என் மலர்
நீங்கள் தேடியது "broken leg"
- பிரதாப் என்கிற சுகில் (வயது 22). இவர் உறவினர் ஒருவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.
- இது குறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
சேலம்:
சேலம் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரதாப் என்கிற சுகில் (வயது 22). இவர் உறவினர் ஒருவரை கொலை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் காக்கையன் சுடுகாடு அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில போலீசார் அங்கு சென்றனர். அவர்களைப் பார்த்து பிரகாஷ் தப்பி ஓடி அங்குள்ள காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தார். அப்போது பிரகாஷ் கால் உடைந்தது. அவரை பிடித்து சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
- வழக்கம் போல பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
திருச்செந்தூர்:
வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரிலும் இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. எனினும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கம் போல் ஏராளமானவர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே திருச்செந்தூரில் இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடினர்.
அப்போது அங்கு புனித நீராடிய காரைக்குடியை சேர்ந்த சிவகாமி (வயது50), சென்னையை சேர்ந்த கீர்த்தனா (40) என்ற 2 பெண்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து 2 பேரையும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பத்திரமாக கடலுக்குள் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள அனுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 50). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியின் போது தவறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. காயம் சரியாகாததால் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி பாண்டி வேதனையுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் அங்குள்ள தோட்டத்தில் பாண்டி விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பாண்டி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாண்டி மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.