என் மலர்
நீங்கள் தேடியது "counterfeit note"
- கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர்.
- கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி செல்வன் (வயது 40). இவர் பெருமாள்புரம் ராஜ ராஜேஸ்வரி நகர் பகுதியில் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார்.
இவர் கடந்த 24-ந்தேதி கிரிப்டோ கரன்சி பண பரிவர்த்தனையில் ஏமாற்றப்பட்டதாக பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த முகம்மது ரியாஸ் (36) என்பவர் மூலம் அறிமுகமான சங்கரன் கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த அய்யாதுரை (37), மதுரையை சேர்ந்த இசக்கிமுத்து (28) ஆகியோர் தங்களுக்கு அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி தேவைப்படுவதாக கூறி ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணையில் இறங்கினார். அதில் ரூ.75 லட்சம் மதிப்பில் சுமார் 82 ஆயிரத்து 691 அமெரிக்க டாலர் கிரிப்டோகரன்சியை முகமது ரியாஸின் மின்னணு பணப்பைக்கு (எலக்ட்ரானிக் வேலட்) மாற்றம் செய்து அதற்கான பணம் ரூ.75 லட்சத்தினை ஆண்டனியிடம் கொடுத்துள்ளனர். அவை அனைத்தும் கலர் ஜெராக்ஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவுபடி தனிப்படை திண்டுக்கல், பழனி மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதனிடையே வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது ரியாஸ், அய்யாதுரை மற்றும் இசக்கி முத்து ஆகியோர் நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர்.
புகார் குறித்து விசாரணையை தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததுடன், முகமது ரியாஸ் மின்னணு பணப்பையில் இருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான 82691 அமெரிக்க டாலருக்கு இணையான கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை கமிஷனர் பாராட்டினார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தூத்துக்குடியில் அடிக்கடி இத்தகைய மீட்புகள் நடக்கிறது. நெல்லையில் இதுதான் முதல் முறை. மோசடி செய்த முகமது ரியாஸ் தனது வாலட்டில் அதை வைத்திருந்ததால் எளிதாக பறிமுதல் செய்ய முடிந்தது.
கிரிப்டோகரன்சி குற்ற வழக்குகளில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோகரன்சி மீட்கப்பட்டது இதுவே முதல் முறை.
இந்த வகையான கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக லாப வாக்குறுதிகள் அளித்து முதலீடு செய்யுமாறு அழைப்பவர்களை நம்ப வேண்டாம். நம்பகமான நிறுவனம் மற்றும் சட்டப் பூர்வமான வழிகளில் மட்டுமே முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றனர்.
- கள்ள நோட்டு வழக்கில் 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கடந்த 29 ஆண்டுகளாக கர்நாடகா போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
விருதுநகர்
கடந்த 1994-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பசவேஸ்வர் சவுக் பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவி(வயது51), சிவகாசியை சேர்ந்த பாண்டியன்(60), விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த மூவேந்திரன் என்ற மகேந்திரன்(61) ஆகிய 3 பேரை நிப்பானி போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் அங்குள்ள சிக்கோடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். அதன்பின் 3பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது வழக்கு விசாரணைக்கு வரும்போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என மாஜிஸ்தி ரேட்டு உத்தரவிட்டிருந்தார். ஆனால் 3 பேரும் கோர்ட்டின் விதிகளை பின்பற்றாமல் தலைமறை வானார்கள். கடந்த 29 ஆண்டுகளாக கர்நாடகா போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் 3 பேரும் தங்கள் சொந்த மாவட்டங் களில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கர்நா டகா போலீசார் இதுகுறித்து தமிழக போலீசாரிடம் தெரிவித்தனர்.
தென் மண்டல ஐ.ஜி.அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் சிவகாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபகுமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி விருதுநகரில் தலைமறைவாக இருந்த ரவி, பாண்டியன், மூவேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் உரிய விதிமுறைகளை பின்பற்றி கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு வழியாக கேரளாவுக்குள் கள்ளநோட்டு கடத்தப்படுவதாக சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரனுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஒற்றப்பாலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அப்துல் முனீருக்கு உத்தரவிட்டார்.
போலீசார் கோதகுறுச்சியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வாலிபர் இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
அவரிடம் நடத்திய சோதனையில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் கள்ளநோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் ஒற்றப்பாலம் அருகே வரோடு பகுதியை சேர்ந்த ரின்ஷாத் (வயது 20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். #tamilnews
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து, ரூ.100-க்கு பெட்ரோல் போட்டனர். பின்னர் அவர்கள் 200 ரூபாய் நோட்டை கொடுத்து மீதி சில்லறை கேட்டனர். அந்த 200 ரூபாய் நோட்டை பார்த்த ஊழியருக்கு அது கள்ளநோட்டு போல் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் கூறினார். அவர் அந்த நோட்டை பரிசோதித்து பார்த்த போது அது கள்ள நோட்டு என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெட்ரோல் பங்க் உரிமையாளரான செல்வகிருஷ்ண மோனிஷா (வயது23) என்பவர் ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பெட்ரோல் போட வந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் மேலும் ஒரு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு இருந்தது தெரியவந்தது. அதையும் பறிமுதல் செய்தனர்.
இந்த கள்ளநோட்டு எப்படி வந்தது என்று அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-
1.ராஜா (30) குலையநேரி, 2.முத்துகிருஷ்ணன் (32) குலையநேரி, 3.செல்லப்பாண்டி (55) கம்மாவூர். இவர்களிடம் ஊத்துமலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
புதுவை ரெட்டியார் பாளையத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் கடந்த செப்டம்பர் மாதம் வங்கி அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகையில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 8 இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதே போல் அங்குள்ள மற்றொரு தேசிய வங்கியில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 11 இருந்ததை அதிகாரிகளின் சோதனையில் கண்டு பிடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் சென்னையில் உள்ள தலைமை ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ரிசர்வ் வங்கி மானேஜர் சேனாதிபதி புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வங்கியில் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தியவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் நேற்று மாலை தடாகம் பகுதியில் ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வேலாண்டிப் பாளையத்தை சேர்ந்த ஆனந்த்(35) என்பவர் பாக்கெட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 4 இருந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை மாநகர துணை கமிஷனர்(தலைமையிடம்) தர்மராஜன் நேரடி மேற்பார்வையில் குற்றப்பிரிவு உதவி ஆணையாளர்கள் சோமசேகர், சோமசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் வேலாண்டிப்பாளையம் மருதப்பகோனார் வீதியில் வெங்கிடசாமி என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்தினர்.
அங்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் மொத்தம் 5904 இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரமாகும். அவர்களிடமிருந்து கலர் ஜெராக்ஸ் மிஷின், ஹார்டுடிஸ்க், கம்ப்யூட்டர் மானிட்டர், கீபோர்டு, கட்டிங் மெஷின், ஒரு செல்போன், இரு சக்கர வாகனம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் கடையை மாதம் ரூ.2,700-க்கு வாடகைக்கு எடுத்து இங்கு கள்ளநோட்டு அச்சடித்து கோவை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் மூலமாகவும், தெரிந்த நபர்கள் மூலமாகவும் கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்தது தெரியவந்தது.
பண மதிப்பு இழப்புக்கு பின் வந்த புதிய கரன்சிநோட்டில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட இருந்த கும்பலை துரித நடவடிக்கை எடுத்து பிடித்த குற்றப்பிரிவு போலீசாரை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா பாராட்டினார். #tamilnews