என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commissioner"

    • ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    எனவே வரி இனங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளுவதோடு, நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும்,கடை வாடகை உரிய காலத்திற்குள் செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    மேலும் பல்லடம் நகராட்சியில்,பஸ் நிலையம்,அண்ணா வணிகவளாகம் போன்றவற்றில் கடை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் உரிய காலத்திற்குள் வாடகை செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவேபொதுமக்கள் வரி இனங்களை உடனடியாக செலுத்தி 18 சதவீத தண்ட வட்டி,குடிநீர் இணைப்பு துண்டிப்பு,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளவேண்டும். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிஎன் அர்பன் இ சேவை என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் .அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பின்னர் பல்லடம்,கடைவீதியில் உள்ள கடைகளில், நகராட்சி ஆணையாளர் விநாயகம் தலைமையிலான அதிகாரிகள் வசூலில் ஈடுபட்டனர்.

    • அடைப்புகளை அகற்றிய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.
    • துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

    மதுரை

    மதுரை கல்பாலம் வைகை ஆற்றின் மதகுகளில் செடி-கொடி, குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை காரணமாக அடைப்பு ஏற்பட்டது. வைகை ஆற்று வெள்ளம், இரு கரைகளையும் தாண்டி சாலைக்கு வந்தது.

    செல்லூர் போலீஸ் ஏட்டு ராமன் ஆற்றுக்குள் துணிச்சலாக இறங்கி, மதகுகளில் இருந்த அடைப்புகளை அகற்றினார். இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையில் தண்ணீர் வடிந்தது. இதனை கேள்விப்பட்ட மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், ஏட்டு ராமனை நேரில் வரவழைத்து பாராட்டினார். துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

    • முகம்மது சம்சுதீன் தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    • பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்று தெரிவித்தார்.

       அனுப்பர்பாளையம்  : 

    திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக இருந்த முகம்மது சம்சுதீன் தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி கமிஷனராக இருந்த தாமரை நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தாமரை திருமுருகன்பூண்டி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் குமார், துணைத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

    புதிய கமிஷனராக பொறுப்பேற்ற தாமரை, மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்று தெரிவித்தார். முன்னதாக தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப் பட்ட கமிஷனர் முகம்மது சம்சுதீனுக்கு வழியனுப்பு விழாநடைபெற்றது .

    இதில் தலைவர் குமார் தலைமையில் துணைத் தலைவர்,கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். அனைவருக்கும் கமிஷனர் முகம்மது சம்சுதீன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
    • திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.

    அனுப்பர்பாளையம்:

    திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் இன்னும் நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மேலும் நகராட்சிக்கு நியமிக்கப்பட்ட முதல் கமிஷனர் முகமது சம்சுதீனுக்கு பிறகு இதுவரை நிரந்தர கமிஷனர் நியமிக்கப்படவில்லை.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர். தற்போது வெள்ளக்கோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமார் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக இருந்து வந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக அப்துல் ஹாரிஸ் நியமனம் செய்யப்பட்டுளளார். திருத்துறைப்பூண்டி கமிஷனராக பணியாற்றி வந்த இவர், திருமுருகன்பூண்டிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாளை (திங்கட்கிழமை) திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.

    • சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் அகல ரெயில் பாதையை ஆய்வு செய்தார்.
    • அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரெயில் பாதையில் பாதையின் தண்டவாள அமைப்பு எவ்வாறு உள்ளது? மேலும் பாலங்கள், சிக்னல்கள், சண்டிங் பகுதிகள், ஆகியவற்றை டிராலியில் இருந்து இறங்கி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முதல் ஓமலூர் ரெயில் நிலையம் வரை உள்ள 12 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு வழி ரெயில் பாதை பாதையாக இருந்தது. இதனை அடுத்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முதல் ஓமலூர் வரை உள்ள ஏற்கனவே கடந்த 20 வருடமாக கிடப்பில் இருந்த மீட்டர் கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் சுமார் ரூ 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து அந்த ரெயில் பாதையை ஆய்வு செய்யவும் மேலும் அந்த பாதையில் அதிவிரைவு ரெயில் சோதனை ஓட்ட நடத்தவும் திட்டமிடப்பட்டது.

    அதன்படி அந்தப் பாதையில் ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் இன்று காலை சிறப்பு ரெயிலில் சேலம் வந்தார், இதனை அடுத்து இன்று காலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் அகல ரெயில் பாதையை ஆய்வு செய்தார்.

    அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரெயில் பாதையில் பாதையின் தண்டவாள அமைப்பு எவ்வாறு உள்ளது? மேலும் பாலங்கள், சிக்னல்கள், சண்டிங் பகுதிகள், ஆகியவற்றை டிராலியில் இருந்து இறங்கி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது தலைமை கட்டுமான நிர்வாக அதிகாரி சி. கே .குப்தா, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ்,கோட்ட தலைமை பொறியாளர் ராம் கிஷோர், ஒப்பந்ததாரர்கள் கவுதமன், அன்பு அரசு,கட்டுமான துணை முதன்மை அதிகாரி கமல்ராஜ் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்,

    கடலுார் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன்குமார், திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனராக பவன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த கிராந்திகுமார், கோவை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    அவருக்கு பதிலாக, கடலுார் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன்குமார், திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, தாராபுரம் சப்-கலெக்டராக பணியாற்றியவர். இவர் இன்னும் ஒரு சில தினங்களில் திருப்பூர் மாநகராட்சியின் கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார்.

    • நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த அலுவலகங்களில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அவ்வப்போது சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அவ்வப்போது சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச புகார் எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் இன்று கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு வருகை பதிவு, வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை பார்வையிட்டார்.

    மேலும் அங்குள்ள உதவி வருவாய் ஆய்வாளர் அறை, கிளர்க்குகள் அறை, வரிவசூல் செய்யும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    • பொக்லைன் எந்திரம் மூலமாக கால்வாய் ஓடைகள் தூர்வாரும் பணி நடைபெற்றது.
    • குடி தண்ணீரின் தரம் குறித்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி டவுன் மண்டலத்துக்கு உட்பட்ட 26- வது வார்டு பகுதியான டவுன் தென்பத்து பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் படி கவுன்சிலர் பிரபா சங்கரி மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை வைத்தார்.

    அதன்படி கமிஷனரின் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலமாக அப் பகுதியில் உள்ள கால்வாய் ஓடைகள் தூர்வாரும் பணி நடைபெற்றது.

    சமீபத்தில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் சுகாதாரத் துறையினர் உடனான கூட்டம் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் மாநகரப் பகுதியில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக தடுக்கும் விதமாக ஓடைகள் தூர்வாருதல், சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடப்பதை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வைத்துள்ள குடி தண்ணீரில் தரம் உள்ளிட்டவை வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் பிளிச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் தடுப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

    • வரி வசூல் தொகை ரூ.6 கோடியே 40 லட்சம் ஆகும்.
    • 12 ஆண்டுகளுக்குப்பின்னர் முதல் முறையாக குடிநீர்க் கட்டணம் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

     காங்கயம் :

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:- காங்கயம் நகராட்சியில் 2022-2023-ம் ஆண்டுக்கான சொத்துவரி, காலியிடவரி,தொழில் வரி ஆகிய அனைத்து இனங்களிலும் தமிழ்நாட்டில் முதல் நகராட்சியாக கடந்த ஜனவரி 31, 2023 அன்று 100 சதவீதம் வரி வசூல் செய்து காங்கயம் நகராட்சி சாதனை படைத்துள்ளது. இதன் மொத்த வரி வசூல் தொகை ரூ.6 கோடியே 40 லட்சம் ஆகும்.மேலும் காங்கயம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 12 ஆண்டுகளுக்குப்பின்னர், தற்போது முதல் முறையாக குடிநீர் கட்டணம் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த வசூல் தொகை ரூ.1 கோடியே 57 லட்சம் ஆகும்.

    இதற்கு உறுதுணையாக இருந்த நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், வருவாய் உதவியாளர்கள் எஸ்.சதீஷ்குமார், சு.பாண்டியன், கே.விஜயகுமார் ஆகியோருக்கும் வரி செலுத்தி உதவிய பொதுமக்களுக்கும் நன்றி தெரி–வித்–துக்–கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.
    • இன்னும் 10 சதவீத வரி மட்டுமே வசூல் செய்ய வேண்டியது உள்ளது.

    திருப்பூர் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் இந்த நிதியாண்டு நிறைவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் வரிவசூலை தீவிரப்படுத்தி வருகிறது. நகராட்சி அலுவலகம் மற்றும் வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் வரி, சாக்கடை கால்வாய் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனர்.

    இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அப்துல் ஹாரிஸ் கூறுகையில், நகராட்சியில் இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவீத வரி மட்டுமே வசூல் செய்ய வேண்டியது உள்ளது. இதுவரை வரி செலுத்தாதவர்கள் இன்று மாலைக்குள் வரியினங்களை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றார்.

    • பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது.
    • 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் -1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இவற்றின் மூலம் பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது. இந்த நிலையில்,நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    அதன்படி இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

    இதன்படி நகராட்சி அலுவலக வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனர். இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நகராட்சி தலைவரின் அறிவுறுத்தலின் படி பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் வரி இனங்களை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும். அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×