என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free treatment"

    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நடந்தது
    • இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின் பேரில் விருதம்பட்டியில் உள்ள வார்டு அலுவலகத்தில் இன்று காலை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மாநகராட்சியில் வேலை செய்யும் நிரந்தர ஊழியர்கள், தொகுப்பூதிய ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு திட்ட மேலாண்மை ஊழியர்கள், டெங்கு கொசு தடுப்பு பணி ஊழியர்கள் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    மாநகராட்சி ஊழியர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை செய்து இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

    முகாமில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு ஆண்டுகளில் ரூ3ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
    • அதிகபட்ச மக்களுக்கு இலவச சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை.

    திருவனந்தபுரம்:

    மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சேவையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஆரோக்கிய மந்தன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதை கேரள மாநிலம் வென்றுள்ளது. ஏராளமானோருக்கு இலவச சிகிச்சை அளிப்பதில் முன்னணியில் இருப்பதன் காரணமாக கேரளாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

    கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் காருண்ய ஆரோக்ய சுரக்க்ஷா என்ற திட்டம் மூலமாகவே ஆரோக்கிய மந்தன் விருது கேரளாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இலவச மருத்துவ சேவையை பெற முடியும். அந்த திட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் ரூ3ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 613 மருத்துவமனைகளின் மூலம் 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, அதிகபட்ச மக்களுக்கு இலவச சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்றார்.

    • 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
    • சஞ்சீவனி யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை.

    டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி சட்டசபையில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் வரவிருக்கும் தேர்தலில் தனது புது டெல்லி தொகுதியில் போட்டியிடுவார் என்றும், முதல்வர் அதிஷி தனது கல்காஜி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இன்று அறிவித்துள்ளது.

    தேசிய தலைநகரில் தனது கட்சி ஆட்சியை தக்கவைத்தவுடன், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'சஞ்சீவனி யோஜனா' திட்டத்தின் ஒரு பகுதியாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "இப்போது உங்களை கவனித்துக் கொள்வது எங்கள் கடமையாகும். நீங்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல கடுமையாக உழைத்துள்ளீர்கள்.

    சிகிச்சைச் செலவில் உச்ச வரம்பு எதுவும் இருக்காது. இதற்கான பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும். ஆம் ஆத்மி கட்சியினர் உங்கள் வீட்டிற்கு பதிவுக்கு வருவார்கள். கார்டு தருவார்கள், பத்திரமாக வைத்துக் கொள்வார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தேர்தலுக்குப் பிறகு, இந்தக் கொள்கை அமல்படுத்தப்படும்" என்றார்.

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டெல்லி தேர்தலுக்கான ஆயத்த கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) இந்த வாரம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    • பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்காதது கிரிமினல் குற்றம் என தெரிவித்தது.
    • டாக்டர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றது.

    புதுடெல்லி:

    பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மறுக்கமுடியாது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

    16 வயது சிறுமியை அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நீதிபதிகள் பிரதிபா எம்.சிங். மற்றும் அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பல உத்தரவுகளை பிறப்பித்தது.

    பாலியல் வன்கொடுமை மற்றும் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியவர்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை கவனத்தில் கொண்ட டெல்லி ஐகோர்ட், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயிர் பிழைத்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மறுக்கமுடியாது என தெரிவித்தது.

    பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள், போக்சோ வழக்கில் இருந்து தப்பியவர்கள் மற்றும் அதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிப்பது அனைத்து மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருத்துவ மையங்கள் ஆகியவற்றின் கடமையாகும்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயிர் பிழைத்தவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்காதது கிரிமினல் குற்றம் என்றும், அனைத்து டாக்டர்கள், நிர்வாகம், அதிகாரிகள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்படும்.

    இலவச சிகிச்சையானது பாதிக்கப்பட்டவருக்கு, உயிர் பிழைத்தவருக்குத் தேவையான பரிசோதனைகள், நோயறிதல்கள் மற்றும் நீண்டகால மருத்துவப் பராமரிப்புக்கும் நீட்டிக்கப்படுகிறது. அத்தகைய பாதிக்கப்பட்டவருக்கு, உயிர் பிழைத்தவருக்குத் தேவையான உடல் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    • டெல்லியில் கடந்த முறை நடந்த சட்டசபைத் தேர்​தலில் ௬௨ இடங்​களில் வென்று ஆம் ஆத்மி ஆட்சி​யை தக்க​வைத்​தது.
    • மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சி அமைத்தது. அடுத்து, 2020-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.

    இதற்கிடையே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியை தவிர்த்து, டெல்லி சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும், மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி இன்று அறிமுகம் செய்தது.

    அப்போது பேசிய கெஜ்ரிவால், தற்போது ராஜேந்திர நகர் பகுதியில் 24 மணி நேரமும் தடையின்றி தண்ணீர் வழங்கப்படுகிறது. விரைவில் இந்தத் திட்டம் டெல்லி முழுமையும் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

    பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களுக்குள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PMModi #MedicalInsurance
    புதுடெல்லி:

    பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி தொடங்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வீதம் 10.74 ஏழை குடும்பங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக இதுவரை 1.7 கோடி பயனாளர்கள் அட்டை அச்சடிக்கப்பட்டுள்ளது. 14,856 ஆஸ்பத்திரிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களுக்குள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PMModi #MedicalInsurance
    தமிழகத்தில் அதிகளவில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பது பாராட்டுக்கு உரியது என்று ஜப்பான் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ஜப்பான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் கென்ஜி அயா தலைமையிலான குழுவினர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகளின் செயல்பாட்டினை களஆய்வு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியை சர்வதேச தரத்திற்கு உயர்த்திட அனைத்து உதவிகளையும் ஜப்பான் அரசு தொடர்ந்து வழங்கும் என உறுதியளித்தனர். பின்னர், இக்குழுவினருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜப்பான் குழுவினர் பேசியதாவது:-

    அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் நர்சுகளின் அர்ப்பணிப்புடன் கூடிய தன்னலமற்ற சேவை எங்களுக்கு நெகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் தாய்-சேய் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் அடையவேண்டிய நிலையான வளர்ச்சி இலக்குகளை தமிழகம் 14 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்து இமாலய சாதனை புரிந்துள்ளது.

    அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் செயல்படுத்தப்பட்டுவரும் தாய்ப்பால் வங்கித் திட்டம் புரட்சிகரமான திட்டமாகும். தமிழக அரசின் சீரிய திட்டங்களால் அதிகளவில் ஏழை எளிய மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் தரமான சிகிச்சை பெற்றுவருவது பாராட்டுக்குரியது. ஜப்பான் அரசு, தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எல்லாவித ஒத்துழைப்பையும் நல்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×