என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi team"

    • இறுதி போட்டியில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரா பாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதின.
    • இதில் 3:1 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில் கே.ஆர். கல்வி நிறுவ னங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கி நேற்று வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் -இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்றது.

    இறுதிப்போட்டி

    நேற்று மாலை கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலை வர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர். அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியை இந்திய தேசிய பீல்ட் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும், அர்ஜுனா விருது பெற்றவரு மான முகமது ரியாஸ் மற்றும் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் எஸ். சண்முகவேல் வரவேற்றார். விழாவில் கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி. சங்கர நாராயணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சென்னம்மாள், ஷண்மதி, சி. ராமசாமி, கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் கே. காளிதாஸ முருகவேல், கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ். மதிவண்ணன், ஆடிட்டர் பாலசுப்பிரமணி, வக்கீல் சம்பத்குமார் மற்றும் ஆக்கி அணி வீரர்கள், ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

    டெல்லி அணி முதலிடம்

    இறுதி போட்டியில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரா பாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.

    முன்னதாக நடைபெற்ற 3, 4-ம் இடத்திற்கான மற்றொரு போட்டியில் புதுடெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணியும், நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் மோதின. இதில் 2 அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலை பெற்றன. பின்னர் வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 5:4 என்ற கோல் கணக்கில் ஷூட் அவுட் முறையில் புதுடெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணி வெற்றி பெற்று 3-ம் இடமும், நியூ டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி 4-ம் இடமும் பிடித்தது.

    முதல்பரிசு ரூ. 1 லட்சம்

    முதலிடம் பெற்ற புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணிக்கு லட்சுமி அம்மாள் அகில இந்திய நினைவு ஆக்கி கோப்பை மற்றும் ரூ. 1 லட்சத்துக்கான ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-ம் இடம் பெற்ற செகந்திரபாத், சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணிக்கு ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசு, 3-வது இடம் பெற்ற புதுடெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணிக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசு, 4-வது இடம் பெற்ற புதுடெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணிக்கு ரூ. 30 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசு மற்றும் நினைவு கோப்பை வழங்கப்பட்டது.

    மேலும் கால் இறுதி போட்டியில் விளையாடிய கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்.டி.ஏ.டி. அணி, சென்னை இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அணி, பெங்களூரு கனரா பேங்க் அணி, சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் ஆகிய அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 20 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது.

    போட்டிக்கான ஏற்பாடு களை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் துணை தலைவர், தாளாளர், இயக்குனர் மற்றும் முதல்வர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி கே.ஆர். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள் கே. ரகு, ஆர். ராம்குமார் மற்றும் ஆர். சிவராஜ், ஆக்கி பயிற்சி யாளர்கள், அனைத்துதுறை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • உத்தரபிரதேச அணி பெற்ற 2-வது வெற்றியாகும்.
    • டெல்லி அணி முதல் தோல்வியை தழுவியது.

    சென்னை:

    தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், தமிழ்நாடு,டெல்லி, கேரளா உள்பட 30 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    போட்டியின் 4-வது நாளான இன்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் 'எப்' பிரிவில் உள்ள உத்தர பிரதேசம்-டெல்லி அணிகள் மோதின. இதில் உத்தர பிரதேசம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    உத்தரபிரதேச அணியில் சந்தன் சிங் (4-வது நிமிடம்), அருண் விகாரி (19), மனிஷ் விகாரி (20) பரால் முகமது (26) கோல் அடித்தனர். டெல்லி அணி தரப்பில் கோவிந்த் சிங் 17-வது நிமிடத்தில் கோலை பதிவு செய்தார்.

    உத்தரபிரதேச அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே கேரளாவை 6-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. டெல்லி அணி முதல் தோல்வியை தழுவியது.

    'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இன்று மாலை 3.45 மணிக்கு அந்தமான் நிகோபாரை சந்திக்கிறது. தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் ஆந்திராவை 7-0 என்ற கணக்கில் வென்றது. 2-வது ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' செய்தது. கால் இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் தமிழக அணி அந்தமான் நிக்கோபாரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

    • விராட் கோலிக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.
    • விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருவதால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.

    இதன் காரணமாக தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாட விராட் கோலி முடிவு செய்துள்ளார். மேலும் தனது பேட்டிங்கில் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கருடன் இணைந்து அவர் பயிற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து ரஞ்சி போட்டியில் விளையாட இருக்கும் முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலியை வேறொருவரின் தலைமைக்கு கீழ் விளையாட வைக்காமல் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.

    ஆனால் அதனை மறுத்த விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது உள்ள சூழலில் டெல்லி அணியில் எந்தெந்த வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று தனக்கு தெரியாது என்றும் அதன் காரணமாக தானும் அணியில் ஒரு அங்கமாக இணைந்து சாதாரண வீரராக விளையாட விரும்புவதாகவும் விராட் கோலி கூறியுள்ளாராம்.

    • 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார்.
    • ஆயோஷ் பதோனி தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. கடந்த சில தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்திய அணியின் பேட்டிங் சொதப்பிய நிலையில், அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது. அதன்படி அனைத்து வீரர்களும் ரஞ்சி டிராபியில் விளையாடி வருகின்றனர்.

    அந்த வகையில் கழுத்து வலி காரணமாக ஓய்வு இருந்து வந்த விராட் கோலி, தற்போது ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக களமிறங்க உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார். சீனியர் வீரரான விராட் கோலிக்கு கேப்டன் பதவு கொடுக்க டெல்லி அணி நிர்வாகம் முன்வந்த நிலையில் அதனை கோலி நிகாரித்தார்.

    இதனால் ஆயோஷ் பதோனி தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது. வருகிற 30-ந் தேதி ரெயில்வே அணியுடன் டெல்லி அணி மோதுகிறது.

    இந்நிலையில் டெல்லி அணியுடன் விராட் கோலி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் பீல்டிங் செய்யும் வீடியோ என கோலி குறித்து பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த பயிற்சியின் போது அவரது ரசிகருக்கு தனது கையுறையை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

    • டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை தொடங்குகிறது.
    • டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.

    டெல்லி:

    12 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருக்கிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.

    இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி - ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நாளை அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.

    கடந்த வாரம் வரை டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை. ஆனால், தற்போது விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது. ஜியோ சினிமா விராட் கோலி ஆடும் போட்டியை ஒளிபரப்பும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம்.

    டெல்லி - ரெயில்வேஸ் அணிகள் ஆடும் போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படாமல் போனால் விராட் கோலியை பார்க்க வேண்டும் என அவரது தீவிர ரசிகர்கள் மைதானத்திற்கு வர முயல்வார்கள். எனவே, மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    விராட் கோலி பயிற்சி செய்யும் போதே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அருண் ஜெட்லி மைதானத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புரோ கபடி லீக் போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றனர். #ProKabbadi

    விசாகப்பட்டினம்:

    புரோ கபடி ‘லீக்’ போட்டி தற்போது விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 106-வது ஆட்டத்தில் மும்பை- டெல்லி அணிகள் மோதுகின்றன.

    ’பிளே ஆப்’ சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட மும்பை அணி 15-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணி 11-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    டெல்லி அணி ஏற்கனவே இந்த சீசனில் 2 முறை மும்பையிடம் தோற்று இருந்தது. இதற்கு பதிலடி கொடுத்து பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.

    பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்துவது டெல்லி அணிக்கு சவாலானதே.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டஸ்- உ.பி.யோதா அணிகள் மோதுகின்றன. தெலுங்கு டைட்டன்ஸ் 8-வது வெற்றிக்காகவும், உ.பி. யோதா 5-வது வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

    உ.பி. அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. தெலுங்கு டைட்டர்ன்ஸ் அந்த அணியை வீழ்த்தி முன்னேற்ற பாதைக்கு செல்லும் வேட்கையில் உள்ளது.

    ஆபத்தான தருணத்தில் பெண்களை பாதுகாக்க சாதனம் உருவாக்கிய டெல்லி ஐ.ஐ.டி. மற்றும் டெல்லி தொழில் நுட்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு 10 லட்சம் டாலர் (சுமார் ரூ.6¾ கோடி) பரிசு வழங்கப்பட்டுள்ளது. #WomenSafetyDevice
    புதுடெல்லி:

    எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் குறைந்த பாடில்லை. ஆங்காங்கே நடந்தபடியே உள்ளது.

    இந்த நிலையில், ஆபத்தான தருணத்தில் பெண்கள் சிக்கிக்கொண்டால், அதில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்து மீட்கப்படுவதற்கு உதவுகிற ‘சேபர் புரோ’ என்ற சாதனத்தை டெல்லியை சேர்ந்த ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனம் ‘லீப் வேரபிள்ஸ்’ உருவாக்கி உள்ளது.

    சிறிய ‘சிப்’ போன்ற இந்த சாதனத்தை பெண்கள் தங்களது ஆடை, அணிகலன்களில் அல்லது மற்றொரு சாதனத்தில் பொருத்திக்கொள்ள முடியும்.

    சேபர் புரோ’ சாதனத்தில் தங்களை ஆபத்பாந்தவர்களாக வந்து காக்கக்கூடிய 5 பேர் பற்றிய தகவல்களை பெண்கள் முன்கூட்டியே பதிவு செய்து தங்கள் ஆடை, அணிகலன்களில் அல்லது வேறு ஏதேனும் சாதனத்தில் பொருத்தி தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

    எந்த ஒரு ஆபத்தான சூழலிலும் அந்த சாதனத்தில் உள்ள பொத்தானை அழுத்தி விட்டால் போதும், அவர்கள் எந்த இடத்தில் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பது அவர்கள் பதிவு செய்து வைத்து உள்ள 5 பேருக்கும் போய்ச் சேர்ந்து விடும். அவர்கள், அந்தப் பெண்களை மீட்க நடவடிக்கை எடுப்பார்கள். எந்த தகவலையும் பேசி ஒலிப்பதிவு செய்தும் இதன்மூலம் அனுப்ப முடியும்.

    இந்த சாதனம், டெல்லி ஐ.ஐ.டி. மற்றும் டெல்லி தொழில் நுட்ப பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனத்துக்கு அனு மற்றும் நவீன் ஜெயின் பெண்கள் பாதுகாப்பு பரிசு கிடைத்து உள்ளது. பரிசு 10 லட்சம் டாலர் (சுமார் ரூ.6¾ கோடி) ஆகும்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ‘லீப் வேரபிள்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் மாணிக் மேத்தா, நிஹரிகா ராஜீவ், அவினாஷ் பன்சால் ஆகியோர் கூட்டாக பரிசை பெற்று கொண்டனர்.  #WomenSafetyDevice  #Tamilnews
    வேலூர் விமான நிலையத்தில் கட்டிடங்கள் அமைப் பது தொடர்பாக டெல்லி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    வேலூர்:

    மத்திய அரசின், ‘உதான்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவ தும் பயனற்ற நிலையில் உள்ள விமான நிலையங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 100 விமான நிலையங்களை மத்திய விமானப் போக்கு வரத்து ஆணையரக அதிகாரி கள் குழுவினர் ஆய்வு செய்த னர். தமிழகத்தில் வேலூர் மற்றும் ஓசூர், நெய்வேலியில் இருந்து புதிதாக சிறிய ரக விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப் பட்டது.

    அதன்படி வேலூரில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 டிக்கெட் கட்டணத்தில் பெங்களூரு, திருப்பதி, சென்னை ஆகிய நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் இயக் கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து வேலூர் விமான நிலையத்தில் சீரமைப்புப் பணிகளை தொடங்க தமிழக அரசும் தடையில்லா அனுமதி வழங்கியது.

    அதைத்தொடர்ந்து தென் மண்டல விமானப் போக்கு வரத்து ஆணையரக அதிகாரி கள் வேலூர் அப்துல்லா புரத்தில் உள்ள விமான நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டனர். விமான ஓடுதள பாதைக்கு கூடுதலாக நிலங்கள் தேவைப்படும் என்று அவர்கள், மாவட்ட நிர்வாகத் திடம் தெரிவித் தனர்.

    இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செங்கோட்டையன் தலைமை யிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்குச் சென்று, அங்குள்ள புறம்போக்கு நிலங் களை கையகப்படுத் துவது குறித்து ஆய்வு மேற்கொண் டனர். தொடர்ந்து கலெக்டர் ராமன் 55 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

    அதன்தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் வேலூர் விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது தொடர்பான சாத்தியகூறுகள் குறித்து டெல்லி மத்திய விமான போக்குவரத்து ஆணையரகத்தின் நிலம் அளவீடு மற்றும் தொழில் நுட்பக்குழுவை சேர்ந்த 3 பேர் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் சிக்னல் கட்டுப்பாட்டு அறை, பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வறைகள், ஓட்டல்கள், வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவை குறித்தும், விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலம், மலைப்பகுதிகள், கட்டிடங்கள், மரங்கள் போன்றவை விமானங்கள் தரையிறங்கும் போது தடையாக இருக்குமா? என்றும், மேலும் விமான நிலையம் மற்றும் தரையிறங்கும் விமானத்துக்கும் இடையே உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிக்னல் குறித்து அதிநவீன எந்திரங்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

    தற்போது விமான நிலையம் சீரமைப்பதற்கான ஒப்பந்தம் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து சிவில் என்ஜினீயரிங் குழுவை சேர்ந்த 3 பேர் நேற்று ஆய்வுப்பணிக்காக வேலூர் விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் விமான நிலையத்தின் நிலப்பரப்பு, ஓடுதளம் அமையும் பகுதி, கட்டிடங்கள் அமையும் பகுதி, விமானம் இறங்கி ஏறும் வகை யிலான ஓடுதளம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    ஒருவார காலம் இந்த ஆய்வு கள் நடைபெறும் என்றும், ஆய்வுக்கு பின்னர் 6 அடி உயரம், 850 மீட்டர் அளவுக்கு மொரம்பு மண் கொட்டி ஓடுதள பாதைகள் அமைக் கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
    ×