என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cold"

    • பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
    • தென் மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக பல இடங்களில் மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆண்டு தோறும் மார்ச் முதல் ஜூன் வரையான கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பது வழக்கம். குறிப்பாக கத்திரி வெயிலின் போது வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட 4-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்ததுடன், வெப்ப அலையும் வீசியது. குறிப்பாக ஈரோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 111 டிகிரி பாரஹீட் வரை வெயில் கட்டெரித்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

    கடந்த 4-ந்தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக தற்போது பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெப்ப தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

    நேற்றைய நிலவரப்படி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட குறைவாக இருந்தது. குறிப்பாக திருத்தணியில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட 3 டிகிரி செல்சியல் குறைவு. அதே போல் ஈரோட்டில் 97 டிகிரியும், பரமத்திவேலூரில் 93 டிகிரியும் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸ் குறைவு. இதற்கிடையே சென்னை மீனம்பாக்கத்தில் 95 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரி வெப்பம் பதிவானது. இது இயல்பை விட சுமார் 2.7 டிகிரி செல்சியஸ் குறைவு.

    தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட குறைவாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம், திடீர் மழை என்று பருவநிலை மாறி மாறி வருகிறது. இதனால் கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தற்போது பள்ளிகளும் திறந்துள்ளதால் குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    இது தொடர்பாக குழந்தைகள் நல முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் வில்வநாதன் கூறியதாவது:-

    பருவ காலங்கள் மாறும்போது இன்ப்ளூ யன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் தற்போது குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பலருக்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

    கடந்த வாரம் வரை இத்தகைய நிலை இல்லை. ஓரிரு நாட்களாக தான் சூழல் மாறி இருக்கிறது. காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று (17-ந்தேதி) மருத்துவ மனைகளை நாடியவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு உயர்ந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இது சீசன் காய்ச்சல்தான். பருவநிலை மாறும்போது இந்த மாதிரி தொற்று வியாதிகள் ஏற்படுவது வழக்கமானதுதான். கடந்த ஆண்டுகளை விட அதிகமாக பரவுவதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. எனவே மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம்.

    பொதுவாகவே பருவ நிலைகள் மாறும்போது முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சிய நீரை குடிப்பது, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமல்ல, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை களுக்கு சென்று மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
    • சிலருக்கு சில வகையான உணவுகள் அதிகளவிலும், நேரங்கடந்து சாப்பிடும் போதும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது.

    பலரது வீட்டில் வீட்டை சுற்றி பல மூலிகை செடிகளை தங்களது தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அத்தகைய செடிகளில் கற்பூரவள்ளி (ஓமவல்லி) செடியும் ஒன்று. மற்ற மூலிகை செடிகளை காட்டிலும் கற்பூரவள்ளி செடியானது அதிக நறுமணத்துடன் காணப்படுகிறது. இதில் எண்ணற்ற பலன்கள் உள்ளது.

    கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

    நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.


    சுவாச பிரச்சனைகள் மழை மற்றும் குளிர்காலங்களில் வயது பேதமின்றி அனைவருக்கும் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இலை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா காசநோயாக கூட மாறநேரிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து. 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.

    சிலருக்கு சில வகையான உணவுகள் அதிகளவிலும், நேரங்கடந்து சாப்பிடும் போதும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது. நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னையும் உருவாகிறது. இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் உணர்வும் போகும்.


    சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.

    கற்பூரவள்ளி இலையிலுள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது. தினமும் கற்பூரவள்ளி இலையினை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். கற்பூரவள்ளி இலை வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

    தலையில் காணப்படும் நரை முடியினை கருப்பாக மாற்றுவதற்கு கற்பூரவள்ளி இலையில் இருந்து கிடைக்கக்கூடிய பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் முகத்தில் காணப்படும் பருக்களை நீக்கவும் மற்றும் பொலிவு இழந்து காணப்படும் முகத்தினை பொலிவு பெற செய்யவும் கற்பூரவள்ளி இலை பயன்படுகிறது.

    • சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழையும் பெய்கிறது. இந்த பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வசிக்கும் பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வழக்கமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை விட தற்போது 2 மடங்கு நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் சமீபகாலமாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் பெய்கிறது. இதனால் பொதுமக்கள் பலர் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கிளீனிக்குகள் போன்றவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பருவ நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக சென்னை முழுவதுமே காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    வெளியில் உணவு வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதன்மூலம் பருவநிலை காரணமாக பரவும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • இயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தற்காப்பு செயல்தான் சளி பிடிப்பது.
    • சளிக்கு நிறமும் நாற்றமும் உண்டு.

    நமது நெஞ்சுப் பகுதியிலுள்ள சுவாசக்குழாயிலும், நுரையீரல் பகுதியிலும் உருவாகும் ஒரு கெட்டியான ஜெல் போன்ற திரவம் சளி ஆகும். மருத்துவ ரீதியாக நோயைத் தடுக்க உடலில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தற்காப்பு செயல்தான் சளி பிடிப்பது.


    சளி சிலருக்கு வெறும் தண்ணீர் ஊற்றுவது மாதிரி மூக்கின் வழியாக வெளியே வரும். சிலருக்கு கெட்டியாக இருமும் போது வாய் வழியாக வெளியே வரும். சளிக்கு நிறமும் நாற்றமும் உண்டு. இந்த நிறத்தையும் நாற்றத்தையும் வைத்தே உடலில் என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஓரளவு கண்டுபிடித்துவிடலாம்.

    சளி திரவ வடிவில் மூக்கு வழியாக வெளியேறினால் இரண்டொரு நாட்கள் இருந்துவிட்டு பின் சரியாகிவிடும். ஆனால் சளி நிறம் மாறி கெட்டியாக வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் வெளியேறினால் சுவாச மண்டலத்தில் அதாவது நுரையீரலில் நோய் இருக்கிறது என்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஒருவருக்கு சளி பிடித்திருக்கிறது என்றால் அவரது குரல் மாறி தொண்டை கட்டிவிடும். வாய் கசப்பு, குமட்டல் இருக்கும். லேசான மூச்சுத்திணறல், தொண்டையை அடிக்கடி செருமி சரிசெய்யும் நிலை ஏற்படும். இவ்வளவு பிரச்சினைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தால் கண்டிப்பாக காய்ச்சல் இருக்கும்.

    எனவே சளிதானே பிடித்திருக்கிறது என்று மூக்கைச் சீந்திவிட்டு துண்டில் துடைத்து விட்டு அவ்வளவுதான் என்று நினைக்காதீர்கள். உடனே உங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து சளி, காய்ச்சல் ஏற்படுவதற்குண்டான காரணம் என்ன என்று கண்டுபிடியுங்கள்.


    வெறும் இருமல் என்றால் உங்களது நுரையீரலுக்குள் தேவையில்லாமல் தெரியாமல் நுழைந்த அந்நியப் பொருட்களை வெளியே தள்ள செய்யப்படும் முயற்சியே இருமல் ஆகும். ஆனால் சளியுடன் இருமல் இருந்தால் அது நோயாகும்.


    சளி பிடிக்காமல் இருக்க செய்யவேண்டியவை:

    * புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துங்கள். மாசு, தூசி ஆகியவற்றில் நிற்காதீர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி, நீச்சல் முதலியவைகளை செய்யுங்கள். அடிக்கடி வெந்நீர் குடியுங்கள்.

    * 2 வாரத்துக்கு மேல் இருமல் இருந்தாலோ, சளியின் நிறம் மாறி இருந்தாலோ, சளியுடன் காய்ச்சல் இருந்தாலோ, மூச்சுத் திணறல் இருந்தாலோ, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலோ, உடனே நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணரைச் சந்திக்கவும்.


    * நிறமற்ற வெறும் சளி துப்புவது ஆபத்தல்ல. நிறம் மாறிய சளி துப்புவது ஆபத்தானது. உடனடி கவனம் தேவை.

    • கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது.
    • சுற்றுப்புற வெப்பநிலையில் மாற்றம் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும்.

    குளிர் தாங்கமுடியாமை என்பது உடலிலுள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறியாகும். இது உடலிலும் ஏற்படும் வளர்சிதை மாற்றம் சார்ந்த பிரச்சனையே ஆகும்.

    உதாரணத்திற்கு வயதான, மிகவும் ஒல்லியான பெண்களால் சாதாரண குளிரைக்கூட தாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு உடலில் மிகமிகக் குறைவான அளவிலேயே கொழுப்பு இருக்கிறது.


    நமது உடலிலுள்ள ரத்தத்தில் கலந்திருக்கும் கொழுப்பு வேறு. நமது உடலில் பரவி இருக்கும் கொழுப்பு வேறு. குளிர் தாங்க முடியாமைக்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. அவை:

    ரத்த சோகை, பசியின்மை, அதிக குளிரினால் ரத்தக்குழாய்கள் இறுகிப்போதல், ஹைப்போதலாமஸ் சுரப்பியில் பிரச்சனை, தசை நார் வலி, ஹைப்போதைராய்டு குறைபாடு, நாள்பட்ட நோய், உடலில் கொழுப்பு குறைவாக இருப்பது.

    பொதுவாக மனித உடலின் வெப்பநிலை பல அமைப்பு முறைகளினால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளைக்கு அடிப்பகுதியிலுள்ள ஹைப்போதலாமஸ் உறுப்பு முன் கழுத்துப் பகுதியிலுள்ள தைராய்டு சுரப்பிக்கு செய்தியை அனுப்புகிறது.

    உடனே தைராய்டு சுரப்பி உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை கண்காணித்து அதிக கலோரி சக்தியை சேமித்து வைக்குமாறு உடலுக்கு உத்தரவிடுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது.

    உடலில் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம் இந்த உடல் சூட்டை உடல் முழுக்க எடுத்துக்கொண்டு போகிறது. இதுபோக உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உடல் சூட்டை அப்படியே பாதுகாத்து வைத்துக் கொள்கிறது.


    இதில் எந்த அமைப்பு சரியாக வேலை செய்யாவிட்டாலும் உடல் சூடு ஒரே நிலையில் இருக்காது. உடல் வெப்பநிலையில், சுற்றுப்புற வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும்.

    அதிக குளிரில் விரைத்துப்போய் உடல் நடுக்கம் வந்தால், உங்கள் உடல் வெப்பத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறியாகும். உடனே, பல அடுக்கு வெப்ப உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    உள்ளங்கை பாதம் இரண்டையும் சூடேற்றுமாறு தொடர்ந்து நன்றாகத் தேய்க்க வேண்டும். குழந்தைகளாகவோ வயதானவர்களாகவோ இருந்தால் உடலோடு உடல் உரசிக் கொண்டு இருக்கிறமாதிரி அரவணைத்துக் கொண்டு சில நிமிடங்கள் இருந்தால் குளிர் குறைந்து உடல் சூடாகும்.


    எல்லாம் சரியாக இருந்தும் மற்றவர்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய குளிரை உங்களால் தாங்க முடியவில்லை என்றால் உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனைப்படி சில ரத்த பரிசோதனைகளைச் செய்து என்ன காரணத்தினால் குளிரைத் தாங்க முடியவில்லை என்பதைக் கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    குளிரை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடிந்தால் மழைக் காலமும் பனிக்காலமும் சுகமானவை தான்.

    • ஏற்காட்டில் கன மழை-கடும் குளிரால் மக்கள் தவித்தனர்.
    • ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை கன மழையாக பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது . இதையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை கன மழையாக பெய்தது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் மழையை தொடர்ந்து ஏற்காட்டில் இரவில் கடும் குளிர் நிலவியது. நேற்றிரவு ஏற்காடு முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் பொது மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 21.8 மி.மீ. மழை பெய்தது. மேட்டூர் 3.2, காடையாம்பட்டி 3, ஆனைமடுவு 2, கரியகோவில் 2, சங்ககிரி 1.1, சேலம் 0.9 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 34 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

    கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவால் இரவில் நடமாட்டம் குறைந்துள்ளது. சளி மற்றும் காய்ச்சலால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மேலும் நாள் முழுவதும் பகலில் குளிர் காற்று வீசுகிறது. இதன் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாகவே மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை கடும் குளிர் மற்றும் மூடுபனி காணப்படுகிறது. இந்த கடும் குளிரால் பொதுமக்களுக்கு காய்ச்சல் இருமல், சளி, சரும நோய் போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    ஓசூர் அரசு மருத்து வமனைக்கு நாள்தோறும் 1200 முதல் 1500 புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதேபோன்று தனியார் மருத்துவமனைகளிலும், குளிர்க்கால நோயால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    கடந்த ஒரு வார காலமாக ஓசூரில் குறைந்தபட்ச சீதோஷ்ணமாக ஞாயிற்றுக் கிழமை 11 டிகிரி செல்சியஸ் பதிவாகின. குறிப்பாக ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை மக்களின் நடமாட்டம் குறைவாக உள்ளது. குறிப்பாக நகரத்தைக் காட்டிலும், கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைவாக உள்ளது. இந்தக் குளிர் மேலும் ஒரு வாரம் தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

    தொப்பூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை கடும் பனி கொட்டுகிறது. குறிப்பாக தொப்பூர் மலைப்பாதையில் மூடு பனி அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன.

    மூடு பனியால் தொப்பூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் வாகனங்கள் மோதிக் கொள்ளும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன. நேற்று அதிகாலை தருமபுரி குமாரசாமிப்பேட்டையை அடுத்த பென்னாகரம் மேம்பாலம் அருகே லாரியின் பின்னால் கேரளாவில் இருந்து மாணவர்கள் வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. மூடு பனி காரணமாக இப்படி விபத்துக்கள் நடப்பது அதிகமாகி விட்டது.
    குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில் அத்தகைய உணவுகள் உடலை மேலும் பலவீனப்படுத்தும். உடல் உபாதைகள் ஏற்படவும் வழி வகுத்துவிடும். துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பவை. அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைத்துவிடும்.

    தொண்டை எரிச்சல் பிரச்சினையும் அதிகமாகிவிடும். தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் குளிர்காலத்துக்கு உகந்ததல்ல. மார்புச்சளி இருக்கும் போது உணவில் தயிர் சேர்த்துக்கொண்டால் அது சளியை இறுக வைத்துவிடும். குளிர் பானங்கள் பருகுவதும் தொண்டை வலியை அதிகப்படுத்திவிடும்.

    வறுத்த உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது. அவையும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்திவிடும். காபின் கலந்த பானங்கள், மது பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த திராட்சை பழம், மிளகுத்தூள், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, அன்னாசிபழம், கொய்யா போன்றவற்றையும், வைட்டமின் இ சத்துக்களை கொண்ட கீரை வகைகள், பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள், ப்ரோக்கோலி, நெல்லிக்காய், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.

    அதுபோல் செலினியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்திருக்கிறது. அந்த சத்து நிறைந்த இறால், முட்டை, இறைச்சி வகைகளை சாப்பிடலாம். சிக்கன் சூப் பருகுவதும் சளிக்கு இதமாக இருக்கும். கிரீன் டீ பருகுவதும் சளித்தொல்லைக்கு நிவாரணம் தரும். அதில் சளி பிரச்சினைக்கு காரணமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. குறைந்தபட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகுவதும் அவசியமானது.
    சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.
    இருமல்: கடந்த ஒரு மாத காலமாக பலருக்கும் சளி, இருமல் பிரச்சனைதான். மருந்து சாப்பிட்டு சளி கூட நீங்கி விட்டது. இருமல் தான் நிற்கவே இல்லை என பலரும் கூறுகின்றனர். பல இருமல் மருந்துகளை சாப்பிட்டும் குறையவில்லை என்பதும் தொடர் இருமல் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால் சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.

    * தேன் மிகச் சிறந்தது வறட்டு இருமலுக்கு என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1-2 டீஸ்பூன் தேனினை வெதுவெதுப்பான நீரில் 2-3 முறை அன்றாடம் குடித்து வர இருமல் கட்டுப்படும். இதனை சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

    * பைன் ஆப்பிள்: அன்னாசி பழமானது மூக்கு, சைனஸ் பகுதிகளில் உள்ள வீக்கத்தினை குறைக்க வெகுவாய் உதவுகின்றது. இருமல் இருக்கும் பொழுது அன்னாசி பழ ஜூஸ் சிறிதளவு அவ்வப்போது குடிப்பது சளியினை வெளியேற்றி இருமலைக் குறைக்கும்.

    * அதிமதுரம்: இதற்கு பல நாடுகளில் இன்று வரவேற்பு வெகுவாய் கிடைத்துள்ளது. அதிமதுர பொடி வாங்கி 2 கப் நீரில் 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின் இறக்கி 15-20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பின் இதனை வடிகட்டி காலை-மாலை இரு வேளை அருந்துங்கள். இருமல் வெகுவாய் கட்டுப்படும்.

    * வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு கொப்பளியுங்கள்.

    நெஞ்செரிச்சல்: அசிடிடி-நெஞ்செரிச்சல் என்ற இந்த இரு வார்த்தைகளை கேட்காதவர், அனுபவிக்காதவர் மிகக் குறைவு எனலாம். இதற்கு தானே மருந்து கடையில் மருந்து வாங்கி எடுத்துக் கொள்பவர்கள் ஏராளம். ஆனால் இது அடிக்கடி அவர்களை தாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

    மிக அதிகமாகவும், அடிக்கடியும் இந்த ஆசிட் கட்டுப்படுத்தும் மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

    விடாமல் அசிடிடி நிவாரண மருந்தினை பாக்கெட்டிலேயே வைத்து உணவு போல் அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது

    * தேவையான சத்துக்களான பி12, கால்ஷியம், இரும்பு மற்றும் மக்னீஷிய சத்துக்கள் உறிஞ்சப்படுவது வெகுவாய் குறைகின்றது.

    * உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.



    இயற்கை முறையில் அசிடிடி பாதிப்பினை தடுக்க சில முறைகள் இருக்கின்றன.

    * குளிர்ந்த பால் அருந்துவது அசிடிடி பாதிப்பினை வெகுவாய் குறைக்கும். நீக்கும். உங்களுக்கு சளி பாதிப்பு ஏற்படாது எனில் ஐஸ்கிரீம் கூட எடுத்துக் கொள்ளலாம்.

    * மோர் குடிக்கலாம். இதனை அன்றாடம் அடிக்கடி கூட குடிக்கலாம்.

    * சிகரெட், மது இரண்டினையும் அடியோடு தவிர்த்து விடவேண்டும்.

    * பாதாம் வயிற்றிலுள்ள ஆசிட் சக்தியினை குறைத்து விடும். சாப்பிட்ட பிறகு 3-4 பாதாம் மென்று சாப்பிடுங்கள்.

    * மசாலா, எண்ணெய், காரம் இவைகளை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

    * போதுவான தூக்கமின்மை நெஞ்செரிச்சல், ஆசிட் எதிர்ப்பு ஆகியவற்றினை உருவாக்கும். எனவே குறைந்தது 7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் இரவில் தேவை.

    * ஆப்பிள், வாழைப்பழம் உண்ணலாம்.

    * சோற்றுக்கற்றாழை ஜூஸ் மிக நல்ல சிகிச்சை ஆகும்.

    * அரிசி உணவும் நெஞ்செரிச்சல், ஆசிட் இவற்றுக்கு நல்ல தீர்வாகும்.

    இன்னும் ஒரு 30 நாட்கள் லேசான குளிர் இருக்கலாம்.

    ஆனால் பலருக்கு இந்த குளிர் நாட்கள் சளி, ஜீரம், ஆஸ்துமா என பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம், தோய்க்கும் துணிகளை வீட்டுக்குள்ளேயே அதுவும் சூரிய ஒளி இல்லாத இடத்தில் ஈரத் துணிகளை காயப் போடுவது தான். நம்மில் அநேகருக்கு பல கிருமி, பூஞ்ஞைகளை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. சிலருக்கு இந்த ஈர துணிகளை உள்ளே காயப்போடும் பொழுது அந்த ஈரம் அவரைத் தாக்குவதால் சளி, ஆஸ்த்மா பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மிக அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான தகுந்த பாதுகாப்பினை இவர்கள் மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
    அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கின்றதா? நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
    அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கின்றதா? நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
    சாப்பிடும் முன் கை கழுவும் பழக்கம் இன்று எல்லோரிடமும் இருக்கின்றது. ஆனால் அதனை முறையாய் செய்கின்றோமா என்றுதான் கவனிக்க வேண்டும். வலது கையை குழாயின் கீழ் நீட்டி ஒரு நொடியில் ‘நானும் கை சுத்தம் செய்து விட்டேன்’ என்று வருவது கை கழுவாது உண்பதற்கும் சமம். இரு கைகளையும் நீரில் நனைத்து சோப் கொண்டு 20 நொடிகளாவது நன்கு கை, நகங்களை தேய்த்து கழுவுதே கிருமிகளை நீக்கும் முறையாகும்.

    இல்லையெனில் கிருமிகள் பாதிப்பு உடனே ஓடி வந்து விடும். இளம் வயதினருக்கு இன்று ஒரு பழக்கம் உள்ளது. செல்போனை தன் தலையணை அருகேயே வைத்திருப்பார்கள். தூக்கத்தில் அவ்வப்போது எழுந்து தன் செல்போனில் வாட்ஸ்அப் செய்திகளை படித்துக் கொண்டும், செய்தி அனுப்பிக் கொண்டும் இருப்பார்கள். இப்படி தூக்கம் கெடுவது அதிக தீய பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்துகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது. வெள்ளை அணுக்கள் ரத்தத்தில் குறைகின்றன. அதனால் இவர்கள் எளிதில் வைரஸ் மற்றும் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றீர்களாம்.

    * அதிக மனஉளைச்சல் உங்களை ஆட்கொள்ளாது தவிருங்கள். இவைகளை கவனத்துடன் செய்தாலே வைரஸ், கிருமிகள் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். கூடவே பொது கைப்பிடிகளில் டிஷ்யூ பேப்பரை கொண்டு உபயோகிப்பதும், கடன் வாங்காததும், கொடுக்காததும் உங்கள் பேனாவினை பயன்படுத்துவதும் கூடுதல் நம்மை பயக்கும்.

    * கை குலுக்குவதனைக் காட்டிலும் வணக்கம் சொல்வது சுகாதார வெளிப்பாடும் கூட.
    * வேலை செய்யும் டேபிளிலேயே உணவையும் வைத்து சாப்பிடாதீர்கள்.
    * அன்றாட காலை இளம் வெய்யில் உடலுக்கு அவசியம்.
    * யோகா பழகுங்கள்.
    * மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
    * காலை உணவை கண்டிப்பாய் எடுத்துக் கொள்ளுங்கள்.

    ஆக மேற்கூறியவற்றில் முறையான கவனம் கொடுக்கும் பொழுது ஜலதோஷ பாதிப்பு வெகுவாய் குறையும்.

    தலைவலி சில சமயங்களில் ஆபத்தானதாகக் கூட இருக்கலாம்.

    * மூளைக்கும் அதனை படர்ந்து இருக்கும் மெல்லிய ஜவ்வு படலத்திற்கும் இடையே சில சமயங்களில் ரத்த கசிவு ஏற்படலாம். இதனால் ஏற்படும் தலைவலி ஆபத்தானது.
    * உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலி உடனே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
    * மூளையில் கட்டி.
    * மூளையில் கிருமி தாக்குதல் இதனால் ஏற்படும் தலைவலி உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவது அவசியம்.
    * மண்டைக்குள் நீர் சேர்ந்து மூளை வீக்கம் ஏற்படுதல்.
    * விஷவாயு தாக்குதல்.
    * மூளையில் ரத்தக் குழாய் உடைந்து ரத்தப் போக்கு ஏற்படுதல்.

    இவற்றினால் ஏற்படும் தலைவலியினை உடனடி மிக அவசர சிகிச்சையாக கவனிக்க வேண்டும். இதற்கான அறிகுறிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * திடீரென ஏற்படும் தாங்க முடியாத தலைவலி.
    * எப்பொழுதும் வரும் தலைவலியினைக் காட்டிலும் வித்தியாசமான கடும் தலைவலி.
    * தலைவலியுடன் குழறிய பேச்சு, பார்வை மங்குதல், கை, கால் அசைப்பதில் கடினம், மறதி ஏற்படுதல்.
    * தலையில் அடிப்பட்டு ஏற்படும் தலைவலி.
    * 50 வயதிற்கு மேல் இருந்து ஏற்படும் தலைவலி.
    * கண் வலி, கண் சிகப்பு ஒரு கண்ணில் இருந்து ஏற்படும் தலைவலி இப்படிப்பட்ட அறிகுறிகள் இருக்கும் பொழுது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    மருத்துவ தந்தை என்று அழைக்கப்படும் ‘ஹிப்போக்ரேட்ஸ்’ பல காலங்களுக்கு முன்னாள் கூறியுள்ள ஒரு மருத்துவ செய்தினை நினைவு கூர்ந்து பார்ப்போம். ‘எல்லா நோய்களும் உணவுப் பாதையிலே ஆரம்பிக்கின்றது’ என்பதுதான். மருத்துவ உலகில் எண் சான் உடம்பிற்கு உணவு பாதையும், ஜீரண உறுப்புகளுமே பிரதானம்’ எனலாம்.

    குடலின் உள் சுவரில் மெல்லிய படலம் உள்ளது. இந்த படலம் நல்ல சத்துக்களை உடலுக்குள் செலுத்தி தீய, நச்சுகளை வெளியேற்றி விடுகின்றது. இப்படலத்தில் மிக நுண் துளைகள் ஏற்படும் பொழுது நச்சுகளும் ரத்தத்தில் கலந்து விடுகின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பல விதத்தில் பாதிக்கப்படுகின்றது என்பதனை சிலர் நீண்ட ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றனர். சரி இந்த பாதிப்பு ஏன் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது?

    * பரம்பரை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம்.
    * முறையில்லாத உணவுகள் குடலை பாதிக்கின்றன. நல்ல பாக்டீரியாக்களை அழிக்கின்றன. கெட்ட பாக்டீரியாக்களை பெருக்குகின்றன. குடல் வீக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
    * உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள், குடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    * மிக அதிக மனஉளைச்சல் ஜீரண மண்டலத்தினையே அதிகம் பாதிக்கின்றது.
    * சுத்தமில்லா நீர் காரணமாக இருக்கலாம்.

    பொதுவில்

    * குடலில் புண் ஏற்பட்டாலோ
    * கிருமிகள் தாக்குதலால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ
    * உடலில் சத்து குறைபாடு இருந்தாலோ
    * குடல் வீக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டாலோ
    * நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலோ
    * எடை கூடுதல், நீரிழிவு நோய் 2-ம் பிரிவு என தாக்குத்ல ஏற்பட்டாலோ
    முதலில் உங்கள் உணவுப் பாதை, கல்லீரல், பித்தப்பை என உணவு மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இதற்கு உங்கள் மருத்துவர் உதவியினை உடனடி பெறுவது பல்வேறு நோய்களில் இருந்து உங்களைக் காக்கும்.
    ஊட்டியில் பலத்த மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள் சேற்றில் விழுந்து நாசம் அடைந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் கனமழை வெளுத்து வாங்கியது. உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவி வருகிறது. அடர்ந்த மேக மூட்டமும் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி சென்றன. பள்ளி, கல்லூரி மாற்றும் வேலைக்கு செல்வோர் கம்பளி ஆடை அணிந்து சென்றனர். பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நொண்டிமேடு, குன்னூர், பர்லியார் ஆகிய பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குன்னூர் பகுதி நிலச்சரிவு ஏற்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரம் அதிகமாக உள்ளதால் இந்த பகுதி மக்கள் நிலச்சரிவு அபாயத்தில் தூக்கத்தை தொலைத்து விடியவிடிய அச்சத்தில் இரவை கழித்தனர். இதில் பலியார் பகுதி ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியாகும். குன்னூர் சாலைகள் மழைவெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களின் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறினர். தொடர்ந்து 3 நாட்கள் கனமழை நீடிக்கும் என்பதால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வாழை விவசாயம் முக்கியப்பங்கு வகிக்கிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கதளி, நேந்திரன், பூவன், செவ்வாழை மற்றும் பிற வாழை ரகங்களை பயிரிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே யுள்ள வெள்ளிப்பாளையம், வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம், பாலப்பட்டி, வேடர்காலனி ஆகிய பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்களில் உள்ள வாழைகள் பாதியில் முறிந்து நாசம் அடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள் சேற்றில் விழுந்து நாசம் அடைந்தன.

    இந்த சூறாவளிக்காற்றில் 50 ஆயிரம் வாழைகள் நாசம் அடைந்திருக்கும் என்று தெரிகிறது.

    ×