என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avaniyapuram"

    • பணத்துக்காக நடந்த கொடூர சம்பவம்.
    • அரிவாள் வெட்டில் சப்-இன்ஸ்பெக்டரும் படுகாயம்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்த அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன் (வயது 36). இவருக்கு திருமணமாகி பாண்டிச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்தனர். மலையரசன் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    இதற்கிடையே அவரது மனைவி கடந்த 1-ந்தேதி நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனது உறவினர்கள் அரவணைப்பில் குழந்தைகளை விட்டு விட்டு, மனைவி அனுமதிக்கப்பட்டு இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வாங்குவதற்காக கடந்த 18-ந்தேதி சென்றிருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்ற விபரம் எதுவும் தெரியாமல் இருந்தது.

    இந்தநிலையில் மதுரை அவனியாபுரம் சுற்றுச் சாலை ஈச்சனோடையை அடுத்த புதுக்குளம் கண்மாய் அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக பெருங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர் விசாரணையில் பிணமாக கிடந்தவர் மாயமான போலீஸ்காரர் மலையரசன் என்பது தெரிய வந்தது. அதனை அவரது உறவினர்களும் உறுதிப்படுத்தினர்.

    மனைவியின் சிசிச்சை ஆவணங்களை வாங்க சென்றவர் எப்படி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய நபர் ஒருவரை தேடினர். இந்த நிலையில்தான் நேற்று நள்ளிரவில் போலீஸ்காரர் மலையரசனை எரித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் மூவேந்திரன் என்பவரை போலீசார் சுற்றிவளைத்தனர்.

    மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் வைத்து மூவேந்திரனை கைது செய்ய முயன்ற போது சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து மூவேந்திரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.

    இதனையடுத்து மூவேந்திரனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேபோல் கையில் வெட்டுக்காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரிக்கண்ணனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மூவேந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 18-ந்தேதி மனைவியின் சிகிச்சை ஆவணங்களை வாங்குவதற்காக அழகாபுரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ்காரர் மலையரசன் வந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே வந்தபோது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அவரால் வாகனத்தை ஓட்ட முடியாததால் மாட்டுத்தாவணி இருசக்கர வாகன காப்பகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆட்டோவை பிடித்துள்ளார். அந்த ஆட்டோ டிரைவரான அவனியாபுரத்தை சேர்ந்த மூவேந்திரன் என்பவருடன் அவரது நண்பர் ஒருவரும் வந்துள்ளார்.

    பின்னர் அவர்கள் பாண்டிகோவில் அருகிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மீண்டும் மதுவாங்கி ஆட்டோவில் அமர்ந்தவாறு அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் போலீஸ்காரர் மலையரசன், ஆட்டோ டிரைவரான மூவேந்திரனிடம் தனது குடும்ப விஷயம் குறித்து கூறியுள்ளார். தனது மனைவி விபத்தில் இறந்து விட்ட தகவலையும் அவரிடம் தெரிவித்து உள்ளார்.

    அப்போது தன்னுடை வங்கிக்கணக்கில் ரூ.80 ஆயிரம் பணம் இருப்பதாகவும், அதன் பாஸ்வேர்டையும் மூவேந்திரனிடம் பகிர்ந்துள்ளார். அந்த சமயம் மூவேந்திரன், தான் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்து தவிப்பதாகவும், குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாகவும் தெரிவித்ததையடுத்து இருவரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தனர்.

    சற்றே நிதானம் இழந்த நிலையில் போலீஸ்காரர் மலையரசின் செல்போனை வாங்கிய மூவேந்திரன், அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.80 ஆயிரம் பணத்தை அவருக்கே தெரியாமல் தனது நண்பர் ஒருவரின் வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

    இதனை கண்டுபிடித்தால் சிக்கலாகி விடும் என்பதால் போலீஸ்காரரை தீர்த்துக்கட்ட மூவேந்திரன் முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த மூவேந்திரனின் நண்பர் பாதியிலேயே ஆட்டோவில் இருந்து இறங்கிக்கொண்டார்.

    பின்னர் வழியில் ஒரு பங்க்கில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு சம்பவம் நடந்த ஈச்சனோடை புதுக்குளம் கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இரும்பு கம்பியால் போலீஸ்காரர் மலையரசனை தலையில் பலமாக தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார்.

    குற்றுயிரும், கொலையுயிருமாக உயிருக்கு போராடிய போலீஸ் காரரை ஈவு இரக்கமின்றி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொடூரமாக கொலை செய்த மூவேந்திரன் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வீட்டிற்கு தப்பிச்சென்றுள் ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்ப வத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் சரித்திர குற்றப்பதிவேடு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளி களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் தற்போது மதுரையில் போலீஸ்காரரை எரித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஈச்சனோடை பகுதியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
    • கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை.

    மதுரை:

    மதுரை அவனியாபுரத்தை அடுத்த புறவழிச்சாலையில் உள்ள ஈச்சனோடையில் கடந்த 4-ந்தேதி காலை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சாக்கு மூடை ஒன்று கிடந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது சாக்கு மூடையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதுடன், ஒரு பெண்ணின் கால் வெளியே தெரியும் நிலையில் கிடந்தது. மேலும் சாக்கு மூட்டை முழுவதும் ரத்தக்கறையாகவும் காணப்பட்டது.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டதும், அவர் மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த இந்திராணி (வயது 70) என்றும் தெரியவந்தது.

    ஓய்வு பெற்ற அரசு அலுவலரான அவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் அடிப்படையில் நடந்த விசாரணையில், வில்லாபுரம் மற்றும் கீரைத்துறை பகுதியை சேர்ந்த சந்தேகப்படும்படியான சந்திரசேகர் (50), அமர்நாத் (38) இருவரை பெருங்குடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து நகைக்காக இந்திராணியை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்திருந்தனர்.

    அந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகிலேயே நேற்று மாலை பாதி எரிந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

    விருதுநகரை சேர்ந்தவர் மலையரசன் (வயது 36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே அவரது மனைவி கடந்த 1-ந்தேதி நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    மனைவியின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட மலையரசன், மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

    அங்கு மனைவியின் சிகிச்சை தொடர்பான கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக வந்துள்ளார். அதன் பிறகு அவர் என்ன ஆனார், எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் தான் அவர் அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனோடை பகுதியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

    அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
    • இந்த போட்டிக்கு ஒருதரப்பினருக்கு ஆதரவாக கிராம நிர்வாக அதிகாரி செயல்படுவதாக கூறி முற்றுகையிட்டனர்.

    அவனியாபுரம்

    பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

    இந்த போட்டி நடத்துவது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இரு பிரிவுகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு பின்னர் இரு பிரிவுகளும் நீதிமன்றம் சென்றனர்.

    நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 4 ஆண்டுகளுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இரு பிரிவினர்களையும் அழைத்து கலெக்டர் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பலனில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக இருதரப்பினரும் கலெக்ட ரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒருதரப்பினருக்கு ஆதரவாக கிராம நிர்வாக அதிகாரி செயல்படுவதாக கூறி இன்று அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை அனைத்து சமுதாய பொதுமக்கள் கமிட்டியினர் முற்றுகையிட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அவனியாபுரம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (15-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பைபாஸ்ரோடு, அவனியாபுரம் பஸ்நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஷ்நகர், வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர், திருப்பரங்குன்றம் ரோடு, பாம்பன் நகர், வெள்ளக்கல், பர்மா காலனி, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மதுரை மேற்கு செயற்பொறியாளர் மோகன்(பொறுப்பு) தெரிவித்துள்ளார். 

    • இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டைச் சேர்ந்த முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் மற்றும் 2 தங்க காசுகள் பரிசு என அறிவிக்கப்பட்டது.

    பின்னர் அந்த மாட்டை அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற மாடுபிடி வீரர் பாய்ந்து பிடித்தார். இதனையடுத்து களத்திலேயே ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 2 தங்க காசுகள் அவருக்கு வழங்கப்பட்டது.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு வேல ராமமூர்த்தி வீட்டு முன்பும் கம்பு வைத்து தடுப்பு அமைக்கப்பட்டது.
    • வேல ராமமூர்த்தி மனைவி அரிவாளை எடுத்து கயிறுகளை வெட்டி அறுக்க முயன்றார்.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், அவனியாபுரத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்தபடி நடிகர் வேல ராமமூர்த்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து ரசித்தார்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு வேல ராமமூர்த்தி வீட்டு முன்பும் கம்பு வைத்து தடுப்பு அமைக்கப்பட்டது. இதனால், கோபமடைந்த வேல ராமமூர்த்தி மனைவி அரிவாளை எடுத்து கயிறுகளை வெட்டி அறுக்க முயன்றார். இதையடுத்து, போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.

    • இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பகுதியை சேர்ந்த நவீன் குமார் மார்பில் மாடு குத்தியது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்ற இளைஞரின் மார்பில் மாடு குத்தியது.

    இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்தார்.

    ஜல்லிக்கட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.
    • 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.

    ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி 19 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்துள்ளார்.

    குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி 2 ஆம் இடம் பிடித்துள்ளார். திருப்புவனம் முரளிதரன் 13 காளைகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.

    19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 15 காளைகளை அடக்கி 2 ஆம் பிடித்து அரவிந்த் திவாகருக்கு ஹோண்டா ஷைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

    • இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று முடிந்தது.
    • ஜல்லிக்கட்டில் மாடு முட்டி நவீன் குமார் என்ற மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்ற இளைஞரின் மார்பில் மாடு குத்தியது. இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்தார்.

    இந்நிலையில், மாடுபிடி வீரர் நவீன்குமார் உயிரிழந்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மார்பில் குத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாடு பிடி வீரர் நவீன் அவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த நவீன் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம் பெற விழைகிறேன்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், எதிர்பாராத நிலையில் இந்த உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் மண்ணின் கலாச்சாரத்துடன் இணைந்த விளையாட்டாக இருந்தாலும் கூட, உயிரை விட விலை மதிக்கமுடியாதது வேறெதுமில்லை. எனவே, காளை தழுவும் வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும்.

    மாடுபிடி வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிய விதிகளை பின்பற்ற வேண்டும். இனி நடைபெறும் அலங்காநல்லூர் உள்ளிட்ட மாடுபிடி நிகழ்ச்சியில் உயிரிழப்பு ஏற்படாவண்ணம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக வி.கே. சசிகலாவின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது.
    • சசிகலாவின் காளையை வளர்த்து வரும் மலையாண்டிக்கு ரூ.10 லட்சம் மதிப்பு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.

    ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவில் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 16 காளைகளை அடக்கி 2 ஆம் பிடித்து அரவிந்த் திவாகருக்கு ஹோண்டா ஷைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக வி.கே. சசிகலாவின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து சசிகலாவின் காளையை வளர்த்து வரும் மலையாண்டிக்கு ரூ.10 லட்சம் மதிப்பு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    சிறந்த காளையாக இரண்டாம் இடம் பிடித்த காளை உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்திக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    அவனியாபுரத்தில் டெய்லர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 44). டெய்லரான இவர் கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பால கிருஷ்ணன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்த ராஜன் (58). கூலித்தொழிலாளியான இவருக்கு சில மாதங்களாக உடல்நலக்குறைவு இருந்தது. டாக்டரிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இதனால் விரக்தியடைந்த ராஜன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரம் பகுதியில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் பகுதியில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    இதுகுறித்து மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் ராஜா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அந்த நேரத்தில் எம்.எம்.சி. காலனி, வி.ஏ.எஸ்.நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர், ஜெயபாரத் சிட்டி, பை-பாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் மேல்நிலைப் பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு,

    பிரசன்னா காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், அக்ரகாரம், புரசரடி, ஜே.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலாநகர், விமான நிலைய குடியிருப்பு பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட விவரம் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×