என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "executives"

    • நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஆகியவற்றை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கயத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான, அனைத்து பூத்களிலும் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஆகியவற்றை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.

    கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள், கட்சியின் 18 வார்டு செயலாளர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
    • கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கயம் : 

    காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைப்பது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும், புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதே போல் காங்கயம் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். பொருளாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மன்னார்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்எம்பி.துரை வேலன் தலைமை வகித்தார். மன்னார்குடி நகர காங்கிரஸ் தலைவர் கனகவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல செயலாளர் சண்முகசுந்தரம், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்றத்துக்கு எதிராக செயல்படுகின்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.திமு.க. இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி சிவகங்கை வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. சார்பில் மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், கட்சியின் எதிர்கால வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

    எனவே இந்த கூட்டத்தில் இன்னாள்-முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
    • தமிழக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.

    காங்கயம் :

    காங்கயம், சென்னிமலை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தமிழக எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எஸ்.என்.நடராஜ் வரவேற்றார். கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில்எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.பி.சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன், காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி,காங்கயம் யூனியன் கவுன்சிலர் பாப்பினி மைனர் பழனிசாமி , காங்கயம் நகராட்சி கவுன்சிலர் அருண்குமார், அ.தி.மு.க. பிரமுகர்கள் பி.கே.பி. சண்முகசுந்தரம், என்.எஸ்.என். தனபால் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை சோழவந்தான் அருகே பா.ஜ.க. சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
    • பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கியும், தி.மு.க. அரசை கண்டித்தும் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மேலக்காலில் மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சாதனை விளக்க கூட்டமும், தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டமும் நடந்தது. மண்டல் தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குகனேஷ்வரன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கியும், தி.மு.க. அரசை கண்டித்தும் மாவட்ட செயலாளர் கண்ணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் தங்கவேல் சாமி, மாவட்ட நிர்வாகி கோசா பெருமாள் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் முருகேஸ்வரி, தேவி, வர்த்தக அணி தசரத சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் மூத்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கவுரவிக்கிறார்.
    • ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார்.

    மதுரை

    மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டிற்காக பொதுமக்களை அழைக்கும் வண்ணம் அம்மா பேரவை யின் சார்பில் மரக்கன்று கொடுத்தும், வாகனங்களில் மாநாட்டிற்கான லோகோவை ஒட்டும் நிகழ்ச்சி சோழவந்தானில் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    நிகழ்ச்சியில் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    எடப்பாடியார் தலைமையில் மாநாட்டிற்காக பொது மக்களை பங்கேற்க செய்யும் வகையில் இல்லந்தோறும் இலைமலர மரக்கன்று வழங்கியும், மாநாட்டிற்கான விளம்பர லோகோவையும் இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டும் நிகழ்ச்சி அம்மா பேரவையின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மாநாட்டில் 10 லட்சம் மக்களை பங்கேற்க செய்யும் வகையில ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புரட்சித் தலைவருக்கு பின்பு இந்த இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மா வழி நடத்தினர். அம்மாவிற்கு பின்பு இந்த இயக்கம் என்ன ஆகுமோ? என்ற நினைத்த போது, எடப்பாடியார் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தினார்.

    மதுரை மாநாட்டிற்கு பங்கேற்கும் லட்சக் கணக்கான மக்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல அது ஒவ்வொரு தொகுதிகளும் மூத்த நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட்டு அவர்களை எடப்பாடியார் கவுரவிக்கிறார்.

    இன்றைக்கு 100 நாட்களில் 2 கோடியே 44 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்து மகத்தான சாதனையை எடப்பாடியார் படைத்துள்ளார்.

    இந்த மாநாடு மீண்டும் எடப்பாடியார் தமிழகத்தின் முதல்வராக வரும் கால்கோள் விழாவாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட வி.சி.க. நிர்வாகிகளுடன் புதிய மாவட்ட செயலாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட செயலாளராக இளைய கவுதமன், தெற்கு மாவட்ட செயலாளராக பாலையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இளைய கௌதமன் அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தார். மூத்த உறுப்பினரான மண்டேலா மாதவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதிய மாவட்ட செயலாளருக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, சுண்ணாம்பிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, மாவட்ட நிர்வாகி மண்மேல் சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ரவி, காட்டாம்பூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளை இளைய கவுதமன் சந்தித்து வருகிறார்.

    • மதுரையில் 27-ந்தேதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநில மாநாடு குறித்த செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டம் முழுவதும் மேலும் எழுச்சியுடன் கொண்டாடுவது மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் எழுச்சி யுடன் பங்கேற்று சிறப்பிப் பது உள்ளிட்ட கட்சி ஆக்கப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பாலை பெண்கள் கல்லூரி அருகே அமைந்துள்ள குறிஞ்சி திருமண மஹாலில் நடக்கிறது.

    மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் செயலாளர், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
    • வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் மற்றும் தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாநில ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் மற்றும் தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திரளான அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

    வருகிற 17-ந்தேதி தலைமை கழகம் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த அறிவித்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக துணைச் செயலாளர் ரெங்கசாமி பேச உள்ளார். அதனால் நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் தெற்கு மாநில அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா, மூத்தகுடி ரகுபதி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சீத்தாராமன், மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், தொழிற்சங்க செயலாளர் சுரேஷ், இலக்கி அணி செயலாளர் பாலு, சிறுபான்மை அணி செயலாளர் ஜான்சன், தொகுதி செயலாளர்கள் செந்தில் என்கிற குமாரவேலு, ராமச்சந்திரன், கலியமூர்த்தி, பாலு, பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மூர்த்தி, முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • புதிய நிர்வாகிகள் தேர்தல் திருப்பூர் ஜீவா காலனி மில் தொழிலாளர் கூட்டுறவு சொசைட்டி மண்டபத்தில் நடைபெற்றது
    • கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பாரதிவாசன் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்ட வீடியோ, போட்டோகிராபர்ஸ் சங்க பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் திருப்பூர் ஜீவா காலனி மில் தொழிலாளர் கூட்டுறவு சொசைட்டி மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பாரதிவாசன் தலைமை வகித்தார். பொருளாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து சங்கப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு, சங்கத்தின் வரவு - செலவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட வீடியோ போட்டோகிராபர்ஸ் சங்க புதிய தலைவராக எம். கார்த்திகேயன், செயலாளராக இளங்கோ, பொருளாளராக வில்லியம், துணைத்தலைவர்களாக கதிர்வேல், சுப்பிரமணிய சிவா, துணைச்செயலாளர்களாக சரவணன், சண்முகசுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ரமேஷ், சுப்பிரமணி, வேணுகோபால், பழனிச்சாமி ,ஜீவானந்தம் ,முருகநாதன், ஜெயபாலன் மற்றும் பலர் செயல்பட்டனர். வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு திருப்பூர்,பல்லடம்,அவிநாசி, காங்கேயம், தாராபுரம் ,உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டோகிராபர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • கதர் ஆடைகளை பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் சோமசுந்தரம், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்தநாள் மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி லாஸ்பேட்டை தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கதர் ஆடைகளை பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் சோமசுந்தரம், ஆறுமுகம், விஜயபூபதி, லட்சுமணன், பரசு, வெங்கடேசன், நமச்சிவாயம், திருமால், நடராஜ், கார்த்தி, முருகன், வேலு, கனகவள்ளி, வள்ளி, ஜெயா, கல்விக்கரசி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×