என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annabhishek ceremony"

    • சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
    • அன்னம் தயார் செய்யப்பட்டு, அதனை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

    பரமத்தி வேலூர் அருகே கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, பரமேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட அரிசியால் அன்னம் தயார் செய்யப்பட்டு, அதனை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது.

    பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரர் திருமேனியில் சாத்தப்பட்ட அன்னத்தை பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    சாமி மீது சாத்தப்பட்ட ஒவ்வொரு சாதமும் லிங்கமாக கருதி பொது மக்கள் வாங்கி உண்டனர். மீதமுள்ள சாதத்தை நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று, அங்குள்ள ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கினர். அன்னாபிஷேக விழாவில் கலந்து கொண்டு

    இறைவனை வழிபடுபவர்க ளுக்கு வாழ்வில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.

    அதேபோல், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவனுக்கு 100 கிலோ அரிசியால் செய்யப்பட்ட அன்னமும், வேலூர் செட்டியார் தெரு அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னம் மற்றும் பல்வேறு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில் பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன், மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரர், நந்திகேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாயநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு 18 வகையான காய்கறிகள் சுமார் 100 கிலோ கொண்டு காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பொதுவாக இந்துக்கள் உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த அன்னாபிஷேக விழா கொண்டாட ப்படுகிறது.

    கைலாசநாதருக்கு முதலில் பசும்பால், இளநீர், சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் மற்றும் அன்னம் போன்ற பல பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின்னர் சுவாமியின் மீது அன்னத்தால் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டு பின்னர் அன்னத்தை கலைத்து குழந்தை பேறு இல்லாதோர்க்கு அந்த அன்ன பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அன்ன அபிஷேகத்தின் போது செய்யப்பட்டிருந்த அலங்கார புஷ்பங்கள் அருகில் உள்ள உத்திர காவிரி ஆற்றில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து நீரைக் கொண்டு வந்த சுவாமிக்கு மீண்டும் அபிஷேகம் செய்யப்பட்டடு தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது.

    இந்த அன்னாபிஷேக விழாவில் பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கைலாயநாதரை வழிபட்டு சென்றனர்.

    • அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்ட சாதத்தை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் முழுகும் அளவிற்கு அன்னத்தை சாத்தினார்கள். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

    அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்ட சாதத்தை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் முழுகும் அளவிற்கு அன்னத்தை சாத்தினார்கள். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளித்தனர். அதனை தொடர்ந்து பரமேஸ் வரர் திருமேனியில் உள்ள அன்னத்தை எடுத்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப் பட்டது.

    மீதமுள்ள சாதத்தை அருகிலுள்ள காவிரி ஆறு மற்றும் நீர் நிலை களுக்கு கொண்டு சென்று நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கினார்கள். அன்னாபிஷேக விழா வில் கலந்து கொண்டு இறைவனை வழிபடுபவர் களுக்கு வாழ்வில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதே போல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பழைய காசிவிஸ் வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரர், வேலூர் செட்டியார் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள பானலிங்கேஸ்வரர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனி யாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள மருந்தீ ஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிவபெரு மான் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

    வாழப்பாடி

    சேலம் மாவட்டம் வாழப் பாடி அருகே உள்ள பேளூர் தான்தோன்றீஸ்வரர், வாழப்பாடி அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர், விலாரி பாளையம் மோட்டூர் சொர்ணாம்பிகை உடனுறை ஈஸ்வரமூர்த்தீஸ்வரர் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கைலாசநாதர் கோவில்

    திருச்செங்கோடு நகரின் மத்தியில் அமைந்துள்ள மிகப் பழமையான சுகுந்தகுந் தலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    கைலாசநாதர் சாமிக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னம் சாற்றப்பட்டு அன்னாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர் கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு 8 மணிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, குங்குமம், உள்ளிட்ட 18 வகையான மங்கல பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர் .

    ×