என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DR Balu"

    • மீட்புப்பணிகள் போர்க்காள அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
    • கனமழை பாதிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளார்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் நான்கு மாவட்டங்களும் பலத்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது மீட்புப்பணிகள் போர்க்காள அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் சென்னை கனமழை பாதிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளார். 

    அதேபோல் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் சென்னை பாதிப்பு குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளார். மாணிக் தாகூர், சென்னை விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், மிச்சாங் போன்ற கடும் புயல் போன்ற இயற்கை பேரிடரை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

    • இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.
    • வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.

    இதில் பொதுமக்களின் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகையை அறிவித்து வழங்கியது.

    இந்நிலையில் அதே டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் 2 மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இரண்டு மாவட்டங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.6 ஆயிரம், குறைந்த பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.1000 நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கியது.

    அந்த சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக மழை வெள்ள பாதிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

    தமிழகத்தில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிவாரணத் தொகையாக ரூ.37,907.19 கோடி வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    ஆனால் இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.

    இதனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்து வதற்காக உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது.

    அமித் ஷாவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறும் குழு கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி டெல்லியில் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் குழுவை சந்திக்க உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து உள்ளார். அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    அமித்ஷாவை சந்திக்கும் குழுவில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு), பி.ஆர்.நடராஜன் (இந்திய மார்க்சிஸ்ட்), ரவிக்குமார் (வி.சி.க), நவாஸ்கனி (முஸ்லிம் லீக்), சின்ராஜ் (கொங்குநாடு மக்கள் கட்சி) ஆகிய 8 பேர் அமித்ஷாவை சந்திக்க செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அதை வலியுறுத்துவதற்காக உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை அவரது வீட்டில் சந்திக்க உள்ளோம் என்றார்.

    • யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
    • திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம்.

    "லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.

    ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.

    மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம். யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    தான் வகித்த பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாகத் தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்துச் சிக்கிக் கொண்டவர் பழனிசாமி. குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காகத் தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தவர் பழனிசாமி. சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறையினர் இவரது ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனை செய்தார்கள். டி.ஜி.பி.யே சிபிஐ விசாரணையில் சிக்கினார்.

    தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், 'முதலமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்' என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள். இப்படிப்பட்ட நீண்டதொரு 'குற்றப்பட்டியல்' கொண்ட பழனிசாமி, இன்று விடுத்த அறிக்கையில், பாவத்தைப் பற்றியெல்லாம் பாலபாடம் எடுத்துள்ளார்.

    மண்புழுவைப் போல ஊர்ந்து போய் நாற்காலியைக் கைப்பற்றி, துரோகக் குணத்தால் நம்பிக்கைத் துரோகம் செய்து, பின்னர் பாஜகவின் பாதம் தாங்கி, அதனைத் தக்க வைத்து, இன்று பாஜக அமைத்துக் கொடுத்த திருட்டு வழியில் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பழனிசாமிக்கு, பாவத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு யோக்கியதை உண்டா?

    திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் கழக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான்.

    பழனிசாமி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் செல்லாது, அது சட்டப்பூர்வமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது, சட்டப்பூர்வமான ஒரு சட்டத்தை உருவாக்கியது கழக அரசுதான். அந்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வந்தார் ஆளுநர் ரவி. அவர் அதனைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பினோம். ஒப்புதலைப் பெற்றோம். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்களைச் சந்தித்து பேசினார் ஆளுநர். அப்போது ஆளுநரைக் கண்டித்தாரா இந்த யோக்கியவான் பழனிசாமி?

    இப்போது ஏன் அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி?. தனது எஜமானர்களான பாஜகவைக் காப்பற்றுவதற்காக அறிக்கை விடுகிறார்!

    அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பணத்தைப் பறித்துள்ளது பாஜக. பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதன் மூலமாக, 'மிரட்டிப் பணம் பறிக்கும் பாஜக' என்று அகில இந்திய அளவில் பாஜக அம்பலப்பட்டுள்ளது. பாஜகவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இத்தகைய பாஜக பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா?

    'பாஜகவுடன் கூட்டணியே கிடையாது' என்று சொல்லும் பழனிசாமிக்கு, பாஜகவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை 'டெண்டர் மோசடி' பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

    நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்களாம்! பழனிசாமி சொல்கிறார். அவர் கைக்கு அதிமுக எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதலபாதாளத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பவர் அவர்தான். சொரணையற்ற பழனிசாமிக்கு எத்தனை தடவைதான் மக்கள் பாடம் புகட்டுவார்கள்?" என்று அவர் தெரிவித்துள்ளார்

    • கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார்.
    • கடைசிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.

    ஆலந்தூர்:

    'இந்தியா' கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து டெல்லியில் அந்த கூட்டணியின் கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார்.

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) கடைசிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்பேரில் இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    டெல்லி செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கையில் 'இந்தியா' கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெறும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    அப்போது அவரிடம், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அவர் இந்தியாவின் பிரதமர். என்ன வேண்டுமென்றாலும் செய்வார்' என்று கூறிவிட்டு சென்றார்.

    • டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடந்த உள்ளனர்
    • "இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது"

    இந்தியாவில் 7 கட்டங்களாக நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு இன்று(ஜூன் 1) கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு வலுவான எதிர்ப்புக் குரலாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் பிரதமர் வேட்பாளராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்தும் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடந்த உள்ளனர். இந்த கூட்டத்தில் தி.மு.க சார்பில் மாநிலங்களவை எம்.பி டி.ஆர்.பாலு கலந்துகொள்ள நேற்று (மே 31) விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

     

    இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் பாசிச ஆட்சியை வீழ்த்த இன்னும் சில நாடுகளே உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது இந்தியா கூட்டணியினர் விழுப்புடன் செயல்பட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

    பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

    தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். 

    பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! என்று பதிவிட்டுள்ளார்

    • டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி கொடுத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.
    • டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி மலைப்பகுதியில் இருந்து சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இந்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 29-ந் தேதி மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடந்தது. மேலும் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த தனித் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் உரையாற்றினர்.

    இது தொடர்பாக மக்களவையில் பேசிய விடியோவை எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி, ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
    • புதிய சட்டங்களின் பெயர்கள் இந்தியில் சமஸ்கிருதத்தில் இருப்பதை கண்டித்து பேசுவோம்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப உள்ள பிரச்னைகள் குறித்து பேசினார்.

    டி.ஆர்.பாலு கூறியதாவது:

    * யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.6-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறும்.

    * வக்பு சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும். இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாங்கள் நாடாளுமன்றத்திற்கு குரல் கொடுப்போம்.

    * ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

    * நிதி வருவாயில் மாநில அரசின் பங்கை முறைப்படி கொடுக்க வேண்டும் என்றும் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரியுள்ளோம்

    * இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.

    * இயற்கை பேரிடர் நிதியை வழங்குமாறு பிரதமருக்கு, முதல்வர் ஏற்கனவே பலமுறை கடிதம் மூலம் வலியுறுத்தினார். ஆனால் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசுவோம்.

    * தேர்தலின்போது பதிவு செய்யப்படும் வீடியோக்களை இனிமேல் வெளியிட மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு எதிராக குரல் கொடுப்போம்.

    * புதிய சட்டங்களின் பெயர்கள் இந்தியில் சமஸ்கிருதத்தில் இருப்பதை கண்டித்து பேசுவோம்.

    * தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க பிரதமர் தலைமையிலான குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்

    என்று தெரிவித்தார்.

    • இந்தாண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
    • இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பீகாரில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசிய திமுக மக்களவைக்குழுத் தலைவர் டி. ஆர்.பாலு, "பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்யும் பீகார் அரசுக்கு திட்டங்களை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது. டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டும் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

    ×