என் மலர்
நீங்கள் தேடியது "drinking poison"
- விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்தார்.
- தற்கொலை செய்து கொண்ட வாலிபர் அலெக்சாண்டருக்கு திருமணமாகி மனைவி லீலா உள்ளார்.
மதுரை
மதுரை மாகாளிப்பட்டி, கோதண்டராம் மில் ரோட்டை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அலெக்சாண்டருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அவர் திண்டுக்கல் மெயின் ரோடு, விளாங்குடி பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட வாலிபர் அலெக்சாண்டருக்கு திருமணமாகி மனைவி லீலா உள்ளார்.
- சம்பவத்தன்று பழனியம்மாள் மகன் முருகேசன் வீட்டுக்கு சென்று வீட்டு முன்பு உள்ள திண்ணையில் மயங்கி விழுந்தார்.
- மன வேதனையில் இருந்த பழனியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு காளியம்மாள், பழனியம்மாள் (60) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் காளியம்மாளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பழனியம்மாளுக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். பழனியம்மாள் ஒரு பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பழனியம்மாள் மகன் முருகேசன் வீட்டுக்கு சென்று வீட்டு முன்பு உள்ள திண்ணையில் மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசனின் மனைவி இது குறித்து முருகேசனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
முருகேசன் வீட்டிற்கு விரைந்து வந்து உறவினர்கள் மூலம் பழனியம்மாளை கார் மூலம் கவுந்தப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு பழனியம்மாள் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதில் மன வேதனையில் இருந்த பழனியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நோய்கொடுமையால் கணவன்-மனைவி இருவரும் மனமுடைந்து விஷம் குடித்தனர்.
- இதில் கணவர் பலியான நிலையில் மனைவி சிசிக்சை பெற்று வருகிறார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவில் தெற்குதெருவை சேர்ந்தவர் காமாட்சியப்பன்(83). இவருக்கு தவமணி(75) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கணவன்-மனைவி இருவரும் நந்தகோபாலன்தெருவில் வசித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக தவமணிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் பின்னர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியிலேயே மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மனைவியின் நிலையை பார்த்து கணவர் காமாட்சியப்பனும் கவலை யடைந்தார்.
இதனால் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நாம் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என அவர்கள் பேசி முடிவு செய்தனர். அதன்படி இருவரும் விஷம்குடித்து தங்கள் அறையில் மயங்கி கிடந்தனர். இன்று காலை அவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக மகன் ரவி வந்தார். வீட்டை தட்டியபோது கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து பின்பக்கமாக உள்ளே வந்து பார்த்தார்.
அப்போது காமாட்சியப்பன் மற்றும் அவரது மனைவி 2 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் வரும் வழியிலேயே காமாட்சியப்பன் உயிரிழந்தார். தவமணி மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இடுப்பு வலியால் மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கேடரை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). 4 வருடமாக இடுப்பு வலிக்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். எனினும் இடுப்பு வலி குணமாகவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்க்கும் போது வலது கணுக்காலில் மேல் காயம் ஏற்பட்டு வலியால் அவதி அடைந்து வந்தார். ஏற்கனவே இடுப்பு வலியால் மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாப்பாத்தியை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பாத்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தவளகுப்பம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- அப்போது குழந்தை வேலு விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி:
தவளகுப்பம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தவளகுப்பம் அருகே பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தை வேலு. (வயது 53) விவசாயி. இவருக்கு ரதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இளையமகன் கவிதாசன் தவளகுப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைவேலு ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதனால் அவருக்கு அடிக்கடி மயக்கம் வரும். இதற்காக அவருக்கு நேரம் தவறாமல் அவரது மனைவி ரதி சாப்பாடு தாயாரிப்பது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குழந்தை வேலு தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டார். அதற்கு ரதி சாப்பாடு தயாராவதாகவும் சற்று பொறுமையாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார்.
இதனால் மனைவியிடம் கோபித்துக்கொண்ட குழந்தைவேலு வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகு நேரமாக குழந்தை வேலு வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது குழந்தை வேலு விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை சிகிச்சைகாக ஜிப்மர் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தைவேலு பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து அவரது இளைய மகன் கவிதாசன் கொடுத்த புகாரின் பேரில் தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆனந்தன் கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆனந்தன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். வெளியூரிலிருந்து எப்போதாவது வீட்டுக்கு வரும் ஆனந்தன் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.300 கடன் பெற்று கொண்டு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் ஆனந்தன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அடுத்த கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து ஆனந்தன் மனைவி கீதாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
- சம்பவத்தன்று நந்தகுமார் திடீரென விஷம் குடித்துள்ளார்.
- இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோவை மாவட்டம் சர்க்கார் குள்ளம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (32). இவருக்கும் சத்தியமங்கலத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நந்தகுமார் கோவையில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார்.
பின்னர் கடந்த 18-ந் தேதி சத்தியமங்கலம் அடுத்த புத்தாண்டியூர் அய்யன் சாலையில் உள்ள பால்காரர் தோட்டத்தில் நந்தகுமார் தனது மனைவி சங்கீதாவுடன் குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நந்தகுமார் திடீரென விஷம் குடித்துள்ளார். இதுகுறித்து மனைவியிடம் நந்தகுமார் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா அக்கம் பக்கத்தினர் உதவி உடன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து கணவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நந்தகுமாரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நந்தகுமார் இறந்தார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுப்பிரமணி சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டின் முன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
- கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள சுண்டப்பாளை யம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (58). இவரு க்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சுப்பிரமணி யத்துக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் சுப்பிர மணியம் தொடர்ந்து மது அருந்தி வந்தார்.
இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்து உள்ளார். ஆனால், நோய் குணமாகாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டின் முன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
இதை கண்ட அவரது மகன் நாகராஜன் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது மகன் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
- சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.
பவானி
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கல்பாவி, பெரியகுரும்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லவேல்.
இவரது மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்லவேல் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது.
இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லையாம். இதனால் சுகன்யா மன முடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.
இதையறிந்த சுகன்யாவின் அக்கா சத்யா அளித்த தகவலின் பேரில் உடனடியாக அவரை அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுகன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மதுவுக்கு அடிமையானதாலும், நோய் பாதிப்பு காரணமாகவும் பூபதி மனமுடைந்து காணப்பட்டார்.
- இதன் காரணமாக பூபதி சம்பவத்தன்று இரவு சாணிப்பவுடரை கரைத்து குடித்துவிட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது கணவர் ரவி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர்களுக்கு ரேகா (25) என்ற மகளும், பூபதி (22) என்ற மகனும் உள்ளனர்.
11-ம் வகுப்பு வரை படித்துள்ள பூபதி செண்ட்ரிங் வேலை செய்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையான பூபதிக்கு இதய நோய் பாதிப்பும் இருந்து வந்துள்ளது.
இதனால் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் மதுவுக்கு அடிமையானதாலும், நோய் பாதிப்பு காரணமாகவும் பூபதி மனமுடைந்து காணப்பட்டார். அதன் காரணமாக பூபதி சம்பவத்தன்று இரவு சாணிப்பவுடரை (விஷம்) கரைத்து குடித்துவிட்டார்.
இதனால் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இளம்பெண்-மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்
விருதுநகர்
விருதுநகர் சின்னவாடியூரை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகள் சவுந்தரலட்சுமி(23). சம்பவத்தன்று ஆடு மேய்ச்சல் தொடர்பாக மகளை பெற்றோர் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சவுந்தரலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தரலட்சுமி இறந்தார். வச்சகாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள செங்மடை கிராமத்தை சேர்ந்தவர் அழகம்மாள்(72). இவரது மகன் ஜெயபாண்டி வௌிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாயும், மகனும் செல்போனில் பேசியபோது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அழகம்மாள் விஷம் குடித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மகள் நாகஜோதி கொடுத்த புகாரின்பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார்
- சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள எலவமலை சென்ன நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மாரசாமி (72). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னம்மாள் (60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் தங்களது மூத்த மகன் சரவணனுடன் வசித்து வந்தனர். மாரசாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 2 வருடங்களாக மாரசாமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வலி அதிகரித்து காணப்பட்டதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
ஆனால் அவரது நோய் தீராததால் கடும் அவதிக்குள்ளாகி வந்த மாரசாமி தன்னால் வலி தாங்க முடிய வில்லை என குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்த ன்று வழக்கம் போல அனைவரும் வேலை க்கு சென்று விட்டனர். மாலை யில் அனைவரும் வீடு திரும்பிய போது தங்களது தோட்டத்தில் மாரசாமியின் சைக்கிள் நிறுத்தியிருப்பதை பார்த்து அங்கு சென்று பார்த்துள்ள னர்.
அப்போது அங்குள்ள தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார். அவரிடமி ருந்து பூச்சிக் கொல்லி மருந்து (விஷம்) வாடை வீசியுள்ளது.
உடனடியாக அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை க்கு பின் உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.