என் மலர்
நீங்கள் தேடியது "condemnation"
- ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
- தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார் கோயில் ஒன்றியம், ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்க்கு கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீ.எம்.சரவணன், கண்ணகி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.
தமிழ்நாடு என்று சொல்ல மறுக்கும், தமிழ்நாட்டு மக்களையும், மரபுகளையும் மதிக்காத, அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் தமிழக ஆளுநரின் நடவடிக்களுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.
- புதுவை இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
- இது தொடர்பான ஆதாரத்துடன் விரைவில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை சிந்தனை யாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் சட்டவிரோத பேனர்களை அகற்ற வலியுறுத்தி சிந்தனை யாளர் பேரவை, புதுவை இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
ஆனால் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் முன்பே வழுதாவூர் சாலையில் தடைவேலிகளை அமைத்து போராட்ட காரர்களை தடுத்து நிறுத்தி பலரை கையையும் தோளையும் பிடித்து இழுத்து தள்ளி போலீஸ் வாகனத்தில் ஏற்றியது ஜனநாயகத்துக்கு எதிரான அராஜகமாகும். புதுவை காவல்துறை நடத்திய இத்தகைய அத்துமீறல்களை வன்மை யாக கண்டிக்கிறோம்.
இது தொடர்பான ஆதாரத்துடன் விரைவில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பத்திர பதிவு கட்டணம் குறைப்பு கண்துடைப்பு என்று ராமநாதபுரம் தொழில் வர்த்தக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பயனடைய போவதில்லை.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பட்ஜெட்டில் பத்திர பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்பு ஆகும். காரணம், சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பயனடைய போவதில்லை. இந்த சலுகை உண்மையில் மக்களை சென்றடைய வேண்டும் என்று அரசு எண்ணியிருந்தால் வழிகாட்டு மதிப்பீட்டை உயர்த்தி இருக்கமாட்டார்கள். திராவிட கட்சிகளின் கை வந்த கலைகளில் இதுவும், இதுபோன்ற பலவும் உண்டு. மக்களை முட்டாளாக்கும் இத்தகைய முயற்சிகளை வாக்காளர்கள் அறிவார்கள் என்பதை காலம் நிச்சயம் உணர்த்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்
- மாவட்ட கலெக்டரிடம் கண்டன மனு அளிக்கப்பட்டது
பெரம்பலூர்,
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கொடுமைப்படுத்திய ராஜஸ்தான் அரசை கண்டித்தும், டாக்டர்களை பாதிக்கும் மசோதாவை உடனடியாக ராஜஸ்தான் மாநில அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். பின்னர் மாலை அந்த சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகத்தை நேரில் சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்தனர்.
- ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- இதனால் ராகுல் காந்தியில் எம்.பி. பதவி பறிபோனது.
விழுப்புரம்:
விழுப்புரம்மாவட்டம் திருவெண்ணெநல்லூரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தியில் எம்.பி. பதவி பறிபோனது.
இதனை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி சீனிவாசகுமார் ஆலோசனைப்படி, திருவெண்ணெநல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு காங்கிரஸ் தலைவர் சேகர் தலைமையில் நகர தலைவர் குமரேசன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
- அ.தி.மு.க.வின் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீ ர்செல்வத்தை நீக்கியதற்கு பிறகும் அவர் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடியை பயன்படுத்தி வருகிறார்.
- இதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி:
அ.தி.மு.க.வில் அடிப்ப டை உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீ ர்செல்வத்தை நீக்கியதற்கு பிறகும் அவர் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடியை பயன்படுத்தி வருகிறார். அ.தி.மு.க.வின் சின்ன மான இரட்டை இலை சின்னத்தை பற்றி பேசி வருவதை கண்டித்து உளுந்தூ ர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்ட ப்பட்டுள்ளன.கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீ ர்செல்வத்தை கோமாளி போல சித்தரித்து அவரை கண்டித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரை பொது மக்கள் நின்று கவனித்து சென்று வருகின்றனர். இதனால் இன்று அதிகாலை முதலே உளுந்தூர்பேட்டை பகுதி மக்கள் இது குறித்து பரபரப்பாக பேசி வருகின்றனர்.
- அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- இத்தகையை நடவடிக்கைகள் மூலம் பா.ஜனதாவின் கனவு நனவாகாது என்றார்.
ராமநாதபுரம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியதாவது:-
அரசியல் எதிரிகள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை ஏவி விடுவது ஒன்றிய பா.ஜனதா அரசின் வழக்கமாக இருந்து வருகிறது. அரசியல் சட்டத்தையும் மாநில உரிமைகளையும் மத்திய அரசு காலில்போட்டு மிதித்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளது. இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இது அமலாக்கத்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். ஒன்றிய அரசின் அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடாகவே இச்செயல் அமைந்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதேச்சதிகாரத்தின் உச்சமாக உள்ளது. இத்தகையை நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் வலிமையடையலாம் என்ற பா.ஜனதாவின் கனவு நனவாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- லண்டனில் பென்னிகுயிக் சிலை மூடல்; தமிழகத்துக்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளது.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று வயலூரில் அன்ன தானம் நடந்தது. சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஜீவாதார உரிமையாக இருக்கிற முல்லைப் பெரியாறு அணையை கட்டிய, ஜான்பென்னிகுயிக் சிலை தமிழக அரசின் சார்பில் லண்டனில் அமைக்கப் பட்டது.
லண்டன் கேம்பர்லியில் உள்ள பென்னிகுயிக் சிலையை கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். அப்போது இங்கிலாந்து ராணி இறந்து விட்டதால், அந்த விழாவை சம்பிரதாயமாக நடத்தினார்.
இந்த சிலை அமைக்கவும், பராமரிக்கவும் அங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு ரூ10.65 லட்சம் ஒதுக்கியது. ஆனால். கூடுத லாக ரூ.28 லட்சம் செலவாகி விட்டதாக கூறி பாக்கி தொகை கேட்டு சிலை மூடப்பட்டுள்ளது.
அந்த தனியார் நிறுவ னத்திற்கு அரசு பாக்கி வைத்துள்ளதா? அரசு நிர்ணயித்ததை விட அந்த கூடுதல் செலவை தமிழக அரசு கொடுக்க முன் வந்ததா? கொடுத்ததா? இதில் தமிழக அரசு அவர்களை ஏமாற்றியதா? அல்லது தனியார் நிறுவனம் தமிழக அரசை ஏமாற்றி இருக்கிறார்களா? என்பதெல்லாம் இன்று விவாதமாக இருக்கிறது. இது தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக தன் சொத்து களை விற்று இன்றும் உறுதியாக, பாது காப்பாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டிக் கொடுத்த ஜான் பென்னிகுயிக் சிலை யை மீண்டும் லண்டனில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணிப்பூர் பழங்குடியினர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவித்தனர்.
- மனிதம் மரித்துப்போக செய்த இந்த கொடூர சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
தொண்டி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா–அத் பொதுச்செயலா–ளர் அப்துல்கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி–ருப்பதாவது:-
மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. பல உயிர்கள் பறிக்கப்பட்டு, மக்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தியர்க–ளுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மணிப் பூர் மாநிலத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த வன்மு–றைக் கும்பல், குக்கி பழங்கு–டியினத்தை சேர்ந்த மூன்று பெண்களை நிர்வாணப்ப–டுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர–மான வீடியோ சமூக வலைத் தளங்களில் தற் போது பரவி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்க்கும் போது காட்டு–மிராண்டிகள் வாழும் தேசத்தில் நாம் வாழ்கிறோமா என்று வெட்கப்படக்கூடிய அளவிற்கு அந்தப் பெண்க–ளைச் சித்திரவதை செய்து நிர்வாணமாக அழைத்துச் செல்கின்றனர். கலவரங்கள் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெறும் பாசிச அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு இது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்க வாய்ப் பில்லை.
மனிதம் மரித்துப்போகச் செய்த இந்தக் கொடூர சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள் என அனைத் துத் தரப்பு மக்களும் இதற்குத் தங்களது கண்ட–னங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்தச் சம்பவத்தைப் போன்று எத்தனை சம்பவம் நடந்தது என்றே தெரியவில்லை. அனைத்தையும் மூடி மறைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது.
உலக அரங்கில் இந்தியர்க–ளைத் தலை குனிய செய்த–வர்களை கடுமையான முறையில் தண்டிக்க வேண் டும். இனியும் தாமதிக்கா–மல் மணிப்பூர் கலவரம் முடி–வுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் குஜராத் மாநி–லத்தைச் சார்ந்த பல்கீஸ் பானுவிற்கு எதிரான குற்ற செயலில் ஈடுபட்டவர்க–ளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போன்று இல்லாமல் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.
- இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர்:
சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் முத்திரை சின்னமான கோபுர சின்னம் வேண்டாம் என்று இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை உள்பட தமிழக அரசு துறைகளில் தற்பொழுது அறிமுகப்படுத்தி உள்ள மொபைல் ஆப்ஸ் லோகோவில் உள்ள முதல் பக்கத்தில் தமிழக அரசின் கோபுரம் சின்னம் நீக்கப்பட்டு அதனை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மொபைல் ஆப்ஸ் லோகோவில் அரசின் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்கப்பட்டது.
ஆனால் கோபுரத்துக்கு உரிமை பட்ட இந்துசமய அறநிலையத்துறை மட்டும் மொபைல் ஆப்ஸ் லோகோவில் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்காமல் கோபுரம் சின்னம் வேண்டாம் என்ற எண்ணத்தில் அலட்சியமாக இருக்கிறது. இதற்காக இந்துசமயஅறநிலைய துறையை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது.
இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.தமிழக அரசு 1949ம் ஆண்டுகளில் இருந்தே கோபுர சின்னத்தை உபயோகித்து வந்த சூழ்நிலையில் திடீரென்று கோபுர சின்னத்தை அகற்றியது பல்வேறு சந்தேகத்தை உண்டாக்குகிறது.வருங்காலத்தில் தமிழக அரசு துறைகளில் எக்காரணத்தை கொண்டும் கோபுர சின்னத்தை மாற்றக்கூடாது.இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இச்செய்தி இந்துக்கள் மத்தியில் எதிரொலிக்கும்.ஜனநாயகம் மற்றும் சட்டரீதியாகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- சம்பளம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தனர்.
- பாசிக் நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில ஏ.ஐ.டி.யூ.சி.பொதுச்செயலாளர் சேதுசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜக கூட்டணி, மூடிக்கிடக்கும் அரசு நிறுவனங்கள் திறக்கப்படும். நலிவடைந் துள்ள பொதுத் துறை நிறுவனங்களை சரி செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். ஊழியர்களின் நிலுவை சம்பளம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் இந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சுதேசி , பாரதி, ஏ.எப்.டி. பஞ்சாலைகள், கூட்டுறவுசர்க்கரை ஆலையை மூடியுள்ளனர். இதை தொடர்ந்து இப்போது பாசிக் நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜக கூட்டணி அரசு தொழிலாளர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. இதை ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஆட்சியாளர்கள் சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும். ஜனநாயக வழியில் ஊழியர் சங்கங்களை அழைத்து பேசி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை
- மருத்துவர்கள் நியமிக்கப்பட வில்லை என்பதும் தெளிவாகிறது.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதத்தை தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 75 விழுக்காட்டிற்கும் குறைவாக மருத்துவப் பேராசிரியர்கள் இல்லை என்றால் விளக்கம் கேட்டு அறிவிப்புகள் பெறப்படும் என்றும், இதன் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும், தேர்வுப் பணி, ஆய்வுப் பணி போன்ற காரணங்களால் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் மருத்துவப் பேராசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், அதனை தேசிய மருத்துவ ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை என்றும் கூறி இருக்கிறார்.
அதே சமயத்தில், இதுபோன்ற அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளுக்கு இரண்டு முறை விளக்கம் கேட்டு அறிவிப்புகள் அனுப்பப்படும் என்றும், விளக்கங்கள் திருப்தி அளிக்காத பட்சத்தில், கல்லூரி நிர்வாகத்தினருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கு பின்பே அபராதம் விதிக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி வாரியத் தலைவர் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரின் கூற்றையும், தேசிய மருத்துவ ஆணைய அதிகாரியின் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முறையான, நியாயமான விளக்கம் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை என்பதும், போதுமானமருத்துவர்கள் நியமிக்கப்பட வில்லை என்பதும் தெளிவாகிறது.
மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், இனி வருங்காலங்களில், அங்கீகாரம் ரத்தாகும் நிலை, அபராதம் விதிக்கும் நிலை போன்றவற்றிற்கு மருத்துவக் கல்லூரிகள் தள்ளப்படாது இருப்பதை உறுதி செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.