search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Duleep Trophy 2024"

    • இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
    • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் சென்னைக்கு நாளை வருகை தர உள்ளனர்.

    அனந்தபுர்:

    இந்திய முன்னணி வீரர்கள் 4 அணியாக பிரிக்கப்பட்டு சிவப்பு நிற பந்தில் நடக்கும் முதல்தர கிரிக்கெட்டான துலீப் கோப்பை போட்டியில் விளையாடுகிறார்கள். இதன் 2-வது கட்ட ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபுரில் நாளை தொடங்குகிறது. முதலாவது லீக்கில் ஆடிய ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோர் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதால், துலீப் கோப்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் சென்னைக்கு நாளை வருகை தர உள்ளனர்.

    சுப்மன் கில் இந்திய ஏ அணியின் கேப்டனாக இருந்தார். அவர் தேசிய அணிக்கு திரும்புவதால் மயங்க் அகர்வால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கில், ராகுல், ஜூரெல், குல்தீப், ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதிலாக இந்திய ஏ அணிக்கு பிரதாம் சிங், அக்ஷய் வாட்கர், ஷாய்க் ரஷீத், ஷம்ஸ் முலானி, அகிப் கான் தேர்வாகியுள்ளனர்.

    அதே சமயம் 16 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் இருவர் மட்டும் துலீப் கோப்பை அணியிலும் தொடர்ந்து நீடிக்கிறார்கள். அதாவது அவர்கள் 2-வது சுற்றில் ஆட உள்ளனர். இதன் மூலம் அவர்கள் இருவரும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் களம் காணும் இந்திய அணியில் இடம் பெறமாட்டார்கள் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

    இந்திய 'பி' அணியில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் இடத்துக்கு சுயாஷ் பிரபுதேசாய், 'அதிரடி மன்னன்' ரிங்கு சிங் அழைக்கப்பட்டுள்ளனர். டி அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக நிஷாந்த் சிந்துவும், ஏற்கனவே காயத்தால் விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக வித்வாத் கவிரப்பாவும் சேர்க்கப்பட்டு உள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய 'சி' அணியில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை.

    • இந்தியா ஏ அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பெங்களூரு:

    துலீப் கோப்பை தொடர் சமீபத்தில் தொடங்கியது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி 321 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் முஷீர் கான் சிறப்பாக ஆடி சதமடித்து 181 ரன்னும், நவ்தீப் சைனி 56 ரன்னும் எடுத்தஉள்ளனர்.

    இந்தியா ஏ அணி சார்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும், ஆவேஷ் கான், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஒருவரும் அரை சதம் அடிக்கவில்லை. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா பி அணி சார்பில் முகேஷ் குமார், நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    90 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா பி அணி இரண்டாவது இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் கடந்து 61 ரன்னும், சர்ப்ராஸ் கான் 46 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா பி அணி சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 275 ரன்களை இலக்காகக் கொண்டு இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணி 198 ரன்களில் ஆல் அவுட்டானது. கே.எல்.ராகுல் 57 ரன்னும், ஆகாஷ் தீப் 43 ரன்னும் எடுத்தனர். இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பி அணி அபார் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது முஷீர் கானுக்கு அளிக்கப்பட்டது.

    • மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ருதுராஜின் காலில் விழுந்து வணங்கினார்.
    • 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.டோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்தார்.

    துலீப் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில், ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது.

    அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா டி அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்தியா சி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் எடுத்தது.

    2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா டி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    இப்போட்டி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ருதுராஜின் காலில் விழுந்து வணங்கினார். இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.டோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்ததை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா டி அணி 206 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் ஷ்ரேயஸ் அய்யர், தேவ்தத் படிக்கல் அரை சதமடித்தனர்.

    புதுடெல்லி:

    துலீப் கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது. டாஸ் வென்ற சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் அரை சதம் கடந்து 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சி அணி சார்பில் வைஷாக் 3 விக்கெட்டும், அனுஷ் காம்போஜ், ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா சி அணி 62.2 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் அரை சதம் அடித்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார். அபிஷேக் 34 ரன்னில் அவுட் ஆனார்.

    இந்தியா டி சார்பில் ஹர்சித் ரானா 4 விக்கெட்டும், அக்சர் படேல், சரண் ஜெயின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    4 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறினர்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷ்ரேயாஸ் அய்யர்-தேவ்தத் படிக்கல் ஜோடி 53 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 54 ரன்னில் அவுட்டானார்.

    4-வது விக்கெட்டுக்கு இணைந்த தேவ்தத் படிக்கல்-ரிக்கி புய் ஜோடி 73 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி 49 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியா சி அணியை விட 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா சி அணி சார்பில் மனவ் சுதர் 5 விக்கெட்டும், விஜய்குமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்தியா சி அணியில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 72 ரன்கள் விளாசினார்.
    • இந்தியா டி அணி தரப்பில் ஹர்சித் ரானா 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

    துலிப் கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி களமிறங்கிய டி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் அரை சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சி அணி தரப்பில் வைஷாக் 3 விக்கெட்டும் அனுஷ் காம்போஜ் ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதனையடுத்து இந்தியா சி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ்- சுதர்சன் களமிறங்கினர். சுதர்சன் 7 ரன்னிலும் ருதுராஜ் 5 ரன்னில் வெளியேறினர். அடுத்து வந்த ஆர்யன் ஜூயல் 12, ரஜத் படிதார் 13 என ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் - அபிஷேக் போரல் ஜோடி பொறுப்புடன் விளையாடிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் 34 ரன்னில் அவுட் ஆனார். மானவ் சுதர் 1, ஹிருத்திக் ஷோக்கீன் 5, விஜய்குமார் வைஷாக் 1 என வெளியேறினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திரஜித் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அவர் 72 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா சி அணி 62.2 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியா டி தரப்பில் ஹர்சித் ரானா 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

    • டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • இந்தியா பி அணி முதல் நாள் முடிவில் 202 ரன்களை எடுத்தது.

    பெங்களூரு:

    துலிப் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் உள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர மற்ற அனைத்து நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போன்றே விளையாடி வருகின்றனர்.

    செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுவதால் துலிப் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் மோதினர். டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, பி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், அபிமன்யு களமிறங்கினர். அபிமன்யு 13 ரன், ஜெய்ஸ்வால் 30 ரன், சர்ப்ராஸ் கான் 9 ரன், ரிஷப் பண்ட் 7 ரன், சாய் கிஷோர் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய முஷீர் கான் சதம் விளாசி அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு முஷீர் கான், நவ்தீப் சைனி ஜோடி108 ரன்கள் சேர்த்துள்ளது.

    முதல் நாள் முடிவில் இந்தியா பி 79 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. முஷீர் கான் 105 ரன்னும், நவ்தீப் சைனி 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்தியா ஏ அணி சார்பில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    • இந்தியா டி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • டி அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் படேல் அரை சதம் விளாசினார்.

    துலிப் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் உள்ள கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர மற்ற அனைத்து நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போன்றே 4 நாள்கள் கொண்ட ஆட்டத்தில் விளையாடுகின்றனர். வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுவதால் துலிப் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. சி அணியின் கேப்டனாக ருதுராஜ்-ம் டி அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரும் மோதினர். இதில் டாஸ் வென்ற சி அணியின் கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி டி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வா டைட், யாஷ் தூபே களமிறங்கினர். இருவரும் முறையே 4 மற்றும் 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 9, தேவ்தத் படிக்கல் 0, ரிக்கி புய் 4, ஸ்ரீகர் பரத் 13, சரனேஷ் ஜெய்ன் 13, ஹர்சித் ரானா 0 என ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் கடுமையாக போராடிய அக்ஷர் படேல் அரை சதம் விளாசினார். கடைசியில் 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சி அணி தரப்பில் வைஷாக் 3 விக்கெட்டும் அனுஷ் காம்போஜ் ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    • சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
    • இஷான் கிஷனுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    துலீப் டிராபி 2024 கிரிக்கெட் தொடர், நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் முன்புபோல் இல்லாமல், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தவிர, மற்ற அனைத்து முன்னணி இந்திய வீரர்களும் இத்தொடரில் விளையாட உள்ளனர்.

    இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. துலீப் டிராபி 2024 தொடரில் அபாரமாக செயல்படும் இளம் வீரர்களுக்கு, வங்காளதேச தொடரில் இடம் வழங்க, வாய்ப்பு உள்ளதால், இளம் வீரர்கள் முழு ஆற்றலுடன் விளையாட வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் துலீப் டிராபி தொடருக்கான இந்தியா 'டி' அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இஷான் கிஷன் நாளை தொடங்க உள்ள தொடக்க ஆட்டத்தில் (இந்தியா 'சி' அணிக்கு எதிராக) விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

    இஷான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நாளை தொடங்க உள்ள முதல் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக இந்தியா 'டி' அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ×