என் மலர்
நீங்கள் தேடியது "Hindu Organizations"
- அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார்.
- அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மாமு பன்ஜா பகுதியை சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் மின்சாரப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.
இந்துவான இவர் தனது முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி உள்ளூர் மசூதியில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) உள்ளூர் தலைவரான மோனு அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனில் ரஜனி இந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவரை வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
மேலும் ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர். ஆர்வத்தின் பேரிலேயே தான் மசூதிக்கு சென்றதாக சுனில் தெரிவித்துள்ளார்.
- நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது.
- பெண்களை காதலித்து திருமணம் செய்வதோடு வங்கதேசத்துக்கு அழைத்துச்சென்று மதமாற்றம் செய்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர், கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
திருப்பூர், கோவை மாவட்டத்தில் பின்னலாடை, பஞ்சாலை, விசைத்தறி, கிரைண்டர் உற்பத்தி, கட்டட கட்டுமானப்பணி, சென்ட்ரிங் மற்றும் டைல்ஸ், கைத்தறி, நுால்தயாரிப்பு, தங்கநகை தயாரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் வடமாநிலத்தவர்களுடன், வங்கதேசத்தவர்களும் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்கின்றனர். இவர்களுக்கு அடையாள அட்டையோ, பாஸ்போர்ட், விசா என்று எந்த ஆவணங்களும் இல்லை. இங்குள்ள பெண்களை காதலித்து திருமணம் செய்வதோடு வங்கதேசத்துக்கு அழைத்துச்சென்று மதமாற்றம் செய்கின்றனர். அதோடு துப்பாக்கி கலாசாரம், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கண்காணிப்பை ஏற்படுத்துவதோடு அவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, அனுமன்சேனா, பாரத்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.
- செங்கோட்டை, தாஜ்மஹால், குதுப் மினார், சார்மினார் கட்டிடங்களையும் பாஜக தலைவர்கள் இடிப்பார்களா?
- மசூதிகளில் சிவலிங்கங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
மசூதியில் கோவில் உள்ளதாக வழக்குப்போடுவது வட மாநிலங்களில் டிரண்ட் ஆகி வரும் நிலையில் செங்கோட்டை, தாஜ் மகால், சார்மினாரையும் இடிப்பீர்களா என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் உத்தரப் பிரதேச சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்குள் கோவில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய அதிகாரிகளை மக்கள் எதிர்த்ததால் கலவரம் ஏற்பட்டது. ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் பகுதியில் உள்ள மசூதியிலும் ஆய்வு செய்ய சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.
இந்த சூழலில் மசூதிகளை சர்வே செய்யும் பணிகளை விமர்சித்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் அரசியலமைப்பைக் காப்போம் பேரணியில் பேசிய கார்கே பாஜக 1991 வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டத்தை மீறி வருவதாக குற்றம் சாட்டினார்.
முஸ்லிம்களால் கட்டப்பட்ட செங்கோட்டை, தாஜ்மஹால், குதுப் மினார், ஐதராபாத் சார்மினார் போன்ற கட்டிடங்களையும் பாஜக தலைவர்கள் இடிப்பார்களா என்று கேள்வி எழுப்பினார்.

2022 ஆம் ஆண்டில், ராம் ஜென்மபூமி இயக்கத்திற்குப் பிறகு சங்கம் எந்த ஒரு போராட்டத்தையும் தொடங்க விரும்பவில்லை என்றும் மசூதிகளில் சிவலிங்கங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
ஆனால் அவர்கள் அதன்படி நடக்கவில்லை. ஆர்எஸ்எஸ் உதவியுடன் ஆட்சிக்கு வந்த பாஜக ஆர்எஸ்எஸ் சொல்வதை ஏன் கேட்கவில்லை?. 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களின் தற்போதைய நிலையைப் பராமரிக்க 1991ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் நீங்கள் அதையும் பின்பற்றவில்லை. மாறாக நீங்கள் அவற்றை மீறுகிறீர்கள். வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டம் ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்த மதத் தலங்களின் தன்மையை மாற்றுவதைத் தடை செய்வதை வர சுட்டிக்காட்டினார்.

மதச்சார்பின்மை என்பது இந்து மதத்தை நிராகரிப்பது அல்ல, மாறாக அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதைக்கான கிடைப்பதற்காக இந்தியாவின் கொள்கையை உறுதிப்படுத்துவதே ஆகும், நான் பிறப்பால் இந்து, ஆனால் மதச்சார்பின்மையுடன் மத பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைவரிடத்திலும் ஒற்றுமையையும் அமைதியையும் விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
- பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என போஸ்டர் அடிக்கப்பட்டது.
- தரையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திண்டுக்கல்:
இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் கந்தன் மலையை காப்பாற்றக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்து இருந்தனர் . இதில் பங்கேற்பதற்காக இந்து மக்கள் கட்சியினர் 100 பேர் வரை கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல் குமரன் திருநகரில் உள்ள மாநில தொண்டரணி தலைவர் மோகன் என்பவரை நகர் வடக்கு போலீசார் அதிரடியாக கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
அதேபோல் வேடசந்தூரில் அகில இந்திய இந்து மகா சபா தேசிய துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி மற்றும் நிர்வாகி சரவண பாண்டி, ராமச்சந்திரன் ஆகியோரையும் வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர் பகுதியில் வ.உ.சி. மக்கள் இயக்கம் மற்றும் ஒக்கலிக்கர் இளைஞர் பேரவையின் சார்பாக திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என போஸ்டர் அடிக்கப்பட்டது.
இந்த போஸ்டரை வேடசந்தூர் பகுதியில் ஒட்டுவதற்காக ஆத்துமேடு ராஜகோபாலபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 30), அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (30) ஆகியோர் ஒட்டியுள்ளனர்.
2 பேர் மீதும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.
தகவல் அறிந்த இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட தலைவர் மாரிமுத்து, வ.உ.சி. மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் முருகேசன், ஒக்கலிகர் இளைஞர் பேரவை அமைப்பின் தலைவர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் கூடினர்.
போலீஸ் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.