என் மலர்
நீங்கள் தேடியது "girl rape"
- நேற்று மாலை சிறுமி மாடியில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றினார்.
- சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
உத்தரப் பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹாரில் புக்ராசி சௌகி பகுதியில் 80 வயது முதியவர் தனது பக்கத்தில் வீட்டில் வசித்த 4 வயது தலித் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நேற்று மாலை சிறுமி தனது வீட்டு மாடியில் தனியாக விளையாடிகொண்டிருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றி அங்கு வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையறிந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் முதியவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சிறுமியின் மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ராம மூர்த்தி சிறுமியை திருவிழாவிற்கு அழைத்து சென்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இலங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிைலயில் திருவிழாவிற்காக சிறுமி ஊருக்கு வந்தார். ராம மூர்த்தி சிறுமியை திரு விழாவிற்கு அழைத்து சென்றார். அப்போது திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். பின்னர் பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது சிறுமியின் தாய்க்கு தெரிய வந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி கடத்தல்
சிவகாசி அருகே உள்ள நதிக்குடியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது 17 வயது மகளை அதே ஊரை சேர்ந்த முத்து முனியாண்டி என்பவர் கடத்தி சென்றதாக மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதனை கவனித்த அவ்வழியாக வந்த டிரக் ஓட்டுநர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் அவர்களை நெருங்கினான்.
- அதன்பின் சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
நண்பனுடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும்போது மூன்று பேரால் காட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மாலை சில்வானி-சாகர் சாலையில் உள்ள சியர்மாவ் காட்டில் வைத்து இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
15 வயது சிறுமியும் அவரது அவரது 21 வயது ஆண் நண்பரும் அப்பகுதியில் உள்ள வனதேவி கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது காட்டுப்பகுதி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
இதனை கவனித்த அவ்வழியாக வந்த டிரக் ஓட்டுநர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் அவர்களை நெருங்கினான். வனப்பகுதிக்குள் வைத்து இருவரையும் சுற்றி வளைத்த அவர்கள் பெண்ணின் நண்பனைக் கடுமையாகத் தாக்கினர். அதன்பின் சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மூன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் சிறுமியும் இளைஞரும் வனத்திலிருந்து வெளியேறி சாலையை அடைந்தனர். ஆனால் இளைஞனின் இருசக்கர வாகனத்தின் சாவியை அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். எனவே அங்கிருந்து சாலை வழியாக நடந்தே போலீசிடம் சென்றுள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவனை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றொருவனைத் தேடி வருகின்றனர்.
- ம்பெனியின் உரிமையாளர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
- தங்கராஜ் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த குன்னத்தூர் வண்ணாம்பாறையில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் 17 வயது சிறுமி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற சிறுமியை காணவில்லை. இதுகுறித்து கம்பெனியின் உரிமையாளர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்த நம்பியூரை சேர்ந்த தங்கராஜ் (24) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வீட்டில் அடைத்து வைத்து இருந்த சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் விசாரித்தபோது தங்கராஜ் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார்.
அந்த கிராமத்துக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வரும் ஒப்பந்த ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் சிறுமியை கற்பழித்துள்ளார். இந்த பலாத்கார சம்பவத்தில் சிறுமியின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு தூக்குத்தண்டனை விதித்து சாத்னா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி தினேஷ்குமார் சர்மா தீர்ப்பு அளித்து உள்ளார்.
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்தது.
இந்த சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் வழங்கப்பட்ட 9-வது தூக்குத்தண்டனை தீர்ப்பு இதுவாகும். #GirlMolestedCase