என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bussy Anand"

    • அரச முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
    • மாவட்ட நகர, ஒன்றிய, பகுதி, கிளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    புதுச்சேரி:

    தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில், அரச முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

    அதனை தொடர்ந்து கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு, மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் தலைமையில் புதுச்சேரி மாநில செய லாளர் சரவணன் முன்னி லையில் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கடலூர் கிழக்கு மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் மற்றும் சிதம்பரம் நகர நிர்வாகிகள் சந்தித்து சிறப்பு பூஜையின் பிரசாதம் வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் அருண்ராஜ், சிதம்பரம் நகர தலைவர் கென்னடி, மாவட்ட தொண்டரணி செயலாளர் விஜய்குரு, நகர செயலாளர் விவேக், மாவட்ட தொண்டரணி பொருளாளர் விக்னேஷ், மாவட்ட தொண்டரணி துணை தலைவர் பிரித்திவிராஜ் மாவட்ட தொண்டரணி இணை செயலாளர்கள் மணிகண்டபிரபு, பாண்டியன், நகர மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் விக்னேஷ், நகர தொண்டரணி தலைவர் அமர், நகர தொண்டரணி செயலாளர் குணா, நகர துணை அமைப்பாளர் சின்னமணி மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட நகர, ஒன்றிய, பகுதி, கிளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    • இரவு நேர பாட சாலை அமைத்து ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார்.

    அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்வது மாணவ-மாணவிகளின் கல்வியை மேம்படுத்த அவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்குவது, தளபதி பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாட சாலை அமைத்து ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்த நாளையொட்டி அவர்களது சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாளை (2-ந்தேதி) மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நமது மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

    இது மட்டுமின்றி அந்தந்த மாவட்டங்களில் நம் தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்த வேண்டும்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய, நகர தலைவர்கள், பகுதி தலைவர்கள், நிர்வாகிகளுடன் இயக்க கொடிகளுடன் சென்று சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதையும், தியாகிகளை கவுரவப்படுத்தும் புகைப்படங்களில் 2 புகைப்படங்களையும் 90039 33964 என்ற வாட்ஸ்அப் நம்பரில் அனுப்ப கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்
    • நேற்று முன்தினம் விஜய் கலந்து கொண்ட லியோ வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது

    விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று, புஸ்ஸி ஆனந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    விஜய் சினிமாவை கடந்து விரைவில் அரசியலில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஏற்றவாறு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடிகர் விஜய் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட, அனைத்து நிகழ்ச்சிகளையும் புஸ்ஸி ஆனந்த் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நேற்றுமுன்தினம் நடந்த லியோ வெற்றி விழா நிகழ்ச்சியைத்தொடர்ந்து, ஏற்பட்ட அதிக சோர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நேற்றுமுன்தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'லியோ' படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜயுடன் நடிகர்கள் அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டியன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    • பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார் புஸ்சி ஆனந்த்.
    • விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    விஜய் ரசிகர் மன்றத்தில் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் புஸ்சி ஆனந்த். இவர் புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

    விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய பொதுச்செயலாளராக விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் இயக்க பணிகளை தீவிரப்படுத்தினார். மக்கள் இயக்கத்தின் மூலம் நடைபெற்ற அன்னதானம், பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார்.

    தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' என விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதையொட்டி புதுச்சேரியில் தனது வாக்காளர் அட்டை முகவரியை வைத்திருந்த புஸ்சி ஆனந்த் கட்சி பணிகளுக்காக தற்போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    • கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது.
    • மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் துவங்கியுள்ளார். கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. ஆனால், கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது. இதை தொடர்ந்து, பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, வேலுார் தாஹீரா ஆகியோரை, விஜய் நியமித்தார்.


    இதை தொர்ந்து விபரங்கள், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன், கட்சி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, கெடுவிதித்துள்ளது. ஆட்சேபனைகள் வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் சென்னை பனையூரில் வரும் 18 ஆம் தேதி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய் பிறந்தநாளில் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டையில் தவெகவின் அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்தார்.
    • புதுக்கோட்டையின் கட்சி நிர்வாகிகளின் பெயரை அவர் படித்து காட்டினார்.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் துவங்கியுள்ளார். கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. ஆனால், கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது.

    இதை தொடர்ந்து, பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, வேலுார் தாஹீரா ஆகியோரை, விஜய் நியமித்தார்.

    இதை தொடர்ந்து விபரங்கள், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன், கட்சி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, கெடுவிதித்துள்ளது. ஆட்சேபனைகள் வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் தவெகவின் அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்தார். அப்போது, அந்நிகழ்விற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகளின் பெயரை அவர் படித்து காட்டினார்.

    அப்போது விஜய் என்ற பெயர் கொண்ட நிர்வாகிகளின் பெயரை விஜய் என சொல்லாமல் 'தளபதி பெயர் உடையவர்களே' என புஸ்ஸி ஆனந்த் படித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் பிரதான இலக்கு.
    • இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது.

    சென்னை:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் , கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

    கழகத் தலைவர், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

    எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    • தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • தவெக நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று (ஜூலை 18) தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தவெக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • படம் திரைக்கு வந்ததும் மாநாடு பற்றிய தகவல்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிர களப் பணியில் இறங்கி வருகிறார்.

    அந்த வகையில் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் போன்றவை கட்சி சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் விஜய் வழி காட்டுதலின் பேரில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரடியாக சந்தித்து கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

    மேலும் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு எதிராக தமிழக அரசின் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என அறிக்கை விட்டு விஜய் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் பேசும்போது, நீட்டுக்கு எதிராக பேசியதோடு தமிழகத்துக்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை எனவும் பேசி அதிரடி காட்டினார்.

    சமீபகாலமாக விஜய் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் கூட்டத்தை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நடத்தி கட்சி சார்பில் விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டுக்கான பணிகள் பற்றியும், பதவிகள் வழங்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் புஸ்சி ஆனந்த் பங்கேற்றார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் பற்றி அறிவிக்க வேண்டும் என்பதால் பலரிடம் நடிகர் விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். விஜய் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசியல் விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினாரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திருச்சியில் நடைபெறுவதாக இருந்த நிலையில் சேலத்தில் நடத்தலாமா? என நினைத்து அங்கு சில இடங்களை புஸ்சி ஆனந்த் பார்வையிட்டார்.

    மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் மற்றும் எவ்வளவு தொண்டர்கள் பங்கேற்கலாம் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு கட்சி தலைவர் விஜயிடம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்.

    விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் மாதம் 5-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

    படம் திரைக்கு வந்ததும் மாநாடு பற்றிய தகவல்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா என பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    இந்த நிலையில் விரைவில் 'தி கோட்' படத்தின் பாடல் வெளியீடு விழா நடைபெற இருக்கிறது. விழாவில் விஜயின் அரசியல் கலந்த அனல் பறக்கும் பேச்சை கேட்க தொண்டர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

    மாநாடு நடத்துவது பற்றி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டதில் எல்லோருக்கும் மையப் பகுதியாக திருச்சி இருப்பதால் அங்கு மாநாடு நடத்தினால் சரியாக இருக்கும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    வரலாற்று சிறப்புமிக்க அரசியல் மாநாடாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் தொண்டர்களின் கருத்துக்களையும் கேட்டு பரிசீலனை செய்து வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.
    • விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

    விழுப்புரம்:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

    இதையடுத்து கட்சி கொள்கை மற்றும் வளர்ச்சி திட்டங்களை அறிக்கை வாயிலாக வெளியிட்டார். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என அறிவித்த விஜய் அடுத்தடுத்து கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களில் களம் இறங்கினார்.

    முதற்கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் சேர்க்கப்பட்டு வருகிறது. இதுவரை கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி உள்ளது.

    அடுத்ததாக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டார். அதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22-ந்தேதி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    மாநாட்டுக்கு முன்னதாக கட்சி கொடி அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்து அலுவலகத்தில் உள்ள 40 அடி கொடி கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தார்.

    சிவப்பு, மஞ்சள் நிறத்தில் நடுவில் இரண்டு யானைகள், வாகைப் பூவுடன் வடிவமைக்கப்பட்ட கொடி பற்றிய விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து கட்சி மாநாடு பணிகளில் விஜய் தீவிரம் காட்ட தொடங்கினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.

    அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற இருந்த மாநாடு 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்ப மனு கொடுத்தார்.

    தொடர்ந்து மாநாட்டுக்கு பாதுகாப்பு தரக்கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் புஸ்சி ஆனந்த் மனு அளித்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.
    • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய விஜய் கட்சியின் புதிய கொடியை கடந்த 22-ந்தேதி சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

    சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நடுவில் 2 யானைகளுக்கு மத்தியில் வாகைப்பூ கொடியில் பொறிக்கப்பட்டு உள்ளது. கட்சி கொடி பற்றிய விளக்கத்தை அடுத்த மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் பேசுவதாக விஜய் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் எங்களுக்கு சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்துள்ளது. அந்த மனுவில், அங்கீகாரம் பெற்ற எங்கள் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியிலும் பயன்படுத்தி வருகிறோம். யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.

    இந்த நிலையில் தற்போது புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய் தனது கட்சி கொடியில் யானை உருவத்தை பயன்படுத்தி உள்ளார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் எந்த பதிலையும் விஜய் எங்களுக்கு தராமலும் நீக்குவதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்கிறார்.

    எனவே சட்டவிரோதமாக விஜய் கட்சி கொடியில் உள்ள யானை உருவத்தை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து எடுக்கப்பட்ட முடிவில், பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் வந்தால் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, "கட்சி சின்னத்தை தான் வேறொருவர் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் விதி இருக்கிறது. எங்கள் கட்சி கொடியில் யானைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது எந்த கட்சி சின்னத்துடனோ கொடியுடனோ பொருந்தாது. தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் தகுந்த விளக்கத்தை அளிப்போம்" என்றார்.

    • தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு.
    • 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்துள்ளார். இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக முதலில் திருச்சி, மதுரையில் இடங்களை பார்வையிடப்பட்டது. அங்கு இடம் கிடைப்பதில் பிரச்சனை எழுந்ததால் இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இங்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் அமைந்துள்ளது.

    இங்கு மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக மாநாட்டுத் திடலில் இருந்து உள்ளே செல்வதற்காக 3 வழிகளும் வெளியே செல்வதற்காக 3 வழிகளிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் முறையான உணவு, குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இவற்றுடன் தேவையான ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட உள்ளது.

    இதற்கான அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று கலெக்டர் அலுவலகத்திலும், மாநாடுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவத்திலும் மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள வி.சாலைக்கு நேரில் சென்றார். அங்கு அவர் மேற்கொண்டார்.

    மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி உள்ளதா? பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாநாடு நடத்த போதிய இடவசதிகள் இருக்கிறதா? என்பதை குறித்து பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன்,சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் உடனிந்தனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, `விஜய் கட்சி மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கை காவல் துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு மாநாடு நடத்த அனுமதி அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    ×