என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bangladesh Violence"

    • மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன.
    • போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.

    வங்கதேசத்தில் கடந்த வருடம் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் தற்போது வங்கதேசத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் இந்து சமூகத்தின் முக்கிய தலைவர்பபேஷ் சந்திர ராய் (வயது 58) மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்நாட்டில் பாலஸ்தீன தாக்குதல்களை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து வங்கதேசம் செல்லும் அமெரிக்க பயணிகளை அந்நாட்டு எச்சரித்துள்ளது. வங்கதேசத்தில் காக்ராச்சாரி, ரங்கமதி மற்றும் பந்தர்பன் உள்ளிட்ட சிட்காங் மலைப்பகுதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க அரசு ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வகுப்புவாத வன்முறை, குற்றச் சம்பவங்கள், பயங்கரவாதம், கடத்தல் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக பயணிகள் இந்தப் பகுதிக்குச் செல்லக்கூடாது" என்று தெரிவித்துள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், இந்தப் பகுதியில், குடும்ப தகராறுகளால் தூண்டப்பட்ட கடத்தல்கள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் அரசியல் வன்முறைகளும் இப்பகுதிக்கு வருபவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.

    மேலும் IED குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. அமெரிக்க குடிமக்கள் அனைத்து கூட்டங்களையும், அமைதியான கூட்டங்களையும் கூட தவிர்க்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.

    ஏனெனில் சிறிய எந்நேரமும் அவை வன்முறையாக மாறக்கூடும். வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் உட்பட பயங்கரவாத வன்முறை அபாயம் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

    • போராட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கு அரசு உத்தரவிட்டது.
    • இடஒதுக்கீட்டை ஆளும் ஹசீனாவின் அரசு ரத்து செய்துள்ளது.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து இளைஞர்களால் கடந்த வாரம் முதல் கடுமையான போரட்டம் முன்னெடுக்கப்பட நிலையில் போராட்டம் கலவரமாக மாறி பல வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்த வன்முறையில் 133 க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கு அரசு உத்தரவிட்டது . இந்நிலையில் இடஒதுக்கீட்டை ஆளும் ஹசீனாவின் அரசு ரத்து செய்துள்ளது.

    இருப்பினும் போரட்டம் இன்னும் அடங்காத நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியிருப்பதாவது,

    மத்திய மாநில அரசுகள் வங்கதேசத்தில் உள்ள தமிழகமாணவர்களை தமிழ்நாட்டிற்கு பத்திரமாக அழைத்து வர தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதன் காரணமாக இந்திய மாணவர்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள்.

    மத்திய அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    இந்திய மாணவர்களை பத்திரமாக அவரவர் மாநிலத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.

    குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு கல்வி பயின்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார்.

    • மாணவர்கள் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இருதரப்புக்கு இடையே நடந்த மோதல் வன்முறையில் முடிந்தது.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கு இடையே நடந்த மோதல் வன்முறையில் முடிந்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்காளதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து மூலம் நாடு திரும்பியுள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

    • வங்காளதேசத்தில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய போராட்டம் வன்முறையாக வெடித்தது.
    • இந்தப் போராட்டத்தில் 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் கடந்த 15-ம் தேதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கு எதிராக ஆளுங்கட்சியின் மாணவர்கள் அணி பிரிவு போராட்டம் நடத்தியது. எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் வலதுசாரி பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன. மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் 150-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

    இந்நிலையில், இந்த வன்முறைக்கு காரணமான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பான இஸ்லாமிக் சதாரா ஷிபிர் என்ற அமைப்பை வங்காளதேச அரசு இன்று தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாட்டின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜமாத் இ இஸ்லாமி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவாமி லீக் தலைமையிலான ஆளும் கூட்டணியின் முடிவு சட்டவிரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என தெரிவித்துள்ளது.

    • போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.
    • வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்.

    வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தில் சிக்கி இதுவரை 98 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியால், அங்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

    இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த கலவரத்தால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில், மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதில், இதுவரை 98 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி அங்கே பல ஆயிரம் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

    இதையடுத்து,  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபர சூழல் நிலவுகிறது.
    • இதன் காரணமாக மீண்டும் வன்முறை ஏற்படலாம்.

    வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபர சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மற்றும் டாக்காவை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவர் என்று தெரிகிறது.

    இதன் காரணமாக மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்ற காரணத்தால், வங்காளதேசத்தில் நாடு முழுக்க இணைய சேவைகளை முடக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய சேவைகள் முடங்கியதால் பேரணி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில், பங்கேற்ற வங்காளதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் போலீசாரும் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    போராட்டம் காரணமாக நேற்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    • பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டம் நடந்து வருகிறது.
    • இதனால் அங்கு காலவரையற்ற நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    டாக்கா:

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் போராட்டம் நடந்து வருகிறது.

    போராட்டம் காரணமாக நேற்று காலவரையற்ற நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபரப்பு சூழல் நிலவுகிறது.

    இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார் என தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.

    • ஷேக் ஹசீனா லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
    • 1975-ம் ஆண்டு புரட்சியில் ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைந்தது.

    இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார் என தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.

    நாட்டைவிட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு வருகை புரிந்துள்ளதாகவும் அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது ஒன்றும் இது முதல்முறையல்ல. இதற்கு முன்பே 2 முறை ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ராணுவம் காப்பாற்றிய அந்த சமயத்தில் 2 அதிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசத்தின் அதிபராக இருந்தபோது, 1975 ஆம் ஆண்டு நடந்த முதல் ராணுவப் புரட்சியின்போது படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த புரட்சியின் போது ஷேக் ஹசீனாவும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். அந்தப் புரட்சியின் போது மொத்தமாக ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.

    1981-ல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த ஜியாவுர் ரஹ்மான் ராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டார். அதே சமயம் பல முறை ராணுவத்தின் புரட்சி முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.

    2009 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ஏற்ற இரண்டே மாதத்தில் பங்களாதேஷ் ரைபிள் படையினர் பெரும் கலக்கம் செய்தனர் பெரும் சிரமத்திற்குப் பின்னர் அந்த கலகத்தை ராணுவம் அடக்கியது. கடந்த 2012-ம் ஆண்டும் ஹசீனாவுக்கு எதிராக ராணுவம் புரட்சி நடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
    • இதையடுத்து வங்காளதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த வன்முறை மற்றும் மோதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதாலும், சமூக-அரசியல் பதற்றம் அதிகரித்திருப்பதாலும் டாக்காவில் செயல்பட்டு வந்த எல்.ஐ.சி. அலுவலகம் இன்று மூடப்பட்டது.

    ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் வரும் 7-ம் தேதி வரை எல்.ஐ.சி. அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என எல்.ஐ.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டம் காரணமாக இந்தியா-வங்காளதேச எல்லை முழுவதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இந்தியா-வங்காளதேச எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
    • பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் டாக்காவுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியது.

    புதுடெல்லி:

    வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த நில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது.

    இதற்கிடையே, இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    அவர் பயணம் செய்த ராணுவ விமானம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவரை ராணுவ அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    இந்தியா வந்தடைந்த ஷேக் ஹசீனா விரைவில் லண்டன் செல்ல உள்ளார் என தகவல்கள் வெளியாகின.

    வங்காளதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், டாக்காவுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தி உள்ளது.

    மேலும், இந்தியா-வங்காளதேச எல்லை முழுவதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார்.
    • நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

    புதுடெல்லி:

    வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது.

    இதற்கிடையே, இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார். பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இந்தக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    மேலும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அப்போது, வங்காளதேச நிலவரம், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    • தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாக ஏர் இந்தியா தெரிவித்தது.
    • மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியது.

    வங்காளதேசத்தில் நடைபெறும் வன்முறை மற்றும் போராட்டங்கள் காரணமாக இந்தியாவில் இருந்து டாக்காவுக்கும், டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பொக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக டாக்கா மற்றும் இந்தியா இடையில் திட்டமிடப்பட்ட எங்களது விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது," என குறிப்பிட்டுள்ளது.

    வங்காளதேசத்தில் நிலவும் கள சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    முன்னதாக ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியது. போராட்டத்தின் உச்சமாக ஹசீனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். இதைத் தொடர்ந்து தனது சகோதரி ஷேக் ரெகனாவுடன் சேர்ந்து ராணுவ விமானம் மூலம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

    ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், வங்காளதேச ராணுவம் ஆட்சியை கையில் எடுத்துக்கொண்டது. நாடு முழுக்க போராட்டக்காரர்கள் அமைதி காக்கும்படி ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைகாட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்க அறிவுறுத்தினார்.

    ×