என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "committed suicide"

    • சின்னதுரைக்கு அடி க்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது
    • சின்னதுரை தான் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கொண்டு வன் ரெட்டியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 54). இவரது மனைவி சம்பூரணம். அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சின்னதுரைக்கு அடி க்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. வயிற்று வலி ஏற்படும் போதெல்லாம் சின்னத்திரை மிகவும் கஷ்ட ப்பட்டு வந்துள்ளார். இத ற்காக சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. சம்பவத்தன்று சின்ன துரை மற்றும் அவரது மனைவி, மகன் அந்தியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றி ருந்தனர். பின்னர் சின்னதுரை மட்டும் வீட்டு க்கு வந்தார்.

    அன்று இரவு தனது மனைவிக்கு போன் செய்த சின்னதுரை தான் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மகன் மற்றும் உறவினருடன் சென்று சின்னதுரையை மீட்டு சிகி ச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் அனும தித்தனர்.

    அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்த தால் பின்னர் மேல் சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழை த்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மரு த்துவர் சின்னதுரை வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தார். பின்னர் இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோட்டில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (51).  இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும் தமிழரசன் என்ற மகனும் உள்ளனர்.

    பத்மநாபன் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதி யில் தறிப்பட்டறையை குத்தகைக்கு எடுத்து ஓட்டி வந்தார். தறி ஓட்டுவதற்கு சரியாக பணம் இல்லாததால் அவரது குடும்பத்தினர் அவருக்கு பணம் கொடுத்து உதவி வந்தனர். மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் பத்மநாபன் சேலையால் தூக்கு போட்டு கொண்டார். 

    அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி பகுதிைய சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் குணசேகரன் (32). கூலி தொழிலாளி. இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் குணசேகரனுக்கு வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து மதுவில் கலந்து குடித்து விட்டார். தொடர்ந்து அவர் தான் விஷம் குடித்ததை வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார்.
    இதையடுதது அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரி தாபமாக இறந்தார்.

    சிவகிரி அருகே உள்ள கொல்லாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெக நாதன். இவரது மனைவி ஐஸ்வர்யா (27). இவர்க ளுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவருக்கு வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் சமபத்தன்று ஐஸ்வர்யா திடீரென எலி பேஸ்ட் (விஷம்) குடித்தார். அக்கம் பக்கம் இருநதவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். 
    இவர்களது இளைய மகன் பிரகாஷ் (40). பெயிண்டிங் வேைல செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும் கூறப்படு கிறது. இவருக்கு திருமண மாகாததால் மன வருத்த த்தில் இருந்து வந்தார். மேலும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்தார்.

    இந்த நிலையில் வேதனையில் இருந்து வந்த பிரகாஷ் வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும்  வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மொடக்குறிச்சி அருகே உள்ள சோலார் புதூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (40). இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி விஸ்வநாதனை பிரிந்து சென்று விட்டார். இவருக்கு குடி பழக்கம இருந்ததாகவும் மேலும்  கடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    இந்த நிலையில் வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    தருமபுரி,

    தருமபுரி அருகேயுள்ள  இண்டூர் பங்குநத்தம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கீதா  (வயது 39). கூலித்தொழிலாளிகள். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சங்கீதா மனமுடைந்து சம்பவத்தன்று தனது உடல் மீது மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 

    அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதேபோல தருமபுரி அருகேயுள்ள பொம்மிடி போலீஸ் சரகம் சிப்பிரெட்டி அள்ளி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 21) என்ற பட்டதாரி வாலிபர் குடும்ப பிரச்சனையால் சம்பவத்தன்று எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

     அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். 
    • நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • சிந்துப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் கிருத்திகா (வயது 17). இவர் விடத்தகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து திருமங்கலத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    சில மாதங்களாக கிருத்திகாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த கிருத்திகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிந்துப்பட்டி அருகே உள்ள நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்தவர் பூமிராஜன். இவரது மனைவி கலா ராணி (வயது 45). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்த கலாராணி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுக்குடிக்க பணம் தராததால் மன வேதனையில் வாலிபர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா என்ற செந்தில்குமார்(48). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(45). நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். செந்தில்குமார் அவரது அம்மா பத்மாவுடன் வசித்து வந்தார்.

    செந்தில்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால், கடந்த 3-ந் தேதி மதுகுடிக்க அவரது அம்மாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்ததால் மனவேதனை அடைந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    செந்தில் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • ஈரோடு அருகே கடுமையான வயிற்று வலியால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    • இது குறித்து தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, ஜூலை. 29-

    ஈரோடு அருகே செட்டிபாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் அபிராமி (20).

    இவர் திண்டலில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அபிராமிக்கு வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலி வந்ததால் மனமுடைந்து எலி பேஸ்ட் (விஷம்)தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அறையில் ராமலிங்கம் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இதுகுறித்து விக்னேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (28). இவர் தனது மனைவி, குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இவரது தந்தை ராமலிங்கம் (59). இவரது மனைவி இருவரும் கோபி சாய் அபிராமி நகரில் தனியாக வசித்து வந்தனர். இவர்களிடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன், மனைவி இருவருக்கு மிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ராமலிங்கத்தின் மனைவி கோபத்தில் அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ராமலிங்கம் மன வேதனை யில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் விக்னேஷ்வரன் தனது தந்தையை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் ராமலிங்கம் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ராமலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விக்னேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • ஆப்பக்கூடல் அருகே உள்ள சுக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்கம் மாநிலம் மேற்கு பர்கானா மாவட்டம் சந்தேஷ்கல்லி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் அமின் மோலா (34).

    இவர் கடந்த ஒன்றரை வருடமாக ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள சுக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

    இவரது இளைய மகள் பாத்திமா (13) மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது.

    உள்ளே சென்று பார்த்தபோது பாத்திமா வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாத்திமாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ராகுல் மோலா அளித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களாக கிட்டானுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • இதனால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள கஸ்பா பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (51). இவரது கணவர் பழனிசாமி (60). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகிவிட்டது.

    கட்டிட வேலை பார்த்து வந்த பழனிசாமி, கை, கால், இடுப்பு வலி போன்ற உடல் உபாதைகளால் கடந்த 3 வருடங்களாக வேலைக்கு செல்லவில்லை. மேலும், தனது மகளுக்கு திருமணமாகவில்லை என மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் உடல் உபாதை காரணமாக பழனிசாமி சம்பவத்தன்று இரவு எலி மருந்தை மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டார்.

    இதுகுறித்து தெரிய வந்ததையடுத்து அவரது மனைவி கோவிந்தம்மாள் உறவினர்கள் உதவியுடன் அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பழனிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கூச்சிக் கல்லூரைச் சேர்ந்தவர் பழனிசாமி (54). இவரது 2வது மகன் கலைநாதன் (24).

    இவர், பவானி, காலிங்கராயன்பா ளையம் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் வேன் ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார். இன்னும் திரும ணமாகவில்லை.

    கலைநாதனுக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. அதற்காக அந்தியூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று முன் தினம் வழக்கம் போல வேலைக்கு சென்றுவந்த கலைநாதனுக்கு அன்றைய தினம் நள்ளிரவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

    குடும்பத்தினர் விசாரித்த தில், விஷத்தை குடித்து விட்டதாக கலைநாதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கலைநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகையைச் சேர்ந்தவர் கவுதம் (24). பைக் மெக்கானிக். இவரது தந்தை கிட்டான் (58). டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கவுதமின் தாய் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கவுதமின் மூத்த சகோதரி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கிட்டானுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதையில் அவருக்கு புற்று நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, அவருக்கு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், வாயில் புண் இருந்த காரணத்தால் சரிவர மருந்து, மாத்திரைகளை சாப்பிட முடியவில்லையாம்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இரவு , மகன் கவுதம் வீட்டில் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளார். அதன் காரணமாக அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, கவுதமின்பாட்டி அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த கவுதம் தந்தை கிட்டானை சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கிட்டான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோட்டில் அடமானம் வைத்த வாலிபர் நகையை மீட்ட பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
    • தற்கொலை செய்ய முடிவெடுத்த வாலிபர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு ராம்நகர் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (37). இவரது மனைவி சவுந்தர்யா (30). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி 2 பேரும் தறிப்பட்டையில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்துள்ளார். வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து பணத்தை செலவழித்து உள்ளார்.

    இதனையடுத்து அடமானம் வைத்த நகையை மீட்ட பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாகவே சரவணன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இருவரும் தூங்க சென்று விட்டனர். பின்னர் தற்கொலை செய்ய முடிவெடுத்த சரவணன் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    அப்போது அவரது மகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    உடனே சவுந்தர்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வலி அதிகமானதால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியசேமூர் சோழா நகர் தட்டான் காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). லேத் பட்டறை உரிமையாளர்.

    இவர் வாகன விபத்து ஏற்பட்டு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும் முதுகு தண்டுவடத்தில் தொடர்ந்து வலி இருந்து வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வலி அதிகமானதால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ஆறுமுகத்தை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதில் குண்டு பாய்ந்து நண்பன் இறந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசுக்கு பயந்து சிறுவனும் தற்கொலை செய்துகொண்டான். #ShootingFriend #Suicide
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவின் புறநகர் பகுதியான லாரன்சஸ்வில்லேவை சேர்ந்த சிறுவன் டெவின் ஹோட்ஜ் (வயது 15). இவனை பார்க்க நண்பர்கள் 3 பேர் நேற்று முன்தினம் அவனுடைய வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது சிறுவன் டெவின் ஹோட்ஜ், தங்கள் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்து நண்பர்களிடம் காட்டினான். அப்போது டெவின் ஹோட்ஜ் தவறுதலாக துப்பாக்கியை அழுத்திவிட்டான். இதில் அவனது அருகில் இருந்த சாத் கார்லெஸ் (17) என்கிற சிறுவனின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து.

    இதையடுத்து அருகில் இருந்த மற்ற 2 நண்பர்களும், அங்கிருந்து எழுந்து ஓடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வருவதற்குள் சாத் கார்லெஸ் பரிதாபமாக இறந்துவிட்டான்.

    அதே சமயம் போலீஸ் வருவதை கண்டு டெவின் ஹோட்ஜ் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடினான். எனினும் எப்படியும் போலீசார் தன்னை பிடித்துவிடுவார்கள் என பயந்த டெவின் ஹோட்ஜ், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.
    ×