என் மலர்
நீங்கள் தேடியது "Christians"
- இறந்தவர்களின் ஆத்துமா கர்த்தரிடத்தில் இளைப் பாறுகின்றது.
- மரித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்
திருப்பூர் :
சகல ஆத்துமாக்கள் தினத்தை கிறிஸ்தவர்கள் இன்று கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். இறந்தவர்களின் ஆத்துமா கர்த்தரிடத்தில் இளைப் பாறுகின்றது.அடிப்படை யில் அவர்களை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.மரித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்.
திருப்பூரில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு கிறிஸ்தவர்கள் காலையில் இருந்து குடும்பம் குடும்ப மாக வரத் தொடங்கினார் கள்.கார்களிலும், இரு சக்கர வாகனத்திலும் மாலை மற்றும் மலர்களை வாங்கி எடுத்து வந்தனர். இன்று மாலை 3 மணிக்கு பிறகு கூட்டம் அதிகரிக்கும். ஆயிரக்கணக்கான கிறிஸ்த வர்கள் கல்லறை களின் முன்பு சிறிது நேரம் மவுனமாக இருந்து ஜெபித்து சென்றனர். சிறு வர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக வந்தனர்.அனைத்து திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவர்களும் தங்களது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களை நினைவு கூர்ந்து ஜெபத் துடன் வழி பட்டனர்.ஒரு சில கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
- சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கலெக்டரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. சபை போதகர். இவர் அதே பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியார்பாளையம் பகுதியில் இடம் வாங்கி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியபோது, ஒருசிலர் சபை கட்டுமான பணி நடந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டுமான பணிகளை தடுத்ததுடன், அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.
இதுதொடர்பாக போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்டரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார். இந்த நிலையில் சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்தும், கிறிஸ்தவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் செயல்களை கண்டித்தும் பெத்தேல் ஏ.ஜி. சபை போதகர் அருண் அந்தோணி தலைமையில் சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோரும், அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- புதுப்புது வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
- கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் இயேசு கிறிஸ்து மண்ணுலகில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கிவிடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் நீங்கியிருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு இன்றும் 22 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக வீடுகள்தோறும் வர்ணஜாலங்கள் காட்டும் வண்ண, வண்ண ஸ்டார்களால் தோரணங்கள் அமைக்கும் பணிகளிலும், இயேசுவின் பிறப்பை விளக்கும் வகையிலான குடில்கள் அமைக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கிறிஸ்தவ ஆலயங்கள், அமைப்புகள் சார்பில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் சென்று பஜனை பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பஜனை பாடல்களைப் பொறுத்தவரையில் சில பகுதிகளில் ஊர்வலமாகச் சென்றும், சில பகுதிகளில் வாகனங்களில் சென்றும் பாடி வருகிறார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடைவீதிகளில் பல வண்ணங்களில், புதுப்புது வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்டார் விற்பனை செய்யும் கடைகளில் ஸ்டார்கள் தோரணங்களாக தொங்க விடப்பட்டுள்ளன. இதேபோல் குடில்களில் வைக்கப்படும் சொரூபங்களும் பல வடிவங்களில் விற்பனைக்காக வைத்துள்ளனர். எனவே கிறிஸ்துமஸ் பண்டிகை இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது என்று கூறலாம்.
இன்னும் சில தினங்கள் கழித்து கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாகச் சென்று ஜவுளிக்கடைகளில் புத்தாடைகள் வாங்குவதிலும், பேக்கரிகளில் கேக் மற்றும் இனிப்பு வகைகளுக்கு ஆர்டர் கொடுப்பதிலும் ஈடுபடுவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும், அதைத்தொடர்ந்து வரக்கூடிய புத்தாண்டு பண்டிகையையும் வரவேற்க தயாராகி விட்டார்கள்.
- கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
- கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வடக்கு வீதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புனித பாத்திமா அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டனர். முன்னதாக சிலுவை ஆலயத்திற்குள் எடுத்துவரப்பட்டு தூபம் காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்களுக்கு அருட்தந்தை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ஆலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரையில் அமர்ந்து பலர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
மேலும் சரியாக 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஆலயமணி ஒலித்தது.அதனைத் தொடர்ந்து திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் திருவாரூர் நகரத்தின் முக்கிய வீதிகளான தெற்கு வீதி வடக்கு வீதி கீழ வீதி உள்ளிட்ட இடங்களில் தடுப்புகளை வைத்து இருசக்கர வாகனங்களை அனுமதிக்காமல் தடை செய்தனர்.
சிலர் வீட்டு வாசலில் வைத்து கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ங்களை சோதனைக்கு பிறகே நகரத்திற்குள் அனுமதித்தனர்.
- தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது.
- 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.
திருப்பூர் :
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருவிழாவை யொட்டி கடை பிடிக்கப்படும் தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. ஏசு கிறிஸ்து சிலுவை யில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்தார் என்ற நம்பிக்கை தான் கிறிஸ்தவம். இதை நினைவு கூறும் வகையில் தான் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.கடந்த பிப்ரவரி 21-ந்தேதி சாம்பல் புதனுடன், தவ க்காலம் துவங்கியது. தினமும் தேவலாயங்களில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் தியானிக்கப்பட்டு வருகின்றன.வெள்ளி தோறும் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப் படுகிறது.
பக்தர்களை ஆன்மிக பாதையில் வழி நடத்தும் வகையில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ.., உள்ளிட்ட அனைத்து தேவாலயங்க ளிலும், சிறப்பு நற் செய்தி கூட்டங்கள் நடத் தப்பட்டன. இந்த தவக்கா லத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. இதையொட்டி தேவாலய ங்களில் குருத்தோ லை பவனி நடத்தப்பட்டன. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்க ளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக, வருகிற 6-ந் தேதி புனித வியாழன், 7ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப் படுகிறது. 9-ந் தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப் படுகிறது.
- மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர்.
- ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.
திருப்பூர் :
ஏசு சிலுவையில் அறையுண்டு இறந்த நிகழ்வை புனித வெள்ளியன்று நினைவு கூர்ந்த நிலையில் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி இன்று ஈஸ்டர் பெருநாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.
இதையொட்டி திருப்பூர் புனித ஜோசப், கேத்ரீன், அவிநாசி புனித தாமஸ், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம் உட்பட அனைத்து ஆலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆலயங்களில் நேற்று நள்ளிரவு 12மணிக்கு ஈஸ்டர் திருப்பலி நடத்தப்பட்டது. திருப்பலியில் மெழுகுவர்த்தி கையில் ஏந்தி, தீமையின் சக்தி தலைதூக்க கூடாது என்ற வேண்டுதலை பக்தர்கள் முன்வைத்தனர்.
இது குறித்து பங்குதந்தைகள் கூறுகையில், கடந்த பிப்ரவரி 22-ந்தேதியில் இருந்து துவங்கிய தவக்காலத்தில் பல்வேறு தவ முயற்சிகளை பக்தர்கள் மேற்கொண்டனர்.அசைவ உணவு தவிர்ப்பது, தேவையற்ற செலவினங்களை தவிர்ப்பது, மது, புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை தவிர்ப்பது, எளிய வாழ்க்கை வாழ்வது, அனைவரிடத்திலும் அன்பு காட்டுவது, பகைவனையும் நேசிப்பது என, ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.செலவினங்களை தவிர்த்த சேமிப்பின் மூலம் கிடைத்த தொகையை ஏழைகளுக்கு வழங்கினர். இந்த பண்புகளை வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும்.பாவத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக மனிதாக மண்ணில் வாழ்ந்த ஏசு, சாவை வென்றார். நம் வாழ்க்கையிலும் நீதி, சமத்துவம், மனித நேயம் உயிர்ப்பெற வேண்டும் என்பதைதான் ஈஸ்டர் பெருநாள் உணர்த்துகிறது என்றனர். திருப்பூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, பல்லடம் , காங்கயம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று காலை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஆலயங்கள் அனைத்தும் களை கட்டின.
- புதுவை காங்கிரஸ் வலியுறுத்தல்
- மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறை வேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அரசியல் சாசனத்தின் சட்டப்படி அளிக்கப்படுகின்ற, உதவிகள், உரிமைகள், பாதுகாப்புகள், மற்றும் இட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ள அட்டவணை இனத்தில் இருந்த தலித் கிறிஸ்தவ மக்களுக்கும் கிடைக்க வழி செய்யும் ஒரு அரசியல் திருத்த சட்டத்தை நிறைவேற்றி தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
இதேபோல புதுவை சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அனுப்ப வேண்டும். தலித் அல்லது ஆதிதிராவிட அட்டவணை ஜாதியில் இருந்த மக்கள், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்பும் அவர்களது சமூக மற்றும் பொருளாதார நிலை அப்படியே உள்ளது. இந்து மதத்தில் இருந்து மாறிய கிறிஸ்தவ மக்களையும் தீண்டாமை எண்ணத்தோடுதான் பார்க்கின்றனர். கிறிஸ்தவ மதத்தில் தீண்டாமை இல்லை என்பதை காரணம் காண்பி த்து அவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படக்கூடாது. இட ஒதுக்கீடுகளே இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பொருளாதார அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கொடுக்க முன்வந்தால், இந்த தலித் கிறிஸ்தவர்கள் நிச்சயமாக அதிக ஒதுக்கீடு பெறுவார்கள்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித் ஆதிதிராவிட மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைகளுக்கு ஏற்ப, பூர்வீக இந்தியர்களா கிய இவர்களுக்கும் உதவு வதுதான் மனித நேயமாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கல்லறைக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- குடும்பத்தில் இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு அவர்களுக்கென்று தனியாக எந்த இடமும் சுற்றுவட்டார பகுதிகளில் இல்லை.
புதுச்சேரி:
உழவர்கரை, மூலக்குளம், எம்.ஜி.ஆர் நகர், பிச்சாவீராம்பட்டு, தக்ககுட்டை, அரும்பார்த்தபுரம், ஒதியம்பட்டு, ஜெ.ஜெ. நகரை சுற்றியுள்ள இடங்களில் கிறிஸ்தவ சமுதாய பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு அவர்களுக்கென்று தனியாக எந்த இடமும் சுற்றுவட்டார பகுதிகளில் இல்லை.
தக்ககுட்டை என்கிற இடத்திற்கு பின்புறம் ஒரு இடம் உள்ளதை அறிந்த அவர்கள் இது குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் அவர்கள் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கல்லறைக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரையை மனுவின் வாயிலாக கோரிக்கை வைத்தார்.
அவருடன் சிவசங்கர் எம்.எல்.ஏ, அந்தோணி தாஸ், ஜோசப், எட்வின், மணிகண்டன், டேவிட், செல்வகுமார் ஆகியோர் சென்றனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கு சிறுபான்மையினர் வாழ்ந்து வருகிறோம்
- சுய லாபத்துக்காக சிறுபான்மையினர்கள் மீது வேண்டும் என்றே பிரச்சினை செய்து வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தின் நிறுவனர் சரவணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கு சிறுபான்மையினர் வாழ்ந்து வருகிறோம்.இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே தங்களது சுய லாபத்துக்காக சிறுபான்மையினர்கள் மீது வேண்டும் என்றே பிரச்சினை செய்து வருகின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் புகுந்து மதபோதகர்களைத் தாக்குவது, ஜெபவீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், பொருள்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் பல சபை வழிபாடுகளுக்காக கட்டடம் கட்டவும், வழிபாடு நடத்தவும் அனுமதி கோரி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுக்கள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் வீடு கட்டுவதற்காக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் அனுமதி கேட்டால் வழிபாடு நடத்தமாட்டேன் என்று எழுதிக்கேட்கிறார்கள்.
ஆகவே கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எங்களது வழிபாட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
- ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
- சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி:
மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டி ஆறுமுகநேரியில் கிறிஸ்தவர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தின் சார்பில் நடந்த இந்த ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஊர் தலைவர் செல்வன் முன்னிலை வகித்தார். சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கத்தோலிக்க கோவில் தெரு மேட்டுவிளை, மேல தெரு உள்பட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் மடத்துவிளை பங்குமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
- வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
- மணிப்பூர் மாநில மக்களின் துயர் நீங்க அருள்நிறை ஆலயத்தில் திருப்பலி நிறை வேற்றப்பட்டது.
புதுச்சேரி:
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
இதனை வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தல பங்குத் தந்தை ஆல்பர்ட் துவக்கி வைத்தார். லூர்தன்னை பள்ளி தலைமையாசிரியர் ஆல்வின் அன்பரசு முன்னிலை வகித்தார். மாதா கோவில் வீதி, ஒதியம்பட்டு சாலை வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற வர்கள், மணிப்பூர் மாநில கிறிஸ்தவர்களின் துயர் நீங்கி, அங்கு அமைதி நிலவிட வேண்டுமென மெழுகுதிரி ஏந்தி செபமாலை செபித்தனர்.
இதன்பின்னர் மாதா திருக்குளத்தை சுற்றி ஊர்வலம் முடிவடைந்த பின்னர் ஆலய முற்றத்தில் பங்குத்தந்தை ஆல்பர்ட் தலைமையில் மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக மணிப்பூர் மாநில மக்களின் துயர் நீங்க அருள்நிறை ஆலயத்தில் திருப்பலி நிறை வேற்றப்பட்டது.
- பாலர் ஞாயிறு பண்டிகை நாளில் தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெறுவது வழக்கம்.
- முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.
நெல்லை:
சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் ஆண்டுதோறும் பாலர் ஞாயிறு பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நாளில் தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெறுவது வழக்கம். மேலும், ஆராதனையின் வேதபாட வாசிப்பு, பாடல்கள் ஆகியவற்றை சிறுவர்- சிறுமிகளே செய்வார்கள்.
இந்த ஆண்டுக்கான பாலர் ஞாயிறு பண்டிகை சுதந்தரம் - கடவுளின் பரிசு என்ற தலைப்பில் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ. தேவாலயங்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றன.
மேலப்பாளையம் அருகே சேவியர்காலனி சேகரத்திற்கு உள்பட்ட தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பாலர் ஞாயிறு பவனிக்கு சேகர தலைவர் காந்தையா தலைமை தாங்கினார். சபை ஊழியர் கிறிஸ்டோ பர் முன்னிலை வகித்தார்.
தேவாலயத்தில் இருந்து ஞாயிறு பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் பவனியாக சென்றனர். காமராஜர் சாலை, அந்தோணியார் ஆலய சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து உலகின் அனைத்து பகுதியிலும் வசிக்கும் குழந்தைகள் கல்வி, ஆரோக்கியத்தில் சிறந்து விளங்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் மழைவளம் பெருக வேண்டியும், சமாதானம், சமத்துவம் உருவாக வேண்டி யும் மழலைகள் ஜெபம் செய்தனர்.