என் மலர்
நீங்கள் தேடியது "diarrhea"
- முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
- வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலாகத் உள்ளது.
பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெளிப்படையான பயன்பாடுகளை பொருத்த வரையில் தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் பரவக்கூடும்.

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் பிம்பிள்ஸ் பிரச்சனை இருக்காது.

கரும்புள்ளிகள் மறைய:
வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக்கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சை சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க:
முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற்படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவை. தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச்சை கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனை குணப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.
இயற்கை அழகு சிகிச்கை:
ஐம்பது சதவீத அளவிலான பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். இதற்கு பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணம். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.
வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போன்றவைகளை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைதேய்து குளிப்பாட்டினால் தேவையற்ற ரோமங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்துவிடலாம்.
- மதுரை சுற்று வட்டாரங்களில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாக்கிங் நிமோனியா என்ற புதியவகை தொற்றுபரவி தாக்கி வருகிறது.
- மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கையிருப்பில் உள்ளது.
சென்னை:
பருவமழை காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவது வழக்கம். எனவே, இந்த காலகட்டங்களில் பொதுமக்களும் உஷாராக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் பருவமழை தொடங்கி முடியும் தருவாயை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் வழக்கமான நோய் தொற்றுகளும் ஏற்பட்டுள்ளன.
சென்னையில் வடகிழக்கு பருவமழையால் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமை போன்றவற்றால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உடல் நல பிரச்சினைகளால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 40 சதவீதம் பேர் இத்தகைய பாதிப்புகளால் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜீரண மண்டலத்தை பாதிக்கும் இ-கோலி எனப்படும் பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை பாக்டீரியாக்கள் அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீர், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் புகுந்து விடுவதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
மதுரை சுற்று வட்டாரங்களில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாக்கிங் நிமோனியா என்ற புதியவகை தொற்றுபரவி தாக்கி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி என்று மருத்துவமனைக்கு வரும் சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மைக்ரோ பிளாஸ்மா நிமோனியா, கிளாடிமியா நிமோனியா, லெஜியோனல்லா வகை பாக்டீரியாக்கள்தான் காய்ச்சலை உருவாக்குகின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் வழியே இந்த வகை பாக்டீரியாக்கள் பரவுவதாக கூறப்படுகிறது.
இந்த நோய் பெரியவர்களை தாக்கினால் ஆபத்தையும் பெரிய அளவில் ஏற்படுத்தும். சிறியவர்களை தாக்கினால் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் ஆபத்து குறைவு என்கிறார்கள்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, மழைக்காலங்களில் நோய் தொற்றுகள் ஏற்படுவது வழக்கம்தான். பொது சுகாதாரத் துறையினரின் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
- சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.
- ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை.
உணவை உணவாக சாப்பிட்டாலும் சரி, மருந்தாக பயன்படுத்தினாலும் சரி, முதலில் நாம் கவனிக்க வேண்டிய்து அளவு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.
தினசரி நாம் சாப்பிடும் சாதாரண உணவுகளை நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும். சரி... அளவு என்பதை யார் நிர்ணயிப்பது?
ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி உடலுக்கு என்னென்ன சத்துக்கள் தேவைப்படுகின்றன என்பதையும், அந்த சத்துக்கள் எந்த அளவு தேவை என்பதையும் சராசரி கணக்கு மூலம் அறிவிக்கிறது.

உதாரணமாக இன்று காலை நாம் சாப்பிட்ட அளவும், மதியம் சாப்பிடுகிற அளவும் ஒன்றாக இருக்குமா, அதாவது இன்று காலை இரண்டு இட்லி சாப்பிட்டால், மறுநாள் காலையும் அதே அளவு தான் சாப்பிட வேண்டும்.
சரி சாப்பாடு போதும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? புரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றன. ஒன்று பசி அடங்கிவிடுவது, இன்னொன்று சாப்பிடும் போது ருசியும் மறைந்து போகும். இந்த அடையாளங்கள் தோன்றினால் வயிறு நிறைந்துவிட்டது என்று அர்த்தம்.
நம் உடல் தன்னுடைய தேவையையும், செரிக்கும் தன்மையையும் பொறுத்துதான் நம்முடைய பசியையும், அதன் அளவையும் தீர்மானிக்கிறது. அந்த அளவைப் பின்பற்றினால் வயிறு கனமான உணர்வு ஏற்படாது. சாப்பிட்டபின் களைப்பு ஏற்படாது. முன்னிலும் சுறுசுறுப்பாக நம் வேலைகளைத் தொடர முடியும்.

ஃபுட் பாய்சன் ஏற்பட காரணம்:
நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு ஓடுவது, நேரமின்மையைக் காரணம் காட்டி, அன்று சமைத்ததை ஆறு நாட்களுக்குக்கூட பதப்படுத்தி வைத்து சாப்பிடுவது, இவை எல்லாமும் தான் ஃபுட் பாய்சன் ஏற்படக் காரணங்கள். ஃபுட் பாய்சனை நாம் சாதாரணமாக விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல், சமைத்த உணவை முறையாகப் பதப்படுத்தாமல் இருத்தல், சாப்பிடும் தட்டை சரியாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படும். குறிப்பாக, வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை. அடுத்த நிலை, குமட்டல். அத்துடன், தலைவலி, ஜுரம் வருவது போல இருக்கும். கடைசி நிலை தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் உடனே நிறுத்தக்கூடாது.
படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கால், நமது உடலில் தேவையில்லாத உணவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது; அது நல்ல விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு அதனை வெளியேற்றத்தான் இப்படி நடக்கிறது.

ஃபுட்பாய்சனை தடுக்கும் வழிமுறைகள்:
* சமைப்பவர், சாப்பிடுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* சமைக்கப் பயன்படுத்தும், கத்தி, பலகை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள், கீரைகள், காய்கறிகள் உபயோகிக்கும் முன் நன்கு கழுவிவிட்டுப் பயன்படுத்துங்கள்.
* ஃபிரிட்ஜில் வைத்த உணவை எடுத்துப் பயன்படுத்தும் போது, அதன் ஜில்லென்ற தன்மை முற்றிலும் தீரும்வரை வெளியில் வைக்க வேண்டும்.
* இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், தனித்தனி பாத்திரங்களில் உணவு பொருளை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.

* உணவில் துர்நாற்றம் அடித்தாலோ பூஞ்சை இருப்பது தெரிந்தாலோ அதை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
* செல்லப் பிராணிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை தள்ளியே வைத்திருங்கள்.
- உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாயார் வினிதா பால் புகட்டியுள்ளார்.
- பெற்றோர்கள் குழந்தையை கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீஸ் சரகம் மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வினிதா (வயது23). இத்தம்பதிக்கு 2 மாதம் 10 நாட்களேயான ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு வயிற்கு ப்போக்கு ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாயார் வினிதா பால் புகட்டியுள்ளார். அப்போது மூச்சுத்திணறி குழந்தை மயங்கியுள்ளது.
உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.அங்கு பரிசோதித்து மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அருண்குமார் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,
- வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு உப்புசர்க்கரை கரைசல் பொட்டலங்களுடன் துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளது.
- பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தங்களது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் இரு வார முகாமினை கலெக்டர் வினீத் துவக்கி வைத்து குழந்தைகளுக்கு உப்புசர்க்கரை கரைசல் பொட்டலங்களுடன் துத்தநாக மாத்திரைகளை வழங்கினார். இது குறித்து கலெக்டர் கூறியதாவது :-
தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் சார்பாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பை தடுக்க, தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் இரு வார முகாம் திருப்பூர் மாவட்டத்தில் 18.7.2022 முதல் 30-7-2022 வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 2,21,689. குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரைக் கரைசல் பொட்டலங்கள் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு உப்புசர்க்கரை கரைசல் பொட்டலங்களுடன் துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளது.
இந்த இரு வாரங்களில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் வயிற்றுப்போக்கினை தடுக்கும் மற்றும் சிகிச்சை முறை பற்றியும், கைகழுவும் முறை மற்றும் அதன் அவசியத்தைப் பற்றியும், 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதன் அவசியத்தைப் பற்றியும் உப்புசர்க்கரை கரைசல் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஓ.ஆர்.எஸ்.மற்றும் துத்தநாக மாத்திரையினால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தங்களது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில்,துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், உதவி இயக்குநர் ((எஸ்.பி.எச்.ஐ.) கோவிந்தராஜ், உதவி திட்ட மேலாளர் மரு.ஜெயபிரியா, மாவட்ட பயிற்சிக்குழு மருத்துவ அலுவலர் ஸ்ரீனிவாஷ், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் புனிதா, மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும்.
- கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
உடுமலை:
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை வளர்த்தலும் பிரதான தொழிலாகும். அவ்வகையில், வளர்க்கப்படும் கால்நடைகள் பெரும்பாலும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இந்நிலையில் உடுமலை சுற்றுப்பகுதியில் பரவலாக மழை நீடித்தது. அதேநேரம், மழையால் விளையும் பசுந்தீவனங்களை கால்நடைகள் உட்கொள்வதால், கழிச்சல் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக பறித்த இலை தழைகளை நன்கு காய வைத்த பின் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-
தற்போதைய சூழலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல், பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். ஈரமான இடங்களில் கட்டி வைக்கப்படும் கால்நடைகளுக்கு கால் வீக்க நோய் ஏற்படும் என்பதால் காய்ந்த நிலப்பரப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பால் கறந்தவுடன் மாடுகளை சிறிது நேரம் கழித்த பின்னரே படுக்க வைக்க வேண்டும்.வழக்கத்திற்கு மாறான நிலையில் கால்நடைகள் இருந்தால் உடனடியாக கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதை சுற்றியுள்ள கரியாப்பட்டினம், சேட்டாக்குடி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பிடித்து குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்களுக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடுமையாக அவதியடைந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம், கரியாப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- எங்கள் பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமான முறையில் இல்லை. இதனால் அசுத்தமாக கலங்கலாக வரும் தண்ணீரை குடித்தவர்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடைய பீதியை ஏற்படுத்தி உள்ளது.
வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெருமளவில் தாக்குகிறது. இந்த நோய்க்கு குழந்தைகள் பலியாகின்றனர். இதுகுறித்த அறிக்கை சமீபத்தில் வெளியானது.
அதில், 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவை தடுக்க அதற்கான தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவ்வப்போது தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆனால் அதற்கான சரியான சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்படுவதில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pneumonia #ChildHealthWeek