search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gonda accident"

    • விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.
    • உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.

    இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்களுக்கு அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

    இந்த நிலையில், திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்கான காரணங்களை ரெயில்வே அதிகாரிகள் அறிக்கையாக சமர்பித்துள்ளனர். அந்த அறிக்கையில், ரெயில் தண்டவாளங்கள் முறையாக பராமரிக்கப்படாதது தான் விபத்து ஏற்பட முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தண்டவாளத்தில் ரெயில் பாதைகள் சரியாக கட்டப்படவில்லை. இதன் காரணமாக ரெயில் வரும் போது அவை சீராக இயங்கவில்லை. இதனாலேயே ரெயில் தடம்புரண்டது என அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ரெயில் விபத்து ஏற்படுவதற்கு முன்பே தண்டவாளம் சரி செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக அலுவலர் ஒருத்தர் ஜூனியர் பொறியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். எனினும், தண்டவாளத்தில் முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக அந்த பகுதியை கடந்த செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

    பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் ரெயில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றிருந்தால், எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. எனினும், ரெயில் அங்கு கடக்கும் போது எச்சரிக்கை தகவல் விடுக்கப்படவில்லை. இதனால், ரெயில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் அந்த பாதையை கடந்தது. இதன் விளைவாக ரெயில் தடம் புரண்டது.

    விபத்து ஏற்பட என்ன காரணம் என்பதை கண்டறிய வடகிழக்கு ரெயில்வே சேர்ந்த ஆறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் விபத்துக் களத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு, ரெயிலை ஓட்டியவர், மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர் என பலத்தரப்பினரிடம் விசாரணை செய்தனர். இதன் முடிவிலேயே இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    • விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.
    • உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.

    இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்களுக்கு அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து அரங்கேறிய இடத்தில் மீட்பு பணிகள் மற்றும் ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

    விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

    ரெயில் விபத்துக்குள்ளான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் நிறைவுபெற்றன. சேதமடைந்த ரெயில் பாதை சீரமைக்கப்பட்டு, அங்கு ரெயில் சோதனை முறையில் இயக்கப்பட்டது. விரைவில் இந்த வழித்தடத்தில் பழைய படி ரெயில்கள் செல்லும்.


    • உ.பி.யின் கோண்டா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.
    • இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    கொல்கத்தா:

    உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா பகுதியில் இன்று மதியம் 2.35 மணிக்கு சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கோண்டா ரெயில் விபத்து தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று நடந்த மற்றொரு சோகமான ரெயில் விபத்து குறித்து அறிந்து வருத்தமடைகிறேன்.

    மற்றொரு ரெயில் தடம் புரண்டது. இந்த முறை சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ். ரெயில்வே அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்ன செய்கிறது இந்திய அரசு? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அரசுக்கு எப்போது புத்தி வரும்?!"

    விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • சிஆர்எஸ் விசாரணையுடன் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

    சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மற்றும் சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், தற்போதைய சிஆர்எஸ் விசாரணையுடன் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. உதவிக்காக அரசாங்கம் ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. கோண்டா (8957400965) மற்றும் லக்னோ (8957409292).

    காயமடைந்த பயணிகளின் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • உ.பி.யில் பயணிகள் ரெயில் இன்று திடீரென தடம் புரண்டது.
    • இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

    சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×