என் மலர்
நீங்கள் தேடியது "boat"
- போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்- ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. போட் லூனார் கனெக்ட் ப்ரோ மாடலின் வரிசையில் புதிய ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலில் 1.91 இன்ச் HD டிஸ்ப்ளே, 2.5D வளைந்த டிசைன், 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. சீம்லெஸ் மற்றும் மெட்டல் டிசைன் கொண்டிருக்கும் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாகவும், ஒட்டுமொத்தமாக பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் 100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள், IP68 தர டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படு இருக்கிறது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இந்த வாட்ச் ஹார்ட் ரேட் மற்றும் உடலின் சுவாச அளவுகளை டிராக் செய்கிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும்.
போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் நேரலை கிரிகெட் ஸ்கோர்கள், வானிலை அப்டேட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயக்கும் வசதி உள்ளது.

போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் அம்சங்கள்:
1.91 இன்ச் HD 2.5D வளைந்த டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ்
2.5D வளைந்த டிசைன், மெட்டாலிக் ஃபிரேம்
ப்ளூடூத் 5.3
பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ENx மூலம் இரைச்சல் இல்லா அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி
100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
உடல்நல டிராகிங் செய்யும் சென்சார்கள்
IP68 டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
300 எம்ஏஹெச் பேட்டரி
அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
ஸ்மார்ட் அலெர்ட்கள்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலின் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் அதிகரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிலாக், கூல் கிரே, டீப் புளூ மற்றும் மரூன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
- போட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் 30 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
- இந்த இயர்போனில் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ ஆப்ஷன்கள் உள்ளது.
போட் ராக்கர்ஸ் 255 டச் நெக்பேண்ட் மாடலை தொடர்ந்து போட் நிர்வானா 525ANC மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிர்வானா 525ANC மாடலில் டால்பி ஆடியோ சப்போர்ட், ஹைப்ரிட் ANC, 11mm ஹை-ஃபிடிலிட்டி டிரைவர் போன்ற அம்சங்கள் உள்ளன.
மெல்லிய மற்றும் காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும் போட் நிர்வானா 525ANC மாடலில் 42db+ வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, நான்கு மைக்ரோபோன்கள், Enx தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ வசதி உள்ளது.

புதிய போட் நிர்வானா 525ANC மாடலுக்கான செயலி கொண்டு பயனர்கள் டால்பி மூவி, டால்பி நேச்சுரல் போன்ற மோட்களை மாற்றிக் கொள்ள முடியும். இத்துடன் ஸ்பேஷியல் ஆடியோ தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் 11mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.2 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் அதிகபட்சம் இரண்டு சாதனங்களுடன் ஒரே சமயத்தில் கனெக்ட் ஆகும். இதில் உள்ள 180 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் டைம் கிடைக்கிறது. இத்துடன் ASAP சார்ஜிங் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும். இதில் உள்ள குயிக் ஸ்விட்ச் பட்டன் மற்றும் பீஸ்ட் மோட் கொண்டு கேமிங் அனுபவம் மேம்படும். இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
புதிய போட் நிர்வானா 525ANC மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. புதிய போட் நிர்வானா 525ANC மாடல் செலஸ்டியல் புளூ, காஸ்மிக் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
- இந்த இயர்பட்ஸ் அழகிய சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக போட் நிர்வானா 525 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய கேமிங் இயர்பட்ஸ் வெளியாகி உள்ளது.
புதிய போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அதிக சவுகரியமான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இந்த இயர்பட்ஸ் அழகிய சார்ஜிங் கேஸ் உடன் வருகிறது. இத்துடன் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை போட் நிறுவனத்தின் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இந்த இயர்பட்களில் எல்இடி லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துகிறது. இதில் மியூசிக் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆக்டிவேட் செய்ய டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இத்துடன் 40ms வரையிலான லோ லேடன்சி வசதி BEAST மோடில் வழங்கப்படுகிறது.
புதிய ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.3 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்ஸடன்ட் வேக் அன்ட் பேர் (IWP) அம்சம் உள்ளது. இது மிக விரைவில் ஸ்மார்ட்போன்களுடன் இணைய செய்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.
போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அம்சங்கள்:
10mm டிரைவர்கள்
எல்இடி லைட்கள்
கேமிங் சார்ந்த டிசைன்
ப்ளூடூத் 5.3
போட் சிக்னேச்சர் சவுன்ட்
டச் கண்ட்ரோல்
குவாட் மைக் மற்றும் ENx தொழில்நுட்பம்
400 எம்ஏஹெச் பேட்டரி (கேஸ்)
40 எம்ஏஹெச் பேட்டரி (இயர்பட்ஸ்)
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
யுஎஸ்பி டைப் சி கனெக்டர்
BEAST மோட் மற்றும் 40ms வரையிலான லோ லேடன்சி
IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 1199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. இத்துடன் பிளாக் சாபர் மற்றும் வைட் சாபர் நிறங்களில் கிடைக்கிறது.
- பயணிகள் தங்கும் குடில்கள், காட்டை ரசிக்கும் டவர் ஆகிய பகுதியை ஆய்வு செய்தார்.
- டிக்கெட் கவுண்டர் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காட்டில் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. அந்த பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ராமச்சந்திரன் அலையாத்தி காட்டில் நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, முத்துப்பேட்டைக்கு வந்த அமைச்சரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் ஜாம்புவானோடை படகு துறைக்கு வந்து அங்கிருந்து வனத்துறை படகு மூலம் கோரையாறு வழியாக அலையாத்திகாட்டிற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் காட்டின் உள்ளே இருக்கும் நடைபாதைகள், சுற்றுலா பயணிகள் தங்கும் குடில்கள், காட்டை ரசிக்கும் டவர் ஆகிய பகுதியை ஆய்வு செய்தார்.
காட்டிலிருந்து திரும்பிய அமைச்சர் படகுத்துறையில் கூடுதல் படகுகள் விடுவது, சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்வது, வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது, கழிப்பிடம், குடிநீர் வசதி போன்ற வசதிகளை மேற்கொள்வது, டிக்கெட் கவுண்டர் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
ஆய்வின்போது, சுற்றுலா துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, வன அலுவலர் ஸ்ரீகாந்த், செல்வராஜ் எம்.பி., மாரிமுத்து எம்.எல்.ஏ., மன்னார்குடி ஆர்.டி.ஓ. கீர்த்தனா மணி, தாசில்தார் மகேஷ் குமார், வன அலுவலர் ஜனனி, மாவட்ட கவுன்சிலர் அமுதா மனோகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், ஊராட்சி தலைவர் லதா பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம் மற்றும் வருவாய் துறையினர், வனத்துறையினர் உடன் இருந்தனர்.
- கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
- சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை கடற்கரையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
இதில் கடலோர பாதுகாப்பு படை காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில் போலீசார் தொண்டியக்காடு, தம்பிக்கோட்டை, கீழக்காடு, ஜாம்புவானோடை, சின்னான் கொள்ளைக்காடு உள்ளிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
மேலும், முத்துப்பேட்டை நகர் பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு தமிழ்மாறன், சட்டம் ஒழுங்கு டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் ஆலங்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பார்வையிட்டார். அப்போது ஏ.டி.ஜி.பி வெள்ளத்துரை உடன் இருந்தார்.
- புதிய போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன.
- இதன் சார்ஜிங் கேசில் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய நுகர்வோர் மின்சாதன பிரான்டு, போட் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் IPX5 சான்று, அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது.
போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்துடன், சக்திவாய்ந்த பேஸ் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்-இல் ENx தொழில்நுட்பம் உள்ளது. இது அழைப்புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதற்காக டூயல் மைக்ரோபோன் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் ஏர்டோப்ஸ் ஆல்பா, டச் கண்ட்ரோல் வசதியை வழங்குகிறது. இத்துடன் செமி இன்-இயர் டிசைன் கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 35 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 35 மணி நேரத்திறகு பிளேடைம், பத்து நிமிட சார்ஜிங்கில் இரண்டு மணி நேர பிளேபேக் வசதி வழங்கப்படுகிறது. இதில் உள்ள பீஸ்ட் மோட், லேடன்சியை 50ms வரை குறைக்கும்.
இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை அறிமுக சலுகையாக ரூ. 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. விற்பனனை போட், ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறும். இந்த இயர்பட்ஸ் டார்க் சியான், ஜெட் பிளாக் மற்றும் ஸ்வீடிஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
- போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ரிங் சாதனம் வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது.
- புதிய ஸ்மார்ட் ரிங் பயனர் உடல்நலன் சார்ந்து பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
போட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹெல்த் மற்றும் பிட்னஸ் டிராக்கர் ஆகும். மெல்லிய டிசைன், செராமிக் மற்றும் மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்கும் போட் ஸ்மார்ட் ரிங் குறைந்த எடை, அதிக சவுகரியம் கொண்டிருக்கிறது.
பயனர் உடல்நல விவரங்களை மிக துல்லியமாக டிராக் செய்வதற்கு ஏற்ற ஏராளமான அதிநவீன அம்சங்களை இந்த ஸ்மார்ட் ரிங் கொண்டிருக்கிறது. இத்துடன் 5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய போட் ஸ்மார்ட் ரிங் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ரா-ஹியுமன் ரிங் ஏர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள்:
அன்றாட உடல்நல அசைவுகளை டிராக் செய்யும் வசதி
ஹார்ட் ரேட் மானிட்டரிங்
பாடி ரிக்கவரி டிராக்கிங்
டெம்பரேச்சர் மானிட்டரிங்
SpO2 மானிட்டரிங்
ஸ்லீப் மானிட்டரிங்
மென்ஸ்டுரல் டிராக்கர்
ஸ்மார்ட் டச் கன்ட்ரோல்
போட் ரிங் ஆப் சப்போர்ட்
புதிய போட் ஸ்மார்ட் ரிங் விரைவில் போட் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
- அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்துகிறது.
- புதிய போட் அவான்ட் பார் 520 மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
போட் நிறுவனம் அவான்ட் 520 பெயரில் புதிய சவுன்ட்பார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக போட் ஃபிளாஷ் பிளஸ் மற்றும் ஸ்டார்ம் பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் புதிய சவன்ட்பார் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
புதிய அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 16 வாட் பவர், டூயல் பேசிவ் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள 2.0 சேனல் ஸ்டீரியோ சவுன்ட் செட்டப் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இந்த சவுன்ட்பார் ப்ளூடூத் 5.0 மூலம் வயர்லெஸ் கனெக்ட் வசதி கொண்டிருக்கிறது.

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இது அதிநவீன டிசைன் அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. போட் அவான்ட் பார் 520 மாடலை ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களுடன் ப்ளூடூத், AUX, யு.எஸ்.பி. மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.
புதிய போட் அவான்ட் பார் 520 சவுன்ட்பார் விலை இந்திய சந்தையில் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் நடைபெறுகிறது.
- புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது.
- இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
போட் நிறுவனத்தின் புதிய வேவ் சிக்மா ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் தான் போட் ஸ்டார்ம் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய மாடல் அறிமுகமாகி இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் போட் வேவ் சிக்மா ஸ்மார்ட்வாட்ச் 2.01 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் மற்றும் IP67 என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது. இதில் கிரெஸ்ட் பிளஸ் ஒ.எஸ்., குயிக் டல் பேட் மற்றும் அதிகபட்சமாக பத்து கான்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 700-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், உடல்நலத்தை டிராக் செய்யும் ஏராள சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

இதில் உள்ள 230 எம்.ஏ.ஹெச். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கான பேக்கப் கிடைக்கிறது. ப்ளூடூத் காலிங் வசதியை பயன்படுத்தினால், இதனை அதிகபட்சம் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்த முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் கேமராவை இயக்கும் வசதி, மியூசிக் பிளேபேக் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இத்துடன் வானிலை விவரங்கள், அலாரம், ஸ்டாப்வாட்ச், டைமர், ஃபைன்ட் மை போன் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிளாக், கூல் புளூ, ஜேட் பர்பில், செர்ரி பிளாசம் மற்றும் கூல் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் மெட்டல் பிளாக் நிற ஆப்ஷனில் மெட்டாலிக் ஸ்டிராப் வழங்கப்படுகிறது.
போட் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் போட் வேவ் சிக்மா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
- போட் நிறுவனத்தின் புதிய ஆக்டிவிட்டி டிராக்கர் ஸ்மார்ட் ரிங் பெயரில் அறிமுகம்.
- போட் ஸ்மார்ட் ரிங் மாடலில் 5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
போட் நிறுவனம் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த தனது, போட் ஸ்மார்ட் ரிங் மாடலின் விலையை தற்போது அறிவித்து இருக்கிறது. மெல்லிய டிசைன், செராமிக் மற்றும் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் போட் ஸ்மார்ட் ரிங் குறைந்த எடை, அதிக சவுகரியம் மற்றும் எளிதில் அணியக்கூடிய வகையிலான டிசைன் கொண்டிருக்கிறது.
பயனர் உடல்நல விவரங்களை மிக துல்லியமாக டிராக் செய்வதற்கு ஏற்ற வகையில் ஏராளமான அதிநவீன அம்சங்களை இந்த ஸ்மார்ட் ரிங் கொண்டிருக்கிறது. இத்துடன் 5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய போட் ஸ்மார்ட் ரிங் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ரா-ஹியுமன் ரிங் ஏர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள்:
அன்றாட உடல்நல அசைவுகளை டிராக் செய்யும் வசதி
ஹார்ட் ரேட் மானிட்டரிங்
பாடி ரிக்கவரி டிராக்கிங்
டெம்பரேச்சர் மானிட்டரிங்
SpO2 மானிட்டரிங்
ஸ்லீப் மானிட்டரிங்
மென்ஸ்டுரல் டிராக்கர்
ஸ்மார்ட் டச் கன்ட்ரோல்
போட் ரிங் ஆப் சப்போர்ட்
புதிய போட் ஸ்மார்ட் ரிங் விரைவில் போட் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஆகஸ்ட் 28-ம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது.
- போட் வேவ் எலிவேட் என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதியும் கொண்டிருக்கிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது. இந்த வாட்ச் மெட்டாலிக் பாடி, கிரவுன், பல்வேறு நிறங்களில் கிடைக்கும் ஓசன் பேண்ட் ஸ்டிராப் உடன் கிடைக்கிறது.
இதில் 1.96 இன்ச் அளவில் பெரிய HD ஸ்கிரீன், கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ப்ளூடூத் காலிங் வசதி, அதிக தரமுள்ள இன்-பில்ட் மைக், டயல் பேட், காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய போட் வேவ் எலிவேட் மாடலில் உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் SpO2, ஸ்லீப் மற்றும் 50-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச் கிரே, பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் செப்டம்பர் 6-ம் தேதி துவங்குகிறது.
- 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
இதில் அட்டமால் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த ஜான்சன், அருண், முருகன், கிங்ஸ்டன், கிரிட்டன், முருகன், ராரல் மானிக்ஸ், ரிமோட்டன் ஆகிய 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினத்தை சேர்ந்த நடராஜன், கோவிந்தராஜ், சோனையன், சேப்பான், ராமகிருஷ்ணன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், ரங்கய்யன், அழகிரி முருகேசன், கருப்பையா உள்பட 2 விசைப்படகுகள் மற்றும் 9 மீனவர்களையும் கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஒரே நாளில் மூன்று விசைப்படகுகள் மற்றும் 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது.
மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.