search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cobbler"

    • ராம்சேட்டுக்கு தையல் மெஷின் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்தார்.
    • ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அவர் அனுப்பி வைத்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.

    இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26 ஆம் தேதி சுல்தானப்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

    அப்போது சுல்தான்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை சந்தித்து பேசினார். அவரின் வேலைகள் அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

    இந்நிலையில், நேற்று செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் மெஷின் ஒன்றை அனுப்பி வைத்தார்.

    இதனையடுத்து இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராம்சேட், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்தார்.

    ராம்சேட் பாசமாக அனுப்பிய காலணிகளை ராகுல் காந்தி அணிந்து கொண்டுள்ளார். 'எனக்காக அழகான காலணிகளை தைத்து அனுப்பியுள்ளீர்கள்' என தொலைபேசி வாயிலாக அவருக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் எந்திரம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
    • ராகுல் காந்தியுடனான சந்திப்பை தொடர்ந்து தொழிலாளி ராம்சேட் அந்த பகுதி மக்களிடம் பிரபலமானார்.

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 26-ந்தேதி சுல்தான்பூரில் வழக்கு ஒன்றிற்காக கோர்ட்டுக்கு சென்றிருந்தார்.

    அப்போது சுல்தான்பூரில் கோர்ட்டுக்கு வெளியே 40 ஆண்டுகளுக்கு மேலாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் ராம்சேட் என்ற தொழிலாளியை சந்தித்து கலந்துரையாடினார்.

    அப்போது ராம்சேட்டின் வேலைகள், அவர் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார். மேலும் காலணிகளை சரி செய்வது தொடர்பாகவும் ராகுல் காந்தி, ராம்சேட்டிடம் கற்றுக்கொண்டார்.

    பின்னர் மறுநாள் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் எந்திரம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.


    கடைக்கு வந்த ராகுல் காந்திக்கு தொழிலாளி ராம்சேட் குளிர்பானம் வழங்கிய காட்சி.


    ராகுல் காந்தி வழங்கிய பரிசால் இன்ப அதிர்ச்சி அடைந்த ராம்சேட், இனி கைகளால் செருப்பு தைக்க தேவையில்லை என மகிழ்ச்சியுடன் கூறினார். அதோடு ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்தார்.

    ராகுல் காந்தியுடனான சந்திப்பை தொடர்ந்து தொழிலாளி ராம்சேட் அந்த பகுதி மக்களிடம் பிரபலமானார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி சரி செய்த செருப்பு மற்றும் ஷூவை ரூ.1 லட்சத்திற்கு ராம்சேட்டிடம் பலரும் விலைக்கு கேட்டுள்ளனர். ஆனால் ராம்சேட் அதனை கொடுக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து ராம்சேட் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை ஜூலை 26-ந்தேதி எனக்கு அதிர்ஷ்ட நாளாகும். ராகுல் காந்தி எனது கடைக்கு வந்தது கடவுளே என் கடையில் வந்து இறங்கியது போன்று இருந்தது. நான் காலணிகளை எவ்வாறு சரி செய்கிறேன் என்பதை செய்து காட்டும்படி ராகுல் காந்தி என்னிடம் கேட்டார்.

    சிறிது நேரத்தில் அவர் ஒரு செருப்பை எடுத்து என்னிடம் கொடுத்து அதை எப்படி தைப்பது என்று எனக்கு கற்றுக் கொடுக்கும்படி கேட்டார். நான் அவருக்கு செருப்பை தைப்பது குறித்து செய்து காட்டினேன்.

    பின்னர் அவருக்கு ஒரு குளிர்பானம் கொடுத்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு என்னுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது ராகுல் காந்தி எனது தினசரி சம்பாத்தியம் குறித்து விசாரித்தார்.

    அவரிடம் நான் மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன் என கூறினேன். அதோடு அவரிடம் செருப்பு தைக்கும் எந்திரம் வழங்குமாறு உதவி கேட்டேன். அவரும் வழங்குவதாக உறுதி அளித்தார். மறுநாளே செருப்பு தைக்கும் மின்சார எந்திரத்தை ராகுல் காந்தி எனக்கு பரிசாக அனுப்பினார்.

    அவருக்கு நான் தைப்பதற்காக கற்றுக்கொடுத்த செருப்பு மற்றும் ஷூவை ஒரு லட்சத்திற்கு மேல் பலர் கேட்கிறார்கள். ஆனால் அவை விலைமதிப்பற்ற உடமைகள். பணத்தின் அடிப்படையில் அவற்றை எடைபோட முடியாது. கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அவற்றை விற்க மாட்டேன்.

    நான் வாழும் வரை அவற்றை பிரேம் செய்து என் கண்முன்னே வைத்திருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
    • ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை ராம்சேட் பரிசாக அனுப்பிவைத்துள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.

    இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26 ஆம் தேதி சுல்தானப்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

    அப்போது சுல்தான்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை சந்தித்து பேசினார். அவரின் வேலைகள் அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

    இந்நிலையில், நேற்று செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் மெஷின் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்

    இதனால், இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராம்சேட், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

    ×