என் மலர்
நீங்கள் தேடியது "Benefits"
- வருகிற 29-ந்தேதி சனிப்பெயர்ச்சி.
- சனிப்பெயர்ச்சி மிகவும் நல்ல பெயர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
வருகிற 29-ந்தேதி நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சி மிகவும் நல்ல பெயர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
சனி பகவான் குருவின் வீட்டில் அமர்வதால், ஆன்மிகம் தொடர்பான பிரச்சினை அதிகரிக்கும். போலி ஆன்மிகவாதிகளை மக்கள் கண்டறிந்து ஒதுக்குவார்கள்.
அதே வேளையில் புனிதமான சந்நியாசிகள் குறு பீடங்கள் தொடர்பாக போலியான செய்திகளும் பரவும். எனவே மக்கள் செய்திகளை பகுத்தறிந்து பார்த்து செயல்பட வேண்டியது அவசியம்.
கல்வி நிறுவனங்கள் தொடர்பான சர்ச்சைகள் அதிகரிக்கும். ஒருமித்த கருத்துக்கள் ஏற்படுத்த முடியாமல் ஆட்சி செய்பவர்கள் திண்டாடுவார்கள்.
என்றாலும் சனிபகவானின் பார்வையால் சர்ச்சைகள் அனைத்தும் மக்களுக்கு நன்மையாகவே முடியும். பொருளாதாரம் நல்ல படியாகவே அமையும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியப் பொருளாதாரம் நிலை பெற்று உலக அளவில் மதிக்கப்படும். இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயரும்.
மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகள், பெரும் மழைப்பொழிவு ஆகியவை ஏற்படும். அரசாங்கம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
கடல்சார் ஆராய்ச்சியிலும் கடல்சார் பொருளாதாரத்தி லும் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும். கடல்மாசை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபடும். மீன் வளம் அதிகரிப்பதால் மீனவர்கள் வாழ்க்கை நன்றாக அமையும்.
சர்வதேச கடல் எல்லைப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
பெண்களுக்குச் சகல நிலைகளிலும் ஏற்றமும் முன்னேற்றமும் உண்டாக வாய்ப்பு உண்டு.
பெரும்பாலான துறைகளில் பெண்கள் கோலோச்சுவார்கள், அரசியல் சார்ந்த பெண்களின் ஆளுமையும் சாதுரிய மும் உலகை வியக்க வைக்கும். சமூக செயல்பாடுகளிலும் பொது காரியங்களிலும் அவர்களின் பங்களிப்பு வலுவாக இருக்கும்.
மற்றபடி உலகில் ஆங்காங்கே போர் பதட்டங்கள் அதிகரிக்கும். ரத்தம் சம்பந்தமான புதிய நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு.
காற்றில் பரவும் நோய்கள் புதிதாக தோன்றும். அதேவேளையில் தீர்க்க முடியாத கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.
இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் பாராட்டப்படும். கலைத்துறையைச் சார்ந்தவர்க ளுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த நன்மை தருவதாக அமையும்.
அந்த வகையில் இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம், மீனம், மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் ஏழரைச் சனிக்காலத்துக்கு ஆட்படுகிறார்கள்.
ஏழரைச் சனி என்றதும் பயம் கொள்ளத் தேவையில்லை. அப்படியே அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனி போன்ற நிலைகளை எண்ணியும் கலங்க வேண்டியதில்லை. சனி பகவான் நம் வினைகளைக் கரைக்க அருள் செய்பவர்.
- அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள்.
- மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே இனாம் கிளியூர் ஊராட்சியில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்ப டும் சலுகைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.
இதில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுனர் புனிதா, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசித்ரா, ஆசிரியை பூங்கொடி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்றத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அனைத்து திட்டங்களின் பயனை மக்கள் உரிய முறையில் பெற வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
- திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதரக்குடி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஆதிதிராவிடர் காலனியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமையல் அறை கட்டிடத்தினை திறந்து வைத்தார். கலெக்டர் ஆஷா அஜீத் உடனிருந்தார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
முத்தமிழறிஞர் டாக்டர்.கருணாநிதி வழியில், தமிழ கத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர், அனைத்துத்துறைகளின் மேம்பாட்டிற்கென பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்ட கிராமங்களில் அடிப்படை தேவைகள் அதிகரித்து வருகிறது. அதன் தேவை களை நிறைவேற்றும் விதமாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சரால் செயல் படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் பயன்களை, பொதுமக்கள் உரியமுறையில் பெற்று பயன்பெற வேண்டும். அதுவே அந்த திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படை யானதாகும். எனவே, தனிநபர் மற்றும் கிராமங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், முதலில் அறிந்து கொண்டு, அதன்மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சொர்ணம் அசோகன், ஒன்றிய குழு உறுப்பினர் மருதுபாண்டியன், ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டிமீனாள் (பாதரக்குடி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மூட்டுகளை இலகுவாக்குகிறது. எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.
- நல்ல தூக்கம் வர உதவுகிறது. கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.
உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
நடைப்பயிற்சி, நம் உள் உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அளித்து உடல் உறுப்புகளை சீராக செயல்பட உதவுகிறது.
நடைபயிற்சி மேற்கொள்வதால், இடுப்பளவு மற்றும் வயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான சதை பகுதியை குறைக்க உதவுகிறது.
தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நடைப்பயிற்சி ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.
ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்
தொடர்ச்சியான நடைபயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்க உதவும் வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி. ஒரு நாளில் ஒருவர் 30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சியை மேற்கொண்டால், 150 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையில் மாற்றம் தெரியும்.
நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.
நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.
முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.
அடிவயிற்றுத் தொப்பையை குறைக்கிறது.
மூட்டுகளை இலகுவாக்குகிறது.
எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.
கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது.
'கொலஸ்ட்ரால்' அளவைக் குறைக்கிறது.
மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.
நல்ல தூக்கம் வர உதவுகிறது.
கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும்
ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும்.
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்
நடைபயிற்சியின்போது செய்ய கூடாதவை
ஒரு கையால் செல்போனில் பேசிக்கொண்டும், மறுகையை பாக்கெட்டில் சொருகிக்கொண்டும் நடப்பதால் எந்த பயனும் இல்லை.
இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் வீசி, நிமிர்ந்து வேகமாக நடைபோடுவதுதான் உண்மையான பயிற்சி.
உடல் எடை குறைக்க நடைபோடுபவர்கள், நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே சென்றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை
அதிகமாகப் பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல.
மேடு, பள்ளம் உள்ள இடத்தில நடைபயிற்சி மேற்கொள்ளகூடாது..
எவ்வாறு நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி பார்த்தவாறு நடக்க வேண்டும்.
நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களை சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருக்க வேண்டும்..
கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு நடக்க வேண்டும்.
உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன் புறம் சாய்த்தவாறு நடக்க வேண்டும்.
ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.
நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல்களால் உடலை உந்தித்தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் நடக்க வேண்டும்.
இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர் வளி (Oxygen) அதிகமான அளவில் உட் செலுத்திக்கொள்ளுங்கள்.
நடக்கும்போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள் ளுங்கள்.
நடைபயிற்சியின் அவசியம்
அதிகாலையில் நடப்பது மிகவும் நல்லது.அந்த நேரத்தில் நடப்பதால் தூய்மையான காற்றினை நாம் சுவாசிக்க முடியும்.
அதிகாலையில் நடக்க முடியாதவர்கள் இரவு உணவுக்கு பின் அரை மணி நேரம் நடக்கலாம்.
எக்காரணம் கொண்டும் வெறும் வயித்துல நடக்கக் கூடாது.
அதிகாலையில் நடக்கிறவங்க, அதுக்கு முன்னாடி அரை லிட்டர் தண்ணீர் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிக்கலாம்.
உடற்பயிற்சி துவக்கமாக ஒரே வேகத்தில் சுமார் 5 நிமிடங்கள் நடந்து பின்னர் கைகால்களை நீட்டவும். இதன்மூலம் நரம்புகளில் ஏதும் சோர்வோ அல்லது வீக்கமோ ஏற்படுவதில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
- காவலர் பொது நல இயக்கம் வலியுறுத்தல்
- அதிகாரிகளுக்கு காலத்தோடு பதவி உயர்வு மற்றும் சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை காவலர் பொது நல இயக்க பொதுச் செயலாளர் கணேசன் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் இரவு ரோந்து பணியை தீவிர படுத்தி வருவது வரவேற்க்க தக்கது. இதனால் குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் இரவு ரோந்து பணி செய்யும் போலீசாருக்கு சிறப்பு படி வழங்கப்படுகிறது.
அது போல் புதுவையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கும் சிறப்பு படி வழங்கினால் அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன் மேலும் பணியை சிறப்பாக செய்ய ஏதுவாக அமையும்.
மேலும் புதுவை காவல்துறையில் பணி புரியும் போலீசார் முதல் அதிகாரிகளுக்கு காலத்தோடு பதவி உயர்வு மற்றும் சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும். தற்போது எல்.டி.சி., எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்காக பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் மற்றும் அரசு துறை ஊழியர்களுக்கு தினப்படி அன்றே வழங்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்கப்படுவதில்லை. எனவே மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் தினப்படி போலீசாருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சுப்பயிற்சியாக இருக்கும்.
- இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக அமையும்.
உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சுப்பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவிசெய்கிறது. மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் யோகாசனம் நமக்கு உதவுகிறது.
தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்க முடியும். யோகா செய்பவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலம் பெறும். மேலும் நன்றாக சுவாசிக்க முடியும். இதயம் சரியாக இயங்கி உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், ஊளைச்சதை எனப்படும் தேவையற்ற சதைகள் கரைந்து அழகான ஃபிட்டான உடல் அமைப்பை பெறுவதற்கு யோகா உதவிசெய்கிறது. தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மேலும் நாம் பதட்டம் இல்லாமல் மனஅமைதி அடையவும், தெளிவாக சிந்திக்கும் திறனையும் பெற யோகாசனம் உதவுகிறது.
அதிகப்படியான வேலைப்பளு, குடும்பப்பிரச்சினை மற்றும் பிற காரணங்களால் பலரும் மனஅமைதியை இழந்து சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே தினமும் யோகாசனம் செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளும் நீங்குகிறது.
யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து, நெளித்து செயல்படுவதால் உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுகின்றோம். இதனால் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு நோய் நொடியின்றி நீண்ட நாட்கள்வாழவும் உதவுகிறது. ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதாலும் தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருவதாலும் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியத்தை பெறமுடியும்.
தற்போதுள்ள காலக்கட்டத்தில் தொப்பையை எப்படி குறைப்பது என்பதே எல்லோரது மனதிலும் உள்ள கேள்வியாக உள்ளது. கடைகளில் விற்கும் பாக்கெட் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதாலும், கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதாலும், ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரைமுறை இல்லாமல் உடல் எடை கூடி அவதிப்படுகின்றனர். பலருக்கும் வயிற்றில் தொப்பை ஏற்படுகிறது. யோகானசனங்களில் நவுகாசனா, உஷட்ரசனா, போன்ற யோகாசனங்களை செய்வதன் மூலம் சுலபமாக தொப்பையை குறைக்க முடியும்.
- வாய்ப்புண், குடல் புண் (அல்சர்) குணமாகும்.
- இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.
பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். உடலில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் டாக்டர்கள் கூறும் ஒரே விஷயம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தான். காரணம் என்னவென்றால் தற்போதைய சமூகத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தவிர்க்கும் விஷயம் என்றால் அது பழங்கள் சாப்பிடுவது தான்.
பழங்களின் வகைகள் ஏராளம். அதிலும் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் இருகிறது. அந்தவகையில் விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்று தெரிந்துக்கொள்வோம்.
* பற்களை வலுடையச் செய்கிறது.
* உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
* தலை வலி குறையும்.
* கண்பார்வை மங்கல் குணமாகும்.
* பசியை தூண்ட செய்யும்.
* இதயத்தை பலம் பெற செய்யும்.
* மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும்.
* இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.
* வாயுத் தொல்லை நீங்கும்.
* நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
* எலும்புகள் வலுவடையும்.
* ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
* நினைவாற்றல் அதிகரிக்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.
* உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்தது.
* வாய்ப்புண், குடல் அல்சர் குணமடையும்.
* வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.
இந்த விளாம்பழம் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். ஆகவே இதை இந்த காலக்கட்டத்தில் வாங்கி சாப்பிடுவது நல்லது.
- சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது.
- சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
வழிபாடுகளிலும், ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. பழங்காலத்தில் இருந்தே துளசியை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். துளசியில் தினமும் தேநீர் தயாரித்து பருகினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுவாசம் மேம்படும்
துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு துளசி டீ நன்மை பயக்கும்.
சரும பாதுகாப்பு
துளசியில் பிளவனாய்டுகள், பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை செல்களுக்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன. மேலும் துளசியில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பரு, தோல் நோய்த்தொற்றுகள் உள்பட பல்வேறு தோல் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
செரிமானம்
அஜீரணம், வாயு தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளை போக்கி செரிமானம் சீராக நடைபெறுவதற்கு துளசி டீ உதவி புரியும். குடல் இயக்கம் சுமூகமாக நடக்கவும் துணைபுரியும்.
அழற்சி
துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட அழற்சியால் பாதிக்கப்படுபவர்களுக்கு துளசி டீ நன்மை தரும்.
மன நலம்
துளசி அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன நலனை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. நினைவாற்றல் திறனையும் தக்கவைக்கக்கூடியது.
ரத்த சர்க்கரை
துளசி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் துளசி டீ பருகுவது பயனுள்ளதாக இருக்கும்.
எடை மேலாண்மை
துளசி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடியது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் வழிவகை செய்யும். உடல் எடையை சீராக தக்கவைப்பதற்கு தினமும் துளசி டீயும் பருகி வரலாம்.
இதய ஆரோக்கியம்
துளசி ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.
- புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச்சேர்க்கை.
- ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகவும் புரதம் அவசியம்.
புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச்சேர்க்கை. இது தசைகளுக்கு வலுசேர்க்கிறது. செல்களை புதுப்பிக்கவும், காயம், புண் போன்றவை ஆறுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன், வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகவும் புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை தருகிற இமுனோ குளோபுலின்களைத் தயாரிக்கவும் இது தேவை. நமக்கு தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவில் இருந்தே பெறலாம். சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துக்கள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச்சத்தை பெறலாம்.
இயற்கை உணவைச் சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது போன்ற மற்ற சத்துக்களும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும். செயற்கை பானங்களில் இருக்கிற புரதத்தை உடல் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று புரதச்சத்து சம்பந்தப்பட்ட பவுடரை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதுவும் தவறு.
உடற்பயிற்சி கூடத்துக்கு செல்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, பருப்பு குழம்பு அல்லது கூட்டு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டுவந்தால், அவர்களுக்குத் தேவையான அளவு புரதம் கிடைத்துவிடும்.
- முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
- முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை.
முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் வல்லது. முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்து போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. இது நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் 'சி' கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.
- மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
- மிளகை சுட்டு அதன் புகையினை உள் இழுத்தால் தலைவலி தீரும்.
* சளி தொல்லைக்கு மிளகை நன்றாக பொடித்து அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும்.
* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
* கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாணமுருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.
* மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
* மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலை பாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை உள் இழுத்தால் தலைவலி தீரும்.
* ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.
* மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது.
* மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நஞ்சை முறுக்கும் தன்மை கொண்டது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி.
- பழமர செடிகள் மானிய விலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக வழங்கப்படுகிறது.
- தங்களது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ போன்றவற்றினை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
குண்டடம்
குண்டடம் வட்டார பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெறுவதற்காக பழமர செடிகள் மானிய விலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ச.சசிகலா தெரிவித்துள்ளதாவது:-
நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக 5 வகையான பழமரச் செடிகளான மா, சப்போட்டா, கொய்யா, நெல்லி மற்றும் எலுமிச்சை போன்றவை அடங்கிய தொகுப்பானது 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.200, மானிய விலையில் ரூ.50-க்கு 5 வகை பழ மர செடிகள் அடங்கிய தொகுப்பினை ஒருவர் பெற்றுக் கொள்ளலாம்.
கிராமம் ஒன்றிற்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் மூலமாக 176 எண்களும் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 எண்களும் வழங்கப்படும். 2023- 24 நிதியாண்டில் குண்டடம் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களான பெரியகுமாரபாளையம், கண்ணாங்கோவில், செங்கோடம்பாளையம் மற்றும் பெல்லம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு 80 சதவீத தொகுப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மீதம் உள்ள 20 சதவீத தொகுப்புகளை மற்ற கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்கும் இத்தகைய பழமரச்செடிகளை அனைவரும் பெற்று பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்களது விபரங்களை www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தங்களது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ போன்றவற்றினை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர் ரத்தின பாரதி 9488928722, உதவி தோட்டக்கலை அலுவலர் சிவமூர்த்தி 9750327875, மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் அபிராமி 6385536512 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.