என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Depression"

    • நடனம் உடலை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல் சமநிலையையும் பராமரிக்கிறது.
    • மன வலிமையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

    நடனம்...வேகமாக மாறும் முகபாவனைகள் இசைக்கு ஏற்ப கால்கள் மற்றும் கைகளின் தாள அசைவுகளால் கவரப்படுகிறது.

    எந்த வகையான நடனமும் ஒரு அற்புதமான கலை. இது உடலை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் சமநிலையையும் பராமரிக்கிறது.

    இருப்பினும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைப் போக்க நடனம் ஒரு மருந்தாக செயல்பட முடியும் என்று சர்வதேச விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் முடிவு செய்துள்ளது. இது மன வலிமையை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


    ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மன அழுத்தத்தில் நடனத்தின் விளைவைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். நடனம் மற்றும் மன அழுத்த மேலாண்மைக்கு இடையிலான உறவு ஆராயப்பட்டது.

    நடனத்தால் உளவியல் ரீதியான நன்மைகள் உள்ளன. மன வலிமையும் உற்சாகமும் அதிகரிக்கும். நடனக் கலைஞர்களில் உணர்ச்சி வெளிப்பாடு மேம்படுகிறது.

    நடனம் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின்கள் போன்ற ஹார்மோன்களை வெளியிட உதவுகின்றன.

    இசையுடன் இசைந்து நிகழ்த்தப்படும் நடன அசைவுகள் மன அழுத்தம், பயம் சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கின்றன. கார்டிசோல் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டு இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

    உடலின் இயற்கையான மன அழுத்த நிவாரண வழிமுறைகளை திறம்பட பயன்படுத்துவதற்கு நடனம் ஒரு அற்புதமான கருவியாகும்.

    தினசரி மன அழுத்தங்களை திறம்பட சமாளிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. வழக்கமான பயிற்சிகளைப் போல் இல்லாமல் நடனம் இசை மற்றும் தாளத்தை உள்ளடக்கியது.

    நடனத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படும் படிகள் அடிக்கடி மாறுகின்றன. இவற்றை நினைவில் வைத்துக் கொண்டு தகுந்த முறையில் மாற்ற வேண்டும்.


    இந்த பயிற்சி மூளைக்கு ஒரு வகையான உடற்பயிற்சி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தச் சூழலில்தான் சமூக சுகாதாரத் திட்டங்களில் நடனத்தை ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

    திட்டங்களில் நடனத்தை ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.நடனமாடும்போது செரோடோனின் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

    நடனம் உடலில் உள்ள அனைத்து தசைகளையும் ஈடுபடுத்துகிறது. நம் உடல்களை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
    • சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது.

    இன்றைய அவசர யுகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆண்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்கின்றனர். ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

    எனவே, ஆண்களைப் போலவே பெண்களும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், உறவினருடன் சுமுக உறவு இல்லாதது என பல பிரச்சினைகள் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றன. முதியவர்கள் தனிமை, வெறுமை, இழப்பு, பண நெருக்கடி, நலிந்துவரும் உடல் நிலை போன்றவற்றால் மன அழுத்தம் வந்து அவதிப்படுகிறார்கள்.

    இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.

    நடுத்தர மற்றும் உயர்மட்ட மேலாண்மை பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அலுவலகத்தில், சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும், அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

    சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பிலோ, சக ஊழியர்கள் மட்டத்திலோ சரியான ஒத்துழைப்பு கிடைக்காத போது, துவண்டு விடுகின்றனர்.

    மேலும், தங்கள் லட்சியத்தை அடைவதற்காக, தங்கள் சொந்த வாழ்க்கையையும், அலுவலக பணிகளையும் பக்குவமாக கையாளுகின்றனர். எனினும், ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.

    • மனதில் குழப்பம் ஏற்படும் போது செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
    • மனஇறுக்கத்தை உடைக்க நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.

    மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதவை. எதையும் சாதிக்கும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு திறமையும், ஆற்றலும் பெற்று உள்ளனர். அது என்ன என்று கண்டறிந்து வாழ்க்கையில் பலரும் உயர்ந்த நிலையை அடைகின்றனர். ஆனால் எதிர்பாராத நிகழ்வுகளில் எடுக்கும் சில முடிவுகள் சிலரது வாழ்க்கையின் திசையை அடியோடு மாற்றி விடுகிறது.

    எனவே எந்த நிலையிலும் நிதானமாக, மன சமநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆனாலும் பல நேரங்களில் நிதானம் தவறி ஆத்திரத்தில், விரக்தியின் உச்சத்தில் செய்யும் செயல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதாவது தங்களின் உயிரை தானே மாய்த்து கொள்ளுதல் அல்லது மற்றவரின் உயிரை பறிப்பதாகவும் அமைந்து விடுகிறது.

    இதற்கு உளவியல் சிக்கலே காரணமாக உள்ளது. ஒரு பிரச்சினையில் சிக்கி தவித்து, அதில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் சிலர் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். அது தற்கொலையாக, கொலையாக மாறி விடுகிறது.

    தேசிய குற்ற ஆவண காப்பகம்

    உளவியல் சிக்கல்களை சந்திக்கும் நபர்கள் வேறுபட்ட சமூக, பொருளாதார, வாழ்வியல் நிலைகளில் இருக்கிறார்கள். அவர்க ளின் தவறான முடிவுகள், தனிப்பட்ட அவர்களது குடும்பத்தை மட்டுமின்றி சமூகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே கொலை, தற்கொலை என்பது சமூகத்தில் தடுக்க முடியாத பெரும் நோயாக மாறி விட்டது. அதன் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் (2021-ம் ஆண்டு) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

    அந்த வகையில், நாட்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில், மராட்டியத்தில் 22,207 பேர், தமிழ்நாட்டில் 14,965 பேர், மத்திய பிரதேசத்தில் 14,965 பேர் தற்கொலை செய்தனர். அதாவது 2021-ல் ஒரு லட்சம் பேரில் சராசரி 26 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

    கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் 29,272 கொலைகள் நடந்து உள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் 3717 பேர், பீகாரில் 2799 பேர், மராட்டியத்தில் 2330 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1686 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். 2022-ம் ஆண்டு 7 மாதங்களில் மட்டும் 940 கொலைகள் நடந்து உள்ளன.

    தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக 6,064 குற்றங்களும், பெண்களுக்கு எதிராக 8,501 குற்றங்களும், முதியவர்களுக்கு எதிராக 1841 குற்றங்களும். பட்டியலினத்தவருக்கு எதிராக 1377 குற்றங்களும், பழங்குடியினருக்கு எதிராக 39 குற்றங்களும் நடைபெற்று உள்ளது.

    தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையே மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதில் கவலை கொள்ளும் அளவுக்கு 18 முதல் 45 வயதினர் வரை தற்கொலை அதிகமாக உள்ளது. இது போல் குழந்தைகளை கொன்று குடும்பத்துடன் தற்கொலை செய்வதும் சமூகத்தில் விபரீத முகத்தை காட்டுவதாக இருக்கிறது.

    காரணம் என்ன?

    பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் மேம்பட்ட நகரமான மும்பையில் தான் நாட்டிலேயே தற்கொலைகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் குடும்ப பிரச்சினை, தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு, தொழில் பிரச்சினைகள், தோல்வி, மது, போதை பழக்கம், நோய் போன்றவை தற்கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

    எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் அதில் இருந்து மீண்டு வர ஏராளமான வழிகள் உள்ளன. ஆனாலும் உளவியல் ரீதியாக சமூகத்தில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்பவர்கள் தன்னையே அழித்துக் கொள்ளும் விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். அது போல் சமூகத்தின் மீதான ஆத்திரத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதற்கு அவர்களின் உளவியல் சிக்கல்களே காரணமாக இருக்கிறது.

    (பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு பதிலான வாழ்வில் இருந்து விடுபடுவதில் எந்த பயனும் இல்லை. எனவே பிரச்சினை களை எதிர்கொள்ள இளம்வயதினருக்கு கற்றுத் தர வேண்டும். நல்லவை, கெட்டவைகளை எடுத்து கூறி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். இதுவே தற்போதைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

    கேட்டது கிடைக்க வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும் என்ற மனநிலை இளைஞர்களிடம் பரவிக் கிடக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்வில் தோல்வி, அவமானம், தடைகள், இழப்பு களை தாங்கியும் தாண்டியும் தான் முன்னேறி செல்ல வேண்டியது இருக்கிறது. அதற்குரிய மனநிலையை வளர்த்து கொண்டால் துயரமான முடிவுகளை சந்திக்கும் நிலை ஏற்படாது.)

    எனவே எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளவும், தோல்வியை கடந்து செல்லவும் உளவியல் ரீதியாக தயார் ஆகி விட்டால் மனித வாழ்வு மேம்பட்டதாக மாறி விடும்.

    மனஅழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள்

    எந்த ஒன்றும் இறுதியானது அல்ல. எதில் இருந்தும் மீண்டு வர முடியும். எந்தவிதமான இழப்புகளையும் ஈடுசெய்ய மாற்று வழிகள் உள்ளன. மன உளைச்சல் ஏற்படும் போது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மனஅழுத்தம் நீடித்தால் தூக்கமின்மை, ரத்த அழுத்தம், சோர்வு உள்பட உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு நோயில் தள்ளி விடும்.

    எனவே மனதை சம நிலையில் வைத்துக் கொள்ள புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். சிந்தனை, செயல்பாடு மற்றும் வாழ்க்கை நடைமுறையிலும் மாற்றம் செய்தால் மனஉளைச்சல் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

    மனஅழுத்தம் தோன்றினால் கார்ட்டிசோல் என்ற ஹார்மோன் உடலில் அதிகமாக சுரக்கும். ஆனால் சிரிக்கும் போது கார்ட்டிசோல் சுரப்பு குறைந்து விடும். மூளையை தூண்டுவதற்கு உதவும் எண்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும். எனவே சிரிப்பு என்பது அறிவியல் ரீதியான மருந்து என்பதை உணர வேண்டும்.

    மனநல ஆலோசனை

    உடற்பயிற்சி, தியானம், மூச்சுப்பயிற்சி, இசை, சினிமா, பொழுது போக்கு, விளையாட்டு மட்டுமின்றி சரியான நேரத்துக்கு சாப்பிடு வது, 8 மணி நேரம் தூங்குவது போன்றவற்றை கடை பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் மன அழுத்தம் குறையும். எந்த கேள்வியையும் புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும். கோபத்தோடும், வெறுப்போடும் எதை அணுகினாலும் தோல்வியே கிடைக்கும். எனவே பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் பதற்றமின்றி நிதானமாக செயல்பட வேண்டும்.

    அவசரத்தில் எதையும் பேசி விடவோ, எந்த முடிவுகளையும் எடுத்து விடவோ கூடாது. மனஇறுக்கத்தை உடைக்க நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். மனம் குழப்பம் ஏற் படும் போது தங்களுக்கு பிடித்த லட்சிய வாசகங்களை நினைவில் கொண்டு தைரியமாக செயல்பட வேண்டும். தீவிர மனஅழுத்தம் ஏற்பட்டால் உரிய மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மனதில் குழப்பம் ஏற்படும் போது செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே பிரச்சினைகள் ஏற்படும் போது அதை சரியான வகையில் அணுகி தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கு மாறாக பிரச்சினைகளில் மூழ்கி குழப்பிக் கொண்டால் முடிவுகள் விபரீதமாகவே இருக்கும். எனவே எதையும் தீவிரமாக ஆராய்ந்து செயல்பட்டால் யாருக்கும் சிக்கல் இன்றி மற்றவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நீரோடை போல் வாழ்வு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    • குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள்.
    • குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

    நவீன தொழில்நுட்ப காலத்தில் பிறந்து வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பின் மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். வயதிற்கும், மனவளர்ச்சிக்கும் தொடர்பு இல்லாத அளவிற்கு பல நேரங்களில் நடந்து கொள்கிறார்கள். ஆனால் உறவு குறித்த புரிதலோ, வாழ்வின் நடைமுறை சிக்கல்களோ அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

    குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள். இதனால் எது சரியானது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது. ஏதோ ஒரு கோபத்தில் லேசாக கண்டித்தாலே தாங்கி கொள்ள முடியாத மனநிலைக்கு ஆளாகின்றனர்.

    குழந்தை எது கேட்டாலும் அதை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறார்கள். குழந்தைகளை கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். இந்த இடத்தில் தான் குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. தான் நினைத்ததை அடைய அடம் பிடிக்கும் குழந்தைகளால் யாரோடும் இணங்கி செல்லவோ, விட்டுக் கொடுத்து போகவோ முடிவது இல்லை.

    குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து தான் எதையும் முதலில் கற்றுக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் நம்பிக்கையோடு அணுகும் வகையில் பெற்றோரின் செயல்பாடு இருக்க வேண்டும். அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் எந்த பிரச்சினை என்றாலும் தீர்வு கேட்டு அணுகுவார்கள். மனரீதியாக சிரமப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்து தேற்ற முடியும். தோல்வியே கண்டாலும் தொடர்ந்து முயன்று வெற்றி வீரர்களாக வலம் வர குழந்தைகளை தயார்படுத்த முடியும்.

    • அதிக வலைத்தள பயன்பாடுகள் தற்கொலைக்கு வித்திடக் கூடியவையாக இருக்கின்றன.
    • தற்கொலை செய்து கொள்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள்.

    தற்கொலை நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் பேர் தற்கொலையால் செய்துகொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 15 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் இறப்பதற்கான காரணங்களில் தற்கொலை 2-வது காரணமாக இருக்கிறது. நம் நாட்டில் லட்சத்துக்கு, 16 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 3 சதவீதம் தற்கொலைகள். இதில் 40 சதவீதம் பேர் ஆண்கள், 60 சதவீதம் பேர் பெண்கள். தற்கொலைக்கு முயற்சிப்பவர்களில் 20-ல் ஒருவர் இறந்து விடுகிறார். தற்கொலை எண்ணம் ஏற்பட முக்கியக் காரணம் மனநோய்களும் நரம்பு கோளாறுகளும்தான்.

    அடுத்ததாக மது, போதைப்பொருள் பழக்கம், புகைக்கும் பழக்கம், தகாத பாலுறவு, சூதாடுதல், திருட்டு, சமூகவிரோத குணம், கடன் வாங்குதல் உள்ளிட்டவை தற்கொலையை தூண்டுகின்றன. இதைத்தவிர வேலையின்மை, குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை, தேர்வில் தோல்வி, வேலை செய்யும் இடங்களில் துன்புறுத்தல், குடும்பங்களில் சித்ரவதை, இளம்வயது திருமணங்கள், பாலியல் தொந்தரவுகள் ஆகியவையும் தற்கொலைக்கு காரணங்கள்தான்.

    அதிகச் செல்போன், வலைத்தள பயன்பாடுகள்கூட தற்கொலைக்கு வித்திடக் கூடியவையாக இருக்கின்றன. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற கிடைக்கும் எந்தச் சூழ்நிலையையும் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறார்கள்.

    தற்கொலைகளைத் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலகச் சுகாதார நிறுவனமும் சர்வதேச தற்கொலை தடுப்புக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ந் தேதியை உலகத் தற்கொலை தடுப்பு நாளாக அனுசரித்து வருகின்றன. 2003 முதல் இது கடைபிடிக்கப்படுகிறது. குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளை பெருமளவு தடுக்க முடியும் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    • கிருஷ்ணமூர்த்தி அதே பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
    • கிருஷ்ண சாமி மட்டும் மாதம்பட்டி யில் கொத்தனார் வேலை செய்து கொண்டு வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மாதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 50) அந்த பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு மகள் மகன் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி சென்று விட்டார். கிருஷ்ணசாமியின் மகனும் மனைவி கோமதியும் மாதம்பட்டு பகுதியிலிருந்து பெங்களூரு சென்று கூலி வேலை செய்து வருகின்றனர். 

    இந்நிலையில் கிருஷ்ண சாமி மட்டும் மாதம்பட்டி யில் கொத்தனார் வேலை செய்து கொண்டு வீட்டில் தனியாக இருந்து வந்தார். இவருக்கு முன்னதாகவே குடிபழக்கம் இருந்து வந்து ள்ளது. இதனால் அடி க்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டார். நேற்று மீண்டும் கிருஷ்ணசாமிக்கு வயிற்றுவலி அளவுக்கு அதிகமாக ஏற்பட்டு வலியால் துடித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணசாமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று கிருஷ்ணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வை த்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள்.
    • பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ''பதற்றம் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கக் கூடிய பிரச்னை அல்ல. குழந்தைகளும் தற்போது மிக அதிகமாக மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களுமே மறைமுகமான காரணமாக இருக்கிறார்கள். அது தெரிந்தோ அல்லது அவர்களுக்கே தெரியாமலோ...'' என்கிறார் உளவியல் மருத்துவரான லீனா ஜஸ்டின்.குழந்தைகளின் மனப்பதற்றத்தை ஏன் உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்கும், அதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்குமான ஆலோசனைகளை இங்கே முன் வைக்கிறார்.

    * உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?

    * ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?

    * தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ

    நடக்கிறதா?

    * உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?

    * பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?

    * சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,

    * உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?

    மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.பெற்றோர் செய்ய வேண்டியவைகல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.

    அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து காத தூரம் பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.

    சிகிச்சைகள்...

    நோயின் தீவிரத்தைப் பொறுத்து கவுன்சிலிங் செய்யப்படும். Cognitive behavioral therapy என்னும் எண்ணங்களை சரிபடுத்தும் சிகிச்சை மற்றும் Sensory Enrichment Therapy போன்ற சிகிச்சைமுறைகள் குழந்தையை முழுவதுமாக மனப்பதற்றத்திலிருந்து மீட்டெடுக்கும்!

    • குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.
    • விளையாடுவதற்கும் பெற்றோர் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

    மாறிவரும் வாழ்க்கைகசூழ்நிலையால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதை அவர்கள் வெளிப்படையாக சொல்வதில்லை. எந்தவித காரணங்களும் இல்லாமல் குழந்தைகள் வெளிப்படுத்தும் அழுகை, கோபம், எரிச்சல், கவலை, போன்ற உணர்வுகளின் வழியாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடியும்.

    பெற்றோருக்கு இடையே ஏற்படும் மோதல்கள், குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல், உடல் நலக்குறைபாடு, தேர்வில் ஏற்படும் தோல்வி போன்ற காரணங்களாலும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

    குழந்தைகளிடம் பேசுவதற்கும் விளையாடுவதற்கும் பெற்றோர் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் பிணைப்பு அவர்களை மனம் விட்டு பேச வைக்கும். இதன் மூலம் குழந்தைகளின் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்க்க முடியும்.

    • காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    • ஒரு நாளைக்கு 6 கிராம் அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மாரடைப்பு ஏற்படுவ தற்கான காரணங்களான வாழ்க்கைச் சூழல், பணிச்சுமை, தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற உணவு முறை, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இவை அனைத்தாலும் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைப் பதோடு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும் என்கிறார் நெல்லை ஷிபா மருத்துவமனை இதயநோய் சிகிச்சை மருத்துவர் கிரிஷ் தீபக்.

    மன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.

    பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது திடீர் நெஞ்சுவலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கு பரவும்), மூச்சுதிணறல், வாந்தி, மயக்கம், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு நெஞ்சு வலி இல்லாமல், நெஞ்சு எரிச்சலோ அல்லது இடது கை குடைச்சலோ இருக்கும். இது மட்டுமல்லாமல் முதுகு எரிச்சல், வலது பக்க நெஞ்சுவலி, தாடைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வலி இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம்.

    மாரடைப்பை கண்டறிய

    இதய சுருள் படம் (ECG) எடுக்க வேண்டும். மேலும் ரத்தப் பரிசோதனை மூலமும் மாரடைப்பை கண்டறிய லாம். இதய ஸ்கேன் (ECHO) மூலம் நம் இதயத்தின் செயல்திறன், மாரடைப்பைக் கண்டறியலாம்.

    ஆஞ்சியோகிராம் / ஆஞ்சியோ பிளாஸ்டி

    ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்க்கும்போது இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்தால், கை வழியாக ஒரு சிறிய டியூப்பை செலுத்தி, அதன் மூலம் ஒரு பலூனை உட்செலுத்தி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று அதில் இருக்கும் கொழுப்பு படிவுகளை அகற்றி (விரித்து விடுதல்) அந்த இடத்தில் ஸ்டென்ட் வைத்து அடைப்பை சரி செய்யும் சிகிச்சை முறைக்கு ஆஞ்சியோபிளாஸ்டி.

    பைபாஸ் சர்ஜரி யாருக்கு தேவை?

    இதயத்திற்கான ரத்தக் குழாய்களில் 3 அல்லது 5 இடங்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பைபாஸ் சர்ஜரி பரிந்துரை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையினால் சுலபமாக மற்றும் வலி இல்லாமல் அடைப்பை அகற்றலாம்.

    இதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் என்ன?

    இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவு உப்பு, நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள சால மீன், வால்நட்ஸ், கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பு திராட்சை, தக்காளி போன்ற உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 6 கிராம் (3 டீஸ்பூன்) அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் ஒரு நாளைக்கு 4 முதல் 6 டீஸ்பூன் அளவில் சன் பிளவர் எண்ணெய், ரைஸ்பிராண்ட் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சுழற்சி முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மாரடைப்பை தடுக்க என்ன செய்வது?

    மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பை வராமல் தடுக்க முடியும். மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய முயற்சிப்பதோடு, முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ம ன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.

    மாரடைப்பை தடுக்க ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். தினசரி 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி அரை மணி நேரமாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் கிரிஷ் தீபக்.

    Dr. கிரிஷ்தீபக் MD, DM.,FNB இதய மருத்துவர், ஷிபா மருத்துவமனை 9442139292

    • இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
    • கூட்டமாக இருக்கும்போதும்கூட தனித்திருப்பதாக உணர்வது.

    இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார். இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியர்களில் மன அழுத்தத்துக்கான முதல் அறிகுறி வெளிப்படும் சராசரி வயது 31.9. வளர்ந்த நாடுகளில் இது இன்னும் குறைவான வயதாக இருந்தாலும், இந்தியாவில் இந்த சராசரி வயது தற்போது குறைந்து வருவது கவலையளிக்கிறது. பதின்பருவ வயதினரில் மன அழுத்த அறிகுறிகளை கொண்டிருப்பவர்களில் 45 சதவீதத்தினர் மது அல்லது போதைப்பொருளை நாடுகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 67 சதவீதத்தினர் தற்கொலை மனப்பான்மையை கொண்டிருக்கின்றனர். 17 சதவீதத்தினர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.

    எதைப் பார்த்தாலும் எதிர்மறை மனோபாவத்தை வெளிப்படுத்துவது, சோக உணர்வில் மூழ்கிக் கிடப்பது, எப்போதும் அதிக எரிச்சலுடன் இருப்பது, எல்லாவற்றின் மீதும் திடீர் ஆர்வக்குறைவு, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நடத்தை, குழு, கூட்டமாக இருக்கும்போதும்கூட தனித்திருப்பதாக உணர்வது.

    மன அழுத்தத்தால் மூளைக்குள் என்னதான் நடக்கிறது? மூளை பின்மேடு பகுதிதான் உணர்ச்சிகள், மனநிலை, நினைவு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்த நோயாளிகளிடம் இந்தப் பகுதியின் அளவு சுருங்கியிருக்கிறது. நார்எபிநெப்ரின் என்பது நரம்பு கடத்தி ஹார்மோன். இது அதிகமாக இருந்தால் சீஸோபிரெனியா (மனச்சிதைவு), குறைவாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும். செரடோனின் என்ற ஹார்மோன் குறைவாக இருந்தால் மன அழுத்தம், மனக்கலக்கக் கோளாறுகள் ஏற்படலாம்.

    மூளையின் முன்பகுதியில் உள்ள பெருமூளை, திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்றவற்றில் பங்களிக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது இயல்புக்கு மாறாக சோர்வடைந்து விடுகிறது. முன்தலை பெருமூளையின் வலது பாதி, எதிர்மறை உணர்ச்சியை உருவாக்க காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் மிகவும் பலவீனமாக இருக்கிறது.

    • பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லை.
    • பெண்களின் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும்.

    பெண்கள் ஒவ்வொரு பருவங்களுக்கு ஏற்றவாறு பொறுப்புகளும் அதிகரிப்பதால் பல பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது இல்லை. ஒரு பெண் பூப்பு அடையும் காலம் தொடங்கி, மகப்பேறு காலம், கடைப்பூப்பு காலம் என அனைத்து நிலைகளிலும் உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை எதிர்கொள்கிறாள்.

    பெண்கள் பூப்பு எய்திய காலம் தொடங்கி அவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும். இச்சத்து குறைவினால் உடல் சோர்வு, தலைவலி, மூச்சுவிட சிரமம், உடல் வீக்கம், முடி உதிர்வு, முறையற்ற மாதவிடாய் போன்ற பல குறிகுணங்கள் ஏற்படும். பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கீரை வகைகள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், அத்திப்பழம், முழு உளுந்து, கருப்பட்டி, ஈரல் வகைகள் இவைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களினால் அதிகரித்த பசி, எதிலும் நாட்டம் இன்மை, கோபம் போன்றவை ஏற்படலாம். பெரும்பாலான பெண்கள், இத்தகைய நேரத்தில் சத்தான உணவினை தவிர்த்து பாஸ்ட்புட்களை உண்பது உடல்நலத்தினை பாதிக்கும் செயலாகும். இத்தகைய உணவுப் பழக்கவழக்கங்களினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி பெரும்பாலான பெண்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பிரச்சினை, சினைப்பை நீர்கட்டி, கருப்பை தசைக்கட்டி போன்றவைகளால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படலாம்.

    முறையற்ற மாதவிடாய் உள்ளவர்கள் எள்ளு மற்றும் கருஞ்சீரகத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் அந்த நீரினைப் பருகிவரலாம். மேலும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஐந்து நாட்களுக்கு மேல் அதிகப்படியான உதிரப்போக்கு உள்ளவர்கள் துவர்ப்புச் சுவை உடைய அத்திப் பிஞ்சு, மாதுளைப் பிஞ்சு, மாதுளை தோல் கஷாயம், வாழைப்பூ போன்றவற்றை உணவில் சேர்த்து வரலாம்.

    கர்ப்பப்பை வாயில் சதை வளர்ச்சி இருந்தால் ஒரே மாதத்தில் இரண்டு முறைகூட மாதவிடாய் ஏற்படும். உடலில் கொழுப்பு சேர்வதால் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வாயில் சதை வளர்வதைத் தூண்டும். ஒப்பீட்டு அளவில் இந்தப் பிரச்னை மிகச் சிலருக்கே ஏற்படுகிறது.

    • புவனகிரி அருகே வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அமிர்தவள்ளி கடந்த மாதம் 24-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உறவினரை திருமணம் செய்து கொண்டார்.

    கடலூர்:

    புவனகிரி அருகே தம்பிக்கு நல்லாம்பட்டினம் மெயின் ரோட்டுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி (விவசாயி) இவரது மகள் அமிர்தவல்லி (19) இவர் கடந்த மாதம் 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உறவினரை திருமணம் செய்து கொண்டார். இதனால் குடும்பத்தில் அனைவரும் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மகன் சந்திரசேகர், (23) வீட்டில் இருந்தவர் நேற்று முன்தினம் குரியமங்கலம் சாலையில் உள்ள மகராசன் தோப்பு வயலில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    தகவல் அறிந்த செல்வமணி மற்றும் உறவினர்கள் சந்திரசேகரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலையில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×