என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi assembly elections"

    • ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது மக்களவை தேர்தலுக்கு மட்டுமே.
    • வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என டெல்லி காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தொண்டர்களிடம் பேசியதாவது:

    பூத் அளவில் கட்சியை வலுப்படுத்தவும், மாநிலத்தில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவும் தொகுதி மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்த கூட்டங்கள் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. வரவிருக்கும் டில்லி சட்டசபை தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்படும்.

    சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரசின் ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு தெளிவான அறிகுறி.

    ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது மக்களவை தேர்தலுக்கு மட்டுமே. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்.

    ஆட்சியில் உள்ள அரசு தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக சாக்குப்போக்கு கூறிவருகிறது என தெரிவித்தார்.

    • டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

    டெல்லியில் வரும் 2025-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

    இதில், முதற்கட்டமாக 11 வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சத்தர்பூர் தொகுதியில் பிரஹ்ம் சிங்தன்வார் போட்டியிடுகிறார். தொடர்ந்து, பதார்பூர் தொகுதியில் ராம் சிங் நேதாஜி, லட்சுமி நகர் தொகுதியில் பிபி தியாகி, சீலாம்பூர் தொகுதியில் சவுதிரி சுபாயிர் அகமது, சீமா புரி தொகுதியில் வீர் சிங் திங்கன், ரோஹ்டாஸ் நகர் தொகுதியில் சரிதா சிங், கோண்டா தொகுதியில் கவுரவ் சர்மா, விஷ்வாஸ் நகர் தொகுதியில் தீபக் ஷிங்லா, கரவால் நகர் தொகுதியில் மனோஜ் தியாகி, கிராரி தொகுதியில் அனில் ஜா, மாடியாலா தொகுதியில் சுமேஷ் ஷோகீன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


    • மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, நரேந்திர மோடி பிரதமராவதை நிறுத்தும் வகையில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்.
    • அரியானாவில் இந்தியா கூட்டணி அடித்து நொறுக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் படுதோல்வியடைந்தது.

    டெல்லி மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா கூறியதாவது:-

    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, நரேந்திர மோடி பிரதமராவதை நிறுத்தும் வகையில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் போட்டது. ஆனால், மோடி 3-வது முறையாக பிரதமரானார். அரியானாவில் இந்தியா கூட்டணி அடித்து நொறுக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் படுதோல்வியடைந்தது.

    பா.ஜ.க.வின் தாமரை டெல்லி சட்டமன்ற தேர்தலில் மலரும். பா.ஜ.க. ஆட்சி அமக்கும். இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை.

    இவ்வாறு கேஷவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.

    மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம் பிடித்திருந்தது. டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளார்.

    • ஆம் ஆத்மி கட்சி 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருந்தது.
    • நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பு.

    டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    பா.ஜ.க.வுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க களமிறங்கி உள்ளது.

    இதைதொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி கட்சி 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருந்தது.

    இதைஅடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த யு.பி.எஸ்.சி. ஆசிரியர் அவத் ஓஜாவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய 3வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

    இதில், நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.


     



    • ஆம் ஆத்மி கட்சி 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருந்தது.
    • நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பு.

    டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    பா.ஜ.க.வுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க களமிறங்கி உள்ளது.

    இதைதொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி கட்சி 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருந்தது.

    இதைஅடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த யு.பி.எஸ்.சி. ஆசிரியர் அவத் ஓஜாவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய 3வது வேட்பாளர் பட்டியலை இன்று ஆம் ஆத்மி வெளியிட்டது

    இதில், நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், 4வது மற்றும் கடைசி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 38 வேட்பாளர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியிலும், முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், சவுரவ் பரத்வாஜ் கைலாஷ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    பா.ஜ.,வில் இருந்து விலகி இன்று மனைவியுடன் ஆம்ஆத்மியில் சேர்ந்த ரமேஷ் பெல்வான், கஸ்தூர்பா நகர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    • மொத்தமுள்ள 70 தொகுகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.

    மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார். மொத்தமுள்ள 70 தொகுகளுக்கும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

    டெல்லி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 2,100 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தலைநகர்டெல்லியில் முதல் மந்திரி அதிஷி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாகப் பதவியேற்ற, பிறகு கடந்த 10 ஆண்டுகளாக சாமானிய மக்களுக்காக உழைத்தவர்.

    டெல்லி வரலாற்றில் ஏழை மக்களுக்காக பாடுபட்ட ஒரே தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே.

    24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் ஒரே நகரம் டெல்லிதான்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் அரசுப் பள்ளிகளில் எந்த வசதியும் இல்லை. தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

    டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி அரசு அமைய மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறோம் என் தெரிவித்தார்.

    • ஆம் ஆத்மி 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
    • காங்கிரஸ் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. விரைவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், அதிஷி முதல்வராக இருந்து வருகிறார்.

    ஆம் ஆத்மியின் ஆட்சிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. அதற்கு முன் தேர்தல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் வாக்குப்பதிவுக்கு சுமார் ஒருமாத இடைவெளி அவசியம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். அதன்பின வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு திரும்பப் பெறுதல் ஆகிய நடைமுறைகளுக்குப் பின் வாக்குப்பதிவு நடைபெறும்.

    பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும என்பதால் டிசம்பர் கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனக் கருதி ஆம் ஆத்மி கட்சி முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. 70 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்ததுடன், கெஜ்ரிவால் மக்களை ஈர்க்கும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து அதற்கான விண்ணப்பத் பூர்த்தி செய்யும் பணியையும் தொடங்கி வைத்துவிட்டார்.

    காங்கிரஸ் கட்சி 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. விரைவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் அடுத்தர வாரம் இந்திய தேர்தல் ஆணையம் டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 3-ம் வாரத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதற்கிடையே அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டெல்லி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    தேர்தலில் வெற்றி பெற்றால் டெல்லி பெண்களுக்கு மாதந்தோறும் 2100 ரூபாய், முதியோருக்கு இலவச சிகிச்சை, கோவில் பூசாரிகளுக்கு உதவித்தொகை என கெஜ்ரிவால் வாக்குறுதிகள் அளித்துள்ளார்.

    • வரும் பிப்ரவரி மாதத்துடன் ஆம் ஆத்மி ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிறது.
    • பாஜக 29 பேர் கொண்டமுதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

    டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிஷி தற்போது முதல்வராக உள்ளார்.

    இதையடுத்து வரும் பிப்ரவரி மாதத்துடன் ஆம் ஆத்மி ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிறது. அதற்கு முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    தேர்தல் தேதி அறிவிப்பு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதோடு, 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, கவர்ச்சிகரமான திட்டங்களையும் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலையும், பாஜக 29 பேர் கொண்டமுதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், டெல்ல சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    • நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்.
    • தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

    டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு குறித்து செய்தியாளர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சந்தித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் என்பதை விரைவில் எட்டுவோம்.

    * வாக்களிப்பதிலும், பெண்களின் பங்கேற்பிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளோம்.

    * நாம் 99 கோடி வாக்காளர்கள் எண்ணிக்கையை கடந்த கொண்டிருக்கிறோம்.

    * பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 48 கோடியை எட்டியுள்ளது.

    * நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்.

    * டெல்லியில் 83.5 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 71.7 பெண் வாக்காளரக்ள் உள்ளனர். மற்றவர்கள் 1261 பேர்.

    * குறிப்பிட்ட குழுக்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல்கள் அல்லது நீக்கங்கள் குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன.

    * வாக்காளர் பட்டியல் முற்றிலும் வெளிப்படையானது.

    * ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நீக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    * தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

    * 2020 பீகார் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த தேர்தல்களில் 15 வெவ்வேறு கட்சிகள் தனிப்பெரும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன.

    * படிவம் 7 இல்லாமல் வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்படாது என்றார். 

    • வருகிற 10-ந்தேதி மனுதாக்கல் தொடங்கும்.
    • வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் வருகிற 20-ந்தேதியாகும்.

    டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு மையங்கள் அமைக்கப்படும்.

    * 85 வயதை கடந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும்.

    * வருகிற 10-ந்தேதி மனுதாக்கல் தொடங்கும்.

    * 17-ந்தேதி வேட்புனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

    * வேட்புமனு மீதான பரிசீலனை 18-ந்தேதி நடைபறும்.

    * வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 20-ந்தேதியாகும்.

    * வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்துதி நடைபெறும்.

    முன்னதாக,

    * இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் என்பதை விரைவில் எட்டுவோம்.

    * வாக்களிப்பதிலும், பெண்களின் பங்கேற்பிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளோம்.

    * நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்

    * டெல்லியில் 83.5 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 71.7 பெண் வாக்காளரக்ள் உள்ளனர். மற்றவர்கள் 1261 பேர்

    * குறிப்பிட்ட குழுக்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல்கள் அல்லது நீக்கங்கள் குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன.

    * வாக்காளர் பட்டியல் முற்றிலும் வெளிப்படையானது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் முறையாகப் பின்பற்றப்பட்டது. எந்தவிதமான மோசடிக்கும் இடமில்லை.

    * ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நீக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    * தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

    * 2020 பீகார் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த தேர்தல்களில் 15 வெவ்வேறு கட்சிகள் தனிப்பெரும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன.

    * படிவம் 7 இல்லாமல் வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்படாது.

    * வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஒவ்வொரு கட்டத்திலும் முழு வெளிப்பாடு மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க அரசியல் கட்டுகள் ஈடுபடுகின்றனர்.

    * வாக்குப்பதிவு நாளுக்கு 7-8 நாட்களுக்கு முன்புதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன, வேட்பாளர்களுக்கு அவர்களின் முகவர்கள் மூலம் ஒவ்வொரு செயல்முறையின்போதும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

    * மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று நீதிமன்றங்கள் 42 சந்தர்ப்பங்களில் தீர்ப்பளித்துள்ளன, மோசடி குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.

    * வாக்காளர் வாக்குப்பதிவு தரவை மாற்றுவது சாத்தியமற்றது, மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பது குறித்து தவறான கருத்து பரப்பப்படுகிறது.

    * தேர்தல் ஆணையத்தின் மதிப்பை குறைக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    * வெளிப்படுத்தல் எங்கள் முக்கிய தூண், விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் தரவுத்தொகுப்புகள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

    * வாக்கு இயந்திரம் குறித்து கேள்வி எழுப்புவது தேர்தலை தடம்புரள வைக்கும்.

    * ஏராளமான தரவுகள் சரிபார்க்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

    • ஷீஷ் மஹாலுக்கு சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஏன் முன்னதாகவே செல்லவில்லை?.
    • ஆம் ஆத்மி தலைவர்கள் டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள்.

    அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, முதல்வர் இல்லம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. முதல்வர் வீட்டில் (ஷீஷ் மஹால்) தங்க முலாம் பூசப்பட்ட கழிவறை உள்ளது. டெல்லி மக்கள் பணத்தில் ஷீஷ் மஹால் கட்டப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியது.

    இந்த நிலையில்தான் இன்று ஆம் ஆத்மி தலைவர்கள் ஷீஷ் மஹாலை பார்வையிடுவதற்காக சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி தலைவர்கள் ஷீஷ் மஹாலை பார்வையிடச் சென்றது ஊழலில் இருந்து திசை திருப்பும் ஆம் ஆத்மியின் செயல் என டெல்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வீரேந்திர சச்தேவா கூறுகையில் "ஷீஷ் மஹாலுக்கு சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஏன் முன்னதாகவே செல்லவில்லை?. ஆம் ஆத்மி தலைவர்கள் டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள். ஷீஷ் ஊழலில் இருந்து திசை திருப்புவதற்கான முயற்சியை ஆம் ஆத்மி செய்து வருகிறது.

    ஷீஷ் மஹாலை முன்னதாகவே பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு முன்னதாகவே தோன்றவில்லை. தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது ஏன் செல்ல முயற்சிக்கிறார்கள். முதல்வர் அதிஷிக்கு ஏபி 17 மதுரா சாலை பங்களா ஒதுக்கப்படும்போது, அவர் ஏன் இன்னொரு பங்களாவை கோருகிறார்?.

    ஷீஷ் மஹாலுக்கு குற்றச்சாட்டில் இருந்து திசைதிருப்பும் வகையில் பிரதமர் வீடு குறித்து ஆம் ஆத்மி கேள்வி எழுப்புவது அற்ப அரசியல்.

    இவ்வாறு வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.

    • புது டெல்லி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வேலைவாய்ப்பு முகாம் அமைத்து, வெளிப்படையாக பணம் வினியோகம் செய்கிறார்.
    • வாக்குகளை நீக்க வேண்டும் என 5,500 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் போலியானது.

    டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற இடங்களுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. நாளை மனுதாக்கல் தொடங்குகிறது.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக பர்வேஷ் வர்மா என்பவரை நிறுத்தியுள்ளார்.

    இந்த நிலையில் பர்வேஷ் வர்மா வெளிப்படையாக பணம் வினியோகம் செய்கிறார். அவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கெஜ்ரிவால் புகார் அளித்துள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் தனது புகாரில் "புது டெல்லி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வேலைவாய்ப்பு முகாம் அமைத்து, வெளிப்படையாக பணம் வினியோகம் செய்கிறார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் கீழ் இந்த விசயங்கள் ஊழல் செயல்பாட்டின் கீழ் வரும். பர்வேஷ் வர்மா தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும். அவரது வீட்டில் எவ்வளவு பணம் வைத்துள்ளார் என்பதை வெளிக்கொண்டு வர சோதனை நடத்தப்பட வேண்டும்.

    புது டெல்லியில் டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து ஜனவரி 7-ந்தேதி வரைக்கும் 22 நாட்களில் வாக்குகளை நீக்க வேண்டும் என 5,500 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் போலியானது.

    அதிகாரிகள் இந்த விஷயத்தை அறிந்ததும், வாக்குகளை ரத்து செய்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நபர்களை அழைத்துபோது, தங்கள் பெயரில் போலி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். ஒரு பெரிய மோசடி நடக்கிறது. கடந்த பதினைந்து நாட்களில், புதிய வாக்குகளுக்காக 13,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன... பிற மாநிலங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து போலி வாக்குகள் உருவாக்கப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

    ×