என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Debt stress"

    • . இவர் குடும்ப செலவுகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார்.
    • ட்டில் தனிமையில் இருந்த தமிழ்செல்வன் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே பரவலூர் கல்லரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது26). இவர் குடும்ப செலவுகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார்.

    கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத நிலையில் தமிழ்செல்வன் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.நேற்று வீட்டில் தனிமையில் இருந்த தமிழ்செல்வன் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த தமிழ்ச்செல்வனுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வக்குமார் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
    • செல்வக்குமார் கடன் வாங்கியதால் சிரமம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் குறிச்சி ஆண்டவர் 1-வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 47). இவர் நெல்லை-அம்பை சாலையில் காட்டு புதுத்தெருவில் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

    தற்கொலை

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி சுப்பு லெட்சுமியை அழைத்துக்கொண்டு சென்று அவரது மாமனார் வீட்டில் விட்டுவிட்டு மறுநாள் காலை செல்வக்குமார் வீடு திரும்பி உள்ளார். நேற்று மதியம் அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

    இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது அங்குள்ள அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். உடனே அங்கிருந்தவர்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடன் தொல்லை?

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சமீபத்தில் செல்வக்குமார் லோன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்துவதற்கு கடன் வாங்கியதால் சிரமம் அடைந்த தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் கடன் பிரச்சினை யில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய வீடு கட்டியதால் கடன் தொல்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (23). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் புதிய வீடு கட்டி வருகின்றனர். வீடு கட்டுவதற்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டுள்ளனர். இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் எங்களை தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார்.

    இது குறித்து அவரது தந்தை அதே பகுதியில் வசிக்கும் மகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது வீடு திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.

    பின்னர் அவர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் தூசி போலீஸ் நிலையத்தில் செந்தமிழ் செல்வியின் அண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ராஜசேகர் மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

    • கடன் தொல்லையால் பெண்கள் தற்கொலை.
    • கலெக்டர் அலுவலகங்களிள் உடனடியாக உதவி மையத்தை தொடங்க வேண்டும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக வைத்து ஏராளமான நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிதி நிறுவனங்களில் ஏழை மக்கள், விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி வருகிறார்கள்.

    இவ்வாறு கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப செலுத்தாமல் இருந்தால், அவர்களுக்கு ஒரு சில நிதி நிறுவனங்களால் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இதையடுத்து, நிதி நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாக புதிய அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

    இதற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, சிறிய நிதி நிறுவனங்களுக்கு எதிராக புதிய அவசர சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மாநிலத்தில் எங்கெல்லாம் முறையாக அனுமதி பெறாமலும், சட்டவிரோதமாகவும் செயல்படும் நிதி நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    குறிப்பாக நிதி நிறுவனங்கள் ரவுடிகளை வைத்து மிரட்டி பணத்தை வசூலிக்க கூடாது. மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டுக்கு சென்று பணம் வசூலிக்க கூடாது. இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும். மக்கள் ஏதேனும் புகார் அளித்தால், அதன்பேரில் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறிப்பாக சிறிய நிதி நிறுவனங்களின் தொல்லைகளில் இருந்து மக்களை பாதுகாக்க மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உடனடியாக உதவி மையத்தை தொடங்க வேண்டும்.

    அதுபோல் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நிதி நிறுவனங்கள் பற்றி தெரியவந்தால் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். இதற்காக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

    ×