என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G.O.A.T"

    • விரைவில் வெளியிடப்படும். இப்போது விஜய் சாருடன் G.O.A.T படத்தில் நடிக்கிறேன்.
    • கட்சி தொடங்கியுள்ள, விஜய்க்கு என் வாழ்த்துகள். அவரை என் சகோதரர் என்றே சொல்லலாம்.

    "பெரும் பொருட்செலவில் 'அந்தகன்' படம் பண்ணியிருக்கோம். கூடிய விரைவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்" என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்ட நடிகர் பிரசாந்த் பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினார்.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இன்னைக்கு ஜாலியாக நெல்லை பார்க்க வந்தேன், வந்த இடத்தில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிளம்புகிறேன். ஹெல்மெட் ஒரு லைஃப் ஜாக்கெட் என்கிறார்கள். இது லைஃப் ஜாக்கெட் மட்டுமல்ல, குடும்ப கோட். சாலை விபத்துகளால் பலர் உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் இல்லாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது.

    அதனால்தான் இந்த ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எனது ஆதரவாளர்கள் சார்பாக நிறைய வேலைகளைச் செய்துள்ளோம். விரைவில் வெளியிடப்படும். இப்போது விஜய் சாருடன் G.O.A.T படத்தில் நடிக்கிறேன். இரண்டு மூன்று புதிய அழைப்புகள் வந்தன. விரைவில், நானும் இந்த பகுதியில் ஏதாவது செய்வேன். G.O.A.T படம் சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது. தியேட்டர் வந்து ஜாலியாக எஞ்சாய் பண்ணுங்க எல்லோரும் என்று கூறினார்.

    கட்சி தொடங்கியுள்ள, விஜய்க்கு என் வாழ்த்துகள். அவரை என் சகோதரர் என்றே சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பதற்கு ஹார்ட் வொர்க் உட்பட பல கமிட்மெண்ட் இருக்க வேண்டும். விஜய் சாரிடம் அது அதிகம் உள்ளது. எனக்கெல்லாம் அது ரொம்ப கஷ்டம், அதற்கு தைரியம் வேண்டும்.நான் நடிகனா நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிகன் மட்டுமே இப்போதும். என்னால் மக்களுக்கு என் மூலமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு நான் அவர்களுக்கு கைமாறாக இதுபோன்ற பணிகளை செய்கிறேன். அரசியல் நோக்கம் எதுவுல்லை ஏன்னு தெரிவித்துள்ளார்.

    • விஜயின் 69-வது படம் அரசியல் சார்ந்த கதை என்று சொல்லப்படுகிறது.
    • விஜய் தனது 69-வது படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அண்மையில் அறிவித்தார்.

    பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் நடித்து வருகிறார். விஜய் தனது 69-வது படத்தின் இயக்குநர் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

    விஜய் தனது 69-வது படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அண்மையில் அறிவித்தார். இதனால் அவர் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

    விஜயின் 69-வது படம் அரசியல் சார்ந்த கதை என்று சொல்லப்படுகிறது. டிவிவி தனய்யா தனது தயாரிப்பு பேனரான டிவிவி என்டர்டெயின்மென்ட் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

    இந்த படத்தை இயக்க பல இயக்குநர்கள் போட்டிப்போட்டு கொண்டுள்ளனர். இதில் இயக்குநர்கள் எச்.வினோத், காமெடி நடிகர் ஆர்.ஜே பாலாஜி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. இந்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

    நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகளவில் உள்ளது.

    • இந்நிலையில் 'GOAT'படம் குறித்த முக்கிய அப்டேட்கள் இன்று வெளியாகி உள்ளது
    • த்ரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஒரு அவர் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

    ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 'GOAT' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்து வருகிறது.

    இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது. இதில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. இதற்கான ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்தார்.


     


    அதைதொடர்ந்து விரைவில் மாஸ்கோவில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. விஜய்-யின் 'GOAT' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் 'GOAT'படம் குறித்த முக்கிய அப்டேட்கள் இன்று வெளியாகி உள்ளது.

    'GOAT' படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாகவும், வில்லனுமாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் த்ரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஒரு அவர் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இதில் ஒரு முழு பாடலுக்கு விஜயும், பிரபுதேவாவும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடுகிறார்கள். 'GOAT'படம் ஒரு அறிவியல் புனை கதையை தழுவியதாக அமைகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்பொழுது வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்
    • வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளமான அஜர்பைஜானில் சந்தித்துள்ளார்.

    2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் , திரிஷா, வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து வெளியானது மங்காத்தா திரைப்படம். இப்படம் அஜித்தின் 50- வது திரைப்படமாகும், இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்தது.

    தற்பொழுது வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார், படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளமான அஜர்பைஜானில் சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

     

    ரசிகர்கள் அப்புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என கமெண்ட்சில் பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.
    • கோட் ட்ரைலருக்காக விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.

    இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் அதனையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ட்ரைலர் அறிவிப்பு வீடியோ ஒன்றை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.

    இந்த டிரைலருக்காக விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (
    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதுக் குறித்து வெங்கட் பிரபு சுவாரசியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். கோட் படத்தின் ஸ்பெஷல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடப் போவதாகவும். அப்பாடலில் நடிகை திரிஷா மற்றும் விஜய் இணைந்து ஆடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் ஒரு பக்கா ஆக்ஷன் கமெர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    தணிக்கை குழு கோட் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கினர். படத்தின் நேர அளவு முதலில் 3 மணி நேரமாக இருந்தது. இப்பொழுது படத்தின் நேர அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. படத்தின் நேரம் தற்பொழுது 3 மணிநேரம் 3 நிமிடங்கள் 14 நொடிகளாக  மாறியுள்ளது.

    படத்தின் இறுதியில் படக்குழுவினர் ப்லூபர்ஸ் வீடியோ அல்லது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தொடக்க காட்சிகளாக இருக்கும் என நெட்டிசன்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பூமி பாலன் என்பவர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார்.
    • தோட்டத்தில் கட்டியிருந்த ரூ.8000 மதிப்புள்ள ஆட்டுக்குட்டியை திருடி சென்று உள்ளார் .

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டம் குடிமங்கலம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கொங்கல் நகரம் பகுதியில் வசித்து வரும் பூமி பாலன் என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார் .கடந்த 9-ந்தேதி மேற்கண்ட விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தபோது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த நபர் தோட்டத்தில் கட்டியிருந்த ரூ .8000 மதிப்புள்ள ஆட்டுக்குட்டியை திருடி சென்று உள்ளார் . பூமி பாலன் மற்றும் அவரது நண்பர் பின்னால் துரத்திச் சென்று பெதப்பம்பட்டி செஞ்சேரிமலை ரோட்டில் கறிக்கடை அருகில் வைத்து ஆட்டுக்குட்டியுடன் மர்மநபரை பிடித்தனர். அந்த நபரிடம் விசாரித்த போது சந்துரு என்பது தெரியவந்தது.

    அவரை குடிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர் . போலீசார் சந்துருவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • ராஜபாளையம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்தார்.
    • அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள அய்யன்னாபுரத்தை சேர்ந்தவர் தங்கையா (வயது 85). ஆடு மேய்க்கும் தொ ழிலாளி. வழக்கமாக இவர் ஆடுகளை ஊருக்கு வெளிேய உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.

    அப்போது அங்குள்ள என்னீர் என்பவரின் தோட்டத்துக்கு கிணற்றில் குளித்துவிட்டு வருவார். வழக்கம்போல் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற தங்கையா வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி அவரது குடும்பத்தினர் வழக்கமாக மேய்ச்சலுககு செல்லும் பகுதிக்கு சென்று பார்த்தனர்.

    அப்பேது பன்னீரின் தோட்டத்து கிணற்றில் தங்கையா பிணமாக மிதந்தார். கிணற்றில் குளிக்கும்போது வழுக்கி விழுந்து காயம் அடைந்ததில் அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் குருசாமி, கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தை சேர்ந்தவர் வேல். இவருக்கு சொந்தமான ஆடுகளை ஊருக்கு அருகில் உள்ள நம்பியாற்று கால்வாய் பகுதியில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
    • கைது செய்யப்பட்ட சங்கர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் 20 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்க புரத்தை சேர்ந்தவர் வேல். இவருக்கு சொந்த மான ஆடுகளை ஊருக்கு அருகில் உள்ள நம்பியாற்று கால்வாய் பகுதியில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வடக்கு கள்ளிகுளம் சங்கர் (வயது 35), கீழ தேவநல்லூர் முருகன் (வயது 35) ஆகியோர் 2 ஆடுகளை கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.

    அப்போது அங்கு வந்த வேல் ஆடுகளை திருடி செல்வதை கண்டு கூச்ச லிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் சங்கர், முருகனை மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட சங்கர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் 20 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    • 6 மாதங்கள் ஆன ஆட்டுக்குட்டி ஒன்றை பிரான்சிஸ் வளர்த்து வருகிறார்
    • கடை முன்பு ஆட்டுக்குட்டியை கட்டி வைத்திருந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ,மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சுமார் 6 மாதங்கள் ஆன ஆட்டுக்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இவரது கடை முன்பு ஆட்டுக்குட்டியை கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில்,கடைக்கு பொருள் வாங்குவது போல வந்த ஒருவர் பிரான்சிஸ் கடைக்குள் வேலையாக இருந்தபோது ஆட்டுக்குட்டியை நைசாக மோட்டார்சைக்கிளில் வைத்து திருடிச் சென்றார். பின்னால் அவரை தொடர்ந்து சென்று அவரை வழிமறித்து அங்குள்ள பொதுமக்களுடன் சேர்ந்து பிடித்து தர்ம அடி கொடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் பிடிபட்டவரிடம் விசாரணை செய்தபோது சூலூரை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ், (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கல்லணை கால்வாயில் உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விட்டனர்.
    • மூன்று பேர் கொள்ளிட ஆற்றில் நடுவில் சிக்கி இருப்பதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருவைகாவூர் ஊராட்சி மணல்மேடு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் (வயது 55) வடக்கு தெருவில் வசிக்கும் ரவிச்சந்திரன் (வயது 55) ஆகிய இருவரும் திருவைகாவூர் கொள்ளிடம் ஆற்றில் வழக்கம் போல் ஆடுமேய்க்க ஆடுகளை ஓட்டி சென்றனர். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கல்லணை கால்வாயில் உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விட்டனர். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிட ஆற்றின் இரு கரையும் தொட்டு தண்ணீர் சென்றது. இதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் இருவரை கரையில் இருந்தவர்கள் பார்த்தவுடன் பாபநாசம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து விசைப்படகுகள் மூலம் ஆடு மேய்த்த தொழிலாளிகளை பத்திரமாக மீட்டனர். மேலும் ஆற்றில் மேய்ந்து கொண்டிருந்த சுமார் 50 ஆடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக தெரிய வருகிறது. இதுபோல், திருவைகாவூர் அடுத்த புதுக்கண்டி படுகை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சேட்டு அவரது மகன் அருண் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேர் கொள்ளிட ஆற்றில் நடுவில் திட்டுப் பகுதியில் சிக்கி இருப்பதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் படி அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணிகளை கும்பகோணம் கோட்டா–ட்சியர் லதா பாபநாசம் தாசில்தா'ர் மதுசூதனன் வருவாய் ஆய்வாளர் சுகுணா கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ், சிவப்பிரகாசம் ஒன்றிய கவுன்சிலர் விஜயன் ஊராட்சி மன்ற தலைவர் பவுனம்மாள் பொன்னுசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி துறையினர் விரைந்து வந்து கொள்ளிட ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×