு மஹிந்திரா தார் காரை விற்கவேண்டும் என்ற சிறுவனின் கோரிக்கை ஏற்றுக் கொண்டால் ரொம்ப சீக்கிரமாகவே நாங்கள் திவாலாகிவிடுவோம் என கூறியுள்ளார்.
- சுட்டி குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன்களில் வீடியோக்கள் பார்ப்பது வாடிக்கையாகி வருகிறது.
- சிலர் மொபைல் சாதனங்கள் எந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் ஊடுருவி உள்ளது.
தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில் ஸ்மார்ட் போன்களை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமல்லாது சுட்டி குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன்களில் வீடியோக்கள் பார்ப்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் பிரபல தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது வலைதள பக்கத்தில் பதிவிட்ட பதிவில் குழந்தை ஒன்று உணவை போன் என தவறாக நினைத்து காதில் வைக்கும் காட்சி உள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் நமது முன்னுரிமைகள் வியத்தகு முறையில் மாறிவிட்டன என்று ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் மொபைல் சாதனங்கள் எந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் ஊடுருவி உள்ளது என்பதை அப்பட்டமாக நினைவூட்டுவதாகவும், நமது நடத்தை மற்றும் வளர்ச்சியில் இத்தகைய சாதனங்களின் தாக்கம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
- தனது மகனுக்கு உத்வேகம் தரும் ஒரு தந்தையாக இருப்பதற்காக, சர்பராஸ் கானின் தந்தையான நௌஷாத் கானுக்கு 'மஹிந்திரா தார்' காரை பரிசளிக்க விரும்புகிறேன்.
- தனது தவறான அழைப்பால் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனதாக ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
சர்பராஸ் கானின் தந்தையான நௌஷாத் கானுக்கு கார் பரிசளிக்க விரும்புவதாக மகிந்திரா குழுமத்தின் நிறுவனரான ஆனந்த் மஹிந்திராதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது X பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், "தைரியத்தை இழந்துவிட வேண்டாம். கடின உழைப்பு. தைரியம். பொறுமை போன்ற ஒரு தந்தையின் குணங்களை விட, ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க சிறந்த குணங்கள் ஏதேனும் உள்ளதா?. தனது மகனுக்கு உத்வேகம் தரும் ஒரு தந்தையாக இருப்பதற்காக, சர்பராஸ் கானின் தந்தையான நௌஷாத் கானுக்கு 'மகிந்திரா தார்' காரை பரிசளிக்க விரும்புகிறேன். எனது பரிசை அவர் ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியம் மற்றும் கௌரவமாக கருதுவேன்' என்று பதிவிட்டுள்ளார்
"Himmat nahin chodna, bas!"
— anand mahindra (@anandmahindra) February 16, 2024
Hard work. Courage. Patience.
What better qualities than those for a father to inspire in a child?
For being an inspirational parent, it would be my privilege & honour if Naushad Khan would accept the gift of a Thar. pic.twitter.com/fnWkoJD6Dp
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக ரன்கள் குவித்து வந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் இப்போட்டியில் அறிமுகமானார்.
இந்திய அணியில் 311-வது வீரராக அறிமுகமான சர்பராஸ் கானுக்கு இந்திய அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார்.
இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். மனைவின் கண்ணீரை துடைத்து விட்டு சர்பராஸ் கான் போட்டிக்கு தயாரானார்.

அறிமுக போட்டியில் களமிறங்கும் வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்க முயற்சிப்பார்கள். ஆனால் தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கியது முதலே இங்கிலாந்தின் பேஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார்.
அப்போது மைதானத்தில் இருந்த அவருடைய தந்தை மற்றும் மனைவி ஆகியோர் மிகுந்த பெருமிதத்துடன் கைதட்டி பாராட்டினார்கள். அதே போல கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அடங்கிய இந்திய அணியினரும் எழுந்து நின்று அந்த இளம் வீரருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.
இதற்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமான ஹர்திக் பாண்டியா 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அந்த சாதனையை படைத்திருந்தார். அந்த வகையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சர்பராஸ் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்த போது துரதிஷ்டவசமாக ரவீந்திர ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட்டானார்.
தனது தவறான அழைப்பால் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனதாக ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இதனைப் பார்த்து பெவிலியனில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா. கோபத்தில் அணிந்திருந்த தொப்பியை தூக்கி வீசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
"சர்பராஸுக்காக நீங்கள் எவ்வளவு தியாகங்கள் மற்றும் கடின உழைப்பு செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்று சர்பராஸின் தந்தையிடம் கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் சர்பராஸ் கானின் தந்தைக்கு கார் பரிசளிக்க விரும்புவதாக கூறியுள்ள ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.