என் மலர்
நீங்கள் தேடியது "Educational Institutions"
- சாதி பெயரை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
- கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி என்ற பெயர்களை மாற்ற வேண்டும்
செங்குந்த முதலியார் சங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கம் தொடர்பான வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடத்தை நடத்துகிறார்கள். ஆனால் அந்தப் பாடம் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தின் பெயரில் சாதியில் உள்ளது. இது எப்படி நியாயமாகும்! என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதனால் கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். ஆனால், சாதி பெயரை நீக்குவது குறித்து அரசு தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது இப்போது நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சங்கங்களில் உள்ள சாதி பெயரை நீக்குவது குறித்து பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த சாதிப் பெயரை தொடர்ந்து சங்கங்கள் பயன்படுத்தி வந்தால் அது சட்டவிரோதம் என்று அறிவித்து அந்த சங்கத்தின் பதிவை ஐ.ஜி. ரத்து செய்ய வேண்டும்.
மேலும் பள்ளிகள் கல்லூரிகளில் சாதியின் பெயரில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பதிவுத்துறை ஐ.ஜி.நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
அதன்படி சாதிப்பெயரை நீக்கி கல்வி நிலையங்கள் பெயர் பலகை வைக்க வேண்டும். ஒரு வேலை இதை செய்ய மறுத்தால் அந்த கல்வி நிலையத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். அந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை, அங்கீகரிக்கப்பட்ட வேறு கல்வி நிலையங்களில் சேர்க்க வேண்டும்.
அதேபோல அரசு நடத்தும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி என்பதில் இருந்து இந்த ஆதிதிராவிடர் என்ற சாதி பெயரை நீக்க வேண்டும். வேறு சாதியின் பெயரில் அரசு பள்ளிக்கூடம் நடத்தினாலும் அந்தப் பெயரையும் நீக்க வேண்டும்.
நன்கொடையாளர்கள் கல்வி நிலையங்களுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயரில் இருந்த ஜாதியை நீக்க வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தையும் 3 மாதங்களுக்குள் அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன் பின்பு நீதிபதி, தற்போதுள்ள மாணவ சமுதாயம் பள்ளிக்கூடங்களில் புத்தகப் பைக்குள் அருவாளை எடுத்துச் சென்று ஜாதியின் பெயரால் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கின்றனர்.
இது போன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்தார்.
- கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.
- மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கீழக்கரை
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் நடந்த 74-வது குடியரசு தின விழாவுக்கு பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார். கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் 7-ம் வகுப்பு மாணவி முஷ்ரிபா, 6-ம் வகுப்பு மாணவிகள் அகமது அலினா, ஷானா ஹயா கிராஅத் ஒதினர். 5-ம் வகுப்பு மாணவர் முகம்மது பைஜான் வரவேற்றார். பிளஸ்-2 (மெட்ரிக்) மாணவி சித்தி ஹனூனா, 7-ம் வகுப்பு (உயர்நிலைப்பள்ளி) மாணவி எகிதா, 5-ம் வகுப்பு (தொடக்கப்பள்ளி) மாணவி அல்சனா ஆகியோர் குடியரசு தின உரையாற்றினர்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மாணவர்களின் உடல் வலிமை, மன உறுதியை சோதிக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் 5 ஓடுகளை அடுக்கி வைத்து அதன் மீது தீப்பற்ற வைத்து ஒரே தடவையில் அடித்து சிதறடித்து் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் பெரியார் லெனின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது பெற்ற இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிமுக்கு முதல்வர், தலைமை ஆசிரி யர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ- மாணவிகள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
11-ம் வகுப்பு மாணவி சம்சூன் பசிகா நன்றி கூறினார். தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் ஆலோசனையின் படி இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஸ்தபா, இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஏற்பாடுகளை செய்தனர்.
- வைமா கல்வி நிறுவனங்களின் 27-வது ஆண்டு விழா நடந்தது.
- மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ராஜபாளையம்
ராஜபாளையம் வைமா கல்வி நிறுவனங்களான கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வைமா வித்யாலயா, பிரசார்தா பாடசாலா, வைமா கிட்ஸ் பள்ளிகளின் 27-வது ஆண்டு விழா பி.எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. நகர் மன்றத் தலைவி பவித்ரா ஷியாம், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகவும், சாத்தூர் சவுத் சைடு மெட்ரிக்குலேசன் பள்ளி நிறுவனர் சீனிவாசன், தங்கமயில் ஜுவல்லரி முதன்மை செயல் அதிகாரி விஸ்வநாராயன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க செயலாளர் கவிஞர் லட்சுமி காந்தன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். லட்சுமி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜாகுணசீலன், லட்சுமி என்ஜினீயரிங் மேனேஜிங் டைரக்டர் ரவிசங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர்-தலைவர் வைமாதிருப்பதி செல்வன் தலைமை தாங்கினார். மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி வரவேற்றார். நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பானுப்பிரியா, வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பக லட்சுமி, பிரசார்தா பாடசாலா பள்ளி முதல்வர் செண்பககனி, வைமா கிட்ஸ் பள்ளியின் ஆசிரியை பாக்கியலட்சுமி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். கேசா டி மிர் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.
- 30.6.2023 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவுசெய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.
திருப்பூர் :
நகர்ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லாப குதிகளில் 1.1.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்விநிறு வனக் கட்டிட ங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டுநெ றிமுறைகள் அரசாணை வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ்நிகழ் நிலை ஆன்லைனில் 14.6.2018 முதல் 13.9.2018 வரை மூன்று மாதகாலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்க ளுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்க ப்பட்டிருந்த தடையை நீக்கிட மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.2.2021 தேதிய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநீதிமன்ற உத்தரவின்படி 22.3.2021 முதல் 4.4.2021 வரை இருவாரகாலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ்விண்ண ப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாதகாலம் காலநீட்டிப்பு அரசால் 24.6.2022 முதல்31.12.2022 வரை வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ண ப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக 30.6.2023 வரை விண்ணப்பி க்க காலநீட்டிப்பு வழங்கப்ப ட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து இசைவு பெற திருப்பூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக த்தினை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ண ப்பிக்க விரும்புவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில்வி ண்ணப்பம் பதிவுசெய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இதுஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
- அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக் கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்நிறுவனங்களில் வழங்கப்படும்.
பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம், தனியார்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது.
அலுவலக நடைமுறைகள், தனியார்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம்" கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.
இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறி உள்ளார்.
- கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் வரைமுறை இல்லை.
- அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி திருத்த சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி சட்டமானது அதில் குறிப்பிட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.
ஆனால் கல்வி நிறுவனம் உள்ளடங்களாக எந்த ஒரு நிறுவனத்தாலும் அனுமதிக்கான கட்டணத்தின் பேரில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது ஏதேனும் பிற நிகழ்ச்சிகள் மீது கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் எந்த ஒரு வரைமுறையும் இல்லை.
எனவே மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கும் அனுமதிக்கான கட்டணம் ஒவ்வொன்றின் மீதும் 10 விழுக்காடு வீதத்தில் கேளிக்கைகள் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் தகுந்தவாறு சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி எந்த ஒரு கல்வி நிறுவனம் அல்லது நிறுவனம் சங்கம், குழுமம் எந்த பெயரிலும் அழைக்கப்படும் நபர்களின் பிற கழகம் ஆகியவை இதில் அடங்கும்.
இதன் வளாகத்தில் அல்லது நுழைவு சீட்டு, பங்களிப்பு, சந்தா எந்த வகையிலும் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் அனுமதிக்கான கட்டணம் வாங்கப்படும் கல்வி நிறுவன இடங்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீத கேளிக்கை வரி உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
- முறையான அனுமதியின்றி, கல்வி நிறுவனங்களுக்குள் சம்பந்தமில்லாத நபர்களை அனுமதிக்கவே கூடாது.
- பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் ஏற்க முடியாது என எச்சரிக்கை.
தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த கூட்டத்தில், "முறையான அனுமதியின்றி, கல்வி நிறுவனங்களுக்குள் சம்பந்தமில்லாத நபர்களை அனுமதிக்கவே கூடாது.
கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத வெளிநபர்கள் நடமாட்டம் இருந்தால் அது குறித்து பதிவு செய்ய வேண்டும்.
கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் வெளிநபர்கள், பணியாளர்கள் குறித்த பதிவு கட்டாயம் பராமரிக்க வேண்டும்.
வேலை நிமித்தமாக வரக்கூடிய எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.
பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் ஏற்க முடியாது.
பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை பாதுகாப்பிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- யு.ஜி.சி.யின் கட்டுப்பாட்டில், நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்ப–டுகின்றன.
- முைறயாக அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும்.
சேலம்:
பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி.யின் கட்டுப்பாட்டில், நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்ப–டுகின்றன.ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பட்டப்படிப்புகளை நடத்த, யு.ஜி.சி.யின் ஒப்புதல் பெற வேண்டும். முைறயாக அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும்.
21 போலி பல்கலைக்கழகங்கள்
இந்த நிலையில் நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் உரிய அங்கீகாரமின்றி செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 21 போலி பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியலை யு.ஜி.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பக்கத்து மாநிலங்களான கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், புதுச்சேரி ஸ்ரீபோதி அகாடமி உயர்கல்வி நிறுவனம், ஆந்திராவில் கிறிஸ்ட் நியூ டெஸ்ட்மென்ட் நிகர்நிலை பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா ராஜா அரபிக் பல்கலைக்கழகம், கர்நாடகாவில் படகன்வி சர்கார் வேர்ல்டு திறந்தநிலை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
வேண்டுகோள்
உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் இந்த 21 பல்கலைக்கழகங்களிலும் உள்ள படிப்புகளில் மாணவ- மாணவிகள் சேர வேண்டாம் என யு.ஜி.சி. கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழக கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு கடந்த 23ம் தேதி போலீசார் மற்றும் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஜாகீர் மூசா உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அன்சர் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பின் தலைவரான ஜாகீர் மூசா கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.
நான்காவது நாளாக இன்றும் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பி.எட். தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புல்வாமாவில் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அனந்த்நாக் மாவட்டத்தில் அனந்த்நாக் மற்றும் பிஜ்பெகரா நகரில் டிகிரி கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.