search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gram"

    • உளுந்து விலை உயர்வால் அப்பளம் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
    • அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத் திதன் மாநில தலைவர் திரு முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    பருப்பு விலை தற்போது கடுமையாக உயர்ந்து உள் ளது. இன்று தீட்டல் எனப்ப டும் பருப்பு வகைகள் 7 ஆயி ரத்தில் இருந்து தற்போது 12 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. இதனால் அப்பளம் விலை கடுமையாக உயர்வது மட்டு மல்லாமல், தொழில் பாதிக் கும் அபாய நிலையில் இருக் கிறது.

    மாதத்திற்கு ஒரு டன் அப்பளம் தயாரிக்கப்படு கின்ற இடத்தில் தற்போது 100 கிலோ மட்டுமே தயா ரிக்கின்ற நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உளுந்தம் பருப்பு விலை உயர்வு மட்டும் அல்லாமல் பருப்பு கிடைக்காத சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது.

    தயாரிப்பு அல்லது விளைச்சல் இல்லையா? அல்லது பதுக்கலா என்று காரணம் தெரியவில்லை. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து உளுந்து விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கம் கேட்டுக்கொள் கிறது.

    அப்பளத்திற்கு மார்க் கெட்டில் விலை கிடைக்காத நிலைமை உள்ளதால் ஆயி ரக்கணக்கான தொழிலா ளர்களின் குடும்பங்கள் வேலை இழந்து தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நி லையில் இருக்கிறார் கள். அது மட்டுமல்லாமல் வியா பாரம் இல்லாத சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு போனஸ் கூட வழங்க முடி யாத நிலைமையில் உரிமை யாளர்கள் தவித்துக் கொண் டிருக்கிறார்கள்.

    இந்த விலை ஏற்றத்தினால் அப்பளத்தின் விலை குறைந்த பட்சம் ஒரு கிலோ 50 ரூபாய் அதிகப்படுத்து வதற்கான வாய்ப்புகள் 100 சதவீதம் இருக்கிறது. எனவே இதற்கு உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • தஞ்சை மாவட்டத்தில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக 2022-23-ம் ஆண்டு ராபி பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் நோக்கில் மத்தியஅரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    நடப்பு ஆண்டு தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 3,110 டன் உளுந்தும், 820 டன் பச்சைப்பயறும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உளுந்து மற்றும் பச்சைப்பயறுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு உலர வைத்து அயல்பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.66 வீதமும், பச்சைப்பயறு கிலோ ஒன்றிற்கு ரூ.77.55 வீதமும் வழங்கப்படும். கொள்முதல் செய்யப்படும் உளுந்து மற்றும் பச்சைப் பயறுக்கான கிரயத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

    தஞ்சை மாவட்டத்தில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம் மற்றும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து மற்றும் பச்சைப்பயறை விற்பனை செய்து பயன் அடையலாம். பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது.
    • 12 ஆயிரத்து, 605 டன் பச்சைப் பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக, உளுந்து, பச்சைபயறு ஆகியவற்றை, விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது. பயறு வகைகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையான, உளுந்து கிலோ ரூ.66; பச்சைப் பயறு கிலோ, ரூ.77.55க்கு, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

    'நடப்பு ராபி பருவத்தில், திருப்பூர், கரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில், 60 ஆயிரத்து, 203 டன் உளுந்து கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில், 12 ஆயிரத்து, 605 டன் பச்சைப் பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நெல் கொள்முதல் ஈரப்பதம் 22 சதவீதம் வரை கொள்முதல் செய்திட வேண்டும்.
    • உளுந்து பயிருக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர குழுக்களின் சார்பில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுபயிர்க்காப்பீட்டுடன் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம்வழங்கிட வேண்டும், நெல் கொள்முதல் ஈரப்பதம் 22 சதம் வரை கொள்முதல் செய்திட வேண்டும். உளுந்து பயிருக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார்.

    விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர்ஜோசப் முன்னிலை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளரும் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்சந்திரராமன், ஒன்றிய செயலாளர்ஜவகர் , விவசாய சங்க ஒன்றிய செயலாளர்ஜெயபால், ஒன்றிய தலைவர்பாலு, நகர செயலாளர் டி.பி.சுந்தர், நகர தலைவர் பி.எம்.பக்கிரிசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்சுஜாதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×