என் மலர்
நீங்கள் தேடியது "Bus drivers"
- பயணிகளை மிரட்டுவது என மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
- அதிக போதை தரும் மதுபானங்களை குடித்துவிட்டு மீண்டும் வழக்கம் போல் பஸ்களை இயக்குகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவையில் இருந்து வில்லியனூர், வடமங்கலம், தென்னல், அரியூர், கண்டமங்கலம், திருவண்டார் கோவில், திருபுவனை, மடுகரை, திருக்கனூர் மற்றும் விழுப்புரம், கடலூருக்கு பல்வேறு தனியார் பஸ்கள் மற்றும் லாரிகள், கார்கள் போன்ற வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.
இந்த வாகனங்களை இயக்கும் ஒரு சில டிரைவர்கள் மது குடித்து விட்டு அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி வருகிறார்கள். மேலும் செல்போனில் பேசியவாறும் வாகனங்களை ஓட்டி வருகிறார்கள்.
புதுவை பஸ் நிலையத்திற்கு வரும் தனியார் பஸ்களில் பணியாற்றும் சில டிரைவர்கள், புதிய பஸ் நிலையம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் டீ குடிக்க செல்வது போல் சென்று அதிக போதை தரும் மதுபானங்களை குடித்துவிட்டு மீண்டும் வழக்கம் போல் பஸ்களை இயக்குகிறார்கள்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில், பொது மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வாகனத்தை இயக்கும்போது அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு தன்மை இல்லாத நிலை உள்ளது. அவர்கள் திக்திக் பயத்துடன் பயணம் செய்கிறார்கள்.
அதேபோல் மதகடிப் பட்டு, மடுகரை, திருக்கனூர், கன்னிகோவில், பாகூர், காலாப்பட்டு, லாஸ்பேட்டை பகுதிக்கு செல்லும் பஸ்களில் பணிபுரியும் கண்டக்டர்கள், டிரைவர்கள், செக்கர்கள், கிளீனர்கள், புரோக்கர்கள் என ஒரு சிலர் குடித்து விட்டு வாகனங்களை இயக்குவதும், பயணிகளை தரக்குறைவாக பேசுவது, நேரமின்மை காரணமாக டிரைவர்கள் அவர்கள் நினைக்கும் இடத்தில் நிறுத்தி பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டு செல்வது, பயணிகளை மிரட்டுவது என மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் மிகவும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.
இதனை சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் திடீரென பஸ்களை நிறுத்தி சோதனை செய்து பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், செக்கர்கள், புரோக்கர்கள் மது அருந்தி உள்ளனரா? என பரிசோதனை செய்து அதன் பின்னரே வாகனங்களை இயக்க அனுமதி தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
- பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது அந்த பஸ்சை வழிமறித்து மற்றொரு தனியார் பஸ் டிரைவர் தகராறில் ஈடுபட்டார்.
- டைமிங் பிரச்சினை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் பேசி முடிவு எடுத்து கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
பழனி:
பழனி பஸ்நிலையத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்துச்செல்வது தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பழனி பஸ்நிலையத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு 2 தனியார் பஸ்கள் காலை 7.45 மணிக்கு இயக்கப்பட்டன. பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது அந்த பஸ்சை வழிமறித்து மற்றொரு தனியார் பஸ் டிரைவர் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் திண்டுக்கல்-பழனி சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று 2 பஸ்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் 2 பஸ்களின் ஆவணங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அவர்களுக்கு ஒரே நேரத்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வழங்கியுள்ளது தெரியவந்தது. இதனைதொடர்ந்து இந்த பிரச்சினை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் பேசி முடிவு எடுத்து கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதில் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- சில பயனர்கள், முதியவரின் முயற்சியை பாராட்டி உள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவும் சில வீடியோக்கள் பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் மும்பையில் பஸ் டிரைவர்களுக்கு முதியவர் ஒருவர் பிஸ்கெட் வினியோகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
மினல் படேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், மும்பை ஹியூஸ் சாலையில் செல்லும் பஸ்களை முதியவர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். பின்னர் அவர் டிரைவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்களை வழங்குகிறார். அதனை டிரைவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளும் காட்சிகள் உள்ளது.
20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சில பயனர்கள், முதியவரின் முயற்சியை பாராட்டி உள்ளனர்.
- பேருந்து படியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
- தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கூறி உள்ளார். இதனையடுத்து அவர்கள் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து பேருந்துகளை சாலையில் நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம் நடத்தினர். பேருந்துகளை சாலையிலேயே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், படியில் நின்று கொண்டிருந்த மாணவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கண்டித்ததால் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
- அரசு பஸ் கோயம்பேடு செல்வதாக இருந்தால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் கூடுதலாக 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
- பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் பஸ்சை இயக்காத டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஏ.சி. மற்றும் ஏ.சி. வசதி அல்லாத பஸ்கள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்கள் என சுமார் 1,200 பஸ்களை இயக்கி வருகிறது.
அரசு விரைவு பஸ்களின் நேர விரயம் காரணமாக அரசு பஸ்களில் பயணிப்பதைவிட ஆம்னி பஸ்களில் பயணிக்கவே பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
உதாரணமாக நாகர்கோவிலில் இருந்து கோயம்பேட்டிற்கு ஆம்னி பஸ்கள் 11 மணி நேரத்தில் இயக்கப்படுகிறது என்றால், அரசு விரைவு பஸ்கள் நாகர்கோவிலில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு 12 மணி நேரத்தில் இயக்கப்படுகிறது. இந்த அரசு பஸ் கோயம்பேடு செல்வதாக இருந்தால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் கூடுதலாக 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
அரசு விரைவு பஸ்களை இயக்கும் டிரைவர்களே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, அந்த பஸ் டிரைவர்கள் தங்கள் கிளை மேலாளர்கள் டீசல் சிக்கனத்திற்காக பஸ்சை வேகமாக ஓட்டக்கூடாது என்று தெரிவித்து இருப்பதாக பயணிகளிடம் கூறி தங்கள் தவறுகளை சமாளிக்கின்றனர்.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
அரசு விரைவு பஸ்களை டீசல் மிச்சம் பிடிப்பதற்காக குறைவான வேகத்தில் ஓட்டுமாறு ஒருபோதும் அறிவுறுத்தவில்லை. அதே நேரத்தில் வேகமாக ஓட்டி விபத்துக்குள்ளாக்காமல் பாதுகாப்பான முறையில் இயக்கி உரிய காலத்தில் குறிப்பிட்ட இலக்கை வந்தடையும் வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என்றே டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர, அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தங்கள் பயண அனுபவம் குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கான இணைப்பு (லிங்க்) ஒன்றும் அனுப்பப்படும். அதில், பஸ்சின் காலதாமதம், சுத்தமின்மை, டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் நடைமுறைகள் குறித்து இந்த லிங்க் மூலம் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் பஸ்சை இயக்காத டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.