என் மலர்
நீங்கள் தேடியது "EB"
- பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதயம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
- கருவலூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருப்பூர் :
தெற்கு அவினாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகர், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி மற்றும் உகாயனூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.
இதுபோல் அவினாசியை அடுத்த கருவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துைண மின்நிலையத்தில் மின்சாரம் நிறுததம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாைளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- சங்கரன்கோவில் கோட்டத்தில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு மின்சார வாரியம் இந்த ஏற்பாடை செய்துள்ளது.
- வருங்காலத்தில் மின்சாரம் சம்பந்தமாக மின்சார வாரியத்திலிருந்து அனுப்பப்படும் அனைத்து குறுஞ்செய்திகளும் உங்களது தொலைபேசி எண்ணிற்கு வருவதற்கு இது வழிவகை செய்யும்.
நெல்லை:
நெல்லை மின் பகிர்மான கூட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் சங்கரன்கோவில் கோட்டத்தில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு மின்சார வாரியம் சார்பில் பொது மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அவசரகால முகாமில் சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் தொலைபேசி எண்ணை அவசரகால முகாமில் வைக்கப்பட்டுள்ள இந்த பரிசு பெட்டியில் செலுத்தினால் குலுக்கல் முறையில் முதல் 10 நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும்.
மேலும் தங்களது தொலைபேசி எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
ஏனென்றால் தங்கள் இடம் மாறி இருந்தாலும் சொந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து இருந்தாலும் இதன் மூலம் வருங்காலத்தில் மின்சாரம் சம்பந்தமாக மின்சார வாரியத்திலிருந்து அனுப்பப்படும் அனைத்து குறுஞ்செய்திகளும் உங்களது தொலைபேசி எண்ணிற்கு வருவதற்கு இது வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவிலேயே முதன்முறையாக மின் நுகர்வோர்கள் நேரடியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகமான சென்னையில் அமைக்கப்பட்ட மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
- இதற்காக மின்னகம் என்ற பெயரில் தொலைபேசி எண் 94987 94987 அறிவிக்கப்பட்டது.
நெல்லை:
தமிழக மின்சார துறையின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே முதன்முறையாக மின் நுகர்வோர்கள் நேரடியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகமான சென்னையில் அமைக்கப்பட்ட மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இதற்காக மின்னகம் என்ற பெயரில் தொலைபேசி எண் 94987 94987 அறிவிக்கப்பட்டது.
அதில் நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மின்தடை குறை கேட்கும் மையத்தின் இளநிலை மின் பொறியாளராக பணிபுரியும் கோவிந்தராஜ் மின்னகத்திலிருந்து பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டு மின் நுகர்வோர்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்தமைக்காக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நெல்லை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
- மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.
தாராபுரம் :
அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை 13-ந்தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் விஜயஈஸ்வரன் கூறியதாவது:- அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய உள்ளாா்.எனவே, இக்கூட்டத்தில் மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா்.
பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை நடைபெறுகிறது.இது குறித்து தாராபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் தாராபுரம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.இக்கூட்டத்துக்கு பல்லடம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமை வகிக்கிறாா்.இதில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 40 மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள், கலெக்டரிடம் முறையிட்டனர்.
- தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்தில், பணி நிரந்தரம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
திருப்பூர் :
மின்வாரியத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள், தொழிலாளர் சட்ட விதிகளின்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென போராட துவங்கி விட்டனர்.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 40 மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள், கலெக்டரிடம் இதுகுறித்து முறையிட்டனர்.தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்திலும், பணி நிரந்தரம் கோரிவிண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராக வந்திருந்தனர்.தற்காலிக பணியாளர்கள் -உதவி கமிஷனர் மலர்க்கொடி வந்திருந்தனர். அடுத்த மாதம் 2-ந்தேதி தேதி மாலை 3 மணிக்கு, அசல் ஆவணங்களுடன் ஆஜரானால், பணிநிரந்தரம் கோருவது தொடர்பாக உத்தரவிடப்படும் என உதவி கமிஷனர் அவகாசம் வழங்கியுள்ளார்.
- விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது.
- கார் மோதியதால் சேதமடைந்த மின்கம்பம் வளைந்து உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது.
கயத்தாறு:
நெல்லை டவுன் முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி ( வயது 30 ). இவர் கோவில்பட்டியில் இருந்து நெல்லைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
கயத்தாறு அருகே நாற்கர சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனயில் சிகிச்கைக்காக சேர்த்தனர். கார் மோதியதால் சேதமடைந்த மின்கம்பம் வளைந்து உயர் மின்னழுத்த கம்பிகள் அருந்து சாலையில் விழுந்தது.
விபத்துக்குறித்து தகவல் அறிந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, தனிப்பிரிவு ஏட்டு பிரித்தீவிராஜ் மற்றும் போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மின்வாரிய பணியாளர்களும் விபத்து பகுதிக்கு சென்று துரிதமாக பணிகளை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது.
- பழுடைந்த மின்கம்பங்களை முன்னுரிமை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும்.
- யூரியா 2 ஆயிரத்து 281 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 766 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 736 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 460 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம் 194 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கூட்டத்தில் கலெக்டர் வினீத் பேசும்போது, நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 2 ஆயிரத்து 281 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 766 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 736 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 460 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி கூறப்படடது. ஆனால் மின்கம்பங்களை மாற்றாமல் உள்ளனர். ஒதுக்கீடு செய்யப்படும் மின்கம்பங்களை வேறு பணிக்கு வழங்காமல் பழுடைந்த மின்கம்பங்களை முன்னுரிமை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும். இதில் தீவிர கவனம் செலுத்தி அடுத்து வரும் கூட்டத்தில் அனைத்து விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸி, இணை இயக்குனர் (வேளாண்மை) சின்னசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
- பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.
- திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.
திருப்பூர் :
பருவமழை பெய்ய தொடங்கி இருப்பதால் மின் விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டுமென மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.மின் கம்பி அறுந்தாலோ, கம்பி ஆபத்தான நிலையில் இருந்தாலோ அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்*ன்டை.
மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய பணியாளர் மூலமாக மட்டுமே சரி செய்து கொள்ள வேண்டும். வெளியாட்களை கொண்டு மின்கம்பத்தில் வேலை செய்ய கூடாது. கால்நடைகளை மின்கம்பம் அல்லது இழுவை கம்பிகளில் கட்டி வைக்கக்கூடாது. இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் நிற்கக்கூடாது.மின்கம்பி, மரங்கள், உலோக கம்பி வேலி இல்லாத தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும்.
மிக உயரமான வாகனங்களை மின் கம்பி குறுக்கே செல்லும் பாதையில் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.பண்ணைகள், வயல்களில் மின் வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றம். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே வயரிங் செய்ய வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய, 3பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலம் மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
மின் கசிவு தடுப்பானை(இ.எல்.சி.பி.,), மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்க்கலாம். சுவிட்ச்கள், பிளக்குகள் போன்றவற்றை எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
மின் கம்பத்துக்காக போடப்பட்ட, ஸ்டே கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். குளியல் அறை, கழிப்பறை மற்றும் ஈரமான இடங்களில் சுவிட்ச் பொருத்தக்கூடாது. மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீ விபத்து மின்சாரத்தால் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மெயின் சுவிட்ச்சை நிறுத்திவிட வேண்டும்.
இடி அல்லது மின்னலின் போது, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி மற்றும் செல்போன் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது. மேலும் திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள். ஜன்னல், இரும்பு கதவு ஆகியவற்றை தொடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின்பாபு கூறுகையில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.பேரிடர்கால மின்தடை தகவல்களுக்கும், புகார்களுக்கும், 94987 94987 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார்.
- பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
பல்லடம் :
பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி மணிவாசன், மாவட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 199 நிவாரண முகாம்களில் 3 வேளை உணவு, உடை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மின்சாரத்தை பொறுத்த வரை திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மின்சார கட்டமைப்பு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்களும், 201 துணை மின்நிலையங்களும், 841 மின்மாற்றிகளும் சேதமடைந்துள்ளது.
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 3,787 மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சீரமைப்பு பணியில் 1,518 எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது.
மின் வினியோகத்தை பொறுத்தவரை திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterThangamani
கர்நாடகாவில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், வாக்காளர்களின் கை விரலில் உள்ள மை காயாத நிலையில், மின்சார கட்டணத்தை உயர்த்தி அம்மாநில மின்சார வாரியம் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் மின்சார வாரிய தலைவர் எம்.கே சங்கரலிங்கே கவுடா இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். மாநில மின்சார முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பங்கீட்டாளர்கள், ஒரு யூனிட்டுக்கு 83 பைசா முதல் 1.10 பைசா வரை உயர்த்த கோரிக்கை வைத்தனர். ஆனால், இறுதியாக மாநில மின்சார வாரியம் 20 பைசா முதல் 60 பைசா வரை மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
கர்நாடகா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஏப்ரல் மாதத்தில் மின்சார கட்டணம் மாற்றி அமைக்கப்படும். இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற்றதால், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று கட்டண உயர்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்த புதிய மின்சார கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். #KarnatakaPowerTariffHiked #KarnatakaElectricityRegulatoryCommission