என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Housing Board"

    • மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
    • மே மாதம் 3-ந் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

     திருப்பூர் :

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்கள் உள்ளனர். அவர்கள் அதை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மூலமாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் முதலிபாளையம், பல்லடம் நிலை-1, நிலை-2, பெரியார் நகர், உடுமலை, வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் திட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அவர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாதவர்கள், வட்டி தள்ளுபடியில் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகையை நடைமுறையில் உள்ள தனிவட்டியுடன் மூன்று தவணையாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம். இந்த சலுகை வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். எந்த காரணத்தைக்கொண்டும் காலநீட்டிப்பு செய்யப்படாது. எனவே ஒதுக்கீடுதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கிரையப்பத்திரம் பெற்று பயன்பெறலாம்.

    இந்த தகவலை கோவை வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • கடந்த ஆண்டு டெண்டர் கோரி இருப்பதாக சொல்லப்படுகிறது.
    • ஒதுக்கப்பட்ட இடத்தை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.

    திருநின்றவூர்:

    ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 116 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு சுமார் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் உள்ள காலிஇடத்தில் பஸ்நிலையம் அமைக்க 1.54 ஏக்கர் நிலம், நூலத்துக்காக 3625 சதுர அடி நிலம், ஆஸ்பத்திரி கட்ட 4368 சதுர அடி நிலம், தபால் நிலையம் அமைக்க 3675 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில் முதல்கட்டமாக 6920 சதுர மீட்டர் இடத்தில் 43 மனைகளும் 2 கடைகளும் உருவாக்கி விற்பனை செய்ய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு டெண்டர் கோரி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாடு வீட்டு வசதி நிர்வாகம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விற்பனை செய்ய முயல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வீட்டுவசதி வாரிய இடத்தினை விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு புகார்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சென்று உள்ளது. பஸ்நிலையம், நூலகம், தபால் நிலையம், ஆஸ்பத்திரி அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தை இதுவரை அந்தந்த துறையிடம் ஒப்படைக்கவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    • இஸ்லாமியர் ஒருவர் இங்கு குடியேறினால் தங்களுக்கு தேவையற்ற தொல்லையும், தங்களின் பாதுகாப்புக்கு குந்தகமும் ஏற்படும் என்று கூறுகின்றனர்.
    • இஸ்லாமியர் ஒருவரை இங்கு குடியேற்றுவது ஏற்கனவே இங்கு வசித்து வரும் 461 குடும்பங்களின் அமைதியில் தீயை வைப்பது போன்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.

    குஜராத் மாநிலத்தில் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டு வசதி வாரியத்தில் இஸ்லாமிய பெண்ணுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு குடியேறுவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    திறன்மேம்பாடு கழகத்தில் பணி செய்து வரும் அவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு வதோதராவில் உள்ள ஹர்னி பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது.

    இந்த குடியிருப்பில் மொத்தம் 462 வீடுகள் உள்ள நிலையில், இஸ்லாமியர் ஒருவர் இங்கு குடியேறினால் தங்களுக்கு தேவையற்ற தொல்லையும், தங்களின் பாதுகாப்புக்கு குந்தகமும் ஏற்படும் என்று மாவட்ட ஆட்சியருக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதினர்.

    மேலும் அந்த கடிதத்தில், ஹர்னி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 4 கிலோமீட்டருக்கு இஸ்லாமிய குடும்பம் ஒன்று கூட இல்லை. இப்போது இஸ்லாமியர் ஒருவரை இங்கு குடியேற்றுவது ஏற்கனவே இங்கு வசித்து வரும் 461 குடும்பங்களின் அமைதியில் தீயை வைப்பது போன்றது என்று குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பெண் குடியேறுவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

     

    7 வருடமாக இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து வரும் நிலையில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி குடியிருப்புவாசிகள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். குடியிருப்புவாசிகளின் தொடர் எதிர்பால் இஸ்லாமியப் பெண் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. 

    • நீர் ஓடையை தூர்வாரும் பணி மேற்கொள்ள இருப்பதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • சுரேஷின் 2 மாடி வீடு முழுவதுமாக சீட்டுக்கட்டு போல சரிந்து கீழே விழுந்தது.

    கோவை சிவானந்தா காலனி அருகே உள்ள சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்த ஓடையின் கரையோரம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீடு இருந்தது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வீட்டின் பின்பகுதியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்றி தர வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அந்த வீட்டின் பின்புறம் 10 அடி வரை இடித்து அகற்றப்பட்டது. பின்புற வீட்டை அகற்றியதால் சுரேஷ் வேறு வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும் பொருட்கள் அந்த வீட்டிலேயே இருந்தது. அவ்வப்போது அந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.

    இந்நிலையில் நேற்றிரவு சிறிது நேரத்தில் சுரேஷின் 2 மாடி வீடு முழுவதுமாக சீட்டுக்கட்டு போல சரிந்து கீழே விழுந்தது. இதனையடுத்து அருகே இருந்த 2 வீடுகளும் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக 2 மாடி வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்த டி.வி, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தது.

    இந்நிலையில், வீடு இழந்த 3 குடும்பத்தினருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்று வீடு வழங்கப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • 92 சென்ட் நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு 11 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில், 30 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை.
    • 30 ஆண்டுகளாக வழங்கப்படாததால் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு.

    மதுரையில் வீட்டு வசதி வாரிய திட்டத்திற்கு 92 சென்ட் நிலத்தை முருகசாமி என்பவரின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். இதற்காக 11 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு, மீதமுள்ள 30 லட்சம் ரூபாயை 30 ஆண்டுகளாக தரவில்லை என புகார் அளித்திருந்தனர்.

    நிலுவைத் தொகையை வழங்காதததால் வீட்டுவசதி வாரிய பொருட்களை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.

    இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இடிந்த விழும் நிலையில் கட்டிடங்கள் உள்ளது
    • அனைத்து வீடுகளின் கதவுகளிலும் நோட்டீஸ் ஒட்டினர்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூரில் உழவர் சந்தை பின்புறம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், 11 ஏக்கரில் கடந்த 1984-ம் ஆண்டு தரைத்தளம் மற்றும் 3 தளங்களைக் கொண்ட 21 பிளாக்குகளில் 960 வீடுகள் கட்டப்பட்டன.

    இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருடங்கள் பல ஆனதாலும், முறையாக பராமரிப்பு இல்லாததாலும், பழுதடைந்து காணப்படுகின்றன.தற்போது 409 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தருமாறு குடியிருப்புவாசிகள் தமிழக வீட்டுவசதி வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், பருவ மழைக் காலம் தொடங்க உள்ளதையடுத்து, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் ஆர்.டி.ஓ. இளங்கோ மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

    பழுதடைந்த நிலையில் கட்டிடங்கள் உள்ளதால், குடியிருப்புகளை காலி செய்யுமாறு குடியிருப்புவாசி களிடம் அறிவுறுத்தினர். மேலும், அனைத்து வீடுகளின் கதவுகளிலும் நோட்டீஸ் ஒட்டினர்.

    அந்த நோட்டீசில், குடியிருப்புகள் இடிந்துவிழும் அபாயகரமான நிலையில் உள்ளது புலத்தணிக் கையில் தெரியவருகிறது. எனவே, குடியிருப்புகளில் வசிப்போர், தாங்களாக முன்வந்து, வருகிற 20-ந் தேதிக்குள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு உத்தரவிடப்படுகிறது. தவறும் பட்சத்தில் குடியிருப்புகளை காலி செய்ய சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×