என் மலர்
நீங்கள் தேடியது "Drunkenness"
- கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தீபா ரோஸ்லின் பிரசவத்திற்காக, தாய் வீட்டுக்கு சென்றார்.
- தாக்குதலில் காயம் அடைந்த சகோதரிகள் இருவரும் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில், மது போதை யில், மனைவி மற்றும் குடும்பத்தாரை தாக்கிய கணவர் மீது மனைவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் கீழையூரை சேர்ந்தவர் தீபா ரோஸ்லின் (வயது25). இவருக்கும், கீழ்மாத்தூர் சங்கர் (28) என்பவருக்கும், கடந்த சில ஆண்டு களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கு முன், தீபா ரோஸ்லின் பிரசவத்திற்காக, தாய் வீட்டுக்கு சென்றார். குழந்தை பிறந்ததும், சங்கர் அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன், சங்கர் மாமியார் வீட்டு க்கு வந்து தங்கி விட்டார். ஆனால், வேலை எதற்கும் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் வந்து சண்டை போடு வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 17-ந் தேதி வீட்டு சமையலுக்காக ஏதாவது வாங்கி வருமாறு சங்கரிடம் தீபா ரோஸ்லின் சொல்லியுள்ளார். அதன்படி வெளியே சென்ற சங்கர் மாலை 6 மணிக்குதான் வீட்டுக்கு சென்றுள்ளார். ஏன் தாமதம் என மனைவி தீபா ரோஸ்லின் கேட்டபோது, நீ என்ன என்னை கேள்வி கேட்பது என சண்டை போட்டதோடு, மனைவியை தாக்கியுள்ளார். தடுக்க வந்த மனைவியின் சகோதரி தீபிகாவையும் கத்தியால் குத்தியுள்ளார். மேலும் தீபா ரோஸ்லின் தந்தை, பாட்டி ஆகியோரையும் சங்கர்தாக்கினார். தாக்கு தலில் காயம்அடைந்த சகோதரிகள் இருவரும் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.அவர்கள் கொடு த்த புகாரின் பேரில், திரு.பட்டினம்போலீசார் வழக்கு பதிவுசெய்து சங்கரை தேடிவருகின்றனர்.
- குடிபோதையில் வந்த கணவனை மனைவி திட்டியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீராசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே வசனாங்குப்பம் சேர்ந்தவர் வீராசாமி (வயது 58).விவசாயி. சம்பவத்ன்று குடித்துவிட்டு வீராசாமி வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அவரது மனைவி சுமதி குடிபோதையில் வந்த கணவர் வீராசாமியை திடீரென்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீராசாமி விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீராசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கல்வராயன்மலை பகுதியில் குரும்பாலூர், குரும்பாலூர் ஏரிக்கரை உள்ளிட்ட மலை கிராம பகுதியில் சாராயம் காய்ச்சுவதாகவும், விற்பதாகவும் கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட எஸ்பி பகலவன் உத்தரவின்பேரில் கச்சிராய பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மேற்பார்வையில் கரியாலூர் சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சாராய ரெய்டு செய்தனர்.
கரியாலூர் 5 சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், தலைமை காவலர் மாரியப்பன் உள்ளிட்ட போலீசார் குரும்பாலூர் மற்றும் ஏரிக்கரை பகுதியில் சாராய ரெய்டு செய்தனர்.
அப்போது 4 பேரல்களில் இருந்த 2000 லிட்டர் ஊறல் மற்றும் 500லிட்டர் விஷ சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இதுகுறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, அருணாசலம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம்.
- அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 40) விவசாயி இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம். நேற்று அதே பகுதியில் கோவில் திருவிழா நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை அருள் செல்வம் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன் மனைவியிடையே வாய் தகராறு ஏற்பட்டு குடும்பத் தகராறாக மாறியது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருள் செல்வம் தனது வீட்டின் முன்னாள் இருந்த மற்றொரு கூரை வீட்டிற்கு சென்று அங்கு மனைவி சேலையால் தூக்கில் தொங்கினார்.
இதைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அருள் செல்வம் மனைவி மஞ்சமாதா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி சுபஸ்ரீ க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- அவரது கணவரிடம் தினமும் குடித்துவிட்டு வருவதால் இந்த மாத வாடகை எப்படி கட்டுவது என்று கேட்டுள்ளார்.
நீடாமங்கலம்:
திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி காவல் சரகம் எஸ் புதூர், மேல அலங்கன் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் விஜய்(28). சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி சுபஸ்ரீ க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுபஸ்ரீ அவரது கணவரிடம் தினமும் குடித்துவிட்டு வருவதால் இந்த மாத வாடகை எப்படி கட்டுவது என்று கேட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவிடைமருதூர் போலீசார் விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திண்டிவனம் அருகே குடிபோதையில் ஆசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- வீட்டின் அருகில் உள்ளவர்கள் செந்திலை சென்று பார்த்தபோது அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (வயது 45) கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த இவர்கள் மனைவி கடந்த ஒரு மாதம் முன்பு அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று இரவு செந்தில் மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது செல்போன் மூலம் மனைவியிடம் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறினார். இதை கேட்ட அதிர்ச்சடைந்த செந்தில் மனைவி அவர் கணவர் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தார்.
உடனே வீட்டின் அருகில் உள்ளவர்கள் செந்திலை சென்று பார்த்தபோது அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார். உடனே அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற பல்வேறு இடங்களில் மது போதைகளினால் பல்வேறு தற்கொலை முயற்சிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.