என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home Wedding Ceremony"

    • முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் இல்ல திருமண விழாவை டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார்.
    • ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்-லெட்சுமி ஆகியோரின் மகள் டாக்டர் மு.நிவேதிதாவுக்கும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வேல் மகாராஜன்-சுந்தரி ஆகியோரின் மகன் டாக்டர் வே.முருகனுக்கும் மதுரை கருப்பாயூரணி எம்.பி. மகாலில் திருமணம் நடந்தது.

    இந்த திருமணத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்

    டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்து பேசும்போது, முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. பதினெட்டாம்ப டியான் குடும்பத்தினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் விசுவாசிகள். அவர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர். இந்த திருமணத்தை நடத்தி வைத்த தில் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன் என்றார்.

    பின்னர் அவர் அ.ம.மு.க. பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    திருமண விழாவில் முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் ராமையா தேவர். வக்கீல்புலிகேசி மாவட்ட மருத்துவ அணி செயலாளர்டாக்டர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கடலாடி வெள்ளத்துரை, கமுதி வி.கே.ஜி. முத்துராமலிங்கம், புளியங்குடி முத்துராம லிங்கம், செல்வநாயகபுரம் முருகன், வெங்கலகுறிச்சி சேதுபதி, முதுகுளத்தூர் நகர செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மதுரை செக்கானூரணியில் ஸ்ரீகாமாட்சி குரூப்ஸ்- எஸ்.பி.எல். குரூப்ஸ் இல்ல திருமண விழா நடந்தது.
    • ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    மதுரை

    செக்கானூரணி ஸ்ரீ காமாட்சி எஸ்.பி.எல். குரூப்ஸ் இல்ல திருமண விழா நடைபெற்றது.

    மதுரை மாவட்டம் செக்கானூரணி ஸ்ரீ காமாட்சி குரூப்ஸ், மற்றும் எஸ்.பி.எல்.குரூப்ஸ் உரிமையாளர்கள் ஆர்.நாகேந்திரன் என்.பிரபா ஆகியோரின் மகன் முகேஷ்ராஜூவிற்கும் மதுரை பை-பாஸ் துரைச் சாமி நகரைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாண்டியன்- பிரேமலதா மகள் யாமினி ஆகியோரது திருமணம் நாகமலை புதுக் கோட்டை நான்கு வழிச் சாலை அருகே உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், தொழிலதி பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள், உறவி னர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவிற்கான ஏற் பாடுகளை செக்கானூரணி ஸ்ரீகாமாட்சி குரூப்ஸ் மற்றும் எஸ்.பி.எல்.குரூப்ஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    முன்னதாக திருமணத்தையொட்டி ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறு சுவை உணவு வழங்கப்பட்டது.

    • திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காலை 9 மணிக்கு அமைப்புச் செயலாளர் டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.
    • நன்னிலம் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டச் அ.தி.மு.க. செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை (வெள்ளிக்கிழமை) திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காலை 9 மணிக்கு அமைப்புச் செயலாளர் டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

    இதனை முன்னிட்டு நன்னிலம் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    திருவாரூர் மாவட்டம் உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மேலும் ஆயிரம் ஆண்டு காலத்திற்கு விவசாயத்தை பாதுகாத்த எடப்பாடி பழனிச்சாமி நன்னிலம் வருகை தருவதை முன்னிட்டு அ.தி.மு.க நிர்வாகிகளும், செயல் வீரர்களும் திரண்டு வந்து வரவேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×