என் மலர்
நீங்கள் தேடியது "Face shield"
- கோவை மாவட்டத்திலும் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது.
- ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே முகக் கவசம் அணிய வேண்டும் என நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கோவை,
தமிழகத்தில் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்து சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்திலும் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சிகிச்சைக்கு வருபவர்கள் உடன் வருபவர்கள் உள்நோயாளிகள், புறநோயாளிகள் டாக்டர்கள் என அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள் ளது.
மேலும் ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே முகக் கவசம் அணிய வேண்டும் என நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர்கள், நோயாளிகள் உள்பட அனைவருமே முக கவசம் அணிந்து வந்திருந்தனர். இருப்பினும் பலர் முக கவசம் அணியாமல் வந்திருந்தனர்.
ஆனால் அவர்களை காவலாளிகள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். முக கவசம் அணிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர்.
இதையடுத்து பலரும் அருகே இருந்த கடைகளுக்கு சென்று முக கவசங்களை வாங்கி அணிந்து கொண்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றனர்.
தொடர்ந்து யாராவது முககவசம் அணியாமல் ஆஸ்பத்திரிக்குள் சுற்றுகிறார்கள் என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.
- வாக்கிங் நிமோனியா என்பது நுரையீரல் தொற்று ஆகும்.
- மற்றொருவருக்கு தும்மல், இருமல் மூலம் வேகமாக பரவும்.
'வாக்கிங் நிமோனியா' என்பது தற்போது பரவலாக மனிதர்களை பாதிக்கிறது. வழக்கமாக நுரையீரலை பாதிக்கும் நிமோனியா தொற்றின் தீவிர அறிகுறிகள் இல்லாத இலகுவான வடிவமே இந்த 'வாக்கிங் நிமோனியா' ஆகும். இது நுரையீரல் தொற்று ஆகும்.
இது பொதுவாக 5 முதல் 15 வயதுடைய குழந்தைகள் மற்றும் 40 வயதுக்கு உட்பட்ட பெரியவர்களை தாக்குகிறது. இதன் அறிகுறிகள் பொதுவாக மிதமான அளவில்தான் இருக்கும். எக்ஸ்ரே ஆய்வில் நுரையீரலில் திட்டுக்கள் போன்று காண்பிக்கும்.

இது மைக்கோப்ளாஸ்மா நிமோனியா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தும்மல், இருமல் மூலம் வேகமாக பரவும்.
பொதுவாக, நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, பலவீனமான நோய் எதிர்ப்பு, புகைப்பழக்கம் உள்ளவர்களை இது அதிக அளவில் பாதிக்கிறது. நிமோனியா 10 நாட்கள் வரை தொற்று நோயாக இருக்கலாம்.

இந்த பாக்டீரியா உடலில் நுழைந்து மைக்கோபிளாஸ்மாவை வெளிப்படுத்திய 15-25 நாட்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு அறிகுறிகள் வெளிப்படும். வாக்கிங் நிமோனியா பாதிப்பு ஒருவருக்கு இருந்தால் ஆழ்ந்த மூச்சு எடுக்கும்போது நெஞ்சு வலி, இருமல், காய்ச்சல் மற்றும் குளிர் போன்ற அறிகுறிகள், தொண்டை வலி, தலைவலி, சோர்வு, சிலருக்கு காது தொற்று, ரத்த சோகை அல்லது தோல் வெடிப்பு போன்றவையும் இருக்கலாம்.

குழந்தைகளை வாக்கிங் நிமோனியா பாதித்தால் உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல், உலர் இருமல் காணப்படும். இதற்கு உரிய சிகிச்சை பெற வேண்டும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
- சிறு குழந்தைகளை கூட்டங்களுக்குள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
- முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்த வைரஸ் புதியதல்ல. ஏற்கனவே நம்மோடு இருப்பதுதான். கடந்த 2001-ல இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொற்று ஏற்பட்டால் அதிகபட்சம் 5 நாட்களுக்குள் குணமாகி விடும். தமிழகத்தில் பாதிக் கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லை நலமாக இருக்கிறார்கள். பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டால் நுரையீரல் பாதிக்கும்.
வைரஸ் தொற்றுக்களை நினைத்து பீதி அடைய தேவையில்லை. இனி நாம் வைரஸ்களோடு வாழ பழகி கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் குறிப்பிட்டதைபோல் நாம்தான் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சிறு குழந்தைகளை கூட்டங்களுக்குள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவி விட்டு சாப்பிடுவது, வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போது கைகளை சுத்தம் செய்வது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். பொதுவாகவே மார்க்கெட் பகுதி, மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
இந்த வைரசை பற்றி பீதி அடைய வேண்டாம். விழிப்புணர்வும், வழிமுறைகளை கடைபிடிப்பதும் அவசியம். பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திண்டிவனம் பகுதியில் பொது மக்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் என்று நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.
- கொரோனா விதிமீறல்களை கடைபிடித்தல் அவசியம் ஆகிய அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
விழுப்புரம்:
தமிழக அரசு கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தவும், கட்டாய முகக் கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல், உரிய காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், வியாபாரப் பெருமக்கள், பொதுமக்கள், கொரோனா விதிமீறல்களை கடைபிடித்தல் அவசியம் ஆகிய அறிவுரைகள் வழங்கி உள்ளார். அதனடிப்படையில் திண்டிவனம் பல்வேறு பகுதியில் முக கவசம்அணிவதையே வலியுறுத்தியும் தடுப்பூசிகள் செலுத்தித்துக்கொள்ளவும், மீறுவோர் மீது பொது சுகா–தார சட்டத்தின் படி நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப் படும் என்று திண்டிவனம் நகராட்சி கமிஷனர் சவுந்தரராஜன் தெரிவித்தார். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி கடலூர் மாவட்டத்தில் முக கவசம் விற்பனை அதிகரித்துள்ளது.
- 1 ரூபாய், 2, 3 மற்றும் 5 ரூபாய் என்ற விலையில்50 மற்றும் 100 எண்ணிக்கை கொண்ட பாக்கெட்களில் முகக் கவசம் கடைகளில் விற்பனையாகிறது.
கடலூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவல் அதிகரித்து வரும் நிலையில், அனை வரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதா ரத்துறை வலியுறு த்தியுள்ளது. மேலும் கொரோனா தொ ற்று பரவலை தடுக்க பள்ளிகளில் மாணவர்கள், பணியாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபாரா தம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாண வர்கள் பொதுமக்கள், வியாபாரிகள் முகக்க வசம் அணிவது அதிகரி த்துள்ளது. தற்போது ஒரு மாஸ்க் 1 ரூபாய், 2, 3 மற்றும் 5 ரூபாய் என்ற விலையில்50 மற்றும் 100 எண்ணிக்கை கொண்ட பாக்கெட்களில் முகக் கவசம் கடைகளில் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக பலரும் கடை களில் முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை உள்ளிட்டவை களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இத னால் முககவசம் விற்பனை சூடுபிடி த்துள்ளது.
- கடந்த ஆண்டில் 4 ஆயிரத்துக்கும் அதிமாக இருந்த கொரோனா நோய்த் தொற்று, கடந்த சில மாதங்களாக படிப்படியாகக் குறைந்து 10-க்கும்கீழ் வந்தது.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மீண்டும் ெகாரோனா பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது
கோவை:
கோவையில் கடந்த ஆண்டில் 4 ஆயிரத்துக்கும் அதிமாக இருந்த கொரோனா நோய்த் தொற்று, கடந்த சில மாதங்களாக படிப்படியாகக் குறைந்து 10-க்கும்கீழ் வந்தது.
இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ெகாரோனா நோய்த் தொற்று கணிசமாக உயா்ந்து வருகிறது. தமிழகத்தில், கடந்த மாதங்களில் ெகாரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு பின் கோவை இருந்து வந்தது.
அதிலும், கோவை மாவட்டத்தில், மாநகரப் பகுதிகளில்தான் ெகாரோனா பாதிப்பு பெருமளவில் காணப்ப ட்டது. கடந்த 2-ந் தேதி 701 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது.
அது மேல்ல மேல்ல உயர தொடங்கியது. நேற்று 118 பேருக்கு தொற்றுக்கு உறுதியானது. இதன் காரணமாக கோவையில் ெகாரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மீண்டும் ெகாரோனா பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, மாநகராட்சி கமிஷனரின் உத்தரவின் படி மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்படுகிறது. நேற்று மாநகராட்சி பகுதிகளில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.6 ஆயிரத்து 700 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், மால்கள் உள்ளிட்ட இடங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து மாநகராட்சி இதுவரை ரூ.32 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால் தொற்று மேலும் கூடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
- திண்டிவனம் நகர் பகுதியில் பொது மக்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சுபகாரியங்களில் கலந்துகொள்வோர் கண்டிப்பாக ஒரு வழி காட்டி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தவும், கட்டாய முகக் கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல், உரிய காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், கொரோனா வழிகாட்டி விதிமுறைகளின்படி சமூக இடைவெளி கடைபிடித்து, கைகளை தூய்மையாக வைத்திருக்க அறிவுரை வழங்கி உள்ளார். அதனடிப்படையில் திண்டிவனம் பல்வேறு பகுதியில் முக கவசம்அ ணிவதை வலியுறுத்தியும் தடுப்பூசிகள் செலுத்தித்துக்கொள்ளவும், கொரோனாவிதிமு றைகளைவிதியை மீறாமல் கடைபிடிக்கவும், பொதுமக்கள் குழுக்களாக கூடுவதை தவிர்க்கவும், பொதுநிகழ்ச்சிகள், சுபகாரியங்களில் கலந்துகொள்வோர் கண்டிப்பாக ஒரு வழி காட்டி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முககவசம் அணியவேண்டும். மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின் படி நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என திண்டிவனம் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.