என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breakfast"

    • பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
    • மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து உணவு மாதிரியை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.

    தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அரசுப் பள்ளியில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது. காலை உணவை 80 மாணவர்கள் சாப்பிட்டனர்.

    சிறிது நேரம் கழித்து காலை உணவு சாப்பிட்ட 16 மாணவர்கள் வயிறு வலிப்பதாக கூறினர். மற்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து உணவு மாதிரியை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.

    • திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது.
    • திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும்.

    தாராபுரம் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் ஏழை எளிய-மக்களுக்காகவும், அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்றும் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும் தி.மு.க.வில் அடிமட்டதொண்டனையும் நினைவு கூர்ந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்று தனது அறிவுரையால் தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு செயல்பட்டு வரும் தி.மு.க.தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை பாராட்டி வாழ்த்துவது.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை கவர்ந்துவெல்லக்கூடிய ஆற்றல் மிக்கவராக வெற்றி நடைபோட்டு வரும் அவருக்கு வருகிற 27-ந் தேதி பிறந்த நாள் விழாவை சீரும் சிறப்போடும் ஏழை எளிய-மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது.

    கருணையுள்ளதோடு இதுவரை 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. மேலும் தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் வலுச்சேர்த்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது.

    தேர்தல் ஆணையத்தால் ஆண்டு தோறும் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், நீக்கம், முகவரி மாற்றம், இடமாற்றம் ஆகியவற்றை செய்ய சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். திருப்பூர் மாவட்டம், ஒன்றிய நகர பேரூர், வார்டு கிளை நிர்வாகிகள் வாக்குச்சாவடி நிலை நிர்வாகிகள் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் பட்டியலில் சரியான நபர்களை இடம் பெற செய்ய வேண்டும்.திருப்பூர் தெற்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை தி.மு.க.விற்கு சேர்ப்பதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • சொந்த பணத்தை செலவு செய்து தேர்வுக்கு தயார்படுத்துகிறார்கள்.
    • காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகள் பசியோடு இருக்கக்கூடாது என்பதால் அவர்களுக்கு காபி, டீ, இட்லி, தோசை, சப்பாத்தி கொடுக்கிறோம்.

    பெரம்பூர்:

    சென்னை அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கற்பித்தல், பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனிக்கவனத்துடன் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து காலை உணவு மற்றும் மாலையில் டிபனுடன் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவது அனைவரது புருவத்தையும் உயர்த்தி உள்ளது.

    கொடுங்கையூர், காமராஜர் சாலையில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 54 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

    இந்த ஆண்டு பொதுத் தேர்வில் தங்களது பள்ளி சாதனை படைக்க வேண்டும் என்ற இலக்குடன் பள்ளி ஆசியர்-ஆசிரியைகள் மாணவ-மாணவிகளுக்கு கற்பித்து வருகிறார்கள்.

    மேலும் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் தினந்தோறும் மாணவ-மாணவிகளுக்கு காலையும், மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்களின் காலை உணவில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்-ஆசிரியைகளே தங்களது சொந்த பணத்தை செலவு செய்து காலை உணவு வாங்கி கொடுத்து வருகிறார்கள்.

    காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு காபி, டீ, மற்றும் ஒவ்வொரு நாளும் இட்லி, வடை, தோசை, சப்பாத்தி வழங்கப்படுகிறது. இதேபோல் மாலையில் டீ, பிஸ்கட், வாழைப்பழம், சுண்டல் வழங்கப்படுகிறது. இதற்கான செலவை பள்ளி ஆசிரியர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து சமாளித்து வருகிறார்கள்.

    இவ்வளவு செய்யும் ஆசிரியர்களின் கனவை நினைவாக்க மாணவ-மாணவிகளும் போட்டி,போட்டு படித்து வருகின்றனர். வருகிற பொதுத்தேர்வை சிறப்பாக எழுதி சாதனை படைப்போம் என்று பெருமிதத்துடனும், உற்சாகத்துடனும் அவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முனிராமையா கூறியதாவது:-

    இந்த பள்ளியில் சுமார் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பித்து வருகிறோம். காலை 7.30 மணி முதல்9 மணிவரையும், மாலை 3.30 மணிமுதல் 7.30 மணி வரையும் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கற்பிப்பதால் எந்த மாணவ-மாணவிகளும் சிறப்பு வகுப்பை தவற விடுவதில்லை. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து வருகிறோம்.

    காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகள் பசியோடு இருக்கக்கூடாது என்பதால் அவர்களுக்கு காபி, டீ, இட்லி, தோசை, சப்பாத்தி கொடுக்கிறோம். மாலையிலும் டீ கொடுப்போம். இதற்கான செலவை ஆசிரியர், ஆசிரியைகள் அனைவரும் பகிர்ந்து அளித்து வருகிறோம். நண்பர்கள், சமூக ஆர்வலர்களும் உதவி வருகின்றனர்.

    இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் நிச்சயம் சாதனை படைப்பார்கள் என்று நம்புகிறோம். இதற்கு வகுப்பு ஆசிரியர் சுபாஷ் சந்திரன், கணித ஆசிரியர் தேவிகா ஆகியோர் உறுதுணையாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.
    • சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    சேலம்:

    தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 16.09.2022 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    இத்திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்ய முடியும்.

    மேலும், மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல் குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல், பள்ளிகளில் மாணவ-மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக் கொள்ளுதல் மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைத்தல் உள்ளிட்டவைகள் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    சேலம் மாநகராட்சியில் காலை உணவாக உப்புமா வகைகள், கிச்சடி வகைகள் மற்றும் பொங்கல் வகைகள் உள்ளிட்டவை சுழற்சி முறையில் நாள்தோறும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சேலம் மாநகராட்சியில் மணக்காடு சமுதாயக் கூடம், இரும்பாலை மெயின் ரோட்டில் உள்ள டாக்டர்ஸ் காலணி, அம்மாப்பேட்டை வித்யா நகர், களரம்பட்டி சமுதாயக்கூடம், மணியனுர் காத்தாயம்மாள் நகர் சமுதாயக்கூடம் ஆகிய 5 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் திறம்பட செயல்படுத்திடவும், கண்காணித்திடவும் ஏதுவாக 54 பள்ளிகள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு தினசரி காலை உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதிசெய்திட துணை கலெக்டர் நிலையில் ஒருவர் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.
    • அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் வழங்கும் திட்டத்தின், 2-ம் கட்டத்தினை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

    அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறியதாவது:-

    நாமக்கல் நகராட்சியில் முதல் அமைச்சரின் காலை உணவு வழங்கும் 2-ம் கட்டத் திட்டம், சின்ன முதலைப்பட்டி, அழகுநகர், பெரியப்பட்டி, போதுப்–பட்டி, அய்யம்பாளையம், கிருஷ்ணாபுரம், பெரியூர், கருப்பட்டிபாளையம் மற்றும் நாமக்கல் ரங்கர் சன்னதி ஆகிய பகுதிகளில் உள்ள 9 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த 1,088 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

    ராமாபுரம் புதூர், முதலைப்பட்டி, கொண்டி செட்டிபட்டி, முதலைப்–பட்டிபுதூர் மற்றும் காவேட்–டிப்பட்டி பகுதிகளில் உள்ள 5 நடுநி–லைப்பள்ளிகளைச் சேர்ந்த 533 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்–படுகிறது.

    அதேபோல் திருச்செங்கோடு நகராட்–சிக்குட்பட்ட கூட்டப்–பள்ளி, மலையடி–வாரம், சீத்தா–ரம்பாளையம், சாணார்பாளையம், சூரியம்பாளையம் மற்றும் கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 6 தொடக்கப்–பள்ளிகளை சேர்ந்த 973 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 2,594 மாணவ, மாணவிகள் முதல்- அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட 2-ம் கட்டத்தில் பயன்பெறு கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, நகராட்சி கமிஷனர் சுதா, கவுன்சிலர்கள் ஈஸ்வரன், தவராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலு வலர்- மாற்றுத்தி றனாளி நலத்துறை செயலாளர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பி.புதுப்பட்டி ஊராட்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்ப டும் உணவு மற்றும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து மாணவர்களு டன் அமர்ந்து சாப்பிட்டனர்.

    பி.புதுப்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பி.புதுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பி.புதுப்பட்டி ஊராட்சி யில், துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருந்துகளின் இருப்பு குறித்தும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் மருந்துகள், வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்களின் வருகை குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மின் ரத்த அழுத்தம் கண்டறியும் கருவியில் மறுமுறை சார்ஜ் செய்யும் வசதி உள்ள மின்கலத்தை பயன்படுத்துமாறு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    காரியாபட்டி வட்டம் கம்பிக்குடி ஊராட்சி மந்திரிஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 54 குடும்பங்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில், வீடுகள் கட்டுப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும், முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

    காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் மாணவர்கள் செய்முறை தேர்வு செய்து வருவதை பார்வையிட்டு பழுதடைந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    பி.புதுப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் உயரம், எடை, குழந்தைகளின் வருகைப் பதிவேடு மற்றும் அங்குள்ள சமையலறை ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)தண்டபாணி, செயற்பொறியாளர் சக்தி முருகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முக பிரியா, சிவகுமார், வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கலெக்டர் எச்சரிக்கை
    • சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், முதல் அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகள், 8 பேரூராட்சிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் தினசரி காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    முகாலைச் சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் பள்ளி சமையல் கூடங்களில் சமையல் செய்யும் பணி தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த சமையலர் பணிக்கு தகுதியுடைய மகளிரை, சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு மூலம் தேர்வு செய்து, கிராம அளவிலான முதன்மைக் குழு, பேரூராட்சி அளவிலான முதன்மைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு பணிநியமிக்கப்பட உள்ளனர்.

    சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் 10-ந் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 3 ஆண்டுகள் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும், சமையல் செய்யும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவரின் மகன் அல்லது மகள், சம்மந்தப்பட்டபள்ளியில் 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும், சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி, பேரூராட்சியில் வசிக்க வேண்டும்.

    தகுதியான நபர்கள் அக்கிராம ஊராட்சியில் இல்லையெனில், அருகில் உள்ள கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருக்கலாம். இந்த தகுதிகளை உடையவர்கள் மட்டுமே இப்பணிக்கு தேர்வுசெய்யப்படுவர். இப்பணிமுற்றிலும் தற்காலிகமானது.

    இதில் எவ்வித கையூட்டுக்கும் இடமில்லை. பொதுமக்கள் யாரும் பணிநிரந்தம் செய்யப்படும் என நம்பி, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • 14 வகையான காலை உணவுகளை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட சமையலர்க ளுக்கு பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவ லர் சையுப்தீன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்பு சாமி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்தார்.

    தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தால் 1545 பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் பயன டைவர். இதற்காக நியமிக்கப்பட்ட சமையலருக்கு ரவா பொங்கல், கோதுமை ரவா கிச்சடி, அரிசி உப்புமா உள்ளிட்ட 14 வகையான காலை உணவுகளை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசிய தாவது:- 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை பாது காக்கும் பொருட்டு முதல மைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழக அரசு தொடங்கி வைத்தது.

    அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வரா யன்மலை வட்டத்திற் குட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 15 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 8 வட்டா ரங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சி களுக் குட்பட்ட 638 அரசுத் தொடக்கப்பள்ளியில் இத்திட்டம் செயல் படுத்தப் பட உள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் தொடக்கப் பள்ளி மாண வர்கள் ஆர்வமுடனும், ஆரோக்கிய முடனும் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத் தப்படவுள்ள பள்ளிகளில், காலை உணவு சமைத்து வழங்கும் பணி களில் ஈடுபடவுள்ள சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்த ராஜன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரெத்தின மாலா மற்றும் அரசு அலு வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார்.
    • ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், ஆயந்தூர் ஊராட்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் பொருட்டு, முன்னோட்டமாக தயாரிக்க ப்பட்ட காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார். அவர் பேசியதாவது, 

    காலை உணவு திட்டம், அறிவித்து, முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் தொடக்கி வைத்து, செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, 2-ம் கட்டமாக அனைத்து ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள 988 பள்ளிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகள் என மொத்தம் 1020 பள்ளிகளில் முன்னோட்டமாக காலை உணவு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உணவினை உண்டு சுவை மற்றும் தரத்தினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.

    • காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார்.
    • 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது,

    1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்ட ச்சத்து நிலைபாதுகாக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தினை அறிவித்து செயல்படு த்தினார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராய ன்மலை வட்டாரத்திற்குட்ப ட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 14 அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 638 அரசுப்பள்ளிகளில் வருகின்ற 25-ந்தேதி முதல் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    இத்திட்டம் விரிவுபடுத்துவதற்கான முன்னோட்டமாக தியாகது ருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் (பெண்கள்) நடத்தப்பட்டது. காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு சமைக்கப்பட்டு சரியாக நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கிட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள வேண்டு மென தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுந்தராஜன், உதவி திட்ட அலுவலர் மாதேஷ், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத்தலை வர் சங்கர், தி.மு.க. நகர செயலாளர் மலையரசன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தமிழ்நாடு முதலமைச்சரால் 25.8.2023 அன்று இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
    • குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்து வது தொடர்பான ஆலோச னைக்கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் கலெக்டர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமை ச்சரின் காலைஉணவுத்திட்டம் செயல்படுத்துவது தொட ர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் நோக்கமானது மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்க ப்படாமல் இருத்தலை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்கவும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும் மற்றும் கல்வியை தக்க வைத்துக்கொள்ளவும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை யை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறை, உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அலுவ லர்களை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட கண்கா ணிப்பு குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    வட்டார அளவில் காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் நல அலுவலர்கள், விரிவுஅலுவ லர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு மையங்களை பார்வையிட்டு வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 25.8.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 251 கிராம ஊராட்சிகளில் 797 பள்ளிகளில் பயிலும் 37,018 மாணவ, மாணவிகளுக்கும், 14 பேரூராட்சிகளில் 95 பள்ளிகளில் பயிலும் 4,555 மாணவ, மாணவிகளுக்கும், 6 நகராட்சிகளில் 59 பள்ளிகளில் பயிலும் 5,648 மாணவ,மாணவிகளுக்கும் சென்ட்ரலைசடு கிட்சன் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள 2 பேரூராட்சிகளில் 10 பள்ளிகளில் பயிலும் 784 மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் மாநகராட்சியில் உள்ள 120 பள்ளிகளில் பயிலும் 27,477 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,081 பள்ளிகளில் 75,482 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமை ச்சரின் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

    எனவே சமையலறையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) ஹேமலதா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×