search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Causes"

    • உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது.
    • கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது.

    'பசித்து உண்' என்று பழமொழியே இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை:-

    1) நாம் சாப்பிடும் பல மருந்துகளின் பக்க விளைவுகளில் பசி குறைவது

    2) மனச்சோர்வு ஏற்படும் போது மூளையைத் தூண்டி ஒரு ஹார்மோனை சுரக்கச் செய்யும். இது பசியைக் குறைத்துவிடும்

    3)விபத்துகளில் மூளையில் பாதிப்பு, காயம் ஏற்பட்டால், உணவு மேல் நாட்டம் இருக்காது

    4) ஜலதோஷத்தின் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பசிக்காது

    5) ஒற்றைத் தலைவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு காரணமாக சாப்பிட தோன்றாது

    6) கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதத்தில் மசக்கை வாந்தியினால் உணவைப் பார்த்தாலே ஓடத்தோன்றும்

    7) ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பசி குறைவாக இருக்கும்

    8) வயிற்றுப் பிரச்சினை, வாந்தி, பேதி, வயிறு உப்புசம் போன்றவை இருந்தால் பசி சரியாக இருக்காது

    9) புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பசி குறையும்

    10) அதிக ரத்த சர்க்கரை காரணமாக ஜீரண நரம்பு பாதிக்கப்படுவதால் பசியும் செரிமானமும் குறைந்துவிடும்

    11) ரத்தச் சோகை இருப்பவர்களுக்கு உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சரியாக கிடைக்காமல் உடல் சோர்வாகி பசியும் குறைந்துவிடும்

    12) வயது ஆக ஆக உங்களது ஜீரண உறுப்புகள் வேலை செய்வதும் குறைந்துவிடும்,

    13) மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை ஜீரணத்தை மெதுவாக்கி பசியார்வத்தைக் குறைத்துவிடும்

    14) உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது

    15) கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது.

    பசி என்பது உடலில் உண்டாகும் இயற்கையான மாற்றங்களினால் ஏற்படும் ஒரு செயலாகும். பசி இல்லை என்றாலும் கூட ஓரளவாவது சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியம். நீங்கள் சாப்பிடும் உணவின் மூலம் தான் உங்களது உடலுக்குத் தேவையான கலோரி சக்தி வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் உப்பு, சர்க்கரை, புரதம், மாவுச்சத்து கொழுப்புச்சத்து முதலியவை கிடைக்கின்றன.

    ஒரு வேளை, இரண்டு வேளை பசி எடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடலாம். ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் பசியில்லாமல் இருந்தால் உடனே உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திப்பது தான் நல்லது.

    • உடல்நல பிரச்சனைகள் இருந்தால் சி பிரிவை திட்டமிடலாம்.
    • சில பெண்கள் சுகப்பிரசவத்தில் தொடங்கினாலும் சி பிரிவுக்கு மாற்றலாம்.

    சிசேரியன் பிரசவம் என்பது கர்ப்பிணியின் வயிறு மற்றும் கருப்பையை திறக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு வழி. இது சிசேரியன் முறை பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.

    சி-பிரிவு காரணங்களாக பலவற்றை சொல்லலாம். கர்ப்பகாலத்தில் சிசேரியன் என்று உறுதியாக இருந்தாலும் சிலசமயங்களில் சுகப்பிரசவமும் யோனி வழி பிரசவமும் நடக்கலாம்.

    திட்டமிடப்பட்ட சிசேரியன்

    சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தால் நீங்கள் பிரசவ தேதியையும் மருத்துவர் மூலம் அறிவீர்கள். ஐவிஎஃப் முலம் மருந்துகள் மற்றும் திரவங்களை பெறுவீர்கள். அறுவை சிகிச்சையின் போது உங்கள் சிறுநீர்ப்பை காலியாக வைக்க ஒரு வடிகுழாய் வைக்கப்படும்.

    இந்த சி பிரிவுக்கு திட்டமிடும் பெரும்பாலான பெண்களுக்கு மயக்க மருந்து ஒரு எபிட்யூரல் அல்லது ஸ்பைனல் பிளாக் இடுப்பிலிருந்து கீழே இறங்கிவிடும். இதனால் எந்த வலியையும் நீங்கள் உணரமாட்டீர்கள். இந்த வகையான மயக்க மருந்து உங்களை இன்னும் விழித்திருக்கவும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவும் உதவுகிறது.

    அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு குறுக்கே ஒரு திரை வைக்கப்படுவதால் அதை பார்க்க முடியாது. வயிற்றில் அதன் பிறகு கருப்பையில் ஒரு வெட்டு இருக்கும் என்றாலும் மயக்க மருந்து காரணமாக நீங்கள் அதை உணர மாட்டீர்கள்.

    கருப்பையில் இருந்து குழந்தையை அகற்ற மருத்துவர்கள் பணிபுரியும் போது நடுப்பகுதியை அவர்கள் தள்ளுவதையோ அல்லது இழுப்பதையோ நீங்கள் உணர முடியும். அல்லது அழுத்தமாக உணர்வீர்கள். குழந்தை பிறந்தவுடன் அழுவதை கேட்கவும், பார்க்கவும் முடியும்.

    எனினும் சிசேரியன் முடிந்ததும் மருத்துவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கலாம். அதே நேரம் எல்லா கர்ப்பிணி பெண்களும் தங்கள் குழந்தையை உடன் வைத்திருக்க முடியாது.

    சில நேரங்களில் சி – பிரிவு மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் மருத்துவரகளின் உதவி தேவைப்படலாம். குழந்தையின் நஞ்சுக்கொடியை அகற்றி தையல் போடப்படும். சிசேரியன் பிரசவம் செய்வதற்கு 1 மணி நேரம் வரை இருக்கலாம்.

    அதே நேரம் அவசரகால சிசேரியன் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சையின் வேகம் மற்றும் அவசரம் உட்பட சில வித்தியாசங்கள் இருக்கலாம். திட்டமிடப்பட்ட சி பிரிவு காட்டிலும் அவசரமாக செய்யப்படும் சி- பிரிவில் வேகம் அதிகமாக இருக்கும்.

    சிசேரியனுக்கான காரணங்கள்

    கர்ப்பிணிக்கு அல்லது குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சி பிரிவு திட்டமிடலாம்.

    ஏற்கனவே சி- பிரிவு இருந்தால் அடுத்த குழந்தையை பிரசவிப்பதும் சிசேரியனாக இருக்கலாம்.

    யோனி பிரசவத்தின் போது தாய்க்கு அல்லது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி மற்றும் செயலில் உள்ள ஹெர்ப்ஸ் போன்ற சில நோய்த்தொற்றுகளை கொடுக்கலாம்.

    கர்ப்பிணி நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற சில நிபந்தனைகள் கொண்டிருக்கும் போது மருத்துவர் சி -பிரிவு அறிவுறுத்தலாம்.

    நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கலாம். சில பிரசவங்கள் சி பிரிவை அவசியமாக்கலாம். குழந்தை மிகவும் பெரியதாக இருக்கலாம். அல்லது பிரசவத்துக்கு தவறான நிலையில் இருக்கலாம். குழந்தைக்கு சி- பிரிவு பாதுகாப்பானதாக மற்றும் பிறப்பு குறைபாடுகள் இருக்கலாம். சில பெண்கள் சுகப்பிரசவத்தில் தொடங்கினாலும் சி பிரிவுக்கு மாற்றலாம்.

    வயிற்றில் குழந்தைக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற மோசமான அறிகுறிகளை மருத்துவர் கவனிக்கலாம். ஏனெனில் பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு, கரு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதற்கான நல்ல அறிகுறியாகும்.

    பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும். சாதாரண விகிதம் நிமிடத்துக்கு 120 முதல் 160 வரை இடையில் மாறுபடும்.

    கருவின் இதயத்துடிப்பு ஏதேனும் சிக்கல் இருப்பதாக காட்டினால் மருத்துவர் உடனடி நடவடிக்கையை எடுப்பார். தாய்க்கு ஆக்சிஜனை வழங்குவது, திரவத்தை அதிகரிப்பது மற்றும் தாயின் நிலையை மாற்றுவது போன்றவை முயற்சிக்கப்படும். இதயத்துடிப்பு மேம்படவில்லை எனில் அவர் சி பிரிவு சிகிச்சைக்கு வலியுறுத்தலாம்.

    சில குழந்தைகள் பிறக்கும் போது கருவின் அசாதாரண நிலையில் இருக்கலாம். பிரசவத்தின் போது கருவின் இயல்பான நிலை தாயின் முதுகை எதிர்கொள்ளும் வகையில் தலை கீழாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கரு சரியான நிலையில் இருக்காது. இது பிறப்பு கால்வாய் அதாவது யோனி வழியாக பிரசவத்தை கடினமாக்கலாம்.

    பிரசவக்காலத்தில் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது கூட சி பிரிவு பிரசவத்தை தூண்டக் கூடும். இரட்டை குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் பிறப்பது.

    நஞ்சுக்கொடி பிரச்சனைகள், இது ப்ரீவியாவை உள்ளடக்கியது. இதில் நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கிறது. இது கருவில் இருந்து துண்டிக்கப்படும் ஒரு நிலைமை.

    • மயிர்கால்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.
    • முடி உதிர்தல் பிரச்சனையை அலட்சியம் செய்யக்கூடாது.

    * கரிசாலை இலை, நெல்லி வற்றல், அதிமதுரம் சமமாக எடுத்து அரைத்துப் பூசி பின் குளித்து வரும் பழக்கத்தை மேற்கொண்டால் முடி கொட்டுதல் நிற்கும்.

    * நிலாவரை இலையை அரைத்து முடி உதிரும் இடத்தில் தேய்க்கலாம்.

    * துவரம் பருப்பை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் அதே நீரில் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டு சிறிது நேரம் கழித்து குளித்தால் முடி கொட்டுதல் நிற்கும்.

    * சிறிய வெங்காயத்தை நன்கு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.

    * பேய்ப்புடல் சாறு எடுத்து தலையில் பூசி நன்கு ஊறிய பின் சீகைக்காய் போட்டுக் குளிக்க முடிஉதிர்தல் நிற்கும்.

    * செம்பருத்திப் பூவை நன்கு அரைத்து வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து, ஊற வைத்த பயித்தம் மாவு போட்டுக் குளிக்க முடி உதிர்தல் நிற்கும்.

    * தேங்காய்ப்பால், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கவும்.

    * பொன்னாங்கண்ணிச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் சமமாக எடுத்து நீர் வற்றக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்தல் நிற்கும்.

    * உலர்ந்த மருதாணி இலைப்பொடி 2 ஸ்பூன், எள்ளு 2 ஸ்பூன் அதிமதுரப் பொடி 2 ஸ்பூன், நெல்லி வற்றல் 2 ஸ்பூன் இவைகளைப் பால் விட்டு அரைத்து தண்ணீர் கலந்து பின் சூடாக்கி, இளஞ்சூட்டில் இறக்கித் தலையில் தேய்த்து வேர்க் கால்களில் படும்படி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க முடி உதிர்தல் நிற்கும்

    * கோழி முட்டையின் வெண்கருவில் வெங்காயத்தை நசுக்கிப் போட்டு தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.

    * மேலும் உடல் உஷ்ணம் மிகுந்தவர்கள் இரவில் நல்லெண்ணையை உள்ளங்காலில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

    சத்துக் குறைவுள்ளவர்கள் பழங்கள், கீரைகள், தாவர எண்ணைய்கள், நெய், கொட்டைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் முடி கொட்டுவது நிற்கும்.

    நாம் உண்ணும் உணவு நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு, நமது தோல் மற்றும் முடி பளபளப்பையும் பாதிக்கிறது.

    ஒருவருக்கு முடி உதிர்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல. நம்முடைய தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிர்கிறது என்றால், நம் உடலில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதற்கான முதல்கட்ட அறிகுறியே முடி உதிர்தல். அதை நாம் எப்போதும் அலட்சியம் செய்யக்கூடாது.

    ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல தான் தலைமுடிக்கு மயிர்கால்கள். உங்களுக்கு நீண்ட வலிமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் மயிர்கால்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.

    உங்களுடைய மயிர்கால்கள் வலுவிழந்து காணப்பட்டால் அது உங்களின் தலைமுடி வளர்ச்சியை பாதிக்கலாம். உங்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்துவதற்கு உங்களுடைய முடி பராமரிப்பு புராடக்டுகளில் அதிக கெமிக்கல்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

    தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ள உணவுகள் எடுக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து, வைட்டமின் சி, பி, இ போன்றவை இருக்கும்படியும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

    பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் பல்வேறு விதமான அடிப்படையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இவற்றை நாள்தோறும் கையளவு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மட்டுமல்ல, தலை முடிக்கு பலம் சேர்க்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    நீங்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிக்களை ஒதுக்கிவைத்துவிட்டு அதற்கு மாற்றாக மேற்கூறிய ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும்.

    • தலைமுடி அழகை மட்டும் தருவதில்லை. உடலுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
    • ஊட்டச்சத்து குறைவினாலும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது.

    உடலின் உச்சிப் பகுதியை ஆக்கிரமித்துள்ளவை ரோமங்களே. அதை தலைமுடி என்றும், கேசம் என்றும், கூந்தல் என்றும் அழைக்கின்றோம். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும், பளபளப்புடனும் இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஆண்களை விட பெண்களே கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள அதிக நேரத்தை செலவிடுகின்றனர். மேலும் கேசத்தைப் பராமரிக்க ஒரு தொகையையே செலவு செய்கின்றனர்.

    தலைமுடி அழகை மட்டும் தருவதில்லை. தலைக்குப் பாதுகாப்பையும், சீதோஷ்ண நிலையை சமப்படுத்தி உடலுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது. சித்தர்கள். முனிவர்கள், ரிஷிகள், ஜடாமுடியுடன் காட்சி தருவதற்குக் காரணம் இதுவே ஆகும்.

    பிறவியிலேயே எல்லோருக்கும் ஆரோக்கியமான கூந்தல் இருக்கிறது. ஆனால் கவலைப்படுவதாலும், கூந்தலை பாதுகாக்காததாலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது.

    நாம் தலை வாரும்போது சீப்பில் சில முடிகள் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதை அருவருக்கத்தக்க அன்னிய பொருளாகத் தூக்கி எறிந்து விடுகிறோம். உதிர்ந்த முடிகளுக்கு புதிய முடிகள் அதே இடத்தில் முளைத்து விடுவது இயற்கை. சில சமயம் இயற்கை தன்மைக்கு மாறுபட்டு தலைமுடி வேரோடு கொட்டுவதையே முடி கொட்டுதல் என்கிறோம்.

    முடி கொட்டுதலுக்கான காரணங்கள்:

    மனச்சோர்வு, தூக்கமின்மை, மற்றும் நீண்ட நாள் நோய் காரணமாக முடி கொட்டுதல் ஏற்படும். மேலும் ஊட்டச் சத்தின்மையாலும், அதிக சூடான நீரில் குளிப்பதாலும், குளித்த பின் தலையை நன்கு உலர விடாத காரணத்தாலும் முடி கொட்டுதல் ஏற்படும்.

    பெண்களின் உடலில் சுரக்கும் பெண்மை ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன், ஆண்களுக்கு ஆண்மையை வெளிப்படுத்தும் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களும் முடி கொட்டுதலை ஏற்படுத்தும்.

    தலையில் ஏற்படும் பொடுகு, தோல் நோய்கள், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ரத்த சோகை, ஒத்துவராத மருந்துகள், ரசாயனக் கலப்புள்ள ஹேர் ஆயில், ஷாம்பு ஆகியவற்றினாலும் முடி கொட்டுதல் ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு உப்புத் தண்ணீரில் குளிப்பதாலும், மலச்சிக்கல் ஏற்படுவதாலும், உடல் உஷ்ணத்தாலும் முடி கொட்டுதல் ஏற்படும்.

    • சரியாக சுத்தம் செய்யாவிட்டால் கெட்ட நாற்றத்தை உண்டாக்கிவிடும்.
    • வாய் துர்நாற்றம் உடலில் வேறு ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

    ஹேலிடோஸிஸ்' என்று மருத்துவ மொழியில் சொல்லப்படும் வாய் துர்நாற்றம், வாய் ஆரோக்கியம், பராமரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையினால் தான் ஏற்படுகிறது. வாய் துர்நாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பது தான், இந்த பிரச்சினைக்கான சிகிச்சையின் ஆரம்பமாகும்.

     காரணங்கள்:

    1) வெங்காயம், பூண்டு போன்ற சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிட்டவுடன், அவை ஜீரணமாகி ரத்தத்தில் கலக்கின்றன. இந்த உணவுப் பொருட்கள் வயிற்றில் இருக்கின்ற காலம் வரை, இந்த உணவுகளின் நாற்றம் சுவாசம் வழியாக வந்து கொண்டேதான் இருக்கும்.

    2) வாய் மற்றும் பற்கள் பராமரிப்பு இல்லாமை, சாப்பிட்ட பின்னர் பல் துலக்காமல், வாயை கொப்பளிக்காமல் இருப்பது, அவ்வப்பொழுது பல் டாக்டரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவைகளும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

    3) செயற்கை பல் செட் மாட்டி இருப்பவர்கள் சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அதில் கிருமிகள் சேர்ந்து கெட்ட நாற்றத்தை உண்டாக்கிவிடும்.

    4) வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கெட்ட கிருமி, நாக்கில் சேருவது, ஈறுகளில் சீழ்பிடித்து, வீங்கி நோய் ஏற்பட்டால், வாய் நாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.

    5) வாய் உலர்ந்து போதல், இதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாகும். மூக்கின் வழியாக சுவாசிக்காமல், வாயைத் திறந்து வைத்துக் கொண்டு வாய் வழியாக சுவாசிப்பது இவைகளினால் ஏற்படலாம்.

    6) சிகரெட், சுருட்டு, பீடி, மூக்குப்பொடி முதலியவைகளை உபயோகிப்பவர்களுக்கு பற்களில் கறை படிந்து நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். நெஞ்சில், மூக்கில், சுவாசக்குழாயில் நாள்பட்ட சளி, சைனஸ் நோய் இருப்பவர்களுக்கும், ஜீரண மண்டல பிரச்சினை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

    சிகிச்சை என்ன?

    பற்கள், வாய், ஈறு, பற்காறை, பல்லில் கறை முதலிய பிரச்சினைகளினால் வாய் நாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தால், பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

    சாப்பிட்ட பிறகு பற்களை துலக்குவது மற்றும் வாய் கொப்பளிப்பது, நாக்கை சுத்தம் செய்வது நல்லது. தினமும் இருமுறை பல் துலக்கினால் கெட்ட பாக்டீரியாக்கள் சேர வாய்ப்பு இருக்காது. பல்செட் போட்டிருப்பவர்கள், அதை கழற்றி நன்றாகக் கழுவிய பின்னர் மறுபடியும் உபயோகியுங்கள்.

    சிகரெட் பழக்கத்தை நிறுத்துங்கள். வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்கிறமாதிரி உள்ள புளிப்பு உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கேரட், ஆப்பிள் போன்றவைகளை கடித்து, மென்று சாப்பிடுங்கள்.

    தினமும் சிறிதளவு பச்சை புதினாக் கீரை, பச்சை கொத்தமல்லி தழை, மாதுளை விதையை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் குறையும்.

    நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாகி வாய் துர்நாற்றத்தை உண்டுபண்ணலாம்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிதளவு கிராம்பு, சீரகம், ஏலக்காய் இவைகளில் ஏதாவது ஒன்றினை வாயில் போட்டு மென்று கொண்டே இருக்கலாம்.

    மேலும் வாய் துர்நாற்றம் உடலில் வேறு ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

    • குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள்.
    • மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது.

    மலச்சிக்கல் என்பது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. பிறந்த குழந்தைகளுக்கு கூட வரலாம். குழந்தைகளின் அழுகை, மலம் கழிக்கும் போது அலறல் மற்றும் முக மாற்றம் போன்ற அறிகுறிகளோடு மலச்சிக்கலை பெற்றோர்கள் அறியலாம்.

    பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகள் தாய்ப்பால் மட்டும் குடிப்பவர்களாக இருந்தால் அவர்கள் மலம் கழித்தல் என்பது தாய்ப்பாலுக்கு பிறகு இருக்கும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை. சில நேரங்களில் பிறந்த உடன் 5 முதல் 7 வரை இருக்கலாம். இது இயல்பானது.

    குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள் அல்லது தாமதமாகலாம். எனினும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்குமான மலச்சிக்கலின் அறிகுறிகள் மாறுபடும். சில நாட்கள் வரை குழந்தைகள் மலம் கழிக்காமல் இருக்கலாம்.

    அறிகுறிகள்:

    * மலம் வெளியேற்றும் போது குழந்தை சிவந்த முகத்துடன் 10 நிமிடங்களுக்கு மேல் கஷ்டப்படலாம். இது மலம் கழிப்பதில் சிரமத்தை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது குழந்தை குழப்பமடையலாம். இது வலியுடன் இருப்பதை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது. வாயு வெளியேற்றம் கடினமாக இருப்பது.

    * மலம் வெளியேறாமல் ஆசனவாய் வாய்பகுதியில் நீண்ட நேரம் இருப்பது.

    * குழந்தையின் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியதாகவும் தொடுவதற்கு கடினமாகவும் இருக்கலாம்.

    * கடுமையான மலச்சிக்கல் என்கோபிரெசிஸை ஏற்படுத்தலாம் இது குழந்தையின் டயபர் அல்லது உள்ளாடைக்குள் ஒரு சிறிய அளவு திரவ மலம் தன்னிச்சையாக கசிவை உண்டாக்கலாம்.

    * கடுமையான சந்தர்ப்பங்களில் குழந்தை நகரும் போது மலத்தில் ரத்தப்போக்கு உண்டாகலாம். குழந்தை மலத்தை வெளியேற்ற சிரமப்படலாம். மலம் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் தொடர்ந்து இருந்தால் மலச்சிக்கல் இருக்கலாம்.

    மலச்சிக்கல் உண்டாக காரணம்:

    * குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் அரிதாக கடினமான மலத்தை கவனிக்கலாம்.

    * தண்ணீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

    * திட உணவில் குறைந்த நார்ச்சத்து இருப்பதால் மலத்தை கடினப்படுத்தலாம்.

    * மலச்சிக்கல் உண்டாவது இரைப்பை குடல் நோய்த்தொற்றின் விளைவாக இருக்கலாம்.

    ×