என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fall"

    • வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தவறி விழுந்தார்.
    • இந்த சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் உடனடியாக தினகர்பாபுவை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள காசக்காரனூர் கென்னடி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் தினகர்பாபு (வயது 26).

    இவர் நேற்று மதியம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தவறி விழுந்தார். இந்த சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் உடனடியாக தினகர்பாபுவை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தினகர்பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாலத்தில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நெல்பேட்டை காயிதே மில்லத் 6-வது தெருவை சேர்ந்தவர் முகமது நாசர். இவரது மகன் முகமது தாஹா (30). இவர் பிளாஸ்டிக் பைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அபியா பேகம் என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

    நேற்று ஏ.வி. மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேகமாக பிரேக் பிடித்துள்ளார். இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது தாஹா பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் முகமது தாஹாவின் மனைவி அபியா பேகம் புகார் செய்தார். போக்குவரத்து புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டூர் அணையின் இடது கரையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீரேற்று நிலையம் உள்ளது.
    • கடந்த சில ஆண்டுகளாக இங்கிருந்து சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுப்பதில்லை.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் இடது கரையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம் மாநக ராட்சிக்கு குடிநீர் வினியோ கம் செய்யும் நீரேற்று நிலை யம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்கிருந்து சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுப்பதில்லை.

    வாலிபர் பிணம்

    இந்த நிலையில் இந்த நீரேற்று நிலையத்தின் அடிப்பகுதியில் தலையில் காயத்துடன் வாலிபரின் பிணம் ஒன்று கிடப்பதாக கருமலைக்கூடல் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். வாலிபரின் உடலை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டனர்.

    சாவில் சந்தேகம்

    இதில் இறந்த வாலிபர் மேட்டூரை அடுத்த மாசி லாபாளையத்தை சேர்ந்த நடராஜ் (28) என்பதும், இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வந்ததும் தெரிய வந்தது. இதனிடையே நடராஜின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்ப தாக தெரிவித்து உள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கருமலைக்கூடல் போலீ சார், அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்டாகிரம் சமூக வலைதளத்தில் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.
    • உதவிக்கு அந்த உச்சி மாடியில் உள்ள சிறிய அறையின் ஜன்னல் கண்ணாடியை பலமுறை தட்டினார்

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி (30). இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு உடையவர்.

    வானளாவிய உயர கட்டிடங்களின் உச்சிக்கு ஏறி, அதில் அபாயகரமான இடங்களில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது இவரது வாடிக்கை.

    இவருடைய இன்ஸ்டாகிரம் சமூக வலைதளத்தில் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். ரெமி பலமுறை ஹாங்காங் நாட்டிற்கு சென்று அங்குள்ள உயரமான கட்டிடங்களிலிருந்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். சென்ற வாரம், ஹாங்காங் மத்திய பகுதியில் உள்ள ட்ரெகன்டர் சாலைக்கு ரெமி சென்றார்.

    அங்குள்ள ட்ரெகன்டர் டவர் எனும் ஒரு மிக உயரமான கட்டிடத்தில் இருந்து படம் பிடிக்கும் நோக்கில், காவலாளியிடம் ஒரு நண்பனை பார்க்க உள்ளே செல்வதாக பொய் சொல்லி உள்ளே சென்றார்.

    லிஃப்டில் ஏறி 49-வது மாடியை அடைந்து அங்கிருந்து வெளியே இறங்கி மாடிக்கு சென்றார். மொட்டை மாடிக்கான கதவின் பூட்டை அவர் உடைத்து கொண்டு மேல் மாடி வரை சென்றார். இவர் அங்கிருந்து பல ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுக்க முயற்சித்தார்.

    அப்போது திடீரென நிலை தடுமாறினார். இதனால் உதவிக்கு அந்த உச்சி மாடியில் உள்ள சிறிய அறையின் ஜன்னல் கண்ணாடியை பலமுறை தட்டினார். இதை கண்ட உள்ளேயிருந்த பணிப்பெண் திடுக்கிட்டு காவல்துறையை அழைத்தார். ஆனால் உதவி கிடைக்கும் முன் 68-வது மாடியிலிருந்து ரெமி தவறி விழுந்தார்.

    மருத்துவ உதவி குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்தபோது ரெமி உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டது.

    அவர் அருகே அவர் எடுத்த பல புகைப்படங்களை கொண்ட அவரது கேமிரா அருகே கிடந்தது. பிரான்ஸ் நாட்டு அடையாள அட்டை ஒன்று அருகே இருந்ததை கொண்டு அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.

    மரணத்திற்கான காரணத்தை ஹாங்காங் காவல்துறையினர் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

    ஜூலை 24-ம் தேதி ரெமியின் கடைசி பதிவில் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியின் வான்வழி காட்சியை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கு ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது.

    ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கு விற்பனையானது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பூவன் வாழைத்தார்கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவுவடைந்துள்ளது.

    • 1 டன் ரூ.15,500 க்கு வாங்கிச் சென்றனர்
    • மரவள்ளிக்கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேட்டமங்கலம், குளத்து பாளையம், குந்தாணி பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்,பாளையம், நல்லிக்கோவில், பழமாபுரம் ,புன்னம் சத்திரம், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர். 10 மாதங்களில் மரவள்ளிக்கிழங்கு விளைந்தவுடன் உள்ளூர் பகுதிக்கு வரும் தரகர்கள் மூலம் மரவள்ளிக்கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர் .

    மரவள்ளிக்கிழங்குகளை வாங்கிய புரோக்கர்கள் புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, புதன்சந்தை, மல்லூர், கீரனூர்,சின்னசேலம்,ஆத்தூர்,மல வேப்பங்கொட்டைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் . வாங்கிய மரவள்ளி கிழங்குகளை ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக ஜவ்வரிசி களாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர் . மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது . அதே போல் ஜவ்வரிசி விலை உயரும் போதும், விலை வீழ்ச்சி அடையும் போதும் சேகோசர்வ் மூலம் மரவள்ளி கிழங்கு களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த வாரங்களில் மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் 1 டன் ரூ.15,500 க்கு வாங்கிச் சென்றனர்.சிப்ஸ் தயாரிப்பவர்கள் 1 டன் மரவள்ளிக்கிழங்கை ரூ.16, 500க்கு வாங்கிச் சென்றனர் .நேற்று ஜவ்வரிசி தயாரிக்கும் அதிபர்கள் 1 டன் மரவள்ளி கிழங்கு ரூ.12,000க்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.13 ஆயிரத்து 500 க்கு வாங்கிச்சென்றனர். மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வரத்து அதிகரிப்பால்வெற்றிலை விலை வீழ்ச்சி

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், நத்தமேடு பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம்,நன்செய் புகளூர், பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரிவெற்றிலை போன்ற வெற்றிலைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, கரூர் ,நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் ஒரு சுமை ரூ.5 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் ஒரு சுமை ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ஒரு சுமை ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது. தற்போது வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் ஒரு சுமை ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் ஒரு சுமை ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ஒரு சுமை ரூ.ஆயிரத்து 200- க்கும் விற்பனையானது. வெற்றிலை வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள் உடபட பல்வேறு தொழில்கள் முடங்கின
    • பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், வங்கிகள், பங்கு சந்தைகள் உள்பட பல்வேறு முக்கிய அத்தியாவசிய சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்டிரைக்' என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று நடந்த சென்சார் மென்பொருள் அப்டேட்டில் குளறுபடி ஏற்பட்டதால் மைக்ரோசாப்ட் சர்வர்கள் முடங்கின. இந்த சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது.

    பாதிப்புகள் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில்பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.மைக்ரோசாப்ட் பங்குகள் 0.74 சதவீதம் சரிந்துள்ள்ள நிலையில் Crowdstrike பங்குகள் 11.10 சதவீதம் வரையில்  சரிந்துள்ளன. இந்த பாதிப்புகளால் Crowdstrike நிறுவனம் 9 பில்லியன் டாலர்கள் [சுமார் ரூ.75,350 கோடி] சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.

    • தொடர் மழையின் காரணமாக வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.600-க்கும் விலை போனது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன் வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகளை பயிரிட்டுள்ளனர்.நன்கு விளைந்த வாழைத் தார்களை வெட்டி, உள்ளூர் பகுதி வியாபாரிகள், பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்ச நாடன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.550-க்கும் விற்பனை ஆனது. நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.600-க்கும் விற்பனை ஆனது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் மழையின் காரணமாக வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதியில் வாழைத்தார் விலை திடீர் வீழ்ச்சி அடைந்தது.
    • கடந்த வாரத்தை விட இன்று பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ. 200 வரை வீழ்ச்சி.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பாண்டமங்க லம், பொத்தனூர், பரமத்திவேலூர், அணிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மோகனூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, கரூர் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் வாழைத்தார்களை வியாபாரிகள் வாழைத் தோப்பில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். சிறு விவசாயிகள் விளைவிக்கும் வாழைத்தார்களை விற்பனை செய்ய பரமத்திவேலூரில் தினசரி வாழைத்தார் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஆயுத பூஜைக்கு இரு தினங்களே உள்ள நிலையில் இன்று வாழை தாருக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் வாழைத்தார்களை மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மூவாயிரத்துக்கும் அதிகமான வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில் வெளியூர் வியாபாரிகள் அதிகம் வராததால் வாழைத்தார்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை.

    கடந்த வாரம் ரூ. 500 முதல் 600 ரூபாய்க்கு விற்பனையான பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை இன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. கடந்த வாரத்தில் ரூ.400 ரூபாய்க்கு விற்பனையான பச்சை நாடன் தற்போது ரூ. 300 முதல் ரூ.350- க்கு விற்பனையானது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான ரஸ்தாலி, கற்பூரவள்ளி ரக வாலைத்தார்கள் இன்று விலை அதிகரித்து ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட இன்று பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ. 200 வரை வீழ்ச்சி அடைந்தது. ஆயுத பூஜையை ஒட்டி வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு வாழைத்தார் விலை வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • மோகனூரில் இருந்து லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வேலைக்கு தனியார் பஸ்ஸில் சென்றுள்ளார்.
    • அப்போது பஸ்சை விட்டு இறங்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பாலத்தை காயம் ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் படையாட்சி நகரை சேர்ந்தவர் தனபால் . இவரது மனைவி கனகா (வயது 60). இவர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் துப்புரவு வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மோகனூரில் இருந்து லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வேலைக்கு தனியார் பஸ்ஸில் சென்றுள்ளார்.

    அப்போது பஸ்சை விட்டு இறங்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பாலத்தை காயம் ஏற்பட்டது. இதனால் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனை சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் , இது குறித்து அவரது மகன் மூர்த்தி (வயது 30) என்பவர் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்கள்.

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி.
    • கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத் தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பால ப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன், வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    அதேபோல் வியா பாரிகள் வாழைத் தோப்பு களிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.400-க்கும் மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.550க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சநாடன் வாழைத்தார் தார் ஒன்று ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.400க்கும் வாங்கிச் சென்றனர்.

    திருமண முகூர்த்தங்கள், கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித் தனர்.

    ×