என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chembarambakkam Lake"

    • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஏரிகளிலும் 9.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.
    • சென்னையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொடர்ந்து எடுக்கப்படுவதால் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்துள்ளது.

    சென்னை:

    புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி. ஆகும்.

    தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 2.71 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. புழல் ஏரியில் 2.51 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் 0.78 டி.எம்.சி. தண்ணீரும், சோழவரம் ஏரியில் 0.18 டி.எம்.சி. தண்ணீரும், தேர்வாய் கண்டிகை ஏரியில் 0.50 டி.எம்.சி. தண்ணீரும் இருப்பில் உள்ளது.

    5 ஏரிகளிலும் மொத்தம் 6.68 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த நீரை வைத்து சென்னையின் குடிநீர் தேவையை 6 மாதங்கள் பூர்த்தி செய்ய முடியும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஏரிகளிலும் 9.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.

    தற்போது கடந்த ஆண்டை விட 2.82 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக உள்ளது. மேலும் சென்னையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொடர்ந்து எடுக்கப்படுவதால் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி இந்த 5 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். அதன் மூலம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஷர்ட்டர்கள், மதகுகள், மின் மோட்டார்கள் அனைத்தும் பராமரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
    • தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் புதிதாக வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    குன்றத்தூர்:

    பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கும். அவ்வாறு ஏரியில் நீர் நிரம்பும் நிலையில் உபரி நீர் திறப்பது வழக்கம் இதனால் கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஷர்ட்டர்கள், மதகுகள், மின் மோட்டார்கள் அனைத்தும் பராமரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு புதிதாக வண்ணம் பூசி புதுப்பிக்கும் பனி நடந்து வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மற்றும் 19 கண் மதகுகள், நீர் வெளியேற்றும் ஷர்ட்டர்கள், மின் மோட்டார்கள், ஏரி கரையின் சுவர்கள் போன்றவற்றில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

    வண்ணம் பூசும் பணி முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் புதிதாக வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிக்காக மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மதகுகளின் ஷர்ட்டர்கள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டால் நேரடியாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் கால்வாய்களும் ஆங்காங்கே தூர் வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.29 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 675 மில்லியன் கன அடியாகவும், சென்னை குடி நீருக்காக தினமும் 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்தாலும் 23 அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியின் அளவை வைத்து கண்காணித்து அதன் பிறகு உபரி நீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் புதிய வண்ணங்கள் பூசி புதுப்பொலிவுடன் உபரி நீரை வெளியேற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புழல் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 391 கன அடியாக குறைந்து உள்ளது.
    • பலத்த மழை இல்லாவிட்டால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த 2 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நேற்று மாலை உபரி நீர் திறக்கப்பட்டது.

    முதலில் 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் 2 ஏரிக ளிலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி புழல் ஏரியில் இருந்து 292 கன அடி தண்ணிர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 198 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.

    புழல் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 391 கன அடியாக குறைந்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,726 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 21.20 அடி நீர்மட்டத்தில் 18.58 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1180 கன அடியாக இருந்த நீர்வரத்து 811 கன அடியாக குறைந்து இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,817 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரியின் 24 அடி நீர்மட்டத்தில் 20.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    தொடர்ந்து பலத்த மழை இல்லாவிட்டால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். உபரி நீர் வெளியேறும் கரையோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பூந்தமல்லி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்தது.

    புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது.

    இதையடுத்து ஏரியில் இருந்து உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல் கட்டமாக 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.

    தொடர்ந்து நீர்வந்து கொண்டிருப்பதாலும் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பதை 500 கன அடியாக அதிகரிக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 10 மணிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21.3 அடியாகவும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2862 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.

    ஏரிக்கு நீர்வரத்து 400 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    • சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    • செம்பரம்பாக்கம் வரத்து 400 கன அடி, திறப்பு 261 கன அடி மற்றும் வீராணம் வரத்து 201 கன அடியும், திறப்பு 483 கன அடியுமாக உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளின் (நீர்த்தேக்கங்கள்) மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன அடி (224.297 டி.எம்.சி.) ஆகும். தற்போது, வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில், அனைத்து நீர்த்தேக்கங்களிலும் 1 லட்சத்து 93 ஆயிரத்து 393 மில்லியன் கன அடி (193.393 டி.எம்.சி.) அதாவது 85.40 சதவீதம் இருப்பு உள்ளது.

    தமிழகத்தில் உள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வேலூர் ஆண்டியப்பனூர் ஓடை, மோர்த்தானா, தர்மபுரியில் நாகாவதி, கிருஷ்ணகிரியின் சூளகிரி சின்னாறு, திண்டுக்கல் சிறுமலையாறு ஓடை, வர்தமா நதி, மதுரை சாத்தையாறு, தேனி சண்முகாநதி, சோத்துப்பாறை, விருதுநகரின் சாஸ்தா கோவில், கோவை த.நா.சோலையாறு, ஈரோடு குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம், சேலம் மேட்டூர் ஆகிய நீர்த்தேக்கங்கள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன.

    சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதில் பூண்டி ஏரிக்கு வரத்து 650 கன அடியும், திறப்பு 53 கன அடியுமாக இருக்கிறது. இதேபோல் சோழவரம் வரத்து 177 கன அடி, திறப்பு 3 கன அடி, புழல் வரத்து 373 கன அடி, திறப்பு 292 கன அடியாக இருக்கிறது.

    செம்பரம்பாக்கம் வரத்து 400 கன அடி, திறப்பு 261 கன அடி மற்றும் வீராணம் வரத்து 201 கன அடியும், திறப்பு 483 கன அடியுமாக உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் முழுவதும் நிரம்பி உள்ளதால் வரும் 120 கன அடி நீர் முழுவதும் திறந்துவிடப்படுகிறது.

    இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவான 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.), தற்போது 8 ஆயிரத்து 384 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அனைத்து நீர் நிலைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    மேற்கண்ட தகவல்களை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

    • கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது.
    • புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் உள்ளன. கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த 2 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்ததால் 2 ஏரிகளில் இருந்தும் 100 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,730 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. நேற்று 84 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 141 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.

    ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 21 அடியில் 18.60 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 292 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 2,668 மி.கன அடி தண்ணீர் உள்ளன. நேற்று 33 கன அடி ஆக இருந்த நீர்வரத்து தற்போது 219 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 20.26 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    ஏரியில் இருந்து 70 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வரும் நாட்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில், தற்போது 20.15 அடி தண்ணீர் உள்ளது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    பூந்தமல்லி:

    சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில், தற்போது 20.15 அடி தண்ணீர் உள்ளது. நீர் வரத்து 1510 கன அடியும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும் உள்ளது.

    மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2641 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இதனால் மழையின் அளவையும், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தையும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் கணக்கீடு செய்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
    • ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பி வருகிறது.

    இதனால், ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியில் இருந்த உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

    ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் கூடுதலாக உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இதில் 2503 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
    • சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 108 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகளில் நீர் இருப்பு தொடர்த்து உயர்ந்து வருகிறது.

    பூண்டி ஏரியின் நீர்மட்டம் 2 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி ஆகும். இன்றைய நிலவரப்படி 2,023 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக 450 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக சோழவரம் மற்றும் சென்னைக்கு 53 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இதில் 2503 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 227 கன அடி‌ நீர் வந்து கொண்டிருக்கிறது. 192 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி ஆகும். 457 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக 257 கன‌ அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. இதில் இன்றைய நிலவரப்படி 2484 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 139 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் 139 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 108 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கண்ணன்கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடி நிரம்பி வழிகிறது.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த மாதத்தில் பலத்த மழை கொட்டியபோது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
    • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கன அடி வீதம் பேபி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்ப ரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 26-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 410 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் சிறப்பு பூஜை நடத்தி தண்ணீரை கால்வாயில் திறந்து விட்டனர். வினாடிக்கு 255 கனஅடி வீதம் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி ஆகும். இன்று காலை நிலவரப்படி 19. 39 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும். தற்போது 2.455 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    போதுமான தண்ணீர் இருக்கும் நிலையில் தற்போது பூண்டி ஏரியின் தண்ணீரும் வந்து கொண்டு இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த மாதத்தில் பலத்த மழை கொட்டியபோது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 32.49 அடியாக பதிவானது. 2.376 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 410 கன அடியும், மழை நீர் வினாடிக்கு 170 கன அடியும் வருகிறது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கன அடி வீதம் பேபி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையில் அதிகஅளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தொடர்ந்து இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3,645 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
    • இன்று காலை நிலவரப்படி ஏரியில் 3028 மி.கன அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடு..கிடு...வென உயர்ந்து வருகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி உள்ளது. (மொத்த உயரம் 24 அடி).

    செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3,645 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 3028 மி.கன அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 சதவீதம் ஆகும்.

    ஏரிக்கு 2,134 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியில் இருந்து 234 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இன்றும் பலத்த மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக உபரி நீரை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தொடர்ந்து மழை இல்லாததால் கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

    ஏரியில் 22 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்து உள்ளனர். இதன் பின்னர் கனமழை இருந்தால் மட்டும் உபரி நீர் திறக்கப்படும் என்று தெரிகிறது.

    கடந்த ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் 23 கன அடி வரை தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 22.31 அடிக்கு தண்ணீர் உள்ளது.
    • மீண்டும் கனமழை பெய்தால் மட்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் மீண்டும் அதிகரிக்கப்படும்.

    பூந்தமல்லி:

    சென்னை மற்றும் புறநகர் நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 22 அடியை தாண்டியது.

    இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று 3 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனால் அடையாறு ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று பலத்த மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இன்று காலை நிலவரப்படி முதலில் ஏரிக்கு 3382 கனஅடி தண்ணீர் வந்தது. பின்னர் நீரின் அளவு படிப்படியாக குறைய தொடங்கியது.

    இதையடுத்து இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியின் உத்தரவுப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம்24 அடி. இதில் தற்போது 22.31 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3200 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இதே அளவு தண்ணீரை தொடர்ந்து தேக்கி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். வரும் நாட்களில் பலத்த மழை இருந்தால் மட்டும் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பலத்த மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைக்கப்பட்டது. மீண்டும் கனமழை பெய்தால் மட்டும் உபரி நீர் மீண்டும் அதிகரிக்கப்படும்.

    கோடைக்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது என்றனர்.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    ×