என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buffalo"

    • எருமை மாடு கிணற்றின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.
    • கயிறு கட்டி மீட்டால் எருமை மாடு உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் பத்திரமாக மீட்க முயற்சி செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் விண்டெக்ஸ், குத்தகை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (61). இவரது வீடு, தோட்டம் அதே பகுதியில் உள்ளது.

    தோட்டத்தில் 70 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. அதில் 20 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த கிணறு தடுப்பு சுவர் இல்லாத தரைமட்ட கிணறு ஆகும். இவர் தனது தோட்டத்தில் 8 மாத சினையுடன் கூடிய எருமை ஒன்று வளர்த்து வந்துள்ளார்.

    இந்த எருமை மாடு கிணற்றின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

    உடனடியாக கருப்புசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் நவீன்தரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பார்த்த பொழுது எருமை மாடு தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.

    கயிறு கட்டி மீட்டால் எருமை மாடு உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் பத்திரமாக மீட்க முயற்சி செய்தனர். அதன்படி கிரேன் வரவழைக்கப்பட்டு எருமை மாட்டை பத்திரமாக மீட்டனர்.

    மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் எருமை மாடு ஒன்று குட்டி ஈன்றுவிட்டது. இதையறிந்த மாட்டின் உரிமையாளர், கன்றுக்குட்டியை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து வீட்டுக்கு தூக்கிச்சென்றார்.
    பூந்தமல்லி :

    சென்னை போரூரை சேர்ந்தவர் பிரசாந்த் மோகன். இவர், சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் இவரது எருமை மாடு ஒன்று குட்டி ஈன்றுவிட்டது. இதையறிந்த மாட்டின் உரிமையாளர், கன்றுக்குட்டியை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து வீட்டுக்கு தூக்கிச்சென்றார்.

    இதைக்கண்ட அந்த எருமை மாடு, தனது கன்று குட்டியை பிரிய மனமின்றி உரிமையாளர் மோட்டார்சைக்கிளில் தூக்கிச்சென்ற தனது குட்டியின் பின்னால் ஓடியே சென்றது. மோட்டார்சைக்கிள் வேகமாக செல்லும் இடங்களில் வேகமாகவும், மெதுவாக செல்லும் இடங்களில் மெதுவாகவும் என சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனது கன்றுகுட்டி பின்தொடர்ந்தபடி ஓடிச்சென்ற எருமை மாட்டின் தாய் பாசத்தை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
    கொடைக்கானலில் நகரப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பெர்ன்ஹில் ரோடு பகுதியில் ஒரு குடியிருப்புக்குள் நுழைந்த காட்டெருமை அங்குள்ள புற்களை மேய்ந்ததோடு மலர்ச்செடிகளையும் மிதித்து நாசம் செய்தது. இந்த ஒரு காட்டெருமை மட்டும் அடிக்கடி இந்த பகுதியில் நுழைந்து பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல் வனத்துறையினர் இதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.கொடைக்கானல் வனப்பகுதியில் புல்வெளியை உருவாக்கி வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறாமல் செய்வதில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    துவரங்குறிச்சி அருகே காட்டெருமை மீது சொகுசு பஸ் மோதி கவிழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மணப்பாறை:

    சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று 30 பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி வனத்துறை அலுவலகம் எதிரே சென்றது. அப்போது பெரியமலை வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்தது. அப்போது வேகமாக வந்த சொகுசு பஸ் அந்த காட்டெருமை மீது மோதியது.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் அதில் பயணம் செய்த சிட்லப்பாக்கத்தை சேர்ந்த பிச்சம்மாள் (வயது 80), சென்னையை சேர்ந்த மாருதிஜென் (34), நெல்லையை சேர்ந்த சத்தியதாஸ் (54), சரத்குமார் (22), பிரசாத் (28), உஷா (46), செல்லதுரை (40), சண்முகம் (64), அனிதா (28), போஸ் (44) ஆகிய 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    மேலும் விபத்தில் சிக்கிய காட்டெருமையும் சம்பவ இடத்திலேயே இறந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை காப்பாற்றி திருச்சி, மணப்பாறை, துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத் திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    துவரங்குறிச்சியை ஒட்டியுள்ள பெரியமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் தேடி வனத்தில் இருந்து நகர பகுதிக்கு வருவதும், இது போன்ற விபத்தில் சிக்கி பலியாவதும் அடிக்கடி நடந்து வருகிறது.

    எனவே இதனை தடுக்க வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ×