என் மலர்
நீங்கள் தேடியது "Axar patel"
- கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சுழற்பந்து வீச்சில் அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளனர்.
ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாத நிலையில் அக்ஷர் படேலை கேப்டனாக நியமித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த சீசனை எதிர்கொள்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-
பேட்ஸ்மேன்கள்
கே.எல். ராகுல், ஜேக் பிரேசர்-மெக்கர்க், கருண் நாயர், பாஃப் டு பிளிஸ்சிஸ், டொனோவன் பெரைரா, அபிஷேக் பொரேல், திரிஸ்டன் ஸ்டப்ஸ்.

ஆல்-ரவுண்டர்கள்
அக்சார் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஷ் சர்மா, தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி.
பந்து வீச்சாளர்கள்
மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ்.
தொடக்க பேட்ஸ்மேன்கள்
கே.எல். ராகுல், மெக்கர்க், டூ பிளிஸ்சிஸ், ஸ்டப்ஸ் ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இதனால் மெக்கர்க், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. டு பிளிஸ்சிஸ் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்காக தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார். இருவரும் வெளிநாட்டு வீரர்கள் ஒருவேளை இந்த ஜோடி சிறப்பாக விளையாட வில்லை என்றால் ஸ்டப்ஸ் களம் இறங்க வாய்ப்புள்ளது.

மிடில் ஆர்டர் வரிசை
மிடில் ஆர்டர் வரிசையில் கே.எல். ராகுல், பொரேல், கருண் நாயர், ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஸ் சர்மா உள்ளனர். ஆல்-ரவுண்டர்களில் தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி அனுபவம் இல்லாத வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தால் கருண் நாயர், கே.எல். ராகுல் அதை மிகப்பெரிய ஸ்கோராக மாற்ற வாய்ப்புள்ளது. ஒருவேளை இரண்டு மூன்று விக்கெட்டுகள் மளமளவென இழந்துவிட்டால் அணி சவாலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

வேகப்பந்து வீச்சு
மிட்செல் ஸ்டார்க், டி. நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா ஆகிய ஐந்து முன்னணி வீரர்களை கொண்டுள்ளது.
ஸ்டார்க், மோகித் சர்மா, டி. நடராஜன், முகேஷ் குமார் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆடும் லெவனில் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா அல்லது முகேஷ் குமார் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை ஸ்டார்க் விளையாட முடியவில்லை என்றால் சமீரா களம் இறங்க வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் வேகப்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருக்கலாம்.
சுழற்பந்து வீச்சு
அக்ஷர் படேல், குல்தீப் என இரண்டு நட்சத்திர வீரர்களை மட்டும் நம்பி களம் இறங்க வேண்டிய நிலை.
வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சில் சமநிலை பெற்ற நிலையில் இருந்தாலும், பேட்டிங்கில் எப்படி செயல்பட இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.
- கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த தொடரில் சென்னை, மும்பை, ஐதராபாத், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் எந்த மாற்றமும் இல்லை. மீதியுள்ள கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், ஷ்ரேயாஸ், டெல்லி ஆகிய 5 அணிகளும் புதிய கேப்டன்களுடன் விளையாட உள்ளனர்.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் மாற்றம் இல்லை.
மற்ற 5 அணிகளில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப்பண்ட்டும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும், டெல்லி அணிக்கு அக்ஷர் படேலும் புதிய கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
9 அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14-ந் தேதி தான் கேப்டனை அறிவித்தது. டெல்லி அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் கேப்டனுக்கான தேர்வில் இருந்தது.
இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். இதனால் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அறிவித்தது. துணை கேப்டன் யார் என்பது குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பாப் டு பிளெசிஸ் டெல்லி அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நான் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளயாடிய காலத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளேன்.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம்.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டுமே இன்னும் கேப்டனை அறிவிக்காமல் இருந்தது.
இந்த சூழ்நிலையில் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கேப்பிட்டல்ஸ் அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராக உள்ளேன் என டெல்லி அணியின் புதிய கேப்டன் அக்ஷர் படேல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம். என் மீது நம்பிக்கை வைத்த எங்கள் உரிமையாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய காலத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளேன். மேலும் இந்த அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராகவும் நம்பிக்கையுடன் உள்ளேன்.
எங்கள் பயிற்சியாளர்களும் அணி ஊழியர்களும் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட ஒரு சமநிலையான மற்றும் வலுவான அணியை ஒன்றிணைப்பதன் மூலம் மெகா ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். எங்கள் குழுவில் ஏராளமான தலைவர்கள் உள்ளனர். இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் எங்கள் ரசிகர்களின் மகத்தான அன்பு மற்றும் ஆதரவுடன், கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகவும் வெற்றிகரமான சீசனை எதிர்நோக்குவதால், அணியில் சேர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
என்று அக்ஷர் படேல் கூறினார்.
- அக்ஷர் படேல் 2019-ம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
- ரூ.18 கோடிக்கு அக்ஷர் படேல் தக்க வைக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டுமே இன்னும் கேப்டனை அறிவிக்காமல் இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் கேப்டன்கள் மாற்றம் இல்லை.
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும் (கடந்த சீசன் ஷ்ரேயாஸ் ஐயர்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும் (டுபெலிஸ்), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப்பண்ட்டும் (கே.எல்.ராகுல்), பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் (ஷிகர் தவான்) புதிய கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் கேப்டனுக்கான தேர்வில் இருந்தது. இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். மேலும் அவர் தொடக்கத்தில் சில போட்டிகளை தனிப்பட்ட காரணங்களுக்காக தவற விடுகிறார்.
இந்நிலையில் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அக்ஷர் படேல் 2019-ம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அவர் ரூ.18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். அக்ஷர் படேல் ஐ.பி.எல்.லில் 150 ஆட்டத்தில் விளையாடி 1653 ரன்கள் எடுத்துள்ளார். 123 விக்கெட் வீழ்த்தி உள்ளார். கடந்த சீசனில் டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு அக்ஷர் படேலின் 29-வது பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
- இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு அக்ஷர் படேலின் 29-வது பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து அக்ஷர் படேல் மற்றும் மேகாவிற்கும் திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியின் போது அக்ஷர் படேல் மேடையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 தொடரில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதுதவிர, ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் லயன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
- ஆஸ்திரேலியாவை விட இந்தியா 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.
நாக்பூர்:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, முதல் நாளிலேயே 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். 171 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அவர் சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 120 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக அஸ்வின் 23 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா-அக்சர் பட்டேல் இருவரும் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தனர். இதனால் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் டாட் மர்பி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ஆஸ்திரேலியாவை விட இந்தியா 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
- துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2023 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வருவதால் இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில் டேவிட் வார்னர், அக்சர் படேல் இந்த இருவரின் தலைமையில் இந்த #IPL2023 சத்தமாக கர்ஜிக்க தயாராக உள்ளது என்று தலைப்பிட்டிருந்தது.
வார்னர் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2009-ல் டெல்லி உரிமையுடன் (அப்போது டெல்லி டேர்டெவில்ஸ்) தொடங்கினார். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறினார். அவர் 2016 -ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றினார்.
போட்டியின் கடந்த பதிப்பில், வார்னர் 12 போட்டிகளில் கேபிடல்ஸ் அணிக்காக 150.62 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 432 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் ஐந்து அரை சதங்களை அடித்தார்.
- பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங்கானது.
- இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட உள்ளோம்.
16-வது ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் நேருக்கு நேர் மோதியது. இப்போட்டியில், டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 162 ஆட்டங்களை சேர்த்தது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் அக்சர் படேல் ஏன் பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து கேப்டன் டேவிட் வார்னர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங்கானது. ஆனால் பிட்ச்சின் இன்னொரு பக்கத்தில் ஸ்விங் அந்த அளவிற்கு ஆகவில்லை. ஒரு மைதானத்தின் சூழலுக்கு தகுந்தாற்படி எப்படி விளையாட வேண்டும் என்பதை குஜராத் அணி செய்து காட்டி இருக்கிறது.
இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட உள்ளோம். சாய் சுதர்சன் தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். குறைந்தது டெல்லி மைதானத்தில் 180 முதல் 190 ஆட்டங்கள் வரை எடுக்க வேண்டும்.
ஐபிஎல் தொடரில் நீண்ட ஆண்டுகளாக அக்சர் படேல் பந்து வீசி வருகிறார். இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளர். அவர் பந்து வீசாததற்கு பிட்ச் மற்றும் விக்கெட் தான் காரணம். மற்றபடி அவருக்கு காயம் எதுவும் இல்லை.
என்று வார்னர் கூறினார்.
இந்த போட்டியில் அக்சர் படேல் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை.
- டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.
- அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
டெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.
அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து கடைசியாக நடைபெற்ற இரு ஆட்டங்களில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலை அந்த அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர் என்றும், சிறந்த பார்மில் உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கத்துடன் தொடங்கிய பல அணிகள் வீறு கொண்டு மீண்டு வந்திருக்கின்றன.
- அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய குறிக்கோள்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதுகின்றன.
குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்திலும், டெல்லி அணி கடைசி இடத்திலும் உள்ளன.
இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பிரவீண் அம்ரே குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கத்துடன் தொடங்கிய பல அணிகள் வீறு கொண்டு மீண்டு வந்திருக்கின்றன. அதுதான் இந்த ஐபிஎல் போட்டியின் மேஜிக் ஆகும். எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் தோற்கடிக்கும்.
அதனால், நாம் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். நமது பெஸ்ட்டை கொடுக்க வேண்டும். குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் சவாலானதாக இருக்கும். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது.
அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய குறிக்கோள். நடந்து முடிந்ததை நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் நிகழ்காலத்தில் நடக்க வேண்டியதை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த யோசனையில் ஈடுபட்டிருக்கிறோம். டெத் ஓவர்களிலும் நாங்கள் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டியது இருக்கிறது.
அதையும் நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம்.
டெல்லி அணியின் துணை கேப்டன் அக்சர் படேலுக்கு ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை உள்ளது. ஆட்டத்தை ஜெயித்து கொடுக்க அவரது பங்களிப்பு நிச்சயம் தேவை.
அவர் சிக்சர்களை இந்த சீசனில் அதிகம் அடித்திருக்கிறார். அவரை முதலில் களமிறக்காமல், கடைசியாக இறக்க சில நேரங்களில் முடிவு செய்வோம். ஏனென்றால் அவரை சிறந்த ஃபினிஷர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது.
- டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இதற்கான இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் டியூக் பந்துகளே பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போதே நாங்கள் டியூக் பந்துகளில் பயிற்சியை தொடங்கிவிட்டதாக இந்திய வீரர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய வீரர் அக்சர் படேல் கூறியதாவது:-
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது. அதேபோல் தான் எஸ்ஜி பந்துகளில் வீசிவிட்டு டியூக் பந்துகளில் பந்துவீசுவதும் எளிதள்ள. அதிக நேரம் ஸ்விங் ஆகும் தன்மை உடைய டியூக் பால்களை வைத்து ஐபிஎல் தொடரின் போதே பயிற்சியை தொடங்கிவிட்டோம். இதற்காகவே டியூக் பால்களை அதிகளவில் ஆர்டர் செய்து பயிற்சியை மேற்கொண்டோம்.
ஏனென்றால் டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே, அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும். இங்கிலாந்தில் ஆட்டம் நடப்பதால், லைன் மற்றும் லெந்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறோம்.
இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சே அதிகமாக எடுபடும் என்பதால், அணியில் ஒரு ஸ்பின்னருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். எனக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி கவலைப்படாமல் பயிற்சியில் தீவிரமாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது.
- ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
மும்பை:
உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி வருகிற 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதில் யசுவேந்திர சாகலை சேர்த்திருக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது. ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும். எனது தனிப்பட்ட முறையில் இந்திய அணி யுஸ்வேந்திர சாகலை தவறவிட்டு விட்டதாக உணர்கிறேன். அந்த அணியில் இல்லாத ஒரே அம்சம் ஒரு லெக் ஸ்பின்னர் ஆகும் என்று நினைக்கிறேன்.
சாகலை தேர்வு செய்யவில்லையென்றால் வாஷிங்டன் சுந்தரை அணியில் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அணிக்கு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் தேவைப்பட்டிருக்கலாம். இதனால்தான் அஸ்வினை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜாகிர்கான் எங்களுக்காக செய்ததை போலவே பும்ரா ஒரு மேட்ச் வின்னராக இருப்பார். 300 அல்லது 350-க்கு மேல் நீங்கள் குவித்த பிறகு வெற்றி பெறும் நாட்கள் இருக்கும். ஆனால் 250 மற்றும் 260 ரன்கள் எடுக்கும் போது பும்ரா போன்ற பந்து வீச்சாளர்கள் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.