என் மலர்
நீங்கள் தேடியது "Bajaj"
- பாரம்பரியம் மிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன
- ஒரு பேட்டரி சுமார் 10 கிலோ எடையுள்ளது என்பதை நினைவுபடுத்தினார் தருண்
ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ.100 எனும் அளவில் விற்பனையாகிறது. இந்த விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தவர்களுக்கு பேட்டரியை பயன்படுத்தி இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் (electric vehicle) நல்ல மாற்றாக உருவெடுத்தது.
ஏத்தர், ஓலா போன்ற புது நிறுவனங்களும், வாகன தயாரிப்பில் பாரம்பரியம் மிக்க பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களும் தங்கள் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம், ஏத்தர்.
வளர்ந்து வரும் இத்துறையில் அடுத்த முன்னெடுப்பாக சார்ஜ் குறைந்தவுடன் தங்கள் இரு சக்கர வாகனத்தில் உள்ள பேட்டரியை, நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் பரிமாற்றி (battery swapping) கொள்ளும் வசதியை ஆங்காங்கே ஏற்படுத்த சில நிறுவனங்கள் முனைந்து வருகின்றன. இவ்வசதியை ஒரு சிறப்பு அம்சமாக கூறி வாகன விற்பனையும் நடந்து வருகிறது.
ஆனால், இந்த முயற்சியை ஏத்தர் நிறுவன தலைமை செயல் அதிகாரி (CEO) தருண் மேத்தா (Tarun Mehta) விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
ஒரு பேட்டரி என்பது 10 கிலோ எடைக்கு குறையாமல் இருக்கும். அதனை மாற்றி பொருத்தும் போது கீழே போட்டு விட கூடாது. வயதானவர்களுக்கு இப்பணி எளிதில்லை. அவர்களுக்கு உதவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு மாற்றலுக்கான பணியகத்தில் 200 பேட்டரிகளாவது எப்போதும் முழு சார்ஜுடன் இருக்க வேண்டும். இதற்கு பெரிய பரப்பளவிலான இடம் தேவைப்படும். இந்த பேட்டரிகள் அனைத்தும் விலையுயர்ந்தவை என்பதால் அவற்றை பாதுகாக்க இரவும் பகலும் பணியில் இருக்கும் பாதுகாப்பாளர்களை நியமிக்க வேண்டும். இவையனைத்தும் செலவினங்களை கூட்டி விடும். இதை தவிர, ஒரு புது எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை வாங்கியவர், சார்ஜிங் நிலையத்தில் உள்ள பழைய பேட்டரியுடன் தனது புது பேட்டரியை பரிமாற்றி கொள்ள தயங்குவார். எனவே நாங்கள் இத்திட்டத்தை பெரிதாக ஆதரிக்கவில்லை.
இவ்வாறு தருண் கூறியுள்ளார்.
- இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத உச்சபட்ச ஜிஎஸ்டி தேவையா?
- பிற நாடுகளில் வாகனங்களுக்கு 8% முதல் 14% வரை மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.
வாகனங்கள் விலை உயர்ந்து வருவதற்கு மத்திய அரசு விதிக்கும் அதிக ஜிஎஸ்டி விகிதங்களே காரணம் என, மத்திய அரசு மீது பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
மத்திய அரசின் அதிகப்படியான விதிமுறைகள் மற்றும் அதிக ஜிஎஸ்டி விகிதங்களே வாகனங்களின் கணிசமான விலை உயர்வுக்குக் காரணம்.
பிஎஸ்6 போன்ற எரிபொருள் தரநிலைகளை தான் எதிர்க்கவில்லை, ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத உச்சபட்ச ஜிஎஸ்டி தேவையா?
இந்தியாவின் ஜிஎஸ்டி விகிதங்களை ASEAN (தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சங்கம்) மற்றும் பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிட்ட ராஜீவ் பஜாஜ், அந்த நாடுகளில் வாகனங்களுக்கு 8% முதல் 14% வரை மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.
இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18% அல்லது 12%-ஆக மத்திய அரசு குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
- ரூ.25.75 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானியின் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது
- மூன்று குடும்பங்களின் மொத்த மதிப்பான ரூ.38.27 லட்சம் கோடி என்பது சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10 சதவீத மதிப்புக்கு நிகராக அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பானது அதிகரித்துள்ளதாகப் பிரபல பார்க்லேஸ்-ஹுருன் நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பணக்கார வணிக குடும்பங்களின் சொத்துமதிப்பை பட்டியலிட்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.25.75 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானியின் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. புனேவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தை இயக்கி வரும் பஜாஜ் குடும்பம், ரூ.7.13 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானி குடும்பத்துக்கு அடுத்த பெரிய வணிக குடும்பமாக உருவெடுத்துள்ளது.
குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ₹5.39 லட்சம் கோடி மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று குடும்பங்களின் மொத்த மதிப்பான ரூ.38.27 லட்சம் கோடி என்பது சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும் என்ற மலைக்கவைக்கும் உண்மையும் தெரியவந்துள்ளது.
- முன்னணி இந்திய நன்கொடையாளராக ஷிவ் நாடார் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.
- ரிலையன்ஸ் அறக்கட்டளை ரூ.407 கோடி நன்கொடையுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியல் மற்றும் இந்திய நன்கொடையாளர் பட்டியல் போன்றவற்றை ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் ஆண்டுக்கு ரூ. 2,153 கோடி நன்கொடைகள் வழங்கி முன்னணி இந்திய நன்கொடையாளராக தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஹுருன் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு அவர் சராசரியாக ரூ.5.7 கோடி வரை நன்கொடை அளித்துள்ளார். 79 வயதான அவர் 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நன்கொடையாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் அறக்கட்டளை ரூ.407 கோடி நன்கொடையுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஜாஜ் குழும அறக்கட்டளை 352 கோடி ரூபாய் நன்கொடையுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் CSR நன்கொடையில் ரூ.900 கோடி பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து நவீன் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் ரூ. 228 கோடி நன்கொடையுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.
இன்ஃபோசிஸின் இணை நிறுவனரும், நந்தன் நிலேகனியின் மனைவியுமான ரோகினி நிலேகனி, ஆண்டுக்கு 154 கோடி ரூபாய் நன்கொடையுடன் அதிக நன்கொடைகள் அளித்த பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
- Platina 110 ABS பைக் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட Pulsar F250 பைக்கின் விலை ரூ.1.50 லட்சமாக இருந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் தனது 3 பைக்குகளின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
பஜாஜ் நிறுவனத்தில் Platina 110 ABS, CT125X, Pulsar F250 ஆகிய மூன்று பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
Platina 110 ABS பைக் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.72,224 ஆக நிர்ணயிக்கப்பட்டது. CT125X பைக்கின் விலை ரூ.71,354 - ரூ.74,554 ஆக இருந்தது. கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட Pulsar F250 பைக்கின் விலை ரூ.1.50 லட்சமாக இருந்தது.
தற்போது இந்த பைக்குகளின் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால் பஜாஜ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

